Showing posts with label ஆசிரியர்களுக்காக. Show all posts
Showing posts with label ஆசிரியர்களுக்காக. Show all posts

Wednesday, December 28, 2022

புத்தகம் நமது உயிர் தோழன்...

பிள்ளைகளுக்கு புத்தகத்தை ஃப்ரெண்டாக்க...

‘பாடப் புத்தகங்களைப் படிக்க வைக்கவே பெரும்பாடாக இருக்கு. இதுல கதை புத்தகத்தை எப்படி படிக்க வைக்கிறது?’ என்ற கேள்வியைக் கேட்காத பெற்றோர்களே அதிகம். அவர்களில் நீங்களும் இருக்கலாம்.

பிள்ளைகள் பாடப் புத்தகம் தவித்த புத்தகங்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு முதலில் வாழ்த்துகள். ஏனெனில், பல பெற்றோர்கள் மற்ற புத்தகங்களால் எந்தப் பயனும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

உங்களையும் அப்படிக் கேள்விக் கேட்டு குழப்பக்கூடும். யாரேனும் அவ்வாறு கேட்டால், “ஊருக்கு 100 பொறியாளர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், மற்ற பொறியாளர்களை விடவும் க்ரியேட்டிவாகச் சிந்திப்பவர்களுக்கும் அதைச் செயல்படுத்துபவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கிறது. இதுவே வருங்காலத்தில் எல்லாத் துறைக்குமே. பாடப்புத்தகங்கள் மொழியையும் தகவல்களையும் கற்றுத்தருகின்றன. குழந்தைகளிடம் இயல்பாகவே இருக்கும் க்ரியேட்டிவ் திறனை, மேலும் செழுமையாக வளர்த்தெடுக்கவே மற்ற புத்தகங்களைப் படிக்க சொல்கிறோம்” என்று அவர்களிடம் தெளிவாகச் சொல்லுங்கள்.

சரி, எப்போது பார்த்தாலும் டிவி பார்த்துகொண்டே இருப்பவர்களின் கவனத்தை எப்படித் திருப்பலாம்? பிள்ளைகள் டிவி பார்க்கட்டும். ஆனால், நீங்கள் அவர்கள் பார்க்கும் இடத்தில் உட்கார்ந்து புத்தகம் படியுங்கள். அதுவும் பிள்ளைகளுக்கு ஏற்ற புத்தகங்களாகப் படியுங்கள். இதை, ஒரு வாரம் தொடர்ந்து செய்யுங்கள். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் உங்கள் பக்கம் திரும்ப, நீங்கள் புத்தகம் பக்கம் திருப்பி விடுங்கள்.

ஒரு வாரம் கழித்தும் உங்கள் பக்கம் திரும்ப வில்லை என்றால்... கவலையே வேண்டாம். அதுக்கும் ஒரு வழி இருக்கிறது. நீங்கள் படிக்கும் புத்தகத்தில் ஓவியங்கள் இருக்கும். பெரும்பாலும் கறுப்பு - வெள்ளையில்தான் இருக்கும். புதிதாக க்ரையான்ஸ் வாங்கி வந்து, அந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுங்கள். நிச்சயம் உடனே பிள்ளைகள் ஒட்டிக்கொள்வார்கள். இரண்டு நாட்கள் இப்படியே செல்லட்டும். அடுத்த நாள், இந்த ஓவியத்துக்கு வண்ணம் தீட்ட கதைக்குள் அல்லது பாடலுக்குள் இருக்கும் க்ளூ உதவும் என்று சொல்லுங்கள். வரையும் ஆர்வத்தோடு கண்டிப்பாகக் கதையைப் படிப்பார்கள்.

பிள்ளைகள் வரைந்த ஓவியங்களை மொபைலில் போட்டோ எடுத்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பச் சொல்லுங்கள். அதைப் பார்த்து கிடைக்கும் பாராட்டுகளை உங்கள் பிள்ளைகளிடம் தெரிவியுங்கள். அது இன்னும் படிக்க வைக்கவும், வரைய வைக்கவும் உதவும்.

புத்தகம் படிக்க என்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்குங்கள். பிள்ளைக்கு ஒரு புத்தகத்தைக் கொடுக்கும் முன், அதை நீங்கள் படித்துவிடுங்கள். அதில் உள்ள கேரக்டர் போல தோசை ஊற்றிக்கொடுங்கள் அல்லது பிரட்டை அந்த உருவத்திற்கு நறுக்கிக்கொடுங்கள். ’என்ன இது புதுசாக இருக்கிறதே’ என்று பிள்ளை கேட்டால், அந்தப் புத்தகம் பற்றியும் கதையில் கொஞ்சமும் சொல்லுங்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கான எந்த சர்ப்பரைஸ் கொடுப்பதாக இருந்தாலும், நிச்சயம் அதோடு ஒரு புத்தகம் கொடுங்கள். தவறியும்கூட புத்தகத்தை மட்டுமே சர்ப்பரைஸாகக் கொடுக்காதீர்கள். ஏனெனில், பிள்ளைகள் ரொம்ப ரொம்ப விரும்பும் / ஆசைப்படும் விஷயங்களே சர்ப்பரைஸாக இருக்கட்டும். இந்தப் பழக்கம் தொடரும் பட்சத்தில் ஒரு கட்டத்தில் சர்ப்பரைஸ் பொருளோடு என்ன புத்தகம் என்று பார்க்க ஆரம்பிப்பார்கள். பிடித்த புத்தகம் எனில், படிக்கவும் செய்வார்கள். உங்கள் பிள்ளை யாருக்கேனும் சர்ப்பரைஸ் கொடுக்க உங்களோடு சேர்ந்து திட்டமிட்டால், அதில் புத்தகத்தையும் இணைத்து விடுங்கள்.

பிள்ளையின் வயதும், அவள் கையாளும் மொழியளவையும் வைத்து புத்தகங்களைத் தேர்வு செய்யுங்கள். முடிந்தால், பிள்ளையையும் புத்தகம் வாங்க அழைத்துச் செல்லுங்கள். இந்தப் பழக்கம் நீடிக்கும்பட்சத்தில் குறிப்பிட்ட பணம் கொத்து பிள்ளைக்குப் பிடித்த புத்தகத்தை தானே தேர்வு செய்ய வைக்கலாம்.

உங்கள் வீட்டுக்கு புதிய பொருள் வாங்குகிறீர்கள் எனில், அதற்கு பிள்ளை படித்த கதையில் வரும் ஒரு கேரக்டரின் பெயரைச் சூட்டலாம். உதாரணத்திற்கு, பிள்ளைக்காக அழகான குட்டி சேர் வாங்குகிறீர்கள் எனில், அதற்கு ’குட்டி இளவரன்’ எனப் பெயர் வைக்கலாம். (சிறுவர்கள் படிக்க வேண்டிய நல்ல புத்தகம் குட்டி இளவரசன்). புதிய பெயர் வைக்கும் ஆவலில் புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தொடர்வார்கள்.

படித்த புத்தகம் பற்றி பிள்ளையின் கருத்துகளை பேப்பரில் எழுத வைக்கலாம். பேச வைத்து வீடியோவாக்கி யூ டியூப் சேனல் தொடங்கி அதில் பதிவிட்டு வரலாம். புத்தகங்கள் படிக்கச் சொல்லும் பெற்றோர் இரண்டு விஷயங்களை எப்போதும் கடைபிடியுங்கள். முதலாவது, உங்கள் பிள்ளைக்குப் பிடிக்கவே பிடிக்காத புத்தகத்தைத் திணிக்காதீர்கள். மற்ற புத்தகங்களை வாசிக்க வாசிக்க பிள்ளையாகவே அந்தப் புத்தகத்தைத் தேடி வரும். இரண்டாவது, படித்த புத்தகங்கள் பற்றி கேள்விகளாகக் கேட்காமல் உரையாடுங்கள். இப்படி இந்தக் கதை முடிந்தது சரியே இல்லை. வேறு மாதிரி முடிந்திருக்க வேண்டும்... என்பதுபோல உரையாடுங்கள். ஒருபோதும் பாடப்புத்தகம் படித்த பிறகு கேள்வி எனும் தொனியை உருவாக்கி விட வேண்டாம். அப்படியான எண்ணம் வந்துவிட்டால், கதையின் சுவாரஸ்யத்திலிருந்து மனம் விலகி மனப்பாடம் என்பதாக மாறிவிடும். நாம் கதை / பாடல் புத்தகங்களைத் தருவதே ’ஒரு புத்தகத்தை மகிழ்ச்சியோடு படிக்கும் பழக்கம்’ உருவாக்குவதற்கே. அது கெட்டுவிடலாம். கவனம்.

- விஷ்ணுபுரம் சரவணன்

thanks: arumbu magazine
நன்றி
படித்ததில் பிடித்தது
பகிர்வு பதிவு

Wednesday, June 22, 2022

அதிக மதிப்பெண் பெற வழிகள்..

*அதிக மதிப்பெண் எடுப்பது சுலபம்*. 
கீழ் கண்டவைகளை செயல்படுத்தினால்! 

*மாணிக்க மாணவர்களின் அனுபவங்கள்* 

1) ஆசிரியர் பாடம் நடத்தும் போது (முழுமையாக) 'கவனித்தாலே போதும்' 
கணிசமாக மதிப்பெண் எடுக்கலாம். 
2) புரிந்து படித்தால்...... 
3)பிறர்க்கு சொல்லிக் கொடுத்தால்..... 
4)அதிகாலையில் எழுந்து படித்து வந்தால்..... 
5)போட்டி போட்டு படித்தால்... 
6)தமது அம்மா அப்பாவிற்கு 
நல்வாழ்வளிக்க என்ற லட்சியம் இருந்தால்.... 
7) படித்ததை எழுதிப் பார்த்தால்.
8) குழுவாக விவாதித்து படித்தால்.... 
9)அமைதியான சூழலில் படித்தால். 
10)விளையாட்டு, யோகா, உடற்பயிற்சிக்குப் பிறகு படித்தால்..,. 
11)படித்ததை 
எழுதிப்பார்த்தால்.... 
12) பெரிய ஒரு பாராவை ' பல சிறிய பகுதிகளாக பிரித்து'
வரிசைப்படுத்தி படித்தால். 
13) கவனத்தை ஒருமுகப்படுத்தி
 ' குறிக்கோலுடன் ' படித்தால். 
14) கையெழுத்து அழகாய் இருக்க பயிற்சி செய்தால்.... 
15) பொது அறிவு புத்தகங்களை படித்தால்..... 
16)பள்ளிக்கு நேரத்திற்கு செல்வதும், விடுமுறை எடுக்காமல் செல்வதும் 
வழக்கப்படுத்தினால்.... 
17) சந்தேகங்களை தயக்கமின்றி கேட்டுத் தெளிவடைவதை  பழக்கமாக்கிக்கொண்டால்.... 
18)கால அட்டவணை போட்டு அதன்படி படித்துவந்தால்.... 
19) உதாரணங்கள், கதைகளுடன் ஒப்பிட்டு
நினைவு வைத்துக்கொண்டால்....

Thursday, November 04, 2021

மாட்டு வண்டியின் தொழில் நுட்பம்....ஆசிர

*வியக்க வைக்கும்,*
*மாட்டுவண்டி தொழில்நுட்பம்* 

*மாட்டின் கழுத்தை, பாரம் அழுத்தாத, மரபு வடிவம்.*

வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி.  

வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியை செலவழித்தால் போதும். பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும்.
உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதை பயன்படுத்தவேண்டும்.

 இப்படி யோசித்த நமது முன்னோர்களின் அறிவுத்திறனையும், நேசத்தையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. நமது முன்னோர்கள் அதை எப்படியெல்லாம் சாத்தியப்படுத்தினார்கள் என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் "சக்கடாவண்டி"  என்னும் பாரவண்டி வடிவமைப்பு,  தமிழ்நாடு மட்டும் அல்லாமல்,  கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப்படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது.

மாட்டுவண்டிகளின் சக்கரத்தின் உயரம் 5¼ அடி என்று தரப்படுத்தபட்டிருக்கிறது
இந்தத் தரப்படுத்தல் என்பது ஏன்..?  என்று சற்று பார்ப்போம்.

பொதுவாக ஒரு நபரை 
" நெட்டையான ஆள்.." என்றோ "குட்டையான ஆள்.."  என்றோ என்றோ அடையாள படுத்துவது நம்மிடையே இருந்து வரும் ஒரு பழக்கம்.

 இந்த குட்டை நெட்டைக்கான அடிப்படை
(Reference point) 
என்று ஒன்று இருக்க வேண்டும் தானே.
அதாவது சராசரி உயரம் என்பதாக.

 நம்மை பொருத்த வரை நம்ம ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது 
5½ அடி என்பதாகும்.

இந்த சராசரி உயரத்தின் ¾ பங்கு என்பது அதாவது "எண் சாண் உடம்பு" என்று சொல்வோமே அதில் ¾ பங்கான 6 சாண் என்பது 4 1/8 (நாலே அரைக்கால்) அடி ஆகும்.
இது மனிதனின் நெஞ்சு பகுதி வரை உள்ள உயரமாகும்.

மாட்டுவண்டியின் நீளமான பகுதியின் பெயர் ‘போல்' என்பதாகும். இந்த போலின் முனையில் தான் மாடுகளை பூட்ட பயன்படும் நுகத்தடியை பொருத்திக் கட்டுவார்கள். 5¼ அடி விட்டம் கொண்ட வண்டி சக்கரத்தின் ஆரம் 2 5/8 / (இரண்டே அரையே அரைக்கால்) அடி ஆகும்.

 சக்கரத்தின் மையத்தில் அச்சு சொறுகப்பட்டிருக்கும். இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல் தான் பாரம் தாங்கி
 (load bearing)யாக செயல்படும் தெப்பக்கட்டை அமர்த்தப்பட்டிருக்கும். இந்த தெப்பக்கட்டையின் மேல் தான் 'போல்' என்னும் நுகம் கட்டும் நீளக்கட்டை பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் போல் மற்றும் தெப்பக்கட்டையும் சேர்ந்து 1½ அடி உயரம் இருக்கும்.

ஆக ஒரு வண்டியை படுக்கை மட்டத்தில் சமன் (balance) பண்ணினால் வண்டியின் உயரம் 4 1/8 அடியாக இருக்கும். அதாவது சக்கரத்தின் ஆரத்தின் அளவும் தெப்பக்கட்டையின் உயரமும் (2 5/8 + 1 ½ ) சேர்ந்து உயரம் 4 1/8 அடியாகும். ஒரு மாட்டின் கழுத்து வரை உள்ள உயரம் சராசரியாக 4 1/8 அடி. இத்தனை சராசரி உயரங்களின் அடிப்படையில் தான் நமது மாட்டுவண்டியினை வடிவமைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

அவர்களால் இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை 4 1/8 அடி உயரத்தில் விரல் தொடலில் வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடி நொடிப்பொழுதில் சமன் (feather touch balance) செய்ய முடியும்.

 இத்தனை துல்லிய அளவு தொழில்நுட்ப ஒருங்கிணைவே மாட்டுவண்டி.

 ஒவ்வொரு பாகத்தையும் செய்ய இன்னின்ன மரவகையை தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். 

அந்த வரையறையில் சில:
சட்டம் -  வாகைமரம்.
குறியது - வாகைமரம்
ஆரக்கால் - உன்னி
அலகு - தேக்கு
குடம் -  வைமரம்
தெப்பக்கட்டை- வேங்கை
போல் - வேங்கை
நுகம் -  புன்ணை
நோக்காகுச்சசு - வைமரம்
தாங்குக்கட்டை- வைமரம் 
பிள்ளைச்சட்டம் -  வாகை
குரங்குகம்பு- கல்மூங்கில்
ஊனிகம்பு - விடத்தலை
அளி -  மூங்கில்பட்டியல்

பார வண்டியின் பாகங்களைச் செய்யப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மர வகைகளின் சிறப்புத் தன்மையை சிறிது பார்ப்போம்.

வண்டிச் சக்கரத்தின் அலகுக்கு பயன்படுத்தும் தேக்கு மரம் வலுவானது நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதும் ஆகும்.

வண்டியின் நுகத்தடிக்கு மஞ்சனத்தி மர கம்பை பயன்படுத்துவதன் நோக்கம் அந்த மரத்திலுள்ள மஞ்சள் தன்மையின் மருத்துவ குணம் மாட்டின் கழுத்து உராய்வினால் ஏற்படும் புண்ணுக்கு மருந்தாகவும் பயன்படும் என்பதனாலேயே.
எடை குறைவு மற்றும் வலிமை தன்மையும் கொண்ட மூங்கிலை அளி பலகைக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

*இப்படி, பல வியக்க வைக்கும் தொழில்நுட்பம் கொண்டது, மாட்டுவண்டி**வியக்க வைக்கும்,*
*மாட்டுவண்டி தொழில்நுட்பம்* 

*மாட்டின் கழுத்தை, பாரம் அழுத்தாத, மரபு வடிவம்.*

வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடியான தொழில்நுட்பம் கொண்டது மாட்டுவண்டி.  

வண்டியை மாடு இழுக்க மட்டுமே சக்தியை செலவழித்தால் போதும். பாரத்தை வண்டியே சுமந்து கொள்ளும்.
உயிரினங்களை வதைக்காமல் மனிதன் அதை பயன்படுத்தவேண்டும்.

 இப்படி யோசித்த நமது முன்னோர்களின் அறிவுத்திறனையும், நேசத்தையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. நமது முன்னோர்கள் அதை எப்படியெல்லாம் சாத்தியப்படுத்தினார்கள் என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக தமிழ் நாட்டில் பயன்படுத்தப்படும் "சக்கடாவண்டி"  என்னும் பாரவண்டி வடிவமைப்பு,  தமிழ்நாடு மட்டும் அல்லாமல்,  கோரமண்டல் கடற்கரை பகுதி என்று குறிப்பிடப்படும் ஒரிசா வரை ஒரே மாதிரி இருக்கிறது.

மாட்டுவண்டிகளின் சக்கரத்தின் உயரம் 5¼ அடி என்று தரப்படுத்தபட்டிருக்கிறது
இந்தத் தரப்படுத்தல் என்பது ஏன்..?  என்று சற்று பார்ப்போம்.

பொதுவாக ஒரு நபரை 
" நெட்டையான ஆள்.." என்றோ "குட்டையான ஆள்.."  என்றோ என்றோ அடையாள படுத்துவது நம்மிடையே இருந்து வரும் ஒரு பழக்கம்.

 இந்த குட்டை நெட்டைக்கான அடிப்படை
(Reference point) 
என்று ஒன்று இருக்க வேண்டும் தானே.
அதாவது சராசரி உயரம் என்பதாக.

 நம்மை பொருத்த வரை நம்ம ஊரில் மனிதனின் சராசரி உயரம் என்பது 
5½ அடி என்பதாகும்.

இந்த சராசரி உயரத்தின் ¾ பங்கு என்பது அதாவது "எண் சாண் உடம்பு" என்று சொல்வோமே அதில் ¾ பங்கான 6 சாண் என்பது 4 1/8 (நாலே அரைக்கால்) அடி ஆகும்.
இது மனிதனின் நெஞ்சு பகுதி வரை உள்ள உயரமாகும்.

மாட்டுவண்டியின் நீளமான பகுதியின் பெயர் ‘போல்' என்பதாகும். இந்த போலின் முனையில் தான் மாடுகளை பூட்ட பயன்படும் நுகத்தடியை பொருத்திக் கட்டுவார்கள். 5¼ அடி விட்டம் கொண்ட வண்டி சக்கரத்தின் ஆரம் 2 5/8 / (இரண்டே அரையே அரைக்கால்) அடி ஆகும்.

 சக்கரத்தின் மையத்தில் அச்சு சொறுகப்பட்டிருக்கும். இரு சக்கரங்களையும் இணைக்கும் இந்த அச்சின் மேல் தான் பாரம் தாங்கி
 (load bearing)யாக செயல்படும் தெப்பக்கட்டை அமர்த்தப்பட்டிருக்கும். இந்த தெப்பக்கட்டையின் மேல் தான் 'போல்' என்னும் நுகம் கட்டும் நீளக்கட்டை பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் போல் மற்றும் தெப்பக்கட்டையும் சேர்ந்து 1½ அடி உயரம் இருக்கும்.

ஆக ஒரு வண்டியை படுக்கை மட்டத்தில் சமன் (balance) பண்ணினால் வண்டியின் உயரம் 4 1/8 அடியாக இருக்கும். அதாவது சக்கரத்தின் ஆரத்தின் அளவும் தெப்பக்கட்டையின் உயரமும் (2 5/8 + 1 ½ ) சேர்ந்து உயரம் 4 1/8 அடியாகும். ஒரு மாட்டின் கழுத்து வரை உள்ள உயரம் சராசரியாக 4 1/8 அடி. இத்தனை சராசரி உயரங்களின் அடிப்படையில் தான் நமது மாட்டுவண்டியினை வடிவமைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

அவர்களால் இவ்வளவு நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை 4 1/8 அடி உயரத்தில் விரல் தொடலில் வண்டியில் ஏற்றப்படும் பாரம் மாட்டின் கழுத்தை அழுத்தாதபடி நொடிப்பொழுதில் சமன் (feather touch balance) செய்ய முடியும்.

 இத்தனை துல்லிய அளவு தொழில்நுட்ப ஒருங்கிணைவே மாட்டுவண்டி.

 ஒவ்வொரு பாகத்தையும் செய்ய இன்னின்ன மரவகையை தான் பயன்படுத்த வேண்டும் என்று வரையறுத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். 

அந்த வரையறையில் சில:
சட்டம் -  வாகைமரம்.
குறியது - வாகைமரம்
ஆரக்கால் - உன்னி
அலகு - தேக்கு
குடம் -  வைமரம்
தெப்பக்கட்டை- வேங்கை
போல் - வேங்கை
நுகம் -  புன்ணை
நோக்காகுச்சசு - வைமரம்
தாங்குக்கட்டை- வைமரம் 
பிள்ளைச்சட்டம் -  வாகை
குரங்குகம்பு- கல்மூங்கில்
ஊனிகம்பு - விடத்தலை
அளி -  மூங்கில்பட்டியல்

பார வண்டியின் பாகங்களைச் செய்யப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மர வகைகளின் சிறப்புத் தன்மையை சிறிது பார்ப்போம்.

வண்டிச் சக்கரத்தின் அலகுக்கு பயன்படுத்தும் தேக்கு மரம் வலுவானது நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டதும் ஆகும்.

வண்டியின் நுகத்தடிக்கு மஞ்சனத்தி மர கம்பை பயன்படுத்துவதன் நோக்கம் அந்த மரத்திலுள்ள மஞ்சள் தன்மையின் மருத்துவ குணம் மாட்டின் கழுத்து உராய்வினால் ஏற்படும் புண்ணுக்கு மருந்தாகவும் பயன்படும் என்பதனாலேயே.
எடை குறைவு மற்றும் வலிமை தன்மையும் கொண்ட மூங்கிலை அளி பலகைக்கு பயன்படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

*இப்படி, பல வியக்க வைக்கும் தொழில்நுட்பம் கொண்டது, மாட்டுவண்டி*

நன்றி
பகிர்வு பதிவு.

Monday, November 01, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

  நிராயுத
  பாணியாய்
  போராடும் 
  அந்த
  ஒற்றை 
  மனிதனை

  வலிமை 
  வாய்ந்த
  ஆயுதங்கள்
  வைத்திருக்கும்
  பிரிட்டிஷ்
  அரசால்
  நசுக்க 
  முடியாதா ?

எனும் 
கேள்வி
இங்கிலாந்து
பாராளுமன்ற
கூட்டத்தில்
எதிர்கட்சி 
உறுப்பினர்கள்
எழுப்பினர்

அதற்கு

  அந்த
  மனிதன்
  கத்தியை
  எடுத்திருந்தால்
  நான் துப்பாக்கியை
  எடுத்திருப்பேன்

  அந்த
  மனிதன்
  துப்பாக்கியை
  தூக்கி இருந்தால்
  நான் பீரங்கியை
  தூக்கி இருப்பேன்

  அந்த
  மனிதன்
  பீரங்கியோடு
  வந்திருந்தால்
  நான் குண்டு மழை
  பொழிந்திருப்பேன்

  ஆனால்

  அந்த 
  ஒற்றை
  மனிதன் 
  சத்தியத்தை
  கையில் வைத்து
  போராடுகிறானே

  சத்தியத்தை
  எதிர்க்கும்
  ஆயுதம்
  இதுவரை
  கண்டுபிடிக்க
  படவில்லை

என்று பதில்
அளித்தவர்
அந்நாட்டு
பிரதம மந்திரி
வின்ஸ்டன்
சர்ச்சில்

அந்த
ஒற்றை
மனிதன்

உலகம்
போற்றும்
உத்தமர்
காந்தி

எந்த
சூழ்நிலையிலும்
சத்தியத்தை
கடைபிடிப்பவர்
சரித்திரத்தில்
இடம் பிடிப்பது
நிச்சயம்
தானே

  வாங்க ::

  அவர்
  காட்டிய
  பாதையில்
  பயணப்பட
  தொடங்கலாம்

  அது
  கண்டிப்பாக
  கடினமாக கூட
  இருக்கலாம்

  இருப்பினும்
  முயற்சிகள்
  செய்யலாம்

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

நன்றி 
முனை.சுந்நர மூர்த்தி

Thursday, October 28, 2021

மன உளைச்சல்..நமக்கு வேண்டாமே...

உலகத்தையே ஜெயிக்க நினைத்த *பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.* தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து *ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. 

சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது.* அவரை பார்க்க வந்த அவரின் *நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.* ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் *அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.* பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் *மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது.* ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது...._

_அதைப் போல் உறுதியான *சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி*....அதே *மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்...*_

_,*மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... *பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து* முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம்,#மனஉளைச்சல் தான்!

Tuesday, October 19, 2021

ஆன்ற குடிப்பிறத்தல் வலையொலி ஒசை( Audio Lesson)

வகுப்பு.8. பாடம்.தமிழ்.  இயல்.4. விரிவானம்.
ஆன்ற குடிப்பிறத்தல். வலையொலி ( Audio Lesson).கேட்டு மகிழ்ந்து பயன் பெற அன்போடு அழைக்கிறேன்.
https://anchor.fm/sivaramakrishnan7/episodes/22------8-e191q31


Tuesday, October 12, 2021

மன அழுத்தமின்றி பணிசெய்ய...வழிகள்...40

*பள்ளியில் அதிக மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக கற்பித்தல் பணி செய்ய ஆசிரியப் பெருமக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் சில இதோ உங்களுக்காக, பொறுமையாக படித்துவிட்டு ஆசிரியர்-நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்*

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 40-வழிமுறைகள்:-

1.காலை எழுந்தவுடன் மூச்சு பயிற்சி முக்கியமாக ஆசிரியர்கள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நலம்.

2.காலையில் பள்ளிக்கு செல்லும்முன் கடைசி அரைமணி நேரம் ஒய்வு எடுத்துவிட்டு மனது சந்தோசமாக வைத்துக்கொண்டு இறைவனை வணங்கிவிட்டு  பள்ளிக்கு செல்ல வேண்டும்.

3.வகுப்பில் ஒவ்வொரு பாட வேளையின் கடைசி ஐந்து நிமிடம் மாணவர்களுக்கு நடத்தியது தொடர்பான கற்றல் பணி தந்துவிட்டு நாம் பேசாமல் குரலுக்கு ஓய்வு தர வேண்டும்.

4.வகுப்பறையில் மிகவும் சத்தமாக பேசக்கூடாது.

சரியான சத்தத்துடன் மட்டுமே பேச வேண்டும்.நமது கண்பார்வை வகுப்பு முழுவதும் இருக்க வேண்டும்.

5.மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் மைக் மூலம் வகுப்பு எடுத்தால் நமது வாழ்நாள் நீடிக்கும்.கரும்பலகையில் எழுதும்போது சுண்ணக்கட்டி உடம்பிற்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

6.ஒவ்வொரு பாடவேளை முடியும்போது குரல்வலை வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு பாடவேளை முடியும்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

7.பள்ளிக்கு செல்லும்போது முகம் மலர்ந்து சந்தோசமாக செல்ல வேண்டும்.

8.பள்ளி செயல்பாடு எதுவாக இருந்தாலும் வீட்டிலும்,வீட்டின் செயல்பாடு எதுவாக இருந்தாலும் பள்ளியிலும் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பள்ளி முடிந்தவுடன் மாலை நேரத்தில் பள்ளியின் செயல்பாட்டை மறந்துவிட்டு குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க பழக வேண்டும்.

 

9.பாடவேளை முழுவதும் நமது உடலும் உள்ளமும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.மாணவர்களிடம் அன்புடன் மட்டுமே பேச வேண்டும்.கோபப்பட்டு பேசக்கூடாது.

10.எண்ணம்,சொல்,செயல் மூன்றும் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒருநிலை படவேண்டும்.

11.அனைத்து நேரமும் நாமும் சந்தோசமாக இருந்தது நம்மை சார்ந்த மாணவர்கள்,ஆசிரியர்கள்,

குடும்பம்,நண்பர்கள்,உறவினர்கள்,சொந்தங்கள், உலக மக்கள் என்று அனைவரையும் சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

12.ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிடும்போதும்,தண்ணீர் குடிக்கும் போதும் நமக்கு தந்த பிரபஞ்சம்,வழங்கிய உள்ளங்களை வாழ்த்த வேண்டும்.

 

13.மதிய இடைவேளை மற்றும் இடைவேளையின் போது சிரித்து சந்தோசமாக பாடத்தை தவிர்த்து மற்ற பயனுள்ள கருத்துக்களை சக ஆசிரியர்களுடன் பேச பழக வேண்டும்.

14.காலையில் பள்ளிக்கு சென்றவுடன் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களுக்கு முக மலர்ந்து வணக்கம் சொல்வது மிக முக்கியம் ஆகும்.

15.பள்ளியில் ஆசிரியர்,பெற்றோர்,

மாணவர்கள் கோபமாக பேசினாலும் மறந்துவிட்டு அவர்களை வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.

16.பள்ளியில் நம்முடன் பேசும் அனைவரின் கருத்துக்களையும் கேட்டு நாம் பேசும் போது சரியாக,சுருக்கமாக அன்புடன் பிறர் மனம் வருந்தாத வண்ணம் பேச வேண்டும்.

17.நம்முடன் அனைவரும் சந்தோசமாக பேசும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.அனைவரின் பேச்சிற்கும் மதிப்பு தர வேண்டும்.

18. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களின் குடும்ப சூழல் பற்றி கேட்டு தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.அவர்கள் மனம்விட்டு நம்முடன் பேச வாய்ப்பு தரவேண்டும்.

19.நாள்தோறும் இடைவேளையின் போது யாரேனும் ஒரு மாணவர் பெயர் சொல்லி அவரை வந்து நம்முடன் பேச சொல்லும்போது அவர்கள் மீது நாம் கவனம் செலுத்துவதை உணர்ந்து நன்றாக படிப்பார்கள்.

20.மாணவர்கள் செய்யும் சிறு தவறையும் தக்க அறிவுரை கூறி திருத்த முயற்சி செய்ய வேண்டும்.பாடவேளைக்கு செல்லும் போது கற்றல்,கற்பித்தல் உபகரணம் கொண்டு சென்றால் கற்பித்தல் மேம்படும்.

21.இதுகூட தெரியாத என்ற வார்த்தை மட்டும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டாம்.அப்படி சொன்னால் மாணவர்கள் நம்முடன் கடைசியாக பேசுவது அதுவாகத்தான் இருக்கும்.

22.நமக்கு தெரியாது உலகில் நிறைய உள்ளது என்பதை உணர்ந்து மாணவர்களிடம் பேச வேண்டும்.அன்றாட தொலைக்காட்சியில் வரும் முக்கிய பயனுள்ள செய்திகளை கேட்டு மாணவர்களுக்கு சொல்ல வேண்டும்.

23.கிடைக்கும் நேரத்தை மனது அமைதியாக இருக்க பழக்க படுத்திக்கொள்ள வேண்டும்.

24.பள்ளியில் வரும் பணியை வேகமாக முடித்துவிட்டு சந்தோசமாக இருக்க வேண்டும்.

25.பணியை அதிக நேரம் எடுத்து சென்று மனதை துன்பத்தில் வைத்திருக்க கூடாது.

26.மாணவர்களுக்கு பாட வேளையில் பேச வாய்ப்பு தரவேண்டும்.ஏன், எதற்கு,எப்படி,என்ன? என்பது போன்று வினா கேட்டு கற்க பயிற்சி தர வேண்டும்.புரிந்து படிக்க பயிற்சி தரவேண்டும்.

27.யாரிடமும் நமது துன்பத்தை பேசக்கூடாது.நமது சந்தோசத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

28.பள்ளியில் வகுப்பில் நடத்தும் பாடம் மற்றும் செயல்பாட்டை குறிப்பு எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றால் மறக்காது.அப்போதுதான் அனைத்து கருத்துக்களையும் மாணவர்களுக்கு சொல்லமுடியும்.

29.பள்ளி முடிந்து விட்டு வீட்டிற்கு வந்தால் தங்களின் குழந்தை மற்றும் குடும்ப உறுப்பினருடன் சந்தோசமாக இருக்க வேண்டும்.நமது குடும்பம்தான் முதல் கோவில் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

30.தங்களின் குழந்தைகளின் தனித்திறனில் கவனம் செலுத்த வேண்டும்.நம்மை போன்று அவர்கள் எதிர் காலத்தில் வருந்தமால் இருப்பதில் கவனம் கொள்ள வேண்டும்.

31.பள்ளியில் இருந்து வந்தவுடன் அரைமணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு,அதன் பிறகு மற்ற பணிகள் செய்ய வேண்டும்.

32.நாள்தோறும் மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்லும் பழக்கம் இருக்க வேண்டும்.

33.விடுமுறை நாளில் குடும்பத்துடன் அருகில் உள்ள பூங்கா போன்று  சிறு சுற்றுலா மேற்கொள்ள வேண்டும்.

34.உறங்கும்போது இறைவனை வேண்டிக்கொண்டு சந்தோசமாக உறங்க வேண்டும்.

35.நாம் வாழ்வில் அனைத்து செயலிலும் *அமைதி ஆனந்தம்* நம்பிக்கை* பெருக வேண்டும்   என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

36.கடந்தகால மன உளைச்சலை மறந்து,

எதிர்கால கற்பனை மறந்து,நிகழ்காலத்தில் சந்தோசமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

37.காலையில் எழுந்தவுடன் இரவு உறங்கும் வரை அனைவரையும் வாழ்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.

38.ஆசிரியராக அனைவரின் வாழ்வில் ஏணிப்படியாக இருப்போம்.சமூகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம் என்ற குறிக்கோளுடன் வாழ வேண்டும்.

39.சமூகத்தின் முன்னுதாரணம் நாம் என்பதால் அனைவரிடமும் மாற்றம் வர முதலில் நம்மிடம் உருவாக வேண்டும்.

40.நீள் ஆயுள்,நிறை செல்வம்,மெய் ஞானம்,உயர் புகழ் பெற்று பல்லாண்டு அனைவரும் வாழ வாழ்த்தும் நல்ல மனதுடன் வாழ வேண்டும்.

நன்றி 

என்றும் அன்புடன் 

கல்வி ஆசிரியர்கள்.

பகிர்வு பதிவு

Monday, October 11, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

மணம்
பரப்பும்
பூக்களுக்கு 
பசுமையான
மரங்களுக்கு
பெயர் போன 
பெங்களூரில் 

ஒரு 
புகழ்பெற்ற 
கல்வி நிறுவனம் 

அதில்
கௌரவ
பேராசிரியர்
பணிக்கு சேர 
ஆசைப்பட்டார்
அப்துல் கலாம்

அதற்கான 
விண்ணப்பம் 
அனுப்பினார் 

நேர்முக
தேர்வில் 
கலந்து 
கொண்டார்

  அவர் 
  முறையாக 
  பி எச் டி 
  படிக்காதவர் 

என்ற 
காரணத்தை 
காட்டி

கலாமை
வேலைக்கு 
சேர்க்க 
மறுத்தனர் 
நிர்வாகத்தினர்

இந்த சம்பவம் 
நடந்த போது 

கலாமிற்கு 
வயது 70

  அக்னி
  ஏவுகணை
  ஏவியவர்

  பொக்ரான்
  அணு குண்டு
  சோதனையை
  வெற்றிகரமாக
  முடித்தவர்

  பிரதம
  மந்திரியின்
  தலைமை
  அறிவியல்
  ஆலோசகராக
  இருந்தவர்

  அந்த 
  பணியில்
  சேர்க்க
  மறுத்தது

  அவர்
  மனதை 
  பாதித்தது 
  என்றால் 
  நிச்சயம் 
  இல்லை 

  அவரின் 
  பங்களிப்பை
  பயன்படுத்தி 
  கொள்ள 

  அந்த 
  நிறுவனம்
  கொடுத்து 
  வைக்கவில்லை 

என்பதே
நிஜம்

  மாபெரும் 
  லட்சியத்தில் 
  பயணம்
  செய்பவர்களை

  இந்த
  மாதிரியான 
  சின்ன சின்ன 
  மறுப்புகள் 

  அவர்கள் 
  மனதை 
  எள்ளளவும்
  பாதிப்பதில்லை

என்பதே
உண்மை

  வாங்க ::

  எந்த
  நிகழ்வையும்

  அது
  நன்மையோ
  தீமையோ

  அது
  வெற்றியோ
  தோல்வியோ

  அது
  இன்பமோ
  துன்பமோ

  இதுவும்
  கடந்து
  போகும்
  என்று

  சுலபமாக
  எடுத்து
  கொள்ள
  பழகுவோம்

  நம்
  வாழ்வில்
  அதிர்வுகளுக்கு
  இடமில்லை

  என்பதை
  உணரவும்
  செய்வோம்

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

அன்புடன்
காலை
வணக்கம்

💫💫💫💫💫💫💫

நன்றி
முனை. சுந்தர மூர்த்தி

Thursday, June 17, 2021

சிகரத்தை நோக்கி....

பெரிய அளவு பிக்செல் புகைபடங்களை ( Big Size Pixel photos  )  சிறிய அளவு பிக்செல் புகைபடமாக  ( Small Size Pixel Photos) மாற்றி எளிதாக இணையத்தில் பதிவேற்றம் செய்ய பயன்படும் செயலியின் செயல் விளக்க வீடியோவை காணுங்கள்.... மறக்கமல் Subscribe செய்து ஆதரவு தர அன்போடு வேண்டுகிறேன்...

மிக்க பேரண்போடு..
சேலம்.ஆ.சிவா....

Please click the Tutorial Link
https://youtu.be/3fBfnrP6RuM

எனது Siva Mindmoulders channel 50,000 பார்வையாபளர்கள் பார்வையிட்டுள்ளார்கள்...உங்களின் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்....



Tuesday, January 05, 2021

புதிய பார்வை...புதிய கோணம்..

உருவாக்குதல்
இணைத்தல் 
என்கிற 
இரண்டு 
செயல்களையும் 
கொண்டே 
புதிய 
கருத்துக்கள் 
உதயமாகின்றது 
நீங்கள் 
கற்கும்
போது 
அறிந்து
கொள்வீர்கள் 
பின் கற்க 
வேண்டியது 
நிறைய 
உள்ளது 
என்பதை ...

படைப்பாற்றல்
அறிவு 
நம்முடைய 
வேலை 
வாய்ப்புகளை 
அதிகரிக்கும் 
வாழ்க்கை 
தரத்தை 
உயர்த்தும் ....

உங்கள் 
கண் 
முன்னே 
இரண்டு 
தேர்வுகள் 
உண்டு
ஒன்று 
உங்களை 
கடந்து 
செல்லும் 
உலகத்தை 
பார்த்தபடி 
பக்கமாய் 
உட்கார்ந்திருப்பது ...
அல்லது 
உங்கள் 
மூளையையும் 
படைப்புத் திறனையும் 
தகவல் தொழில் 
நுட்பத்தில்
நீங்கள் 
பங்கேற்று 
வளர்ச்சி 
காண்பது 
தற்போதும் 
இனிவரும் 
காலத்திலும் 
படைப்பு 
சிந்தனைகள்
உலகத்தை 
முன்னோக்கி 
செலுத்தும் ...
படைப்பு
சிந்தனையே 
உலகத்தின் 
உந்துசக்தியாக 
இருக்கும் 
என்பது 
உண்மை 
தகவல் தொழில்நுட்பம் மட்டுமே 
புதுமைகளை 
கொண்டு 
வந்து 
விடாது 

சவால்
மிக்க 
சூழ்நிலையை 
எதிர்கொள்வதிலும்
சிந்தனை 
ஆற்றலையும் 
தன்னோடு 
இணைத்துக் 
கொண்டால் 
தான் 
அது 
செயல்
படுத்த
முடியும்...

வாங்க 
நாமும்
புதிய
சிந்தனைகளை
விதைப்போம்
வாழ்க்கையில் 
வெற்றிகளை
படைப்போம்....

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

Sunday, January 03, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...



_*மக்களுடன்*_
_*பழகுவது*_ 
_*ஒரு கலை*_

இந்த 
கலையில் 
சிறந்து 
விளங்குபவர்கள்

அவர் தம் 
வாழ்க்கையில் 
கொடி கட்டி 
பறக்கிறார்கள்.

வாழ்க்கை 
என்றால் உறவு 
என்று அர்த்தமாம்.

உள்ளங்கள் 
தோறும் 
உறவுகளை 
வளர்ப்பவர்கள்
வாழ்க்கையில்
 
வெற்றி 
மலர்கள் 
எப்போதும் 
பூத்து குலுங்கும்.

எல்லோரிடமும் 
பேசுவது 
அவசியமற்றது 
என்றாலும்

அவசியமானவர்
உடன்  
பழகுவதும்

அவர்களுடைய 
அன்பையும் 
பாசத்தையும் 
பசுமை மாறாமல் 
புதுப்பித்து 
கொள்வதும்

வளர்ந்து 
வருபவர்களுக்கு 
மிகவும் அவசியம்.

வாழ்க்கை 
என்பது 
இல்லங்களோடு 
நின்று 
விடுவதில்லை.

நல்ல 
உள்ளங்களோடு 
தொடர்கின்ற 
பயணமே அது.

எல்லோரின் 
உள்ளங்களிலும் 
உண்மையான 
அன்பை 
தூவினால்

நம்
முகத்தில் 
மட்டுமல்ல

எல்லோர்
அகத்திலும்
புன்னகை 
பூக்கள் மலரும். 

ஆம்.

  புன்னகை 
  என்பது 
  இறைவனின் 
  கையொப்பம் 

என்கிறார் 
ஒரு மகான்.

- முனைவர்
  கவிதாசன் -

_*சிறு*_ 
_*புன்னகை*_ 
_*ஒருவரின்*_ 
_*முகவரி*_

_*அதில்*_
_*கரைந்திடும்*_ 
_*பிறர் மனம்*_
_*அபகரி*_

முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி....
முனை.சுந்தரமூர்த்தி

Thursday, December 31, 2020

Tuesday, December 22, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...



ஒரு
கதை

ஒரு
கவிதை

ஒரு
கருத்து

ஒருவன்
குருவை தேடி
அடர்ந்த வனத்திற்கு
உள்ளே சென்றான்.

குருவை
கண்டான்
பேசினான்
பேசிக்கொண்டே
இருந்தான்.

நேரம் 
போனதே
தெரியவில்லை.

மாலை
மங்கியது

இருள் சூழ
தொடங்கியது.

" இரவு
  இங்கேயே
  தங்கி விட்டு செல் "

என்றார் 
குரு.

" இல்லை குருவே. 
  முக்கிய வேலை 
  நான் போயாக 
  வேண்டும் "

என்றான் 
இவன்.

இருள் 
இதற்குள்
அடர்த்தியாக
ஆனது.

இவன்
இருட்டில் செல்ல
அச்சம் அடைந்து
அதே நேரத்தில்
போகவும் 
எத்தனித்தான்.

இவன் மனதை 
அறிந்த குரு 
கைவிளக்கு
ஒன்றினை
ஏற்றி கொடுத்து...

" இதன் 
  ஒளியால்
  நீ நடந்து செல் "

என்று 
கூறினார்.

விளக்கை 
பெற்று நடக்க 
தொடங்கியவனை
பின் தொடர்ந்து 
வந்த குரு... 

அவன்
கையிலிருந்த 
விளக்கினை
வாங்கி ஊதி
அணைத்து விட்டு...

" இரவல் வெளிச்சம்
  துணைக்கு வராது
  உன் விளக்கு
  உன் இதயத்தில்.

  நெஞ்சில்
  துணிவிருந்தால்
  விளக்கு உனக்கு
  தேவையில்லை

  உள்ளத்தில்
  பயமிருந்தால்
  உயர்வு 
  உனக்கில்லை

  ஒளியும்
  இருளும்
  பாதையும்
  பயணமும்
  மாறி மாறி
  வரும் போகும்.

  தைரியமாக நீ 
  தொடர்ந்து செல்
  பயம் நீங்கும்
  பயணம் தொடரும்
  பாதையும் முடியும் "

என்று 
வாழ்த்தி
அனுப்பினார் 
குரு.

அவரின்
வாழ்த்துகளில்
வார்த்தைகளில்
நம்பிக்கையும்
மகிழ்ச்சியும்
அடைந்த
நம்மவர்...

தொடர்ந்து
சென்றார்
பயணத்தை
முடித்தார்.

அவரின்
வார்த்தைகளை
சிரமேற்
கொண்டார்
வாழ்விலும்
வென்றார்.

ஒரு
கவிதை :::

'  ஒளி
  குறைந்த 
  வீதியில்
  நடக்கும் 
  போதும்...

  உன் 
  விழிகளுக்கு
  வழி தெரியும்.

  உன்
  இதயத்தில்
  தீபம்
  எரிந்து
  கொண்டிருந்தால் '

புது 
கவிதை
நாயகன்

கவிஞர்
மு.மேத்தா

ஒரு
கருத்து :::

விதைக்கான
வெற்றி
அதன்
வீர்யத்தில்

நம்
வாழ்விற்கான
வெற்றி
நம்
நெஞ்சுறுதியில்

வாங்க.

நாம்
நம்மை
நம்புவோம்

நம் 
வாழ்வில்
ஜெயித்து
காட்டுவோம்.

_*அச்சம்*_
_*என்பது*_
_*மடமையடா*_

_*அஞ்சாமை*_
_*திராவிடர்*_
_*உடமையடா*_

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி
முனை.சுந்தரமூர்த்தி.

Monday, December 21, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..



அவரின்
கருப்பு கோட்
உலகம் அறிந்தது.

அங்கங்கே
கிழிசல்கள்.

அதன் மேல்
வெள்ளை
நூலில் 
தையல்கள்.

அதை
மறைக்க
கருப்பு மையில்
சாயம் வேறு.

இவ்வளவு
ஏழ்மை
நிலையிலும்

அவர்
பாடிய
ஒரு பாட்டு

' எத்தனை 
  கோடி 
  இன்பம்
  வைத்தாய்
  இறைவா '

அதனால் தான்
அவர்

மகா கவி
தேசிய கவி
தெய்வ கவி

என
போற்றப்பட்டார்.

எளிமையிலும்
மிக வலிமை

ஏழ்மையிலும்
மன செழுமை

கண்களில்
ஒரு காந்தம்

வார்த்தைகளில்
ஒரு ஜாலம்.

பாரதி
நமக்கெல்லாம்
ஒரு பாடமல்ல

அவர் ஒரு
வாழும் வரலாறு.

அவரின் புதிய 
ஆத்திசூடியின்
தெறிக்கும் சில
முத்துக்கள் :::

  அச்சம் 
  தவிர்

  ஆண்மை 
  தவறேல்

  உடலினை 
  உறுதி செய்

  எண்ணுவது 
  உயர்வு

  ஏறுபோல் 
  நட

  கற்றது 
  ஒழுகு

  குன்றென 
  நிமிர்ந்து நில்

  கூடி 
  தொழில் செய்

  சீறுவோர் 
  சீறு

  சூரரை 
  போற்று

  தூற்றுதல் 
  ஒழி

  தெய்வம் நீ 
  என்றுணர்

  நீதி நூல் 
  பயில்

  நேர்பட 
  பேசு

  புதியன 
  விரும்பு

  மூப்பினுக்கு
  இடம் கொடேல்

  யாரையும் 
  மதித்து வாழ்

  ரௌத்திரம் 
  பழகு

  வையத் 
  தலைமை கொள்

பாட்டுக்கு
மட்டுமல்ல
நாட்டுக்கே
நல்ல 
தலைவன்
அவன்.

அவன்
காட்டிய
பாதையில்
பயணம் 
செல்லின்...

விளைய 
போவது...

புதுமை !
வளமை !!
செழுமை !!!
இனிமை !!!!

முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

புதிய 
நம்பிக்கைகளுடன்

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்


நன்றி. முனை.சுந்தரமூர்த்தி

Tuesday, December 15, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

உங்களால்
சிரிக்க 
முடிந்தால் 
நீங்கள் 
ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் 
என்று 
அர்த்தம் 
உடல் 
ரீதியாகவும் 
மட்டுமன்றி 
மன ரீதியாகவும் 
இறுக்கமான 
மன 
உணர்வுகளை 
லேசாக்குவது
சிரிப்பு ...

சிரிக்க 
வேண்டிய 
தருணத்தில் 
உங்களால் 
சிரிக்க 
முடியவில்லை 
என்றால் 
உங்களுக்குள் 
நிச்சயம் 
ஏதோ 
ஒரு 
கோளாறு 
இருக்கிறது 
என்பதை
உணருங்கள்..

சிரிக்கக் 
கூடாத 
சந்தர்ப்பத்தில் 
சிரித்து 
வைத்தால்
அடுத்தவர்கள் 
வேறுமாதிரி 
சந்தேகப்பட்டு 
பேசுவார்கள் 
நீங்கள் 
நோயிலிருந்து 
விரைவில் 
குணமடைய 
நகைச்சுவை 
உணர்வு 
உதவும் 
என்பார்கள்..
மருத்துவமும் 
இந்த 
உண்மையை 
ஒப்புக் 
கொண்டுள்ளது 
கார்ட்டூன் 
படங்களையும் 
காமெடி 
புத்தகங்களையும் மருத்துவர்கள் 
பரிந்துரை 
செய்கிறார்கள் 
சிரிப்பு 
சிறந்த 
மருந்தாகிறது 
நகைச்சுவை 
ஒரு 
சிகிச்சை 
ஆகிவிட்டது ...

வாங்க 
சிரித்து வாழ
வேண்டும்
பிறர்
சிரிக்க
வாழ்திடாதே
வரியை
நினைவு
கூர்ந்து
மகிழ்வாய்
வாழ்வோம்...

%%%%%%%%
அன்புடன்
இனிய
காலை
வணக்கம்
&&&&&&&&&

Monday, December 14, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..

ஒரு
மீனவன் 
தன்னுடைய
பையில் 
தான் 
பிடித்த 
பெரிய 
மீனை 
வைக்க 
முடியாமல் 
தண்ணீரில் 
மீண்டும்
விட்டு
விட்டான்...

ஆனால்
அவன்
சிறிய 
மீன்களுக்காக 
மணி
கணக்கில்
காத்துக் 
கிடக்கிறான் 
அவன் 
பெரிய 
மீனை 
சிறு
துண்டுகளாக்கி 
அதே 
பையில் 
அடைத்துக் 
கொண்டிருக்க 
முடியும் 
ஆனால் ...
அவன்
செய்யவில்லை
ஆம்
அவனை 
போன்றவர்களுக்கு 
பார்வை
மற்றும்
அறிவும் 
சற்று
குறைவுதான்..
கொஞ்சம் 
சிந்தனையை 
பயன்படுத்தி
சூழ்நிலையை 
தனதாக்கிக் 
கொண்டால் 
வெற்றி 
நிச்சயம் 
என்பதை 
நம்மில்
பல
பேர்
உணராமல் 
வெற்றிக்கு
விடுமுறை
விட்டு 
வருந்துகிறோம்...

வாங்க
விழிப்பா
இருந்து
வாழ்வில்
வெற்றி
கொள்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்...

Sunday, December 13, 2020

உவமை கவிஞர் சுரதா விருது..

2020-ஆம் ஆண்டின் உவமைக் கவிஞர் சுரதா விருதினை தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்  மற்றும் உலகத்தமிழ்க் கவிஞர் பேரவை இணைந்து வழங்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்விருதிற்கு எனைத் தேர்வு செய்த சான்றோர் பெருமக்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்!

Saturday, December 12, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁  HBD RAJINI SIR  🍁

இது
அரசியல்
பதிவு அல்ல.

யாரையும்
தாங்கி பிடிக்கும்
எழுத்துக்களும் அல்ல.

1975
'அபூர்வ ராகங்கள்'
திரைப்படம் 
வெளியானது.

கருப்பு - வெள்ளை
கலரில் அமைந்த
இத்திரைப்படம்

அந்த 
காலத்திலேயே
மெகா ஹிட்.

சிறந்த
திரைப்படம்

சிறந்த
ஒளிப்பதிவு

சிறந்த
பாடல்

என
மூன்று
தேசிய விருதுகள்
கிடைத்தது.

படம்
முழுக்க
ஸ்ரீ வித்யாவும்
கமலஹாசனும்
மேஜர் சுந்தரராஜனும்
ஜெயசுதாவும்
நாகேசும்

போட்டி போட்டு
நடித்தனர்.

மிக
சிறிய
பாத்திரத்தில்

கருப்பு
கலரில் இருந்த
ஒரு நடிகர் நடித்தார்.

அந்த
கருப்பு 
மனிதனை

பட்டை 
தீட்டினார்கள்
பால சந்தரும்
பாரதி ராஜாவும்.

காலம்
மாற மாற 
தன்னை மேலும்
பட்டை தீட்டிக்கொண்ட
அந்த மனிதர்

இதோ இன்று
கருப்பு வைரமாக
ஜொலித்து கொண்டு
இருக்கிறார்.

தொடக்கத்திலும்
தொடர்ந்து வளர்ந்து
வரும் நேரத்திலும்

எம்.ஜி. ஆர்.
சிவாஜி
ஜெய்சங்கர்
சிவகுமார்
என

மிக 
பெரிய
நடிகர்கள்
கோலோச்சிய
நேரமது.

அந்த
நேரத்திலேயே
தன் தனிப்பட்ட
நடிப்பால்
ஸ்டைலால்

அந்த கால
இளைஞர்களின்
மனதில் ஆதர்ஸ
நாயகனாக உயர்ந்தார்.

அவரை
அழிக்க
ஒழிக்க
திரை மறைவு
வேலைகள்
அரங்கேற்றம்
செய்யப்பட்டது.

அவருக்கு
பித்து பிடித்து
விட்டது என 
பத்திரிக்கைகளும்
தம் பங்குக்கு 
விளாசி
தள்ளின.

பாதகமாக
கருதப்படும்
கருப்பு நிறத்தை
கொண்டே

தன்
திரை வாழ்வை
சாதகமாக எப்படி
மாற்றி கொண்டாரோ
அதைப்போலவே

அத்தனை
எதிர்ப்புகளையும்

தன் சிரிப்பால்
தன் நடத்தையால்
தன் பொறுமையால்
வெற்றி கொண்டார் 
அவர்.

பெரியவர்கள்
ஆனாலும்
சிறியவர்கள்
ஆனாலும்
அவர்களை
மதித்து பாராட்டி

அவர்கள் மேல்
தன் அன்பாலும்
உயர்ந்த பண்பாலும்

பகைவரையும்
தன் பக்கம்
திரும்ப வைத்தவர்
இன்று...

தமிழக
வரலாற்றில்
தவிர்க்க முடியாத
ஒரு தலைவராக
மாறியிருக்கிறார்.

அவர்
நல்லவரா
கெட்டவரா

தேர்தலில்
நிற்பாரா
மாட்டாரா

ஜெயிப்பாரா
தோற்பாரா

என்னும்
(பக்க)வாதம்
மனிதர்களுக்கு
இடையே நடந்து
வருகிறது.

அவரை பற்றி 
பலர் தூற்றலாம்
கேலி செய்யலாம்
கேவல படுத்தலாம்

ஆனால்...

இதோ
இன்று வரை
யாரையும் எந்த 
சமூகத்தையும்
எந்த ஒரு 
இயக்கத்தையும்
பற்றி

ஒரு 
வார்த்தை கூட 
கண்ணிய 
குறைவாக அவர் 
பேசியதில்லை.

இதுவே அவரது 
பலமாக பலரால்
கருதப்படுகிறது.

சின்ன சின்ன
பிரச்சனைகளை
கூட
பெரிதாக 
ஊதிவிட்டு
குளிர் காயும் 
இந்த சமூகத்தில்

தன்னை 
பற்றிய
எதிர்மறை
விமர்சனங்களுக்கு

எதிர்வினை 
ஆற்றாமல் 
இருப்பது
 
அவருடைய 
மிக பெரிய 
பண்பை
பிரதிபலிக்கிறது
என்பதே உண்மை.

இது...

மதிப்பிற்குரியது
பாராட்டுக்குரியது
போற்றுதலுக்குரியது.

இனிய
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
ரஜினி சார் !!!

இது
அரசியல்
பதிவு அல்ல.

யாரையும்
தாங்கி பிடிக்கும்
எழுத்துக்களும் அல்ல.

🎉🥁🎊🎉🥁🎊🎉

பகிர்வு பதிவு

புதிய பார்வை..புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

" மனித மனம் 
  எதை கற்பனையில் 
  உருவாக்குகிறதோ, 
  நம்புகிறதோ அதை 
  அதனால் அடைய 
  முடியும் "

- எம்.எஸ்.உதயமூர்த்தி -

ஆம். 

நம் மன
எண்ணங்களின் 
வெளிப்பாடுதான்...
 
நாம் 
செய்யும் 
செயலில் 
அரங்கேற்றம்
செய்யப்படுகிறது.

நம் 
முதல் 
குடிமகனும் 
நம்மை கனவுகாண 
சொன்னது இதனால் 
தான்.

ஆனால்...

கால
வரையறை 
இல்லாத 
கனவுகளும்
திட்டங்களும்
வெறும் 
கற்பனைகளே. 

நாம் 
காணும் 
கனவுகளை 
செயல்படுத்த 
நாம் முயற்சிக்க 
வேண்டும்.

' முடியாது
  என்னும் ஒரு 
  வார்த்தை என்
  அகராதியில்
  இல்லை '

என்று
கூறியவர்
நெப்போலியன்.

' IMPOSSIBLE '
  என்னும்
  வார்த்தையில்...

  I'M POSSIBLE 
  என்னும் பொருள்
  அடங்கியுள்ளது 
  கண்கூடு.
   
யாரோ
ஒருவரால்
முடியும் போது...

நம்மால்
முடியாதா
என்ன ???

முடியாததற்கு 
காரணம், 
முயலாததே. 

நமக்கும்
ஆயிரம்
கனவுகள்
கற்பனைகள்.

அவைகளை
நனவாக்க
முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

  நேற்று
  என்பது
  உடைந்த
  பானை...

  நாளை
  என்பது
  மதில் மேல்
  பூனை...

  இன்று
  என்பதே
  நம் கையில்
  உள்ள
  வீணை.

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
காலை
வணக்கம்.

🎉🎉🎉🎉🎉🎉🎉

Sunday, December 06, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

சிரித்து
வாழ வேண்டும் :::

மூன்று
புத்த துறவிகள்
சிரிப்பது கூட ஒரு
தியானமே என்னும்
கொள்கையை...

தாங்களும்
கடைபிடித்து
மற்றவர்களையும்
கடைபிடித்து
வருமாறு உலகம்
முழுவதும் பயணம்
செய்து வந்தார்கள்.

இதற்கு...

' Laughing
  Therapy '

என
பெயரும்
வைத்தனர்.

ஒருநாள்
மூவரில் ஒருவர்
இறந்து போனார்.

அவர் உடல்
அருகே அமர்ந்த
மற்ற இருவரும்
சிரித்து கொண்டே 
இருந்தனர்.

இதனை கண்ட 
ஊர்மக்கள்
ஆத்திரம் அடைந்து
இருவரையும்
திட்டினர்.

துறவிகள்...

" வாழ்க்கையை
  மகிழ்ச்சியாக
  வைத்து கொள்ள
  ஒரே வழி...

  எப்போதும்
  எதற்கும்
  சிரித்து
  கொண்டே
  இருப்பதுதான்...

  இதை தான் தன்
  வாழ்நாள் முழுவதும்
  இவர் கடைபிடித்தார் "

என்றும்
கூறினர்.

ஊர்மக்கள் சற்று
பொறுமை அடைந்தனர்.

இறுதி சடங்குகளும்
செய்ய தொடங்கினர்.

இறந்த துறவி
கேட்டு கொண்டதின்
பெயரில் அவரின்
உடலை குளிப்பாட்டாமல்
சுடுகாட்டிற்கு எடுத்து 
சென்றனர்.

சற்று நேரத்தில்
நெருப்பு வைக்க
பட்டது.

உடனே...

துறவியின் உடலை
சுற்றி பட்டாசுகள்
வெடித்தன..

ஆம்...

அவர்
இறந்த பிறகும்
மக்கள் மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும்
என்பதற்காக
தன் உடலுடன்
பட்டாசுகளை கட்டிய
நிலையிலேயே
இறந்துள்ளார்.

அந்த
துறவியின் 
பெயர்தான்...

' Laughing
  Buddha '.

இன்று பல  
வீடுகளில்
வாஸ்து 
பிரச்சனை
நீங்குவதற்காக
வைக்கப்பட்டு
இருக்கும்...

தொந்தியுள்ள
சிரிக்கும் புத்தர் 
சிலை...

இவர்
நினைவில் 
வைக்கப்படுவது
தான் என்பது 
நினைவு 
கூறத்தக்கது.

" வாய்விட்டு
  சிரித்தால்
  நோய்விட்டு
  போகும் "

என்னும் 
சொலவடை 
நிஜமே.

வாங்க...

இனிவரும்
காலங்களில்
யாராவது
நகைச்சுவை
துணுக்குகள்
நம்மிடம்
உதிர்க்கும் 
போது...

அது 
நன்றாக 
இருந்தாலும்
இல்லாவிட்டாலும் 
கூட...

அவரையும் ஒரு
பொருட்டாக மதித்து
நாம் சிரிக்க
தொடங்குவோம்.

நம்மை சுற்றி
இருப்பவர்களையும்
சிரிக்க வைத்து
கொண்டே இருக்க 
முயற்சிகள் செய்வோம்.

  சிரிப்பில் 
  உண்டாகும் 
  ராகத்திலே

  பிறக்கும் 
  சங்கீதமே 

  அது 
  வடிக்கும் 
  கவிதை ஆயிரம்

  அவை 
  எல்லாம் 
  நம் எண்ணமே

  நம்
  மகிழ்ச்சி நம் 
  கை வண்ணமே.

அன்புடன்
காலை
வணக்கம்.

பகிர்வு