Friday, August 19, 2022

கணிதம் புதிய மதிப்பீடு முறை அறிவோமா..?

*மாணவர்களை மதிப்பீடு செய்யும் புதிய முறை ரிபஸ்  ( Rebus) படப்புதிர்கள்...உங்கள் பார்வைக்கு...காணொளியை கண்டு மகிழ்ந்து மறக்காமல் Subscribe செய்யவும்.*

*இவண்
என்றும் கல்விப்பணியில்
கனவு ஆசிரியர்
சேலம்.ஆ.சிவா*

Video வை காண கீழே உள்ள லிங்கை தொடவும்.

https://youtu.be/Ie43WbAlBE8

Friday, August 12, 2022

கற்றலின் இனிமை...



🍂துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான். 

🍂அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என 
 நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.

🍂அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, "இது என்ன உனது இடது கையில் கயிறு?" என்று கேட்டான்....

🍂"தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’" என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே....

🍂அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. "இந்தக் குச்சி எதற்கு?" எனக் கேட்டான் அரசன். "வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள். இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது" என்றான்.

🍂அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். "இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?" எனக் கேட்டான் அரசன்.

🍂"வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!" என்று பதில் சொன்னான்.

🍂அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து "அவர்கள் என்ன செய்கிறார்கள்?" என்று கேட்டான் அரசன்.

🍂"நூற்பு வேலை செய்துகொண்டிருக்கும்போது வாய் சும்மாதானே இருக் கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!"  என்றான்.

🍂"அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்? உள்ளே வரலாம்தானே" எனக் கேட்டான் அரசன்.

🍂அதற்கு நெசவாளி சொன்னான்: "அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்" என்றான்.

🍂ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.

🍂நெசவாளி சொன்னான்... 
"இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்".

🍂ஒருவன் விரும்பினால் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்க வும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.

🍂நமது சோம்பேறித் தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல் தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்.

நன்றி ..! பகிர்வு பதிவு...