Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Sunday, June 04, 2017

பெற்றோர்களே கணிதம் கற்கண்டு...

பள்ளிக்கூடம்

இன்னும் ஒரு வாரத்துக்குள் திறந்துவிடுவார்கள்.

ஒரு பெற்றோராக உங்கள் குழந்தை கணிதம் படிக்க இதையெல்லாம் செய்யலாம்.

1.கணித பாடப் புத்தகத்தை நீங்கள் படித்து முடித்துவிடுங்கள். குறிப்பாக ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புக்குள் உங்கள் பிள்ளை இருக்கும்பட்சத்தில் கட்டாயம் அவர்கள் கணிதப் புத்தகத்தை முதலில் ஒருமுறை நன்கு படித்து முடித்து விடுங்கள். இப்படிப் படிக்க ஒருநாள் கூட எடுக்காது.

2.அடுத்து அப்புத்தகத்தின் units அனைத்துயும் நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டும்.  உதாரணமாக Unit 1 Time,  Unit 2 Fraction இப்படி மனப்பாடமாக உங்களுக்கு யூனிட் பெயர்கள் தெரிந்திருக்க வேண்டும். தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட “என் பையன் கணக்கு புக்ல பத்து யூனிட் இருக்கு. இந்த இந்த யூனிட் இத இத சொல்லுதுன்னு தலைப்புச் சொல்லத் தெரியனும்.

3.Unit பெயர் தெரிந்த பிறகு ஒவ்வொரு Unit க்கும் நான்கு ஐந்து தாள்கள் ஓதுக்கி ஒரு நோட்டுப் போடுங்கள். அதில் ஒவ்வொரு Unit உள்ளே இருக்கும் பகுதிகளின் தலைப்புகளை எழுதுங்கள். உதாரணமாக ADDITION என்றால் Without Carry over method, With carry over என்று இரண்டு உபதலைப்புகள் இருக்கும். அதையெல்லாம் Unit வாரியாக அந்த நோட்டில் எழுதிக் கொள்ளுங்கள்.

4.நீங்கள் அப்படி எழுதி வைத்திருக்கும் அந்த நோட்டுப் புத்தகம்தான் அந்த வருடம் முழுவதும் உங்கள் புனிதப் புத்தகம் ஆகும். தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது எடுத்து அந்த நோட்டை நோட்டம் விடுங்கள். தினமும் இதைச் செய்ய வேண்டும். குறைந்தது பத்து நிமிடம். அப்புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு யூனிட்டும் அதன் உபபாடங்களும் உங்கள் மனதில் பதிய வேண்டும்.

5.நாலு நாட்களில் அது பதிந்து விட, ஒவ்வொரு யூனிட் வாரியாக நீங்கள் அக்கணக்குகளைப் போட்டுப் பார்க்க வேண்டும். இதைச் செய்ய அதிக நேரமாகாது. அனைத்தும் மிக எளிமையான கணக்குகள்தாம். ஒருநிமிடம் பார்த்தால் உங்களுக்கு அது புரிந்து விடும். ஒரு Rough நோட்டில் அதைப் போட்டுப் பாருங்கள். அப்படிப் போட்டுப் பார்க்கும் போது கணக்கில் இந்த இந்த இடத்தில் பிரச்சனை வரும் என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள். இந்தக் கணக்கை இப்படி புரிய வைக்கலாம் என்ற ஐடியா கிடைக்கும்.

6.உங்கள் குழந்தைகளின் கணித வீக்னஸ் பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள். இவனுக்கு டிவிசன் கொஞ்சம் வராது. திணறுவான். இவளுக்கு Ones Tens Position குழப்பம் வரும். திணறுவாள் என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பீர்கள். இந்த வருடத்தின் கணிதத்துக்கு அந்த ”குழம்பும் கணக்குகள்” அடிப்படையாக இருக்கலாம். அந்த இடத்தை Identify செய்து பிள்ளைகளுக்கு உதவியாக இருங்கள். பெற்றோர்கள் இயங்க வேண்டிய முக்கியமான இடமாகும். இதில் ஒரு அம்மா அப்பா சரியாக இயங்காத போதுதான் “மக்கு பிள்ளை” என்றொரு வகைமைகள் உருவாகிறார்கள்.

7. உங்கள் பிள்ளைகளின் கணக்கு வகைகள் தெரிந்த பிறகு அவ்வப்போது Youtube யில் அதப் போட்டு பார்த்து எப்படி எளிதாய் புரியவைக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். கூகிளில் அது சம்பந்தமான சிறுகட்டுரைகள் பல கிடைக்கும். அதைப் படித்து ஒரு சுவாரஸ்யமான பத்தி எழுதுவது மாதிரி மனதுக்குள் எழுதிக் கொள்ளுங்கள்.

8. எப்பவாவது பிள்ளையிடம் மனம்விட்டு பேசிக் கொண்டிருக்கும் போது அந்தக் குறிப்பிட்ட கணக்கு பற்றியும் பேசுங்கள். அது சம்பந்தமான கதைகளைச் சொல்லுங்கள் “டேய் Venn Diagramல Demorgan law வருதில்ல. அந்த டீமார்கன் கணித மேதை நம்ம மதுரைல பிறந்தவரு தெரியுமா? மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மட்டும் ஃபேமஸ் இல்ல, ஒரு கணித மேதையை பெத்து எடுத்திருக்கு. அதுக்கும் ஃபேம்ஸ்தான்” என்று சொல்லுங்கள். Something கணக்கு சம்பந்தமா நல்ல உணர்வக் கொடுக்கிறதப் பேசுங்க.

9. உங்கள் பிள்ளை இந்த இடத்தில் நல்லா இருக்கான். இதில் வீக்காய் இருக்கிறான் என்று நோட்டில் எழுதிக் கொண்டெ வாருங்கள். வீக்காய் இருக்கும் இடத்தை அவன் மனது பாதிக்காதவாறு போதிக்க வேண்டும் என்பது உங்கள் குறிக்கோளாய் இருக்க வேண்டும். அப்படி ஒரு எண்ணம் மற்றும் Passion உங்கள் மனதில் வந்தால் நிச்சயம் எப்படியாவது குழந்தைக்கு அதை சொல்லிக் கொடுத்துவிடுவீர்கள். இவனுக்கு Profit & Loss வரமாட்டேங்குது. அத எப்படி சொல்லிக் கொடுக்கிறது. உங்கள் எண்ணத்தில் ஒரு ஒரத்தில் இது ஒடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது உங்களுக்கே ஒரு யோசனை வரும். ஒரு பிடி பருப்புச் சோற்றை எப்படியாவது திணித்துவிடும் அம்மாவாய்
அப்பாவாய் நீங்கள் இருக்கும் போது கணக்கை பக்குவமாக உங்கள் குழந்தை மனதில் ஏற்ற முடியாதா என்ன?

10.எளிமையாக சொல்வதென்றால் உங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் கணிதத்தை நீங்கள் முதலில் இன்பமாக கற்றுக் கொள்ளுங்கள். அதை ஒரு இன்ப அனுபவமாக உங்களுக்கு நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் அது இன்பமாக படியும் போதுதான், அந்த இன்பத்தை குழந்தைக்கு கடத்த துடிப்பீர்கள். நம் ஊரில் முக்கால்வாசி பெற்றோர்கள் கணிதத்தோடு உறவு கொள்ளும் போது ஒரு ஜடம் மாதிரிதான் இருப்பார்கள். அவர்களிடம் இருக்கும் அந்த வெறுப்புதான் குழந்தைகளுக்கும் பரவி விடுகிறது. பெற்றோர்கள் கணிதத்தை பாகுபலி மாதிரி ரசிக்கும் கலாச்சாரத்தைக் வைத்துக் கொண்டால் குழந்தைகளிடம் அது எளிதாக பரவும்.

11.குழந்தைகளுக்கு அன்பாக சொல்லிக் கொடுக்கலாம். ஒரு Concept ஐ புதிதாக கற்றுக் கொடுப்பதற்கு எவ்வளவு பொறுமையாக வேண்டுமானாலும் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் பயிற்சி என்று வரும் போது, Training என்று வரும் போது உங்கள் ”சிங்க” முகத்தை காட்டுங்கள். வைத்து வெளுத்துவிடுங்கள். ரொம்பவும் சிரித்து சிரித்து செல்லக்கிறுக்கன் மாதிரி பெற்றோர்கள் இருத்தாலும் பிள்ளைகள் டிமிக்கி கொடுத்து விடுவாரகள். மேலும் சரியான Training இல்லாமல் எந்த அறிவும் மனதில் தங்காது. புதிதாய் கற்றுக் கொடுக்க பொறுமை காட்டுங்கள். பயிற்சியில் கொஞ்சம் கடுமையாக இருக்கலாம்.

12.கணிதம் என்பது ஒரு மனநிலை.
கணிதம் என்பது ஒரு பயிற்சி,
கணிதம் என்பது சரியாக கற்றுக் கொள்ளல்.
கணிதம் என்பது ஒரு அழகு மற்றும் கலை.

நீங்கள் ஒரு பெற்றோராக கணிதம் படிக்கும் மனநிலையை உங்கள் பிள்ளைக்கு உருவாக்குங்கள், கணிதப் பயிற்சி கொடுங்கள், கணிதத்தை சரியாகச் சொல்லிக் கொடுங்கள், கணிதத்தின் அழகைப் புரியவையுங்கள்.

இதற்கு மேலாக கணிதம் தெரியாமல் இருக்கும் பிள்ளைகளின் தாழ்வுமனப்பான்மையும், தன்னம்பிக்கையின்மையும் அவர்களுக்கு கொடுக்கும் மன உளைச்சல் கொடுமையானது. என் பிள்ளை அந்த மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடாது என்று அவனை  நேசித்து கணக்குச் சொல்லிக் கொடுங்கள்.

இப்படியெல்லாம் செய்தால் உலகில் கணிதம் வராத குழந்தை என்றே ஒன்று இருக்காது.

அனைவரும் கணிதத்தை ரசித்துப் படிப்பார்கள்.

பிள்ளைக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் விதமாக நீங்களும் கணிதம் என்னும் அற்புத உலகத்தில் நுழைந்திருப்பீர்கள்.

மேலே நான் சொல்லும் விஷயங்களை செய்ய மிகக்குறைந்தே நேரமே பிடிக்கும்.

ஆகையால ”நான் 24 மணி நேரமும் உழைக்கிறேன் எனக்கு நேரமே கிடைக்கவில்லை” என்ற மொக்கை காரணத்தை எப்போதும் சொல்லாதீர்கள்.

உங்களின் இந்த செயல் வீட்டுக்கு மட்டும் நல்லதில்லை, சமூகத்திற்கும் நன்மையான விஷயம் என்று நம்பி செயல்படுங்கள். :) :)

Monday, April 17, 2017

மாட்டு வண்டி....குட்டி கதை



தினம் ஒரு குட்டிக்கதை.

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.
ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது.
மாடு சொன்னதை கவனமாக கேட்ட வியாபாரி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளை சுமந்தால் உனக்கு புல்லின் அளவைஅதிகரிப்பதை பற்றி யோசிக்கிறேன்" என்றான். பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளை சுமக்க ஒப்பு கொண்டது.
இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி "மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்பு அடைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன்.
அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்" என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்து கொண்டது.
புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது.
இப்போது வியாபாரி, "மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிக குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்து கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்ய கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை" என்றான்.
கோபமடைந்த மாடு "எஜமான்! இந்த புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை" என்றது. அதற்கு வியாபாரி "மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்று தர முடியவில்லை.
நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே" என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு "வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்று தந்து விடுகிறேன்" என்று கூறியது.
மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்க தொடங்கியது. ஆனால் மிக கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லை கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் அதற்கு நோய் குணமாக மருந்து கொடுத்த வியாபாரி ஒரு நாள் அதனிடம் "மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விட போகிறேன்" என்றான். "எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?" என்றது. வியாபாரி அதற்கு "அவர்கள் உன்னை வேலை செய்ய சொல்ல வாங்கவில்லை. உன்னை கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்கு கேட்கிறார்கள்" என்றான்.
வியாபாரி சொன்ன பதிலை கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. "எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்" என்றது.
அதை கேட்ட வியாபாரி, "நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன்.
இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்" என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது.
அன்பு நண்பர்களே .
நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்

நன்றி ரமேஷ்..

Sunday, April 02, 2017

ஊஞ்சலின்.....கதை...

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். (This is the reason, when we travel in train, whatever food we have during the journey, is completely digested without any health troubles. Hope many could have experienced this in their life journey)

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

நன்றி!!

Wednesday, March 15, 2017

நமக்கு நிகர் நாமே....

விவசாயி ஒருவருக்கு மலை அருகே தோட்டமிருந்தது. அதில் துளசி பயிர் செய்து இருந்தார். துளசி செடிகளுக்கு இடையே முளைக்கும் களைகள், முட்செடிகள் ஆகியவற்றை பிடுங்கி எடுத்து துளசி செடிகளை  கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வளர்த்து வந்தார்.

ஒரு நாள் துளசி செடிக்கு இடையே வளர்ந்து  இருந்த‌ ஒரு முட்செடி  ஒன்றை பிடுங்கி எறிந்தார். உடனே அந்த‌ முட்செடி கண்ணீர் விட்டு அழுதது.
விவசாயி அந்த‌ முட்செடியிடம் சென்ற போது அது சொன்னது
'' நான் தான் யாருக்குமே பயன்பட‌ போவதில்லையே. எந்த‌ திறமையும் இல்லாத‌ என்னை ஏன் கடவுள் படைத்தார்.'' என‌ வருத்தப்பட்டது.
  ''கடவுள் யாரையும் காரணம் இல்லாமல் படைப்பதில்லை.
எல்லோருக்கும் திறமையும் ,
பலத்தையும் கொடுத்து இருக்கிறார்.
அதை நாம் தான் கண்டுபிடித்து ப‌யன் படுத்த‌ வேண்டும்'' என்று விவாசயி சொல்ல..
 
      ''என்ன‌ திறமை இருக்க‌ போகிறது எங்கிட்ட‌, நானோ முட்செடி பிறரை காயபடுத்துவேனே தவிர‌, வேரு யாருக்கும் உதவியாக‌ இருக்க‌ மாட்டேன்''  என்று தன்னை இழிவாக பேசியது.
  மறுநாள்
விவசாயி தன் தோட்டத்திலிருந்து பிடுங்கி எறிந்த‌ முட்செடிகளை எல்லாம் ஒன்று சேர்த்து  தோட்டத்தைச்
சுற்றி  வேலி அமைத்தார்.
பின்பு அந்த‌ முட்செடியிட்ம் சென்று, '' நீ முட்செடி தான்  பிறறை காயப்படுத்துபவன் தான். ஆனால் உன்னிடமும் திறமை இருக்கிறது பலமும் இருக்கிறது. அதனால் தான்  இன்று இந்த‌ தோட்டத்தையே பாதுகாக்கும் காவல்கார வேலியாக உயர்ந்துவிட்டாய்'' என்று விவசாயி சொல்ல..
  
கடவுள் படைத்த எல்லா உயிர்களுக்குமே  திறமையும் பலமும்  உண்டு என்பதை உணர்ந்தது முட்செடி.....

நீதி:அனைவரிடமும் அனைத்து திறமைகளும் இருக்கிறது....
ஆனால் அவரவர் அவரது திறமைகளை  அறிவது இல்லை....
"நமக்கு நாமே நிகர்."....

👍👍

Friday, March 10, 2017

உங்களின். வால். எது.... ஒரு நிமிடகதை

*நாய் வால்*
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்­கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? 

இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும்.  ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... 

நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது. 

அடுத்தவன் பார்த்தான்.  நமக்கு ஒரு ‘வால்’  கிடைக்காதா என்றுஎதிர்பார்த்தான். 

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். 

இந்த மனிதனை இழுத்துக்  கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. 

விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும்  திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு. 

*கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.*

Tuesday, March 07, 2017

ஆபரணங்களன் அற்புதம்.....

*பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!*

*பொட்டு :*

பொட்டு வைக்கும்
பெண்களை அவ்வளவு சீக்கிரம்
மெஸ்மரிசம் செய்ய முடியாது.

*தோடு* :

மூளையின் செயல் திறன்
அதிகரிக்கும்.
கண்பார்வை திறன் கூடும் .

*நெற்றிச்சுட்டி :*

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையை
சரி செய்கிறது.

*மோதிரம்* :

பாலுறுப்புகளை தூண்டும்
புள்ளிகள் மோதிர விரலில்
உள்ளது..
ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு
அணிவதும் பாலுறுப்பின்
புள்ளிகளை தூண்டும்.

செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது
உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள
சக்தி ஓட்டம் சீராகும் .

*வங்கி* :

கையின் புஜை பகுதியில்
இறுக்கமான அணிகலன்கள்
அல்லது
கயிறுகள் அணியும்
பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி
பதற்றம் , படபடப்பு, பயம்குறைகிறது .
மார்பக புற்று நோய் வருவது
தவிர்க்க படுவதாக ஆய்விலே
உறுதிபடுதப்பட்டிருக்கிறது

லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.
காரணம்
மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு
மேல்வரை நெருக்கமாக
வளையல்களை அணிவதால்
மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது.

*வளையல்* :

வளையல்கள் அந்த பகுதியின்
புள்ளிகளை அழுத்துவதன் மூலம்
வெள்ளையணு உற்பத்தி உடலில்
அதிகரிக்கிறது.

முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.
இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும்
நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

*ஒட்டியாணம்* :

ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.
வயிற்று பகுதிகள் வலுவடையும்.

*மூக்குத்தி* :

மூக்கில் இருக்கும் சிலபுள்ளிகளுக்கும்
பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும்நெருக்கமான
தொடர்பு உண்டு.
அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது
அது சம்மந்தமான நோய்கள்
குணமாகும் .

மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

*கொலுசு* :

கல்லீரல்,
மண்ணீரல்,
பித்தப்பை,
சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை,
வயிறு போன்ற
மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன்
கொலுசு.

கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

*படித்ததில் மிகவும் பிடித்தது*
🚁🚁🚁🚁🚁🚁🚁🚁🚁🚁.