Thursday, December 31, 2020

Tuesday, December 22, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...



ஒரு
கதை

ஒரு
கவிதை

ஒரு
கருத்து

ஒருவன்
குருவை தேடி
அடர்ந்த வனத்திற்கு
உள்ளே சென்றான்.

குருவை
கண்டான்
பேசினான்
பேசிக்கொண்டே
இருந்தான்.

நேரம் 
போனதே
தெரியவில்லை.

மாலை
மங்கியது

இருள் சூழ
தொடங்கியது.

" இரவு
  இங்கேயே
  தங்கி விட்டு செல் "

என்றார் 
குரு.

" இல்லை குருவே. 
  முக்கிய வேலை 
  நான் போயாக 
  வேண்டும் "

என்றான் 
இவன்.

இருள் 
இதற்குள்
அடர்த்தியாக
ஆனது.

இவன்
இருட்டில் செல்ல
அச்சம் அடைந்து
அதே நேரத்தில்
போகவும் 
எத்தனித்தான்.

இவன் மனதை 
அறிந்த குரு 
கைவிளக்கு
ஒன்றினை
ஏற்றி கொடுத்து...

" இதன் 
  ஒளியால்
  நீ நடந்து செல் "

என்று 
கூறினார்.

விளக்கை 
பெற்று நடக்க 
தொடங்கியவனை
பின் தொடர்ந்து 
வந்த குரு... 

அவன்
கையிலிருந்த 
விளக்கினை
வாங்கி ஊதி
அணைத்து விட்டு...

" இரவல் வெளிச்சம்
  துணைக்கு வராது
  உன் விளக்கு
  உன் இதயத்தில்.

  நெஞ்சில்
  துணிவிருந்தால்
  விளக்கு உனக்கு
  தேவையில்லை

  உள்ளத்தில்
  பயமிருந்தால்
  உயர்வு 
  உனக்கில்லை

  ஒளியும்
  இருளும்
  பாதையும்
  பயணமும்
  மாறி மாறி
  வரும் போகும்.

  தைரியமாக நீ 
  தொடர்ந்து செல்
  பயம் நீங்கும்
  பயணம் தொடரும்
  பாதையும் முடியும் "

என்று 
வாழ்த்தி
அனுப்பினார் 
குரு.

அவரின்
வாழ்த்துகளில்
வார்த்தைகளில்
நம்பிக்கையும்
மகிழ்ச்சியும்
அடைந்த
நம்மவர்...

தொடர்ந்து
சென்றார்
பயணத்தை
முடித்தார்.

அவரின்
வார்த்தைகளை
சிரமேற்
கொண்டார்
வாழ்விலும்
வென்றார்.

ஒரு
கவிதை :::

'  ஒளி
  குறைந்த 
  வீதியில்
  நடக்கும் 
  போதும்...

  உன் 
  விழிகளுக்கு
  வழி தெரியும்.

  உன்
  இதயத்தில்
  தீபம்
  எரிந்து
  கொண்டிருந்தால் '

புது 
கவிதை
நாயகன்

கவிஞர்
மு.மேத்தா

ஒரு
கருத்து :::

விதைக்கான
வெற்றி
அதன்
வீர்யத்தில்

நம்
வாழ்விற்கான
வெற்றி
நம்
நெஞ்சுறுதியில்

வாங்க.

நாம்
நம்மை
நம்புவோம்

நம் 
வாழ்வில்
ஜெயித்து
காட்டுவோம்.

_*அச்சம்*_
_*என்பது*_
_*மடமையடா*_

_*அஞ்சாமை*_
_*திராவிடர்*_
_*உடமையடா*_

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி
முனை.சுந்தரமூர்த்தி.

Monday, December 21, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..



அவரின்
கருப்பு கோட்
உலகம் அறிந்தது.

அங்கங்கே
கிழிசல்கள்.

அதன் மேல்
வெள்ளை
நூலில் 
தையல்கள்.

அதை
மறைக்க
கருப்பு மையில்
சாயம் வேறு.

இவ்வளவு
ஏழ்மை
நிலையிலும்

அவர்
பாடிய
ஒரு பாட்டு

' எத்தனை 
  கோடி 
  இன்பம்
  வைத்தாய்
  இறைவா '

அதனால் தான்
அவர்

மகா கவி
தேசிய கவி
தெய்வ கவி

என
போற்றப்பட்டார்.

எளிமையிலும்
மிக வலிமை

ஏழ்மையிலும்
மன செழுமை

கண்களில்
ஒரு காந்தம்

வார்த்தைகளில்
ஒரு ஜாலம்.

பாரதி
நமக்கெல்லாம்
ஒரு பாடமல்ல

அவர் ஒரு
வாழும் வரலாறு.

அவரின் புதிய 
ஆத்திசூடியின்
தெறிக்கும் சில
முத்துக்கள் :::

  அச்சம் 
  தவிர்

  ஆண்மை 
  தவறேல்

  உடலினை 
  உறுதி செய்

  எண்ணுவது 
  உயர்வு

  ஏறுபோல் 
  நட

  கற்றது 
  ஒழுகு

  குன்றென 
  நிமிர்ந்து நில்

  கூடி 
  தொழில் செய்

  சீறுவோர் 
  சீறு

  சூரரை 
  போற்று

  தூற்றுதல் 
  ஒழி

  தெய்வம் நீ 
  என்றுணர்

  நீதி நூல் 
  பயில்

  நேர்பட 
  பேசு

  புதியன 
  விரும்பு

  மூப்பினுக்கு
  இடம் கொடேல்

  யாரையும் 
  மதித்து வாழ்

  ரௌத்திரம் 
  பழகு

  வையத் 
  தலைமை கொள்

பாட்டுக்கு
மட்டுமல்ல
நாட்டுக்கே
நல்ல 
தலைவன்
அவன்.

அவன்
காட்டிய
பாதையில்
பயணம் 
செல்லின்...

விளைய 
போவது...

புதுமை !
வளமை !!
செழுமை !!!
இனிமை !!!!

முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

புதிய 
நம்பிக்கைகளுடன்

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்


நன்றி. முனை.சுந்தரமூர்த்தி

Tuesday, December 15, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

உங்களால்
சிரிக்க 
முடிந்தால் 
நீங்கள் 
ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் 
என்று 
அர்த்தம் 
உடல் 
ரீதியாகவும் 
மட்டுமன்றி 
மன ரீதியாகவும் 
இறுக்கமான 
மன 
உணர்வுகளை 
லேசாக்குவது
சிரிப்பு ...

சிரிக்க 
வேண்டிய 
தருணத்தில் 
உங்களால் 
சிரிக்க 
முடியவில்லை 
என்றால் 
உங்களுக்குள் 
நிச்சயம் 
ஏதோ 
ஒரு 
கோளாறு 
இருக்கிறது 
என்பதை
உணருங்கள்..

சிரிக்கக் 
கூடாத 
சந்தர்ப்பத்தில் 
சிரித்து 
வைத்தால்
அடுத்தவர்கள் 
வேறுமாதிரி 
சந்தேகப்பட்டு 
பேசுவார்கள் 
நீங்கள் 
நோயிலிருந்து 
விரைவில் 
குணமடைய 
நகைச்சுவை 
உணர்வு 
உதவும் 
என்பார்கள்..
மருத்துவமும் 
இந்த 
உண்மையை 
ஒப்புக் 
கொண்டுள்ளது 
கார்ட்டூன் 
படங்களையும் 
காமெடி 
புத்தகங்களையும் மருத்துவர்கள் 
பரிந்துரை 
செய்கிறார்கள் 
சிரிப்பு 
சிறந்த 
மருந்தாகிறது 
நகைச்சுவை 
ஒரு 
சிகிச்சை 
ஆகிவிட்டது ...

வாங்க 
சிரித்து வாழ
வேண்டும்
பிறர்
சிரிக்க
வாழ்திடாதே
வரியை
நினைவு
கூர்ந்து
மகிழ்வாய்
வாழ்வோம்...

%%%%%%%%
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்
&&&&&&&&&

Monday, December 14, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..

ஒரு
மீனவன் 
தன்னுடைய
பையில் 
தான் 
பிடித்த 
பெரிய 
மீனை 
வைக்க 
முடியாமல் 
தண்ணீரில் 
மீண்டும்
விட்டு
விட்டான்...

ஆனால்
அவன்
சிறிய 
மீன்களுக்காக 
மணி
கணக்கில்
காத்துக் 
கிடக்கிறான் 
அவன் 
பெரிய 
மீனை 
சிறு
துண்டுகளாக்கி 
அதே 
பையில் 
அடைத்துக் 
கொண்டிருக்க 
முடியும் 
ஆனால் ...
அவன்
செய்யவில்லை
ஆம்
அவனை 
போன்றவர்களுக்கு 
பார்வை
மற்றும்
அறிவும் 
சற்று
குறைவுதான்..
கொஞ்சம் 
சிந்தனையை 
பயன்படுத்தி
சூழ்நிலையை 
தனதாக்கிக் 
கொண்டால் 
வெற்றி 
நிச்சயம் 
என்பதை 
நம்மில்
பல
பேர்
உணராமல் 
வெற்றிக்கு
விடுமுறை
விட்டு 
வருந்துகிறோம்...

வாங்க
விழிப்பா
இருந்து
வாழ்வில்
வெற்றி
கொள்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்...

Sunday, December 13, 2020

உவமை கவிஞர் சுரதா விருது..

2020-ஆம் ஆண்டின் உவமைக் கவிஞர் சுரதா விருதினை தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்  மற்றும் உலகத்தமிழ்க் கவிஞர் பேரவை இணைந்து வழங்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்விருதிற்கு எனைத் தேர்வு செய்த சான்றோர் பெருமக்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்!

Saturday, December 12, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  HBD RAJINI SIR  🍁

இது
அரசியல்
பதிவு அல்ல.

யாரையும்
தாங்கி பிடிக்கும்
எழுத்துக்களும் அல்ல.

1975
'அபூர்வ ராகங்கள்'
திரைப்படம் 
வெளியானது.

கருப்பு - வெள்ளை
கலரில் அமைந்த
இத்திரைப்படம்

அந்த 
காலத்திலேயே
மெகா ஹிட்.

சிறந்த
திரைப்படம்

சிறந்த
ஒளிப்பதிவு

சிறந்த
பாடல்

என
மூன்று
தேசிய விருதுகள்
கிடைத்தது.

படம்
முழுக்க
ஸ்ரீ வித்யாவும்
கமலஹாசனும்
மேஜர் சுந்தரராஜனும்
ஜெயசுதாவும்
நாகேசும்

போட்டி போட்டு
நடித்தனர்.

மிக
சிறிய
பாத்திரத்தில்

கருப்பு
கலரில் இருந்த
ஒரு நடிகர் நடித்தார்.

அந்த
கருப்பு 
மனிதனை

பட்டை 
தீட்டினார்கள்
பால சந்தரும்
பாரதி ராஜாவும்.

காலம்
மாற மாற 
தன்னை மேலும்
பட்டை தீட்டிக்கொண்ட
அந்த மனிதர்

இதோ இன்று
கருப்பு வைரமாக
ஜொலித்து கொண்டு
இருக்கிறார்.

தொடக்கத்திலும்
தொடர்ந்து வளர்ந்து
வரும் நேரத்திலும்

எம்.ஜி. ஆர்.
சிவாஜி
ஜெய்சங்கர்
சிவகுமார்
என

மிக 
பெரிய
நடிகர்கள்
கோலோச்சிய
நேரமது.

அந்த
நேரத்திலேயே
தன் தனிப்பட்ட
நடிப்பால்
ஸ்டைலால்

அந்த கால
இளைஞர்களின்
மனதில் ஆதர்ஸ
நாயகனாக உயர்ந்தார்.

அவரை
அழிக்க
ஒழிக்க
திரை மறைவு
வேலைகள்
அரங்கேற்றம்
செய்யப்பட்டது.

அவருக்கு
பித்து பிடித்து
விட்டது என 
பத்திரிக்கைகளும்
தம் பங்குக்கு 
விளாசி
தள்ளின.

பாதகமாக
கருதப்படும்
கருப்பு நிறத்தை
கொண்டே

தன்
திரை வாழ்வை
சாதகமாக எப்படி
மாற்றி கொண்டாரோ
அதைப்போலவே

அத்தனை
எதிர்ப்புகளையும்

தன் சிரிப்பால்
தன் நடத்தையால்
தன் பொறுமையால்
வெற்றி கொண்டார் 
அவர்.

பெரியவர்கள்
ஆனாலும்
சிறியவர்கள்
ஆனாலும்
அவர்களை
மதித்து பாராட்டி

அவர்கள் மேல்
தன் அன்பாலும்
உயர்ந்த பண்பாலும்

பகைவரையும்
தன் பக்கம்
திரும்ப வைத்தவர்
இன்று...

தமிழக
வரலாற்றில்
தவிர்க்க முடியாத
ஒரு தலைவராக
மாறியிருக்கிறார்.

அவர்
நல்லவரா
கெட்டவரா

தேர்தலில்
நிற்பாரா
மாட்டாரா

ஜெயிப்பாரா
தோற்பாரா

என்னும்
(பக்க)வாதம்
மனிதர்களுக்கு
இடையே நடந்து
வருகிறது.

அவரை பற்றி 
பலர் தூற்றலாம்
கேலி செய்யலாம்
கேவல படுத்தலாம்

ஆனால்...

இதோ
இன்று வரை
யாரையும் எந்த 
சமூகத்தையும்
எந்த ஒரு 
இயக்கத்தையும்
பற்றி

ஒரு 
வார்த்தை கூட 
கண்ணிய 
குறைவாக அவர் 
பேசியதில்லை.

இதுவே அவரது 
பலமாக பலரால்
கருதப்படுகிறது.

சின்ன சின்ன
பிரச்சனைகளை
கூட
பெரிதாக 
ஊதிவிட்டு
குளிர் காயும் 
இந்த சமூகத்தில்

தன்னை 
பற்றிய
எதிர்மறை
விமர்சனங்களுக்கு

எதிர்வினை 
ஆற்றாமல் 
இருப்பது
 
அவருடைய 
மிக பெரிய 
பண்பை
பிரதிபலிக்கிறது
என்பதே உண்மை.

இது...

மதிப்பிற்குரியது
பாராட்டுக்குரியது
போற்றுதலுக்குரியது.

இனிய
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
ரஜினி சார் !!!

இது
அரசியல்
பதிவு அல்ல.

யாரையும்
தாங்கி பிடிக்கும்
எழுத்துக்களும் அல்ல.

🎉🥁🎊🎉🥁🎊🎉

பகிர்வு பதிவு

புதிய பார்வை..புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

" மனித மனம் 
  எதை கற்பனையில் 
  உருவாக்குகிறதோ, 
  நம்புகிறதோ அதை 
  அதனால் அடைய 
  முடியும் "

- எம்.எஸ்.உதயமூர்த்தி -

ஆம். 

நம் மன
எண்ணங்களின் 
வெளிப்பாடுதான்...
 
நாம் 
செய்யும் 
செயலில் 
அரங்கேற்றம்
செய்யப்படுகிறது.

நம் 
முதல் 
குடிமகனும் 
நம்மை கனவுகாண 
சொன்னது இதனால் 
தான்.

ஆனால்...

கால
வரையறை 
இல்லாத 
கனவுகளும்
திட்டங்களும்
வெறும் 
கற்பனைகளே. 

நாம் 
காணும் 
கனவுகளை 
செயல்படுத்த 
நாம் முயற்சிக்க 
வேண்டும்.

' முடியாது
  என்னும் ஒரு 
  வார்த்தை என்
  அகராதியில்
  இல்லை '

என்று
கூறியவர்
நெப்போலியன்.

' IMPOSSIBLE '
  என்னும்
  வார்த்தையில்...

  I'M POSSIBLE 
  என்னும் பொருள்
  அடங்கியுள்ளது 
  கண்கூடு.
   
யாரோ
ஒருவரால்
முடியும் போது...

நம்மால்
முடியாதா
என்ன ???

முடியாததற்கு 
காரணம், 
முயலாததே. 

நமக்கும்
ஆயிரம்
கனவுகள்
கற்பனைகள்.

அவைகளை
நனவாக்க
முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

  நேற்று
  என்பது
  உடைந்த
  பானை...

  நாளை
  என்பது
  மதில் மேல்
  பூனை...

  இன்று
  என்பதே
  நம் கையில்
  உள்ள
  வீணை.

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
காலை
வணக்கம்.

🎉🎉🎉🎉🎉🎉🎉

Sunday, December 06, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

சிரித்து
வாழ வேண்டும் :::

மூன்று
புத்த துறவிகள்
சிரிப்பது கூட ஒரு
தியானமே என்னும்
கொள்கையை...

தாங்களும்
கடைபிடித்து
மற்றவர்களையும்
கடைபிடித்து
வருமாறு உலகம்
முழுவதும் பயணம்
செய்து வந்தார்கள்.

இதற்கு...

' Laughing
  Therapy '

என
பெயரும்
வைத்தனர்.

ஒருநாள்
மூவரில் ஒருவர்
இறந்து போனார்.

அவர் உடல்
அருகே அமர்ந்த
மற்ற இருவரும்
சிரித்து கொண்டே 
இருந்தனர்.

இதனை கண்ட 
ஊர்மக்கள்
ஆத்திரம் அடைந்து
இருவரையும்
திட்டினர்.

துறவிகள்...

" வாழ்க்கையை
  மகிழ்ச்சியாக
  வைத்து கொள்ள
  ஒரே வழி...

  எப்போதும்
  எதற்கும்
  சிரித்து
  கொண்டே
  இருப்பதுதான்...

  இதை தான் தன்
  வாழ்நாள் முழுவதும்
  இவர் கடைபிடித்தார் "

என்றும்
கூறினர்.

ஊர்மக்கள் சற்று
பொறுமை அடைந்தனர்.

இறுதி சடங்குகளும்
செய்ய தொடங்கினர்.

இறந்த துறவி
கேட்டு கொண்டதின்
பெயரில் அவரின்
உடலை குளிப்பாட்டாமல்
சுடுகாட்டிற்கு எடுத்து 
சென்றனர்.

சற்று நேரத்தில்
நெருப்பு வைக்க
பட்டது.

உடனே...

துறவியின் உடலை
சுற்றி பட்டாசுகள்
வெடித்தன..

ஆம்...

அவர்
இறந்த பிறகும்
மக்கள் மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும்
என்பதற்காக
தன் உடலுடன்
பட்டாசுகளை கட்டிய
நிலையிலேயே
இறந்துள்ளார்.

அந்த
துறவியின் 
பெயர்தான்...

' Laughing
  Buddha '.

இன்று பல  
வீடுகளில்
வாஸ்து 
பிரச்சனை
நீங்குவதற்காக
வைக்கப்பட்டு
இருக்கும்...

தொந்தியுள்ள
சிரிக்கும் புத்தர் 
சிலை...

இவர்
நினைவில் 
வைக்கப்படுவது
தான் என்பது 
நினைவு 
கூறத்தக்கது.

" வாய்விட்டு
  சிரித்தால்
  நோய்விட்டு
  போகும் "

என்னும் 
சொலவடை 
நிஜமே.

வாங்க...

இனிவரும்
காலங்களில்
யாராவது
நகைச்சுவை
துணுக்குகள்
நம்மிடம்
உதிர்க்கும் 
போது...

அது 
நன்றாக 
இருந்தாலும்
இல்லாவிட்டாலும் 
கூட...

அவரையும் ஒரு
பொருட்டாக மதித்து
நாம் சிரிக்க
தொடங்குவோம்.

நம்மை சுற்றி
இருப்பவர்களையும்
சிரிக்க வைத்து
கொண்டே இருக்க 
முயற்சிகள் செய்வோம்.

  சிரிப்பில் 
  உண்டாகும் 
  ராகத்திலே

  பிறக்கும் 
  சங்கீதமே 

  அது 
  வடிக்கும் 
  கவிதை ஆயிரம்

  அவை 
  எல்லாம் 
  நம் எண்ணமே

  நம்
  மகிழ்ச்சி நம் 
  கை வண்ணமே.

அன்புடன்
காலை
வணக்கம்.

பகிர்வு

Friday, December 04, 2020

புதிய பார்வை..புதிய கோணம்....



சிறு 
ஆலம் 
விதைக்குள்...

அற்புத 
விருட்சம்
மறைந்திருப்பது
போல...

நம்
ஒவ்வொரு
மனிதருக்குள்ளும்...

அபார சக்தி
மறைந்திருப்பது
உண்மை.

அதை
சரியான
நேரத்தில் நாம் 
வெளிப்படுத்தும்
போது...

மாபெரும்
முடிவுகள்
மலர்ந்தே தீரும்.

இதற்கு
மிக சரியான
எடுத்துக்காட்டு.

மதிப்பிற்குரிய
நடராஜன்.

தமிழ்நாட்டின்
சேலம் மாவட்டம்
தாரமங்கலம் 
அடுத்த...

சின்னப்பம்பட்டி 
கிராமத்தை
சார்ந்த...

சாதாரண 
குடும்பத்தை 
சேர்ந்தவர் இவர்.

தந்தை 
தங்கராஜ் 
ஒரு நெசவு
தொழிலாளி.

தாய் 
சாந்தா 
சாலையோர 
கோழிக்கடை 
நடத்துபவர்.

12 ஆம் 
வகுப்பு வரை 
தன் சொந்த ஊரில்
அரசு மேல்நிலை 
பள்ளியில் படித்தார்.

வட்ட
மாவட்ட
மாநில 
அளவில்...

தன் 
கிரிக்கெட்
விளையாட்டில்
பரிமளித்தவர்...

TNPL 
மற்றும் ரஞ்சி 
போட்டிகளில் மிளிர 
தொடங்கினார்.

அதன்
தொடர் நிகழ்வாக
I P L போட்டிகளில்
மேலும் தன்னை
பட்டை தீட்டி
கொண்டார்.

இதன்
விளைவு...

இதோ 
இன்று 
சர்வதேச 
போட்டியில்
இடம் பெற்று...

இவர் மீது 
வெற்றி வெளிச்சம்
ஒளி வீச தொடங்கி
உள்ளது.

ஒட்டுமொத்த
தமிழர்களின்
இதய பூர்வ
வாழ்த்துக்கள்
நட்ராஜ்.

வாருங்கள்...

மென்மேலும்
புகழ் ஏணியில்
ஏறுங்கள்.

உங்களால்
நாங்கள் 
மகிழ்ச்சி
அடைகிறோம்.

தமிழ்நாடு
மட்டுமல்ல...

இந்தியாவே
உங்களால்
பெருமை 
கொள்கிறது.

இவரின்
வெற்றி பயணம்...

இன்றைய
இளைஞர்களுக்கு
மட்டுமல்ல...

நம்பிக்கையுடன்
செயல்பட்டு
வரும்...

ஒவ்வொரு
மனிதருக்கும்
ஒரு பாடமே.

புதிய
நம்பிக்கைகளுடன்...

Wednesday, December 02, 2020

புதிய பார்வை....புதிய கோணம்...

ஒவ்வொரு 
நிமிடமும் 
புதிதாக 
ஒன்றை
கற்று
கொள்ளுங்கள் 
புதிய 
சிந்தனைகளை 
விதைத்து
ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் 
உரிய 
நேரம் 
வந்து
விட்டால் 
புலரும் 
சூரியனை
போல் 
இதழை
விரிக்கும் 
பூக்களை
போல் 
எண்ணமும்
வடிவம்
கொள்ளும்..

 நீங்கள் 
எதைத் 
தேடுகிறீர்களே
அது 
உங்களுக்கு 
கிடைக்கும் 
என்று 
நீங்கள் 
உறுதியாக
நம்ப 
வேண்டும் 
அதுவே
விரும்பத்தக்க 
பண்பு ....
அதுதான்
விடை
காணா
பல
செயல்களுக்கு
விடை
காண
செய்கிறது....
அதுவரை 
சாத்தியமற்றது
என்று
எண்ணியதை
சாத்தியப் படுத்துகிறது ...

வாங்க
புதிய
சிந்தனைகளை
விதைத்து
பல
அறியப்படாத
வினாக்களுக்கு
விடை
தேடுவோம்...
&&&&&&&&

அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்.

₹₹₹₹₹₹₹₹₹₹

Tuesday, December 01, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...



Niagara 
Syndrome.

ஒரு
பெரிய ஆறு.

ஒரு 
மனிதன் 
படகில் சென்று 
கொண்டு இருந்தான்.

காற்று 
தென்றலை போல 
வீசிக்கொண்டு
இருந்தது.

ரம்மியமான
சூழல்.

அதை
ரசித்து
கொண்டே,
துடுப்புகளை
பயன்படுத்தாமல்,
அதன்போக்கிலேயே
படகை போக விட்டான்.

காற்று 
சற்று வேகமாக 
வீச தொடங்கியது.

படகு 
ஆட்டம் போட 
தொடங்கியது.

இயற்கை
நம்மை இதமாக
தாலாட்டுகிறது

என்று 
மகிழ்ந்த இவன் 
இதனையும்
ரசிக்கலானான்.

நேரம்
ஆக ஆக
காற்று மிகவும்
பலமாக வீச
ஆரம்பித்தது.

அப்போது தான்
அவனுக்கு விழிப்பு 
நிலை வந்தது.

துடுப்புகளை 
எடுத்து கரையை
நோக்கி போட்டான்.

அவை அவன்
கட்டுபாட்டிற்கு
வரவில்லை.

அருகில்...

'ஹோ' என்ற
இரைச்சல் கேட்டது.

சில
நொடிகளில்...

படகு
மிக பெரிய
நீர்வீழ்ச்சியில்
விழ தொடங்கியது.

அதே
போலத்தான்.

'  நம்
  வாழ்வில்
  அதன் போக்கினை
  அதன் வழியில்
  போக விடாமல்...

  நம்
  போக்கிற்கு
  ஏற்ப திருப்பி
  கொள்ளாவிடில்...

  ஏற்படும்
  அபாயகர
  விளைவே...

  '  Niagara
     Syndrome '

எனப்படும்.

Anthony 
Robbins  
என்பவர் 
தன்னுடைய...

Awaken the Giant 
Within என்னும் 
நூலில்...

இதனை விரிவாக
விளக்கியுள்ளார்.

நம்
வாழ்க்கையும்
அமைதியான
ஓடம் தான்.

அதுவே
அளவில்லாத
வெள்ளம் வந்தால்
ஆடும் தான்.

' தென்னம் 
  இளங்கீற்றினிலே 
  தாலாட்டும் 
  தென்றலது...

  தென்னை தனை 
  சாய்த்துவிடும் 
  புயலாக 
  வரும்பொழுது '

என்னும்
வரிகளும்
உண்மையே.

இதைப்போன்ற
நேரங்களில்...

' வருமுன்னர் 
  காவாதான் 
  வாழ்க்கை 
  எரிமுன்னர் 
  வைத்தூறு 
  போலக் கெடும் '

என்னும்
வள்ளுவரின்
எச்சரிக்கையின் படி 
வாழ்ந்தோம் எனில்...

எந்த வகை
காற்றடித்தாலும்
நம் வாழ்வு வீழாது.

நம்
கனிந்த மனம்
எந்த காலத்திலும்
கலங்காது.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
காலை
வணக்கம்.