Showing posts with label ஆசிரிநர்களுக்கு. Show all posts
Showing posts with label ஆசிரிநர்களுக்கு. Show all posts

Tuesday, September 28, 2021

புதிய பார்வை..புதிய கோணம்..

🍁  புதிய பார்வை  🍁

  ஒருவர்
  கேட்கும் 
  பத்து
  உதவிகளை
  தொடர்ந்து
  செய்

  பதினோராவது
  உதவியை
  மறுத்து
  பார்

  செய்த பத்து
  உதவியையும்
  மறந்து

  மறுத்த
  நிகழ்வை
  மட்டுமே அவர்
  மனதில் தாங்கி
  கொண்டிருப்பார்

இது
தமிழ் வாணன்
அவர்களின்
கூற்று

  இது
  தான்
  உலகம்

  இது
  தான்
  மனித 
  இயல்பு

  இதுதான்
  யதார்த்தம்

  இருப்பினும்

  நமக்கும்
  அதைப்போல
  சூழ்நிலைகள்
  வரலாம்

  அந்த
  நேரங்களில்

  கருத்து
  வேறுபாடு
  கொண்டு
  நாம் சலித்து
  கொள்ளாமல்

  அவர்கள்
  நமக்கு செய்த
  நன்மைகளை
  நெஞ்சத்தில்
  நிறுத்தி

  ஒரு
  நிமிடம்
  பொறுத்து
  போனால்

  ஏற்படும்
  நன்மைகள்
  ஏராளம்

இது
லேனா
தமிழ் வாணன்
அவர்களின்
கருத்து

  நன்றி 
  தெரிவிக்கும் 
  மக்களின்
  வாழ்க்கை 
  நிலையாகவும் 
  வலிமையாகவும் 
  இருக்கும்

  மேலும்
  நன்றி 
  தெரிவித்து 
  வாழ்பவர்கள் 
  மிகவும் 
  ஆனந்தமாய் 
  இருப்பார்கள் 

என்கிறது  
மெக்சிகன் 
பல்கலைக்கழக 
ஆய்வு முடிவுகள்

இன்றைய
நடைமுறையில்
இவைகளை
கடைபிடிப்பது
கண்டிப்பாக
கடினம்தான்

இருப்பினும்

  நாம்
  செய்த
  உதவிகளை
  மறந்த அவர்
  
  அவராகவே
  இருந்து விட்டு
  போகட்டுமே

  அவர்
  செய்த
  உதவிகளை

  நம் 
  மனதில் நாம் 
  என்றைக்கும்
  நிறுத்துவோமே

  நன்றி 
  சொல்லும் 
  நெஞ்சம் 
  நமக்கு
  இருப்பின்

  நான்கு 
  திசையிலும் 
  நன்மைகள்
  நமக்கு
  விளையுமே

முயற்சிகள்
செய்து
பார்க்கலாம்
வாங்க

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

அன்புடன்
காலை
வணக்கம்

🎉🎉🎉🎉🎉🎉🎉

நன்றி முனைவர். சுந்தர மூர்த்தி