Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Friday, August 13, 2021

நிலம் பொது..உரைநடை உலகம்..8

[13/08, 7:23 am] Sivaramakrishnan.Salem: https://anchor.fm/sivaramakrishnan7/episodes/13-----8-e15r2vl
[13/08, 7:24 am] Sivaramakrishnan.Salem: 8 ஆம் வகுப்பு. தமிழ் பருவம்.1. இயல்.2. உரைநடை உலகம். நிலம் பொது வலையொலி வழங்குவது. கனவு ஆசிரியர் சேலம்.ஆ.சிவராமகிருஷ்ணன்.

Friday, June 11, 2021

புதிய பாரவை..புதிய கோணம்..வலையொலி..

புதிய பார்வை புதிய கோணம் இணைய வழி வானொலி பதிவை கேட்டு மகிழ அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்....
மிக்க அன்போடு
சேலம்.ஆ.சிவா...

https://anchor.fm/sivaramakrishnan7/episodes/8-e12kilr

வலையொலி கேட்க பின் வரும்  வழிமுறையை பின்பற்றவும்...


Wednesday, May 05, 2021

போட்டோ Graph ...ஒரு பார்வை...3

கற்றலின் பகிர்வு.

போட்டோகிராபிக்கு அடிப்படை காட்சி அமைப்பு  Rule of third. 

நாம் புகைப்பட கலையில் ஆரம்ப நிலையில் நாம் மொபைல் அல்லது கேமராவில் எடுத்து பழகுவோம் இதற்கு Bulls Eye என்று பெயர் இது ஒரு காட்சியை அதாவது ஒரு subject ஐ நடு சென்டரில் வைத்து எடுக்கப்படும் இது பார்ப்பதற்கு விருப்பபடாமலும் அதாவது Borring
மற்றும் அந்த புகைப்படம் ஒரு முழுமை இல்லாமல் இருக்கும். 

இதையே நாம் அடிப்படை composition Rule of third ஐ பயன் படுத்தி காட்சியை அமைத்தால் பார்க்க சிறப்பானதாகவும் ஒரு பொருள் உணர்த்தும் படியும் இருக்கும். அதாவது ஒரு subject ஐ காட்சி படுத்துபோது Rule of third அமைப்பை அமைத்து எடுக்கும்போது இதில்  Framing ல் horizontal & vertical type ல் ஒன்பது பிரிவுகளாக (Box type) ல் அமைந்து இருக்கும். (இது முதல் படத்தில் உள்ளது) 

உதாரணமாக ஒருவரை இடமிருந்து வலமாக பார்க்கிறார் போல் எடுத்தால் அவரை Framil இடது ஓரமாக அமைத்து எடுத்தால் அவர் வலது புரமாக பார்க்கிறார் என்பதை நாம் விளக்கி கூறவேண்டாம் அந்த காட்சி அமைப்பே  தெரிவித்து விடும். 

அதேபோல் Landscape புகைப்படங்கள் எடுத்தாலும் உதாரணமாக ஆகாயத்தை மையமாக காட்ட விரும்பினால் ஆகாயத்தை முதல் இரண்டு கிரிட் வரை அமைத்து எடுக்கலாம், அல்லது நிலத்தை மையப் படுத்தி எடுக்க நினைத்தால் நிலத்திற்கு அதிக அதாவது இரண்டு கிரிட்ல் பொருந்த அமைத்து காட்சியை அமைத்தால் தங்களுடைய புகைப்படம் மிக அழகாக தோன்றும். 

Grid ஐ கேமராவில் செட் செய்ய Nikon கேமராவில் (ஏனெனில் என்னிடம் Nikon கேமரா மட்டுமே உள்ளது)
View finder வழியாக பார்க்க Menu வில் சென்று custom setting menu தேர்வு செய்து அதில்
shooting display வில் உள்ள
view finder தேர்வு செய்து grid on செய்து கொள்ளவும், மொபைலில் செட்டிகில் சென்று Grid ஐ ஆன் செய்து கொள்ளவும். 

உதாரணமாக சில புகைப்படங்களையும் இங்கே தங்களின் பார்வைக்கு பதிவு செய்துள்ளேன். 

ஒளி இன்னும் ஒளிரும்...

நன்றி 
ஈஸ்வரன் ஒளிப்படக்காதலன் .

மற்ற நண்பர்களின் பயன்பாட்டுக்கு  இப்பதிவை மீள் பதிவு செய்கிறேன்.

மிக்க அன்போடு
ஆ.சிவா...சேலம்.

Monday, May 03, 2021

போட்டோ Graph ஒரு பார்வை..2

எனது கற்றலின் அனுபவ தொடர்ச்சி. 

ஒரு புகைப்படத்திற்கு ஒளி எப்படி முக்கிய பங்கு வகிக்கிறதோ அதேபோல் ஒரு காட்சி அமைப்பும் மிகமிக முக்கியம் நாம் காட்சி அமைக்கும் முறையில் தான் அது சிறந்த புகைப்படமா அல்லது ஒரு சாதாரண புகைப்படமா என்று தீர்மானிக்க படுகிறது. 

புகைப்பட கலை என்பது நம் ரசனையின் வெளிப்பாடு உதாரணமாக லைலா மஜ்னு காதல் கதையில் லைலா என்ன அவ்வளவு அழகானவளா? என்று ஒரு கேள்வி வருகிறது. அதற்கு பதில் லைலா எவ்வளவு அழகானவள் என்று உங்களுக்கு தெரிய வேண்டுமெனில், அவளை நீங்கள் மஜ்னுவின் கண்கள் வழியாகப் பார்க்கவேண்டும், என்று கவிதைபோல பதில் வரும். அதுபோல ஒரு காட்சியின் அழகை முழுமையாக உணர வேண்டும்மெனில் நீங்கள் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராக இருக்கவேண்டும். 

காட்சி அமைப்பு தான் ஒரு சிறந்த புகைப்படத்தை உருவாக்குகிறது.
இதற்கு Composition என்று பெயர்,
இதில் பதினைந்து விதிமுறைகள் உள்ளன அவைகள்.
1.The rule of thirds
2.Leading lines
3.Golden ratio
4.Golden triangle
6.Depth of field
7.Framing
8.Fill the frame
9.Negative space 
10.Rule of odds
11.View point
12.Symmetery
13.Patterns
14.Balance
15Colour of theory 

இதை நாம் உபயோகித்தால் நாம் எடுக்கும் புகைப்படம் மேலும் சிறப்பானதாக அமையும்  The rule of third, leading lines, golden ratio, fill the frame, patterns இவைகளை  தெரிந்துகொண்டால் போதுமானது. 

அடுத்த  என்னுடைய அனுபவ பகிர்வு
The rule of thirds பற்றிய பதிவு
ஒளி தொடரும்.

நன்றி 
ஈஸ்வரன் ஒளிப்படக்காதலன் .

மற்ற நண்பர்களின் பயன்பாட்டுக்கு  இப்பதிவை மீள் பதிவு செய்கிறேன்.

மிக்க அன்போடு
ஆ.சிவா...சேலம்.

Friday, April 16, 2021

தொழில்நுட்பம் பழகுவோம்..1

வணக்கம் உறவுகளே & நட்புகளே...
நேற்று (15-04-21) சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தில்
Effectieness of free  open source software  ( FOSS ) in Social science . என்ற தலைப்பில்   ஆராய்ச்சிக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்பளுக்கு உதவக்கூடிய open source ஆன Learning app.org  ல் ஒரு பிரிவான Time Line ( கால வரிசை) என்ற செயலியின் செயல்  விளக்க காணொளி காட்சிக்கான படப்பிடிப்பு நடைப்பெற்றது. இந்த அரிய வாய்ப்பை நல்கிய சேலம் ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களுக்கும் மற்றும் விரிவுரையாளர் திருமதி.தனம்மாள் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்
என்றும் கல்விப்பணியில்
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்
சேலம் ஊரகம்.


Friday, February 19, 2021

கணிதம் கற்கண்டு- நுண் காணொளிகள்

சேலம்: 5ஆம் வகுப்பு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த நுண் காணொளிகள் தயாரிக்கும் பணிமனை இன்று (பிப். 17) உத்தமசோழபுரத்தில் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆசிரியர்களின் புது முயற்சியாக 5ஆம் வகுப்பு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த மைக்ரோ வீடியோஸ் எனப்படும் நுண் காணொளிகள் தயாரிக்கும் பணிமனை இன்று சேலம் உத்தமசோழபுரத்தில் நடைபெற்றது.

மாணவர்களின் கணிதம் கற்கும் திறனை மேம்படுத்தவும், கணிதப் பாடத்தை புரிந்துகொண்டு பயில்வதற்காகவும் நுண் காணொளிகள் தயாரிக்கப்படுகின்றன. கணித ஆசிரியர்களைக் கொண்டு இப்பணிமனை நடைபெற்றது. இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான காணொளி பதிவுகளாக இவை உருவாக்கப்படயிருக்கின்றன.

கற்றல் திறனை மேம்படுத்தும் நுண் காணொளிகள்

அனிமேஷன் மூலம் இப்பதிவுகள் உருவாக்கப்படவுள்ளதால் மாணவர்களின் புரிதல் அதிகரிக்கும். கணிதப் பாடத்தின் கடினமான பகுதிகளைக் கூட இந்த காணொளிகள் மூலம் எளிதில் புரிய வைக்க முடியும். வகுப்பறையில் பயில்வதை சமூக சூழ்நிலைகளில் பயன்படுத்தவும் ஏதுவாக அமையும்.

இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிர்ச்சி நிறுவன முதல்வர். செல்வம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மஹாலக்ஷ்மி, சேலம், வீரபாண்டி, பகுதிகளிலிருந்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்..

நன்றி சேலம் ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் அவர்பள் மற்றும் கணித துறை விரிவுரையாளர்கள்...


Saturday, January 23, 2021

தொழில்நுட்பம் பழகுவோம்-1

வணக்கம் ஆசிரியர் பெருமக்களே ! இந்த பேரிடர் சூழலில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வழங்கிய ஆசிரியர் திறன் மேம் பாட்டு பயிற்சியின் டிஜிட்டல் அசிஸ்டன்ட் ( Digital Assessesment Tools) என்ற தலைப்பில் சேலம் மாவட்ட ஆசிரியர்களுக்கு சுமார் 1980 ஆசிரியர்களுக்கு நேரடியாக( இணைய வழியாக) பயிற்சி அளித்த தருணம் மிக்க மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு. ஆசிரிய தோழமைகளின் பங்களிப்பு போற்றுதலுக்குறியது.  அந்த பயிற்சியில் எட்டு வகையான மதிப்பீட்டு மென்பொருள்கள் அறிமுகம் செய்யப்பட்டது . இந்த மென்பொருளை பல பள்ளிகளில் குறிப்பாக கிட்டதட்ட  1100 பள்ளிகள் செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.. என்பது மிகுந்த உற்சாகம் தரும் செய்தி.

இந்த மென்பொருளை பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையை தொழில்நுட்ப வகுப்பறையாகவும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தலாம். குறிப்பாக ஆசிரியர்களின் பணி சுமையை குறைக்க பயன்படும் மென் பொருட்கள் இவை. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய சேலம் உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கும் முதல்வர் மற்றும் விரிவுரையாளர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். எனது
Quizizz என்ற மென் பொருளின் video tutorial link  லிங்க் இங்கே இணைத்துள்ளேன் ஆர்வமுள்ள ஆசிரிய தோழமைகள்  இதனை பயன்படுத்தி  கொள்ளலாம்.
நன்றி!

QUIZZ
https://youtu.be/lnt5YwhKE68

என்றும் கல்வி பணியில்..
கனவு ஆசிரியர்
ஆ.சிவராமகிருஷ்ணன்.
சேலம் ஊரகம்.


Saturday, July 18, 2020

தமிழில் குரல் தட்டச்சு - செய்ய எளிய வழி...

தமிழில் குரல் தட்டச்சு  - ஓர் அரிய வரம்!   

                                           ************                        

     குரல் தட்டச்சு பற்றி உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். பலருக்குத் தெரியாதிருக்கும். தெரியாதவர்களுக்கு அதை அறிமுகப்படுத்தவே இக் கட்டுரை.

     இணையப் பயன்பாட்டில், தேடலுக்கான குறிச் சொற்களை தட்டச்சு செய்யாமல், குரல் தேடல் எனும் வசதியில், சொற்களைப் பேசி தேடல் செய்ய முடியும். இது சற்று பரவலாக அறியப்படக் கூடியது.  

      ஆனால் இது கூகுள், யூ ட்யூப் போன்ற சர்வர்களில் தேடல் செய்வதற்கு மட்டும் பயன்படக் கூடியது.  இதை வைத்து நாம் பொதுவான தட்டச்சுப் பணிகளை செய்ய இயலாது. அதற்கு இணையத்தில் வேறு சில செயலிகள் உள்ளன. 

     இந்த செயலிகள், உலக மொழிகளில் முக்கியமான சில அல்லது பல மொழிகளில் குரல் தட்டச்சு செய்யக்கூடியதாக இருக்கும். தனித்தனி மொழிகளில் குரல் தட்டச்சு செய்வதற்கும் செயலிகள் உள்ளன. இவற்றில் ஆங்கிலம், பெரும்பாலும் சரியான அளவில் பதிவாகும். இதர மொழிகளில் குற்றம் குறைகள் நிறையவோ, அல்லது குறைவாகவோ இருக்கும்.

   தமிழிலும் இது போல குரல் தட்டச்சு செயலிகள் பல உள்ளன. அவற்றில் பல செயலிகள் சரிவர செயல்படாது. பல செயலிகள் சொற்களை மிகத் தவறான முறையில் தட்டச்சு செய்யும். அவற்றால் எந்த உபயோகமும் இருக்காது.

     live transcribe எனும் செயலி,
பெரும்பாலும் சிறப்பாகவும், பெரும்பாலும் சரியாகவும்  செயல்படுகிறது. நமது உச்சரிப்பு சரியாக இருந்தால், ஒற்று எழுத்துக்கள் கூட பதிவாகும்.

      பொதுவாக இது எழுத்து  மொழிக்கானது. பேச்சு மொழிக்கானதல்ல. பேச்சு மொழியில் சொல்லப்படும்போது, அவற்றில் பல சொற்கள் தவறாக பதிவாகும்.  சில சமயம் பேச்சு மொழி மற்றும் கொச்சை சொற்களை, எழுத்து மொழிக்கு மாற்றிவிடும். வட்டார மொழி, ஜாதி மொழி போன்றவற்றுக்கும் இது அவ்வளவாக ஏற்புடையது அல்ல. 

    
     எனினும் பதிவு செய்த பின்னர் ஆங்காங்கே திருத்தங்கள் செய்து கொள்வதாயின், பேச்சு மொழி, வட்டார மொழி, ஜாதி மொழி போன்றவற்றையும் பயன்படுத்தலாம். 

     எழுத்து மொழியிலும் சிற்சில சொற்கள் மட்டும் தவறாகப் பதிவாகும். காற்புள்ளி, அரைப்புள்ளி முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, ஆச்சரியக்குறி, மேற்கோள் குறிகள் ஆகியவற்றை இதில் பதிவேற்ற முடியாது. ஆனால், இது பெரிய குறைகள் அல்ல. இக்குறைகள் எளிதில் நிவர்த்தி செய்யக் கூடியவை. எனவே, இந்த செயலியில் நாம் தட்டச்சு செய்து கொண்டு, அதை காப்பி செய்து, எழுதுவதற்கு நாம் உபயோகிக்கும் செயலிகள் எதிலாவது பேஸ்ட் செய்து, தேவையான திருத்தங்களை செய்து கொள்ளலாம். எனவே இம்முறையில் மிக விரைவாக தட்டச்சு செய்ய முடியும்.

     அலைபேசியில் தட்டச்சு செய்வதற்கு நாம் மிக சிரமப் படுவோம். இந்தக் குரல் தட்டச்சு செயலியில் அத்தகைய சிரமம் இருக்காது. விரல் தட்டச்சு முறையை விட இதன் மூலம் குறைந்தபட்சம் 50 மடங்கு வேகத்தில் தட்டச்சு செய்ய முடியும் என நினைக்கிறேன். அலைபேசி தட்டச்சை விட நூறு மடங்கு வேகமான முறையில் இதில் தட்டச்சு செய்யலாம். காரணம், நாம் சொல்லச் சொல்ல இதில் தட்டச்சு ஆகிக்கொண்டே இருக்கும். நாம் சொல்லுவதை மட்டுமல்ல; பாடுவதையும் இது எழுத்தாக்கம் செய்து கொடுத்துவிடும். 

     இச் செயலியின் மூலம் நாம் குறிப்புகள், முகநூல் மற்றும் வாட்ஸ் அப் நிலைத் தகவல்கள்,  கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்  எதை வேண்டுமானாலும் மிகக் குறுகிய நேரத்தில் எழுதி முடிக்கலாம். அலைபேசியில் அல்லது கணிணியில் மணிக்கணக்காக செய்யக்கூடியதை, இதில் மிகச் சில நிமிடங்களில் செய்துவிட முடியும். வாரக் கணக்காக, செய்யக்கூடிய பணிகளை, ஒரு நாள் அல்லது அரை நாளிலேயே செய்துவிடலாம்.

    ஆவணங்களையும் இதில்  எழுத முடியும் என்றாலும், ரகசியம் காக்கப்பட வேண்டியது எனில் அவற்றை இதில் எழுதாதிருப்பது நல்லது. காரணம், இதில் நாம் பதிவு செய்யக் கூடிய விஷயங்கள் அனைத்தும் சர்வரில் சேகரமாகிவிடும் என்பதுதான். எனவே, இணையம், அலைபேசி ஆகியவற்றை உபயோகிப்பதில் கடைபிடிக்கப்பட வேண்டிய எச்சரிக்கைகளை, இதிலும் பின்பற்றுவது மிக அவசியம். பொதுவெளியில் வெளியிட தக்க, சாதாரணமான விஷயங்களை தாராளமாக எழுதலாம். 

     இந்த செயலி என்னைப் பொறுத்தவரை அரிய வரம் என்றே சொல்வேன். கதை, கட்டுரைகளை இந்த செயலி மூலம் மிக விரைவாக எழுதி முடிக்க முடிகிறது. எனது எழுத்தாள நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி, பரிந்துரை செய்திருக்கிறேன்.

     Live transcribe செயலி, Google playயில் கிடைக்கும். இது ஆன்லைனில் செயல்படக் கூடியது. 

     இந்த செயலி, சில ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் சரிவர செயல்படாமல் இருந்தால் Tamil Voice Typing - குரல் தட்டச்சு எனும் கூகுள் செயலியைப் பயன்படுத்தலாம். 
ஆனால், இதில் சில குறைபாடுகள் உள்ளன. இது சற்று வேகக் குறைவானது. மேலும், அடிக்கடி தொடர்பு துண்டாகக் கூடும். அப்போது மைக்கை ஒவ்வொரு முறையும் ஆன் செய்துகொண்டே இருக்க வேண்டும். 

     மேலும், பேச்சை நிறுத்தினால், தட்டச்சுப் பதிவு துண்டாகிவிடும். எனவே, வாக்கிய இடைவெளி விடாமல், ஆனால், சொற்களுக்கிடையே தக்க இடைவெளிகளோடு, பேசிக்கொண்டே இருக்க வேண்டும். சில சமயம் ஒவ்வொரு வாக்கியத்துக்கு ஒரு முறை, அல்லது 3 - 4 தடவை துண்டாகிவிடும். அப்போது மைக்கை ஆன் செய்துகொண்டே இருக்க வேண்டி வரும். சரியான இடைவெளி மற்றும் கோணத்தில் வைத்துப் பேசினால் இந்த சிக்கல் இராது. 

     
     இந்த செயலியில் ஒரு சிறப்பம்சமும் உள்ளது. இது தட்டச்சுப் பலகையோடு இணைந்து செயல்படக் கூடியது. எனவே, திருத்தங்ஙளை இச் செயலிக்குள்ளேயே செய்துகொள்ளலாம். 

     எழுத்தாணி தமிழ் குரல் தட்டச்சு செயலி மூலமும் இதே போன்ற எழுத்தாக்கங்களைச் செய்யலாம். 

     நிறைய எழுதக் கூடியவர்கள் மற்றும் எழுத்தாளர்கள்,  இச் செயலிகளைப் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தலாம். நேரமிள்மையால் குறைவாக எழுதக் கூடிய எழுத்தாளர்கள், பயண நேரங்களிலும், படுத்திருக்கும்போதும் கூட இதைப் பயன்படுத்தி, ஏராளமாக எழுதிக் குவிக்கலாம். 

     கணினி, மடிக் கணினி ஆகியவை இல்லாத எழுத்தாளர்கள், ஆண்ட்ராய்ட் ஃபோன் மூலமாகவே தங்கள் படைப்புகளை எழுதி, அதன் மூலமே உடனடியாக பத்திரிகைககளுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடவும் இயலும் என்பது தற்கால வசதி. வாசகர்களும் தங்களுக்கு வேண்டிய வகையில் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


 (பகிர்வு)

Monday, June 22, 2020

லேப்டாப் வாங்குபவர் கவனத்துக்கு....

*ஆன்லைன் கிளாஸ் சண்டைகள்!’ -லேப்டாப் வாங்கப் போகும் அப்பாக்களின் கவனத்துக்கு... #MyVikatan-மணிகண்ட பிரபு*

கற்றல் எவ்வளவு ஆனந்தமானது என்று வகுப்பறைகளும் எவ்வளவு கொடுமையானது என்பதை ஆன்லைன் வகுப்புகளும் உணர்த்துகின்றன தற்போது மாணவர்களுக்கு.

எங்கெங்கு காணினும் ஆன்லைன் வகுப்புகள். கல்லூரியில் தொடங்கி தற்போது யு.கே.ஜி வரையும் பரவியுள்ளது. பெற்றோருக்கு இதில் பிரச்சனை என்பது மொபைல் போனில் பார்க்க வைப்பது. வீட்டில் இரு குழந்தைகள் இருந்தால் போன் கொடுப்பதில் வாரிசுரிமைப் போரே நிகழ்கிறது. காலத்தின் கட்டாயம் லேப்டாப் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுத்தியுள்ளது.

அப்பாக்களின் ஆப்ஷன்கள் மூன்று.

கம்பெனி லேப்டாப்

கம்மி ரேட்டுக்கு அசெம்பிள் செட்

கவர்ன்மென்ட் கொடுத்த லேப்டாப்.

இதுவும் கிடைக்காத பட்சத்தில் புது லேப்டாப் வாங்க வருகின்றனர்.

பைக் வாங்கப் போகும் போது MRF டயர் இருக்கானு பார்ப்பது போல் கணினி வாங்கும் போது பெயின்ட், எம்.எஸ் ஆபீஸ் இருக்கானு கேட்கும் வெள்ளந்தி அப்பாக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். தேடலில் லேப்டாப் குறித்த அடிப்படை தகவல் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

புதிதாய் லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

யுகேஜி படிக்கும் மகனுக்கு M.E, M.tech லெவல் வேண்டாம். மினிமம் வசதியுள்ள லேப்டாப் ஆப்ஷன் வைத்துக் கொள்ளலாம்.

Life long வரணுமில்ல என்பதையும் நம்ப வேண்டாம். இணைய உலகில் இன்னைக்கு வாங்கினா நாளைக்கு அப்டேட் மாடல் வந்திடும். Processor என்பது எல்லா மதர் போர்டுகளிலும் இருக்கும் ஒரு சிப். இப்போதைக்கு processor ஐ3 & ஐ5 வாங்கலாம். ஆனால், ஐ7, ஐ9 வரை வந்து விட்டது என்பதைத் தெரிந்து கொள்ளவும். இதில் processor-க்கு அருகில் இருக்கும் 2.80GHz என்பது பிராசசரின் வேகம். இது குறையும் போது வேகம் குறைவாய் இருக்கும்.

intel, AMD brand-ல் இன்டெல் அட்வான்ஸ் வெர்ஷன் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். நம்ம கணினிக்கேற்ற பொருத்தமான மணமகனாய் இருப்பார்.

RAM எனும் வேகப்படுத்தி மடிக்கணினியில் மினிமம் 4 GB இருக்கணும். 8 GB இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி. DDR3 அல்லது DDR4 RAM பொருத்தப்பட்டுள்ளதா என விசாரிக்கவும்.

தற்போது பெரும்பாலும் 1-TB மெமரி உள்ள லேப்டாப் தான் வருகிறது.

மற்றது சாலிட் ஸ்டேட் ட்ரைவ் வேகம் அதிகம், விலையும் அதிகம், நினைவுத் திறன் குறைவு.

Bluetooth, WiFi, Memory Card Slot, HDMI cable option, DVD RW Drive அல்லது பென் ட்ரைவ் ஆப்ஷன் தற்போது இரண்டு வந்து விட்டது.

USB தற்போது 3.0 வெர்சன் வந்துள்ளதால் கொஞ்சம் வேகமாய் இருக்கும்.

வெப்கேமரா அனைத்து லேப்டாப்புகளிலும் வருகிறது. தரமாய் இருக்கிறதா எனச் சரி பார்க்கவும்

பேட்டரி 8 மணி நேரம் இருப்பது போல் வாங்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி சார்ஜர் போட வேண்டும்.

15.6 அல்லது 14 இன்ச் display LED monitor வாங்கலாம். அதிலும் Full HD, Ultra HD என வந்து விட்டதால் நமக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும் memory card slot, Front mic, audio speaker system இணைந்ததா எனப் பார்த்துக் கொள்ளவும்

Screen resolution ஐ கண் பார்வையை உறுத்தாத அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

Hard disc பயன்பாட்டின் வேகத்தைப் பொறுத்து தேர்வு செய்யலாம். இதன் வேகம் 7200RPM, 5400RPM போன்றவற்றை பார்க்கவும். 320GB,160GB, 80GB எனும் அளவில் கிடைப்பதால் பயன்பாட்டைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கலாம்.

SSD (solid state drive) இருந்தால் லேப்டாப் ஆன் செய்தவுடன் துரித வேகத்தில் உடனே ஆன் ஆகிவிடும். குறைவாய் இருந்தால் ஆன் ஆவதில் தாமதம் ஆகும். ஆனால், சற்றுவிலை அதிகமாய் இருக்கும்.

O.S எனும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் முக்கியமானது. இதுதான் லேப்டாப்பின் இதயம் போலே. தற்போது விண்டோஸ் 10 புது வெர்ஷன் வந்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு வாங்கவும்.

எனக்கு செக்யூரிட்டி அதிகம் தேவையெனில் ஆப்பிளின் Mac ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை நாடலாம்.

Graphic card இருந்தால் ஆன்லைன் வகுப்பில் அனிமேஷன் சப்போர்ட் ஆவது எளிதாய் இருக்கும். இதில் இருவகையாய் இருக்கும். அதிக வீடியோக்கள் பார்ப்பதாய் இருந்தால் Dedicated graphic card உபயோகிக்கலாம். கணினி வேகம் குறையாது. குறைவான பயன்பாடு மட்டும் போதுமென்றால் integrated graphic card போதும்.

ஆன்ட்டி வைரஸ் புரோக்கிராம் முக்கியமாய் இருக்க வேண்டும். அவ்வப்போது அப்டேட் செய்து கொள்ள வேண்டும். ஆமை புகுந்த வீடும் ஆன்ட்டி வைரஸ் இல்லாத கணினியும் நல்லாயிருக்காது.

i3-4GB , i5-8GB, i7-8GB இருக்கும். தேவைக்கேற்ப பார்த்து வாங்கலாம்.

பொதுவானவை.

சுள்ளான் சூடானேன் சுளுக்கெடுத்துறுவேன் எனும் வசனம் போல் சில லேப்டாப்கள் அதிகம் வெப்பமாகும். விலை மலிவு, அசெம்பிள் வாங்கும் போது இதுபோன்ற பிரச்னை வரும். 4ஜிபி RAM-ல் சில இயங்குதளங்கள் processing-க்காக 3ஜிபி எடுத்துக் கொள்ளும். எனவே, பயன்பாடு அதிகமிருக்கும் பட்சத்தில் 8 ஜிபியாக அதிகரித்துக் கொள்ளலாம்.

சின்னக் கல்லு பெத்த லாபம் என்பது போல எடை குறைந்த லேப்டாப்கள் எளிதில் கையாள வசதியாய் இருக்கும். எடை குறையக் குறைய விலை அதிகம் என்பது சாரம்.

ஜம்பிங் கால்களுக்கு கம்பெனி பொறுப்பல்ல என்பது போல் நம்முடைய முதல் தேர்வு கம்பெனி லேப்டாப்கள் தான். ஒரு வருட வாரன்டி கொடுத்தாலும் சில ஆண்டுகள் நன்கு உழைக்கும். மேலும் பழுது ஏற்படின் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்களை நாடலாம்.

சிறியது அழகு என்பது போல் மிகப்பெரிய திரை இருந்தால் அடிக்கடி எடுத்துச் செல்ல அசெளகரியம் ஏற்படும். எனவே, மீடியமே அழகு.

குறைந்த அளவு பயன்பாடே எனில் 25,000 வரையும், கல்லூரி மாணவர்கள் எனில் 45,000 வரையும் பின் தேவைக்கு ஏற்ப வசதி உள்ளவர் அதற்கு அடுத்து விலையுள்ளவரை வாங்கலாம்.

சரியான தேர்வே தீர்வு.

எல்லோரும் வைத்துள்ளனர் என வாங்காமல் தேவையாக இருப்பின் வாங்கவும். பள்ளிவயது குழந்தைக்கு எனில் i3-4GB-1TB போதும். கல்லூரி மாணவர்க்கு எனில், i5-8GB-2TB -Grabhic card போதும். பிசினஸ்க்காக வாங்க வேண்டுமெனில் கமர்ஷியல் லேப்டாப் வாங்கலாம். ஏனெனில் வெயில், தூசு, வெப்பம் ஆகியவற்றுக்குப் பொருந்தும். எல்லாமே இருப்பதுபோல தேவை எனில் i7-8GB-16GB RAM-SSD Hard disc- graphic card 8GB.

பட்ஜெட், பயன்பாடு இரண்டும் முக்கியமானவையாக இருக்கின்றன லேப்டாப் வாங்குவதில். இணைய வல்லுநர் நண்பர்கள் மற்றும் துறைசார் நண்பர்களின் ஆலோசனையுடன் வாங்கலாம். நல்லன தேர்தெடுத்தால் பிறகு வரும் மனஉளைச்சலைத் தவிர்க்கலாம்.

ஆன்லைன் வசதியும் ஆண்ட்ராய்டு போனும் இல்லாத மாணவ மாணவியரின் கதி என்ன எனவும் யோசிக்க வைத்துள்ளது.

மாணவர்கள், பெற்றோர்களின் நலன் கருதி மீள் பதிவு...

நன்றி..
- மணிகண்ட பிரபு

Saturday, May 27, 2017

ஆன்ராய்டு போனில் வளைதளம் உருவாக்குதல்...

ஸ்மார்ட்போன் வழியாக இலவசமாக ஒரு வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி.?

ஸ்மார்ட்போன் வழியாக இலவசமாக ஒரு வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி.?

உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி ஒரு முழுமையான வலைத்தளத்தை உருவாக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா.? ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு என இரண்டு இயங்குதளங்களுக்குமே ஒரு குறிப்பிட்ட ஆப் பயன்படுத்தி15 நிமிடங்களுக்கும் குறுகிய நேர இடைவெளியில் இதை செய்ய முடியும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா.?
அக்ட்மின் வெப்சைட் பில்டர் ஆப் (Akmin Website Builder app) ஆனது உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கக்கூடிய ஒரு இலவசப் பயன்பாடாகும். நீங்கள் இந்த பயன்பாட்டைப் கொண்டு ஒரு தொழில்முறை தேடு வலைத்தளத்தை உருவாக்க முடியும். இந்த பயன்பாடானது, நீங்கள் உருவாக்கிய இணையதளத்திற்கு வடிவங்கள், புகைப்பட ஆல்பம், ஷாப்பிங் கார்ட் போன்றவை போன்ற பயனுள்ள அம்சங்களைச் சேர்ப்பதற்கான சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது.

குறிப்பாக, இந்த தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சகாப்தத்தில், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஹோபோன் அல்லது ஐபோன் பயன்படுத்தி ஒரு முழுமையான செயல்பாட்டு வலைத்தளம் உருவாக்குவது என்பது சாத்தியமாகவே உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த இலவச பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து வலைத்தளத்தை உருவாக்கம் செய்ய வேண்டியது மட்டும் தான்.

இந்த அக்மின் வலைத்தள பில்டர் பயன்பாட்டைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்கும் வலைத்தளம் எந்த சாதனத்திலும் நன்றாக வேலை செய்யும், அதாவது இது ஒரு மடிக்கணினி, டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போன் என எதிலும் சிறப்பாக வேலை செய்யும்.

அக்மின் வலைத்தள பில்டர் பயன்பாடானது மிகவும் எளிமையான ஒரு ஆப் ஆகும். இதன் மூலம் சிறிய வியாபார உரிமையாளர்கள் தங்கள் வியாபாரத்திற்கான ஒரு வலைத்தளத்தை அனைத்து பயனுள்ள அம்சங்களுடனும் உருவாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்க முடியும்.

மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த தளத்தில் ஒரு ஷாப்பிங் கார்ட் வண்டியைச் சேர்ப்பதும் சாத்தியம் தான். இந்த அம்சம் குறிப்பாக சிறிய அல்லது வீட்டு வணிக உரிமையாளர்களுக்கு எந்த இணைய வடிவமைப்பாளர் அல்லது ஒரு நிறுவனத்தின் உதவும் இல்லாமல் சொந்த வலைத்தளம் கிடைக்கும் வாய்ப்பு அதிகப்படுத்தும்.

இந்த பயன்பாட்டின் சிறப்பம்சமாக எந்தவொரு குறியீடும் இல்லாமல் ஒரு வலைத்தளம் உருவாக்க முடியும் என்பது தான். நீங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும், டெம்ப்ளேட்டைத் தேர்ந்தெடுக்கவும், அதேபோல தனிப்பயனாக்கவும், வலைப்பக்கத்திற்கான உள்ளடக்கத்தையும் படங்களையும் சேர்க்கலாம், பின்னர் நிமிடங்களில் உங்கள் வலைத்தளத்தை வெளியிடவும்.

இந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஐட்யூன்ஸ் ஸ்டோர் மூலம் முறையே உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் இதைwww.akmin.net என்ற வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்குவதன் மூலம் நீங்கள் உங்கள் பிசி அல்லது லேப்டாப்பில் இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்

நன்றி.....
Dr.Sathish Ph.D at 14:59

Thursday, March 02, 2017

தொடு திரை என்ற மாயக்கண்ணாடி..

"தொடு திரை  தொழில்நுட்பம்"

இந்த கட்டுரையை படித்து கொண்டிருபவர்களில் 99 சதம் பேர் டச் ஸ்க்ரீன் எனப்படும் தொடுதிரை தொழில் நுட்பத்தை பயன்படுத்துபவராக தான் இருப்பார்கள்.

அந்த தொழில் நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்பதை சுருக்கமாக இன்று பார்க்கலாம்.

இந்த டச் ஸ்க்ரீன் ஒரு நவீன தொழில் நுட்பம் என நீங்கள் நம்பினாலும் அது 1960 இலேயே E. A ஜான்சன் என்பவரால் கண்டுபிடிக்க பட்டு விட்டது .
இன்னொரு ஆச்சர்யம் முதலில் கண்டுபிடிக்க பட்டதே capasitive டைப் டச் ஸ்க்ரீன் தான் .இதை ஏன் ஆச்சர்யம் என்கிறேன் என்றால் இதற்கு பின்னால் கண்டுபிடிக்க பட்ட resistive டைப்பை விட இன்று நாம் அட்வான்ஸ் ஆக நினைப்பது கேபாஸிடன்ஸ் டைப்பை தான்.(தீ பெட்டிக்கு முன்னாடியே லைட்டர் கண்டுபிடிக்க பட்டுவிட்டதை போல)

பிற்காலத்தில் 1971 இல் டாக்டர் சாம் என்பவரால் இது வளர்ச்சி அடைந்தது ஒரு மைல் கல்லாக அமைந்தது. அப்போது இது ஒரு டச் சென்சார் என்ற அளவில் தான் இருந்தது அப்போது அதன் பெயர் ஈலோக்ராப்..
பிறகு 1974 ஈலாக்ராபிக் என்ற கம்பெனி உடன் இனைந்து முதல் முதலில் ஒரு ஒழுங்கான ஒளி ஊடுருவ கூடிய பரப்பை கொண்ட டச் ஸ்க்ரீனை உண்டாக்கினார்.
1977 இல் அந்த கம்பனி அதை மேலும் வளர்த்து இன்று வரை பயன்பாட்டில் உள்ள ரெசிஸ்டிவ் டச் கான உரிமம் பெற்று கொண்டது.
சரி இனி அது வேலை செய்யும் விதம் பற்றி பாப்போம் ..

இதில் முன்பே சொன்னது போல இரண்டு வகை உண்டு... ஒன்று ரெசிஸ்டிவ் இன்னொன்று கெபாசிடிவ்..
இதில் ரெசிஸ்டிவ் என்பதில் கவனித்து பார்த்தால் இரண்டு அடுக்கு தாள் ஒன்றை ஒன்று தொடாத வண்ணம் அமைக்கப்பட்டிருப்பது தெரியும்.
இதில் மேல் அடுக்கு வளையும் தன்மை கொண்ட பாலிதீன் பொருளாலும் கீழ் பகுதி கண்ணடியாலும் செய்ய பட்டிருக்கும் இரண்டுமே இண்டியம் டின் ஆக்சைட் பூச்சு பூச பட்டிருக்கும் இந்த பூச்சு மின்சாரத்தை கடத்த கூடியது..
இப்போது நாம் மேல் அடுக்கில் அழுத்தம் கொடுத்து தொடும் போது தொட பட்ட புள்ளியில் மின் சுற்று பூர்த்தி அடைகிறது எனவே அந்த தகவல் தலைமை பிராசசருக்கு கடத்த பட்டு அது தொட பட்ட இடம் உணர்ந்து அதற்கான வேலை நடக்கிறது.

பத்துக்கு பத்து வரிசையில் 100 மாணவர்களை உட்கார வைத்து விட்டு குறிப்பிட்ட மாணவன் பெயர் சொன்னால் அவன் கையை உயர்த்துவதை வைத்து அவன் இருப்பிடத்தை தெரிந்து கொள்வதை போல என்று வைத்து கொள்ளுங்கள்.

இந்த வகையில் இரண்டு நன்மைகள்..

1) விலை குறைவு..
2)நீங்கள் விரல் தான் என்று இல்லை எதை கொண்டு தொட்டாலும் வேலை செய்யும் ..
இதில் தீமைகள் இரண்டு...

1) கெபாஸிடன்ஸ் வகை அளவு இதன் வாழ் நாள் இருப்பதில்லை

2) கெப்பாசிடன்ஸ் அளவு இது துல்லியம் அல்ல..

அடுத்து capacitance type touch ஐ பாப்போம்.

இதில் திரையில் எப்போதும் மிக சிறிய அளவில் மின்சாரம் பாய்ந்தது கொண்டு இருக்கும் நாம் தொடும் பொது தொட்ட இடத்தில மின்வீழ்ச்சி உண்டாகி தொட்ட இடம் கவனிக்க படுகிறது.

அந்த 10 கு 10 மாணவர் வரிசையில் இப்போது எல்லோருமே கையை தூக்கி கொண்டே இருக்க நீங்கள் அழைக்கும் மாணவன் மட்டும் கையை தாழ்த்துவது மூலம் அவன் இருப்பிடம் கவனிக்க படுவதாக நினைத்து கொள்ளுங்கள்...

இதன் நன்மை .. இது துள்ளியமானது.
தீமை.. மின்சாரத்தை கடத்தவல்ல விரல் அல்லது அது போன்ற பொருட்களால் மட்டும் தான் வேலை செய்யும்.

 உண்மையில் டச் டெக்நாலஜி வெறும் இரண்டு வகை மட்டும் அல்ல..
Infrared touch technology
Surface acoustic wave technology
Optical touch technology..
இப்படி பல வகை படும் மேலும் மேலே நான் சொன்ன ரெசிஸ்டிவ் மற்றும் கேபாஸிடிவ் இரண்டுமே பாசிடிவ் மற்றும் நெகடிவ் என்ற இரண்டு உள் பிரிவுகள் கொண்டது.. என்றாலும்
நாம் அன்றாடம் தொட்டு தடவும் தொழில் நுட்பத்தை சுருக்கமாக விளக்கி இருக்கிறேன்

ஒரு கொசுறு செய்தி நம்ம ஊரில் அந்த காலத்தில் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவும் அந்த செயல் இருக்கிறதே அது மூலையில் சில நரம்புகளை தூண்டி நன்றாக சிந்திக்க உதவுமாம் ..
இப்போது சமீபத்திய ஆய்வில் நிபுணர்கள் இந்த தலை முறை பிள்ளைகள் விரலை உரசி கொண்டு இருப்பதால் மூளை அதிகம் சிந்திக்க முடிவதாக கண்டு பிடித்து உள்ளனர்.
இனி அம்மா 'என்னடா எப்ப பார்த்தாலும் செல்லும் கையுமா இருக்க' என திட்டினால் ... "போம்மா நான் மூளையை வளர்த்துகிட்டு இருக்கன் "என சொல்லலாம்.

Saturday, January 07, 2017

SMARTPHONE அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்!

SMARTPHONE அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்!

ஸ்மார்ட்போன்

போன் அடிக்கடி சூடாகும் பிரச்னை உங்களில் பலருக்கும் இருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டு, அதன் டிஸ்ப்ளேவைத் தொட்டாலே கொதிக்கும். சில சமயம், நீண்ட நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, மொபைலை கையில் எடுத்தாலும் அதிக வெப்பத்தை உணரலாம். நீண்ட நேரம் பேருந்துகளிலோ, ரயிலோ மொபைலை பயன்படுத்த விரும்பினால் கூட, அதில் இருந்து வெளிவரும் வெப்பம் நமக்கு அசவுகரியமாக இருக்கும். சில ஸ்மார்ட்போன்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் கூட, பெரும்பாலான போன்களில் இந்த போன் சூடாகும் பிரச்னை இருக்கின்றது.


நமது மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உருவாகிறது. இந்த அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில்தான் மொபைல் பாகங்களும் வடிவமைக்கப்படுகின்றன என்றாலும் கூட, மொபைலின் வேகமும், செயல்பாடும் இதனால் குறைவதை உணரலாம். உங்கள் போன் அதிகம் சூடாகிறது என்றால், நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவைதான்.

மல்ட்டி டாஸ்க்கிங்:

இசை கேட்டுக்கொண்டே கேம்ஸ் விளையாடுவது, ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்களை இயக்குவது போன்றவற்றால் போனின் செயல்பாடு அதிகமாக இருக்கும் போது, உங்கள் போன் புராசசர் வேகம் குறையும். போனின் வெப்பம் அதிகரிக்கும். அதுவும் உங்கள் போனில் இருப்பது குறைந்த திறனுள்ள ரேம் என்றால், இந்த பிரச்னையை தவிர்க்கவே முடியாது. எனவே 2 ஜி.பிக்கும் குறைவான ரேம் கொண்ட போன்களில் மல்ட்டிடாஸ்க்கிங்கை குறைப்பது நல்லது. பல நேரங்களில் ஆப்ஸ்களை ஒரே நேரத்தில் இயக்க வேண்டிய அவசியம் நிச்சயம் ஏற்படும். எனவே அதனைத் தவிர்க்க முடியாது என்றாலும், நேரத்தைக் குறைப்பதன் மூலம் போன் வெப்பமடைவதைத் தவிர்க்கலாம்.

ஆப்ஸ்

சார்ஜிங்:

உங்கள் போனை எப்போதுமே 100% பேட்டரியுடன் தான் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எனவே 80 முதல் 90% அளவுக்கு பேட்டரி அளவு இருந்தாலே ஓகே. சார்ஜ் போடும் போது நாம் செய்யும் இன்னொரு தவறு, பேட்டரி ஃபுல் ஆன பிறகும் கூட, சார்ஜிங்கிலேயே விட்டுவிடுவது. இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதுதான் பலரது பழக்கம். இந்த ஓவர் சார்ஜிங்கும், போன் சூடாக ஒரு காரணம்தான். போன் பேட்டரி அளவை 30% முதல் 90% வரை எப்போதும் வைத்திருப்பதே, பேட்டரியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. 

 

போன் கவர்:

புது போன் வாங்கியதுமே, ஒரு ஃப்ளிப் கவர் வாங்கி மாட்டுவதுதான் ஊர் வழக்கம். அது போனின் பாதுகாப்பிற்கு நல்லதே! அதே சமயம், போனின் வெப்பம் குறையாமல் இருக்கவும் இவை ஒரு காரணமாக அமைகின்றன. நீண்ட நேரம் கேம் விளையாடும் போதோ, அல்லது இணையம் பயன்படுத்தும் போதோ மொபைல் அதிகம் சூடாகி விடும். அதுபோன்ற சமயங்களில் உங்கள் போன் கவரை கழற்றி விடுங்கள்.

மொபைல் பேட்டரி மற்றும் சார்ஜர்:

ஏதாவது பழுது ஏற்பட்டு மொபைல் போனின் பேட்டரியை மாற்றும் போது, எக்காரணம் கொண்டு போலியான அல்லது மலிவான பேட்டரிகளை வாங்கி மாட்டாதீர்கள். அது உங்கள் போனிற்கே ஆபத்தாக அமையலாம். போலி பேட்டரிகள் எளிதில் சூடாகி விடும். 

மொபைல் சார்ஜர் விஷயத்திலும் இது பொருந்தும். உங்கள் மொபைல் போனோடு வந்த சார்ஜரை தவிர்த்து, வேறு ஏதேனும் தரமில்லாத சார்ஜர்களை பயன்படுத்துவதும் போனின் வெப்பத்திற்கு காரணம். USB கேபிளுக்கும் இது பொருந்தும்.

சுற்றுப்புற வெப்பநிலை:

உங்கள் மொபைல் ஏ.சி அறையில் இருக்கும் போது இருந்த வெப்பநிலைக்கும், வெளியே இருக்கும் போது இருக்கும் வெப்பநிலைக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கும். நமது சுற்றுப்புற வெப்பநிலையும் போனின் வெப்பத்திற்கு காரணம். எனவே வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றின் அருகே உங்கள் மொபைல் போன் பயன்பாட்டை தவிர்க்கலாம். நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களில் உங்கள் மொபைலை வைக்க வேண்டாம்.

வேண்டாத ஆப்ஸ்:

சில ஆப்ஸ்கள் உங்கள் போனின் ஜி.பி.எஸ், மெமரி, வைஃபை, டிஸ்ப்ளே, ஸ்பீக்கர் உள்ளிட்ட பல விஷயங்களை ஆக்டிவ்வாக வைத்திருக்கும். இதனால் அதிகம் மின்சக்தி வீணாவதோடு, போனின் வெப்பமும் அதிகமாகும். எனவே இதுபோன்ற ஆப்ஸ்களை தவிர்த்து விடுங்கள். ஆன்லைன் கேம்கள் பெரும்பாலும் இந்த ரகங்கள்தான். எனவே ரேம் குறைந்த போன்களில் கேம்களுக்கு தடை போட்டு விடுங்கள். 

வைஃபை, இணையம், ப்ளூடூத்:

வைஃபை, ப்ளூடூத் 

அதிக நேரம் வைஃபை மூலம் அல்லது மொபைல் டேட்டா மூலம் டவுன்லோட் செய்வது போனை சூடாக்கும். எனவே சிறிய இடைவெளிகளுக்கு பிறகு டவுன்லோட் செய்யலாம். ப்ளூடூத் நீண்ட நேரம் ஆன்-ல் இருப்பதையும் தவிருங்கள்!

இது மட்டுமின்றி போன் சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் போதே பயன்படுத்துவது, மொபைல் டிஸ்ப்ளே ஒளி அளவை அதிகம் வைப்பது, பேக்கிரவுண்ட் ஆப்ஸ் பயன்பாடுகள் போன்ற விஷயங்கள் அனைத்தும் மின்சக்தியை வீணாக்குபவை. இவற்றை முடிந்தளவு குறைத்தாலே அடிக்கடி போனை சார்ஜ் செய்ய அவசியமிருக்காது. எனவே உங்கள் பேட்டரியின் ஆயுள் பாதிக்கப்படாமல் இருக்கும்.

Saturday, July 23, 2016

லேப் டாப் வாங்கும் போது....

*லேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...*

தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வர  முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.

SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். 
*Laptop Configuration & Processor*

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும். எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3

என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.

*RAM*

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

*HARD DISK*

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.

ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது. எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம். பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.

*DVD DRIVE*

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

*GRAPHIC CARD*

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும். நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று.2 அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது. இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள். போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.

*Operating System ( OS)*

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்.  ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும். இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version

இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு. இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.
Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது. 

அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள். இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.