Monday, July 20, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

இன்றைய 
நாளில்...
 
அன்பு என்ற 
வார்த்தை 
பெரும்பாலும்
தவறாகவே 
புரிந்து கொள்ள
பட்டுள்ளது.

யாராவது ஒருவர் 
நமக்குப் பிடித்தது 
போல் பேசும்போது
நாம் அவரை 
விரும்புவதும்...
 
அதே மனிதர் 
நாளை நமக்கு 
பிடிக்காததை 
செய்யும்போது...

நாம் 
அவரை முன்பு 
நேசித்தது போல 
நேசிக்காமல்
வெறுக்க 
தொடங்குவதும்...

வாடிக்கையாகி
வருவது கண்கூடு.

அப்போது
நமது அன்பு 
எங்கே போயிற்று? 

அந்த அன்பு 
' தற்காலிகமாக 
  பாதிப்புக்கு
  உள்ளாகிவிட்டது '
என்பதுதான்
உண்மை.

நாம்
சாதாரணமாக 
விளையாடும் 
இந்த பரமபத
விளையாட்டில்...

அன்பும் 
வெறுப்பும் 
மாறி மாறி 
வரக்கூடியதாகவும்...

ஒன்று 
மற்றொன்றாக 
மாறக்கூடிய
ஒன்றாகவும்
இருக்கிறது. 

இந்த 
அன்பு – வெறுப்பு 
உறவுமுறை என்பது
அன்பே அல்ல.

அது 
வெறுமனே ஒரு 
மனிதருக்கோ 
அல்லது ஒரு 
சூழ்நிலைக்கோ 
நாம் பதிலளிக்கும் 
ஒரு செயல்தான். 

அது, 
பொருள்சார்ந்த 
அல்லது 
பலன்சார்ந்த 
அன்பு 
அவ்வளவுதான்.

உண்மையான 
அன்பிற்கு 
பொருளை
பற்றி தெரியாது.

பலனை
பற்றி அறியாது.

எதிர்பார்ப்புகளை
உணராது.

உண்மையான
அன்பு 
எனப்படுவது
அன்பிற்காக
மட்டுமே.

அப்போது அது
தெய்வீகமாக 
ஆகி விடுகிறது
என்பதே நிஜம்.

வாங்க...

உண்மையான
அன்பை 
பகிர
தொடங்குவோம்.

அன்பான 
உலகை
படைக்கவும்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரி... மிகவும் சரி...

Kasthuri Rengan said...

நல்ல கருத்து