Monday, July 27, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

அது ஒரு
மருத்துவ 
கல்லூரி
மாணவர்
விடுதி.

அங்கு
படிக்கும்
மாணவர்களின்
அறைகளில்...

அடிக்கடி 
திருட்டு 
நடந்து 
கொண்டு
இருந்தது.

சில நாட்கள்
கண் விழித்து
விடுதி 
மாணவ
தலைவர்...
 
திருடனை 
ஒரு வழியாக
கண்டு பிடித்தார்.

அந்த 
திருடன்
வேறு யாருமல்ல
அவனும் ஒரு
மாணவனே.

விஷயம்
விடுதி 
காப்பாளரும்
பேராசிரியருமான
தலைமை
மருத்துவருக்கு
தெரிவிக்கப்பட்டது.

மற்ற 
மாணவர்கள்
இதை 
போலீசுக்கு
தெரிவிக்க 
வற்புறுத்தினர்.

ஆனால்
விடுதி 
காப்பாளர்...

'யார் யாருக்கு
 எவ்வளவு பணம்
 திருடு போயிற்று'

என 
விபரங்கள்
கேட்டு...

மொத்த
பணத்தையும்
தான் வழங்கி
விஷயத்தை
முடித்து வைத்தார்.

திருடிய
மாணவரை
ஒரு விளக்கம் கூட 
கேட்க வில்லை.

இது நடந்து 
சில ஆண்டுகள் 
கழிந்தன.

இப்போது...
 
அந்த
திருட்டை 
வெளிச்சத்துக்கு
கொண்டு வந்த
விடுதி மாணவ
தலைவர்...

அதே 
கல்லூரியில்
பேராசிரியராக
பணிபுரிகிறார்.

அந்த  
கல்லூரிக்கு
விடுதி 
காப்பாளராக
இருந்த 
பேராசிரியர்...

முதல்வராக
இருக்கிறார்.

இந்நிலையில்
முதல்வர்
ஒருநாள்...

தனக்கு வந்த
ஒரு கடிதத்தை 
எடுத்து வந்து...

அந்த 
பேராசிரியரிடம்
கொடுத்து படிக்க 
கூறினார்.

அந்த கடிதம்
அன்று திருடன்
என முத்திரை
குத்தப்பட்ட
மாணவனால்
எழுதப்பட்டிருந்தது.

அதில் 
எழுதப்பட்டிருந்த
வாசகம் இதுதான்.

"நான் இன்று
 சமூகத்தில் 
 ஒரு தேர்ந்த 
 மருத்துவராக
 இருப்பதின்
 காரணம்
 தாங்கள் தான்.

 தனி 
 மருத்துவராக
 இருந்த நான்
 தற்போது அரசு
 மருத்துவராக
 பணியில் 
 சேர்ந்துள்ளேன்.

 நான் 
 வாங்கிய
 முதல் 
 சம்பளத்தை 
 இத்துடன்
 காசோலையாக
 அனுப்பியுள்ளேன்.

 நான் செய்த
 தவறை
 திருத்தியது...

 என்னை
 மனிதனாக
 மாற்றியது...

 என்
 வாழ்க்கை
 பாதையை
 சீராக்கியது
 தாங்களே...

 என்
 வாழ்க்கையில்
 மறக்க முடியாத
 நபர் தாங்கள்.

 தங்களுக்கு 
 என் சிரம் தாழ்ந்த
 வணக்கங்கள்
 மற்றும் நன்றிகள்.

என 
குறிப்பிட
பட்டிருந்தது.

' மன்னிப்பை
  விட மாபெரும்
  தண்டனை
  ஒன்றில்லை '

என்பதும்...

' எந்த
  நிலையிலும்
  மாணவர் மீது
  வைக்கும் 
  நம்பிக்கை
  வீண்    
  போவதில்லை '

என்பதும்
உண்மைதானே.

வாங்க...

மன்னிக்க  
தெரிந்த 
மனிதனின் 
உள்ளம் 
மாணிக்க
கோயிலப்பா...

என்னும்
ஆலங்குடி
சோமுவின்
வார்த்தைகளை
உண்மையாக்க...

முயற்சிகள்
செய்வோம்.

அன்பான
உலகம்
படைக்கவும்
தொடங்குவோம்.

அன்புடன்
காலை
வணக்கம்..