Monday, April 29, 2019

தனிமையின்...கொடுமை...

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்*
*நான் தனிமையில்* *நின்றுவிட்டேன்!!*

விரித்த படுக்கை விரிப்பில்
கசங்கல் இல்லை இப்போது..

அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும்
துணிகளும் இல்லை இப்போது..

ரிமோட்டுக்கான சண்டை
ஏதும் இல்லை இப்போது..

புதிய புதிய உணவுகேட்டு
ஆர்பட்டமும் இல்லை இப்போது..

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்*
*நான் தனிமையில் நின்றுவிட்டேன்*!!

காலையில் வாசலில் விழும்
செய்தித் தாளுக்கு அடிதடி
இல்லை இப்போது..

வீடே பெரிதாய் விசாலமாய்
தோன்றுது இப்போது..

ஆனாலும் எந்த அறையிலும்
உயிரோட்டம் இல்லை இப்போது..

நகர்த்தினாலும் நகர மறுக்குது
நேரம் இப்போது..

குழந்தைப் பருவ நினைவு
படமாய் சுவரில் தொங்குது இப்போது..

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்*
*நான் தனிமையில்* *நின்றுவிட்டேன்*!!

முதுகில் சாய்ந்து யாரும் கழுத்தை
கட்டுவதில்லை இப்போது..

குதிரை ஏறி சவாரி செய்ய
முதுகை வளைக்கும் வேலை
இல்லை இப்போது..

உணவு ஊட்ட நிலாவும்
வேண்டியதில்லை இப்போது..

உணவு ஊட்டியபின் மனதில்
தோன்றும் ஆனந்தமும்
இல்லை இப்போது..

தினமும் வரும் விவாத
விளக்கத்திற்கு
வாய்ப்பில்லை இப்போது..

போடும் சண்டையை
விலக்கிடும் ஆனந்தமும்
இல்லை இப்போது..

மகிழ்ச்சியில் கிடைக்கும்
அன்பு முத்தமும்
இங்கே இல்லை இப்போது..

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்*
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

*கண் இமைப்பதற்குள்*
*வாழ்வின்* *பொற்காலம்*
*ஓடித்தான் போனது*..

அழகான அந்த வசந்தம்
எப்போது கரைந்ததோ?..

மழலை மொழியில்
வழிந்த ஆனந்தம்
நொடிச் சிரிப்பும் அழுகையும்
முதுகில் தட்டித் தந்து
மடியில் கிடத்தி தோளில்
சாய்த்து தாலாட்டு பாடி
தூங்கச் செய்து அடிக்கடி
விழித்து கலைந்த போர்வை
சீராய் போர்த்திய காலமும்
வேலையும் இல்லை இப்போது..

படுக்கும் கட்டிலும் விசாலமாய்
தோன்றுது இப்போது..

அன்புக் குழந்தைகளின்
இனிய குழந்தைப் பருவம்
எங்கோ தொலைந்து விட்டது..

*என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்*
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

தன் காலுறையை எவரும்
அங்கும் இங்குமாய்
எறிவதில்லை இப்போது..

குளிர்பதனப் பெட்டியும் சூன்யமாய்
வீடுபோல் நிற்கிறது..

குளியலறையும் ஈரமில்லாமல்
உலர்ந்து கிடக்கிறது இப்போது..

சமையலறையோ அமைதி
மண்டிக் கிடக்கிறது இப்போது..

காலை மாலை தவறாமல்
உடல்நலம் பற்றி
அலைபேசியில் விசாரிப்பு
*நான் ஓய்வுடன் நலம் பேண*
ஆயிரம் அறிவுரை
தருகிறார்கள் இப்போது..

அன்று நான் அவர்களின்
சண்டை விலக்கி வைத்தேன்

இன்று அவர்கள் எனக்கு
அறிவுரை சொல்கிறார்கள்.

*நான் குழந்தையாகி*
*விட்டதை*
*உணர்கிறேன்* *இப்போது*..

என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!

*-யாரோ நம்மில் ஒருவர் எழுதியது!*
🙏🙏💐💐😭😭👌👌

தேவை....மனிதம்....

‘நாய்க் குட்டிகள் விற்பனைக்கு’என்று எழுதியபலகையை தனது கடைக் கதவுக்கு  மேல் மாட்டிக் கொண்டிருந்தார்
அதன் உரிமையாளர்.

அந்தப் பலகை குழந்தைகளை ஈர்க்கும்
என்று நினைத்தார் அவர்.அதன்படியே
ஒரு சிறுவன்,கடையின் முன் வந்து நின்றான்.

"நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன
விலைக்கு விற்கப் போகிறீர்கள்?"
என்று கேட்டான்.

1000ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை என்று- கடைக்காரர் பதில் சொன்னார்.

நான்நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?"
என்று கேட்டான்.

கடை உரிமையாளர் புன்னகைத்து,
உள் பக்கம் திரும்பி விசிலடித்தார்.
நாய்க் கூண்டிலிருந்து பந்துகளைப் போல ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகள்
ஓடிவந்தன.

ஒரு குட்டி மட்டும் மிகவும்
பின்தங்கி மெதுவாக வந்தது.
பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த
அந்தக் குட்டியை உடனே கவனித்த
சிறுவன்,"என்னாச்சு அதுக்கு?"
என்று கேட்டான்.

அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த
கால்நடை மருத்துவர், அதற்குப்
பிற்பகுதி சரியாக வளர்ச்சி அடையவில்லை.எனவே எப்போதும் முடமாகத் தான் இருக்கும்
என்று கூறிவிட்டதாக விளக்கினார்
கடைக்காரர்.

சிறுவனின் முகத்தில் ஆர்வம்.
"இந்தக் குட்டிதான் எனக்கு வேணும்."என்றான்.

"அப்படின்னா நீ அதுக்குக்
காசு கொடுக்க வேணாம். நான்
அதை உனக்கு இலவசமாகவே தர்றேன்"
என்றார் கடைக்காரர்.

அந்தக் குட்டிப் பையனின் முகத்தில்
இப்போது சிறு வருத்தம்.
கடைக்காரரின் கண்களை நேருக்கு நேராகப்பார்த்து விரல் நீட்டிச் சொன்னான்.

"நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாகக்
கொடுக்க வேணாம். மற்ற நாய்க்
குட்டிகளைப் போலவே இதுவும்
விலை கொடுத்து வாங்கத்
தகுதியானது தான்.

நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத்
தொகையையும் கொடுக்கிறேன்.
ஆனா, இப்போ எங்கிட்ட கொஞ்சம் பனம் தான் இருக்கு. பாக்கித்
தொகையை மாசமாசம்
கொடுத்துக் கழிச்சிடறேன்." என்றான்.

ஆனாலும் கடைக்காரர் விடவில்லை.
"பையா... இந்த நாய்க் குட்டியால
உனக்கு எந்தப் பிரயோஜனமும்
இல்லை.இதால மற்ற நாய்க்குட்டிகளைப் போல ஓடமுடியாது...குதிக்க முடியாது... உன்னோட விளையாட முடியாது."என்றார்

உடனே, அந்தப் பையன்
குனிந்து தனது இடது கால்
பேண்டை உயர்த்தினான்.
வளைந்து, முடமாகிப் போயிருந்த
அக்காலில் ஓர் உலோகப்
பட்டை மாட்டப்பட்டிருந்தது.

இப்போது அவன்
கடைக்காரரை நிமிர்ந்து பார்த்துச்
சொன்னான்.

"என்னாலும் தான் ஓட முடியாது...
குதிக்க முடியாது. இந்தக்
குட்டி நாயின் கஷ்டத்தைப்
புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத்
தேவை!" என்றான்.

கடைக்காராரின் கண்களில் கண்ணீர் வழிந்து சிறுவனை அணைத்துக் கொண்டார்.

மனிதர்கள் நிறையப் பேர் வாழ்கிறார்கள் இவ்வுலகில் ஆனால் மனிதநேயதுடன் வாழ்பவர்கள் எத்தனைப் பேர்.....?

உன் வலியை உன்னால் உணர முடிந்தால் நீ உயிரோடு இருக்கிறாய். ஆனால் பிறர் வலியை உன்னால் உணர முடிந்தால்  நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.....

#மனிதம்தேடிபயணிப்போம்...
நன்றி நட்பூகளே...

வாழ்க்கை திக்கலை தீர்க்கும் கணிதம்...

1.அஞ்சு புறா இருக்கு. அது நாலு கூடு இருக்கிற கூண்டுக்குள்ள போகுது. அப்போ குறைந்தபட்சம் ஒரு கூட்டுக்குள்ள ரெண்டு புறா இருக்கனும் அப்படித்தானே. இப்படி ஒருவர் சொன்னால் என்ன சொல்வோம்

“போடா லூசு. இது ஒரு மேட்டரா இது தெரியாதா. சொல்ல வந்துட்டான்” என்போம். ஆனால் இதை ஒரு தாளில் எழுதி தெள்ளத்தெளிவாக இதையொட்டி Dirichlet யோசிக்கும் போதுதான் Pigeonhole principle என்றொரு தியரி வந்து, அது கணனித்துறை வளர்ச்சிக்கு முக்கியமான பங்கும் ஆற்றிக் கொண்டிருக்கிறது.

2.ஒரு காச சுண்டி விடுறோம். அது தலைவிழும் இல்லன்னா பூ விழும். ஆம்பிளப்பிள்ள இல்லன்னா பொம்பளப் பிள்ளதான பொறக்கும். இது ஒரு விஷயமா என்று சொல்லாமல்.

தலை விழுவது ஒரு நிகழ்ச்சி
கால் விழுவது ஒரு நிகழ்ச்சி
மொத்த நிகழ்ச்சி வாய்ப்புகள் = 2
அப்போ தலை விழும் வாய்ப்பு = 1/2
கால் விழும் வாய்ப்பு : 1/2 என்று எழுதும் போது அது Probability என்ற நிகழ்தகவு என்ற முக்கியமான கணிதமாக மாறுகிறது.

3.ஒன்று என்ற எண்ணின் வர்க்கமூலம்( Squareroot) -1,1 அப்ப மைனஸ் ஒன் என்ற -1 வர்க்கமூலம்  (Squareroot) என்ன ? என்று எழுதிப்பார்க்கும் போது  அங்கே Complex Number என்றொரு கணிதம் கிடைக்கிறது.

4.ஒருத்தன் நமக்கு பத்து ருபா தரவேண்டியதிருக்கு. நாம அவன் கிட்ட இருவது ரூவா கடன் வாங்கியிருக்கோம். திரும்ப அவனுக்கு பத்துரூவா கொடுத்தா போதும்.

நம்ம அவனுக்கு கொடுக்க வேண்டியது +20
அவன் நமக்கு கொடுக்க வேண்டியது - 10.
+20-10 = 10. அப்போ மைனஸ் நம்பர் இருக்கா. ஆமா சைபருக்கு அந்தப் பக்கம் -1,-2,-3,4 எல்லாம் போட்டுக்கலாம். Integers கிடைக்கிறது.

5.ஒரு செங்கோண (Right angle triangle) வழியா போறோம். அதுல நேர் பாதைகள் மூலமா போறதுக்கு, சரிவா சாய்ஞ்சிருக்கே அது வழியா போகலாமே அப்படின்னு நினைக்கிறீங்க.

ஏண்டா கொளத்தூர்ல இருந்து அண்ணாநகர் போக, கொளத்தூர் டூ பேரிஸ் கார்னர், பேரிஸ் கார்னர் டூ அண்ணா நகராடா போவ, குறுக்க நூறடி ரோட்டப் பிடிச்சா அண்ணா நகர்டா என்போம். அதையே கொளத்தூர் டூ பேரீஸ் வெக்டார் + பேரீஸ் டூ அண்ணா நகர் வெக்டார் = கொளத்தூர் டூ அண்ணா நகர் வெக்டார் அப்படின்னு தெளிவா ஒரு பேப்பர்ல எழுதினோம்னா அதுதான் Vector Algebra.

6.பால் ஐஸ், கப் ஐஸ், கோன் ஐஸ் இந்த மூணையும் மாத்தி மாத்தி எப்படியெல்லாம் எழுதலாம்.
கப் ஐஸ், பால் ஐஸ், கோன் ஐஸ்
கோன் ஐஸ், கப் ஐஸ், பால் ஐஸ் மூணு தடவ எழுதலாம். இத Combination சொல்லலாம். இதே இத வரிசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து. அதாவது (பால் ஐஸ், கப் ஐஸ்) வந்து (கப் ஐஸ், பால் ஐஸ்) ஆகாது அப்படின்னு ஒரு கொள்கை வெச்சிகிட்டா அத 6 முறை எழுதலாம். இது Permutation.

நம்ம மொபைல்ல பேட்டர்ன் லாக் ஒரு Permutation தான். இப்படி “ப” போட்டா ஒபன் ஆகும் அப்படி “ப” போட்டா ஒபன் ஆகாது. ஆனா Combination படி எப்படி “ப” போட்டாலும் ஒபன் ஆகும். ஒரு பேப்பர்ல இத எழுதி தெளிவாக்கிட்டா அதுதான் Permutation &  Combination  கணிதம்.

7.அஞ்சு செண்டிமீட்டர்ல ஒரு கோடு (துண்டு) வரையுறோம். அதே கோட்ட ஒரு Graph sheet ல வரைஞ்சா அது வேற ரூபம் ஆகுது. அந்த கோட்டுடோட தொடக்கப் புள்ளிய (X1 YI)
கண்டுபிடிக்கலாம். முடிவுப் புள்ளிய (X2 Y2) கண்டுபிடிக்கலாம். அப்ப ஒரு கோட்ட இரண்டு புள்ளிகள் அடிப்படையிலும் வரையறுக்கலாம். இப்படி தெளிவா எழுதிப் பாத்தோம்னா அதுதான் Analytical Geometry.

என்ன சொல்ல வர்றேன்னா வாழ்க்கையில நிறைய பேப்பர் பேனா உபயோகிங்கன்னு சொல்ல வர்றேன். நம்ம எல்லாருக்கும் பேப்பர் பேனாவுல ஒரு ஐடியாவ எழுதிப் பாக்க தயக்கம் இருக்கு.

ஒரு பஸ் வருது. அதுல ஜன்னல் சீட் பக்கம் வெயில் சுள்ளுன்னு அடிக்குது. அதுல உக்காரலாமா கூடாதா. ஒருவேளை அந்த பஸ் அப்படி திரும்பும் போது வெயில் அந்தப் பக்கம் அடிக்காதா இருக்கும். அப்ப உக்காரலாம் உக்காராம போகலாம். ஆனா வீட்டுக்கு வந்து ஒரு பேப்பர எடுத்து அத போட்டுப் பாருங்க.

சூரியன் வெயில் அடிக்கிற திசை பஸ் போற ரூட்ட தோராயம வரைஞ்சி , அப்ப இந்த பஸ்  ஜன்னல் சீட்ல வெயில் அடிக்கிற நேரம்தான் அதிகம். அல்லது குறைவு. அது தப்பாவே இருக்கட்டும் ஆனா முயற்சி பண்ணுங்க. அப்படி முயற்சி பண்ணும் போது நீங்க ரொம்ப நல்லா ஃபீல் பண்ணுவீங்க.

சின்ன கான்சப்டா இருக்கும். அத ஒரு பேப்பர்ல எழுதிப் பாருங்க. உங்களுக்கு இன்னும் நிறைய தெளிவு கிடைக்கும். என் மனதில் இப்போ உள்ள பிரச்சனை ஒரு பேப்பர்ல எழுதுங்க.பத்து விசயத்த எழுதும் போது அது கணித மாடல் ஆகிப்போகுது. அப்புறம் உங்களுக்கே அதத் தீக்கிறதுக்கு நிறைய ஐடியா வரும்.

ஒருமுறை நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது நண்பர் வீட்டு வேலை செய்த கணக்கை ஒரு தொழிலாளி சொல்லிக் கொண்டிருந்தார். அதுக்கு 650, இதுக்கு 725, அதுக்கு 500 , நான் உங்களுக்கு தரவேண்டியது 225 , அது போக அன்னைக்கு ஒரு டப்பா பெயிண்ட் நாந்தான் வாங்கினேன் அது ஒரு 300 . இப்படியாக நீண்ட கணக்கைப் போட்டு இவ்வளவு காசு நீங்க தரணும் என்று வாங்கிச் சென்றார்.

அவர் வாங்கிச் சென்றதும் நண்பருக்கு குழப்பம். அது வரை தலையை தலையை ஆட்டிக் கொண்டிருந்தார். வாங்கிச் சென்றதும் “இவர் சொல்ற கணக்கு வேகமா இருக்கே” என்றார். புரிகிறதா டக்கென்று ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து எழுதி கணக்கிடுவதற்கு நண்பருக்கு வெட்கம். அதுதான் அது ஒரு இந்திய மனத்தடைதான். அதன் பிறகு அன்று முழுவதும் குழம்ப வேண்டியதாக இருக்கும்.

22000 கோடி பணத்தை 22 கோடி மக்களுக்கு பகுத்து கொடுக்க வேண்டும். இந்த எளிய கணக்கை மனதால் செய்ய சமீபத்தில் குழம்பிவிட்டேன். அந்த 22000 கோடி என்று வருகிறதல்லவா அதில் குழம்பிவிட்டேன்.
கோடிக்கும் கோடிக்கும் வெட்டு கொடுக்க வரவில்லை எனக்கு.

குழப்பம் அதிகரிக்கவே ஒரு பேப்பரையும் பேனாவை எடுத்துக் கொண்டேன்.
22 கோடி மக்கள் ஆளுக்கு 1 ரூபாய் - 22 கோடி
22 கோடி - 10 ரூபாய் - 220 கோடி
22 கோடி - 100 ரூபாய் - 2200 கோடி ரூபாய்
22 கோடி - 1000 ரூபாய் - 22000 கோடி ரூபாய்.
அப்படியானால் ஒரு ஆளுகு 1000 ரூபாய் கிடைக்கும் என்று முடிவுக்கு வந்தேன்.

உங்களுக்கு இது எளிய கணக்காக இருக்கலாம். நீங்கள் மனக்கணக்கில் கூட இதை எளிதாகச் செய்யலாம். ஆனால் எனக்கு அன்று குழம்பிவிட்டது. குழப்பம் வரும் போது ஒரு பேப்பரையும் பேனாவை எடுத்தேன்.   நான் வகுக்கவில்லை. மிக எளிதான சின்னப் பிள்ளை கணக்குக்குச் சென்றேன். விடையைப் பெற்றேன்.

உங்களுக்கு என்ன தோன்றினாலும் அதை ஒரு கணித மாடலாக்குங்கள். கணித மாடல் ஆக்குவது என்பது பெரிய கஷ்டமான காரியமல்ல. ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து எழுதிப் பார்ப்பது. சின்ன சின்ன படங்கள் போட்டு பார்ப்பது. அதுதான் கணித மாடல். அப்படி நீங்கள் ஒரு கணித மாடல் ஆக்கும் போது பிரச்சனையை வேற லெவலில் இருந்து தீர்ப்பீர்கள்.

குழந்தைகளுக்கும் இதைச் சொல்லிக் கொடுங்கள். எதை செய்தாலும் ஒரு பேப்பரில் எழுதி மாடல் உருவாக்க சொல்லிக் கொடுங்கள்.

சமீபத்தில் என் மகள் என்னிடம் ஒன்று கண்டுபிடித்திருக்கிறேன் என்று காட்டினாள்.

என்னவென்று பார்த்தால் "ZIP ZAP" என்று எழுதிக் காட்டினாள்.

இதுல என்ன விஷயம் என்றேன். அந்த 'I' எழுத்துக்கு நேரே ஒரு கோடு போட்டு அதை மேலே நடுவே எழுதினாள்.

A க்கு ஒரு கோடு போட்டு அதை மேலே 'I' பக்கத்தில் எழுதினாள்.

“இதுல என்ன” என்றேன்.

“பாருங்க 'I' , ”A” ரெண்டுமே Z மற்றும் P நடுவுலதான் வருது. இந்த 'I'  அங்க போனாலும், அந்த ”A” இங்க வந்தாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.அது ஒரு பியூட்டிதான.  என்றாள்.

“அட ஆமா பிள்ள என்ன கண்டுபிடிப்பு” என்று பாராட்டினேன்.

ஒரு பேப்பர் பேனாவில் ”ZIP ZAP” என்று எழுதும் போது அவளால் அதன் பொதுத்தன்மையை கண்டுபிடிக்க முடிகிறது. அதையொட்டி அந்த I மற்றும் A எழுத்துக்கள் எந்த Z P க்கு நடுவே போனாலும், எந்த எழுத்து எந்த ZP க்கு சொந்தன் என்று கண்டுபிடிக்க முடியாது என்று சொல்கிறாள் பாருங்கள். அது அடுத்தகட்ட கண்டுபிடிப்பு.

ஆகவே எப்போதும் குழந்தைகளை பேப்பரில் அன்றாடப் பிரச்சனைகளை அல்லது அன்றாடம் அவர்கள் பார்ப்பதை ஒரு கணித மாடலாக எழுதக் கற்றுக் கொடுங்கள்.

அவர்கள் அப்படி கற்றுக் கொள்ள நீங்கள் ஒரு பேப்பர் பேனாவை எடுத்து அப்படி இப்படி வரைந்து கணித மாடல் உருவாக்கிப் பழக வேண்டும்.

உங்களைப் பார்த்து அவர்களும் வருவார்கள்.

அவ்வளவுதான் உங்களுக்கு கணித மாடல் எழுதி உருவாக்கும் வெறி இப்போதே வரட்டும்.

உறுமிக் கொண்டு வேலையில் இறங்குங்கள் பார்க்கலாம்.

நன்றி விஜய் பாஸ்கர் ஜி....

Wednesday, April 24, 2019

புதிய பார்வை....

‌🍁புதிய பார்வை🍁

எந்த ஒரு
சாதனையாளரும்,
முதல்
முயற்சியில்,
வெற்றி
பெற்றவர்கள்
அல்ல...

'கலிலியோ'
தொடங்கி
'கலாம்'
வரை
பலரும்,
தடைகளை
அவமானங்களை,
வேதனைகளை,
சோதனைகளை
தாண்டி,
நிலை
நின்றவர்கள்தான்...

விழுப்புரத்தில்
வெகு
சாதாரன
குடும்பத்தில்
பிறந்த
'வி.சி.கணேசன்'
ஆரம்ப
கால
கட்டத்தில்
பட்ட
கஷ்டங்கள்,
கொஞ்சம்
நஞ்சம்
அல்ல...

அதையும்
அவர்
தாண்டியதில்
தான்,
'நடிப்புலக
சக்ரவர்த்தி'யானார்...

'மக்கள்
திலகம்'
வாழ்வில்
சந்தித்த
சோதனைகள்
மிகவும்
அதிகம்...

அதனை
அவர்
முறியடித்து,
மக்களின்
மனதை
வென்றதுதான்,
அவரின்
வெற்றி
சாத்தியம்
ஆனது...

'கம்பனை'
புறக்கணித்த
நாடு இது...

'மகாகவி
பாரதி'யை
பித்துகுளி
என்று
அழைத்தவர்கள்
ஏராளம்...

திருக்குறளை
அரங்கேற்றம்
செய்ய,
'திருவள்ளுவர்'
பட்ட
துன்பம்
கொஞ்சமல்ல...

உலகம்
உருண்டை
என்று
கூறிய
கருத்தினால்,
'கலிலியோ'வை
ஒரு
மதமே
விலக்கி
வைத்தது...

ஓடும்
குதிரை
வண்டியில்
இருந்து,
தாழ்ந்த
சாதிக்காரன்
என்று,
'அம்பேத்கரை'
கீழே
தள்ளியது
இந்த
சமூகம்...

அவர்கள்
அனைவருமே,
பொறுமையுடனும்,
நிதானத்துடனும்
தன்னை
உணர்ந்து,
செயல்பட்ட
காரணத்தினால்
தான்...

சோதனைகளை
சாதனைகளாக
மாற்றிகாட்டி,
சரித்திரத்தில்
இடம்பிடித்தனர்...

- சுகி சிவம் -

வாங்க...

அவர்களின்
வழிகளை
பின்பற்றி...

பொறுமை
மற்றும்
நம்பிக்கையுடன்
நடப்போம்
எனில்...

நாமும்
நம்
வாழ்வில்,
வெற்றி
பெறலாம்...

அன்புடன்
காலை
வணக்கம்...

Saturday, April 20, 2019

வெற்றி...படிகட்டு....

'இன்றைய சிந்தனை..( 21.04.2019)..
.............................................................

'எதையும் ஈடுபாட்டுடன்''...
....................................................

எந்த செயல் புரிய முனைந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் பொறுப்பாய் நிறைவேற்றி முடிக்கும் மனோபாவம் வேண்டும்.

மனமிருந்தால் செய்வேன்; இல்லையெனில் 'என் வழி தனி வழி' என்றெல்லாம் ஒரு செயலில் இறங்கினால் அது இரண்டுங்கெட்டான் வழி. ஈடுபாட்டுடன் செய்யப்படும் செயல்களே மன நிறைவளிக்கும்; மகிழ்வைத் தரும்.

“இந்தக் காரியத்தில் நான் இறங்கப் போகிறேன்; என்ன ஆனாலும் சரி செய்து முடிக்கப் போகிறேன்” என்று களத்தில் இறங்கிப் பாருங்கள்.

அதன்பிறகு நடைபெறுவது மாயம். மனதில் ஏற்படும் திடமான அந்த உறுதிமொழி நீங்கள் மேற்கொள்ளும் காரியத்தில் உங்களை முழு மனதுடன் ஈடுபட வைக்கும்.

பின்னர் எதிர்படும் தடங்கல்கள், பிரச்சனைகள் போன்றவற்றையெல்லாம் மனம் எதிர்கொள்ளும் விதமே தனி.

ஒரு டீ கடைகாரரிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்... ஒரு முறை டீ கடைக்காரருக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது.. அப்போது மல்யுத்த வீரன் டீ கடைக்காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்...

அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக் கொள்ள வேண்டும்; இல்லாவிடில் அது பெரும் அவமானம்..எனவே டீ கடைக்காரர் ஒப்பு கொண்டார்.

ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தார்.. அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினார்..

அவரது கதை முழுதும் கேட்ட அவர்,

" சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன"
என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றார்..இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று பின்பு கேட்டார்.

" டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன்..அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்..ஒரு வாரம் கழித்து வந்தார் டீ கடைக்காரர்..இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி..

இரண்டு வாரம் ஆனது..அப்போதும் அதே அறிவுரை..
போட்டி நாள் அருகில் வந்து விட்டது..டீ கடைக்காரர் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம்,

நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.. போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி...மல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.."

வா.. முதலில் டீ சாப்பிடு" என்றார் கடைக் காரர்."சரி" என்று அமர்ந்தான் வீரன்...

அந்த டீ கடைக்காரர்,டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு விட்டான் பயில்வான்...இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான்.

இப்போது என்ன ஒரு வேகம்! ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால்,போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணி..போட்டியே வேண்டாம் என சென்றுவிடுகிறான்..

அநேகமாய் இந்த கதைக்கு விளக்கம் தேவை இல்லை..எனினும் சில வரிகள்..

ஆம் நண்பர்களே.,

நாம் செய்யும் செயலையே ஈடுபாடோடு செய்யும் போது அந்த செயலும், நாமும் ஒரு உன்னத நிலையை எட்டு கிறோம்..

எதையும் ஈடுபாட்டுடன் செய்வதை உங்கள் பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

எதைச் செய்தாலும் அதை முழுமையாகவும், முறையாகவும், முதன்மையாகவும் செய்ய வேண்டும் என்ற தாகம் எப்பொழுதும் உங்கள் நெஞ்சில் தவழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

மனதில் ஊக்கமும்,உத்வேகமும் நிறைந்து
இருக்கும்போது செய்யும் வேலையில் ஈடுபாடும், முன்னேற்றமும் ஏற்படும்.

பிறகு என்ன,வெற்றி எப்போதும் உங்களுக்குத்தான்.!

Thursday, April 04, 2019

புதிய பார்வை...

மன்னிப்பு
அளித்தலும்
மன்னிப்பு
கேட்பதும்
மிக பெரிய
மானிட பண்பு...

கலைந்த
உறவுகளை
ஒன்று
சேர்க்க,
திறந்த
மனதுடன்
மன்னிப்பு
கேட்க
தயங்க
கூடாது...

அதேபோல
நம்மிடம்
மன்னிப்பு
கேட்பவர்களுக்கும்,
திறந்த
மனதுடன்
மன்னிப்பு
வழங்கவும்
தயங்க கூடாது...

இந்த
இரு காரியங்கள்
செய்ய,
காலம்
தாழ்த்துவதும்
கூடாது...

உண்மையில்
இது
கடினமான
வேலைதான்...

ஆனால்
நாம்
உண்மையாக
இருந்தால்,
யாரிடமும்
மன்னிப்பு
கேட்க,
வெட்கமோ
தயக்கமோ
கொள்ள
வேண்டிய
அவசியம்
இல்லை...

மன்னிப்பு
கேட்கும் போது
நம் உடலில்
ஒரு ரசாயன
மாற்றம்
ஏற்பட்டு
ஆக்கபூர்வமான
சகிப்பு தன்மை
அதிகமாகிறது...

அதே போல
மன்னிப்பு
முழு
மனதுடன்
வழங்கும்
வேலையில்,
நம் மனம்
அமைதி
அடைவதுடன்,
ஆற்றலும்
அதிகரிக்கிறது,
என
அறிவியல்
ஆய்வுகள்
தெரிவிக்கின்றன...

புயல் காற்று
மிக பலமாக
வீசும் போதும்
கூட,
சில செடிகளும்
சில மரங்களும்
வளைந்து
கொடுப்பதின்
காரணத்தால்,
வீழாமல்
நிலைத்து
நிற்கின்றன,
என்பது
இயற்கை
நமக்கு
வழங்கும்
பாடம்...

அன்புடன்
மாலை
வணக்கம்.