Showing posts with label மாணவர்கள். Show all posts
Showing posts with label மாணவர்கள். Show all posts

Thursday, July 15, 2021

பாரதியாரின் தமிழ் மொழி வாழ்த்து..என் குரலில்


வகுப்பு எட்டு
படம்..தமிழ்
அலகு.1
கவிதைப் பேழை
பாரதியார் எழுதிய தமிழ் மொழி வாழ்த்து...கேளுங்கள்...தமிழை அள்ளி பருகுங்கள்...


https://anchor.fm/sivaramakrishnan7/episodes/8-e14ftps

Wednesday, July 14, 2021

வாழ்த்துவோம் ...வாங்க

 எங்கள் உயிருக்கு

பிறந்தநாள்  வாழ்த்துகள்

வாழ்வின் அர்த்தம ்

சொன்னவள் நீ...

வாழ்க்கை பாதையில்

பயணிக்க வைத்த

பாதசாரீ நீ...

உன் முகம்

எங்களின் உலகம்

உன் சிரிப்ப

எங்களின் சொர்க்கம்

உலகம் முழுதும் 

தேடி எடுத்த 

எங்கள் முத்து

இறையின் அருளிய

அருட் கொடை நீ...1

எங்கள் வாழ்வும்

வளமும்  உன்னில்

எங்களையும் சமூகத்தையும்

காக்க ஆசை

வாழ்க வளமுடன்

வாழ்க நலமுடன்

வாழ்க ஊர்

போற்றும்  பெண்ணாய்்...

என்றும் பேரன்போடு 

உன்னில்  உறைந்திருக்கும்

உன்

அப்பா , அம்மா..1





Sunday, June 07, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

துறவியிடம்
விறகு வெட்டும்
தொழிலாளி
ஒருவன்,
பணக்காரர் ஆக
வழி கேட்டான்.

துறவி 
சொன்னார்...

காட்டுக்கு 
உள்ளே சென்று 
உன் தொழிலை 
செய். பணக்காரன்
ஆவாய்.

இவன் 
உள்ளே சென்றான்.

அங்கே தேக்கு 
மரங்கள் இருந்தன 
வெட்டி விற்றான்.
பணம் நிறைய 
வந்தது.

மறுபடியும் 
துறவியிடம் சென்று
மேலும் பணம் 
வேண்டும் என்றான்.

துறவி 
கூறினார்...

இன்னமும் 
உள்ளே போ.

இவன் 
துறவி கூறியபடி
இன்னும் உள்ளே 
சென்றான்.

அங்கே கருந்தேக்கு
மரங்கள் இருந்தன.
வெட்டி பணமாக்கி 
பெரிய பணக்காரன்
ஆனான்.

இதிலும் திருப்தி 
அடையாத இவன்...

மேலும் பணம் 
சேர்க்க ஆசைப்பட்டு
துறவியிடம் சென்று
கேட்டான்.

துறவி 
கூறினார்...

இன்னமும் 
உள்ளே போ.

இவன் 
சென்று பார்த்தான்.

அங்கே 
விலையுயர்ந்த 
அகர் மரங்கள் 
இருந்தன.

இவன் 
அதையும் வெட்டி
விற்று மிக பெரிய 
பணக்காரன் 
ஆகிப்போனான்.

இப்போது 
ஒரு கேள்வி
மனதில் எழுந்தது.

இவை எல்லாம் 
தெரிந்தும் துறவி 
ஏன் இந்த 
காரியங்களை 
செய்யவில்லை ?

இதை 
அவரிடமே 
கேட்டான் 
விறகு வெட்டி.

துறவி...

காட்டின் உள்ளே 
செல்ல செல்ல 
பணக்காரன் 
ஆகும் வழி 
உனக்கு 
தெரிந்தது.

பணம் பொருள் 
இவைகளை விட
ஒரு அற்புதமான 
விஷயம் உள்ளது.

அதன் பெயர்
'மன அமைதி'

அது உனக்கு 
தேவைப்படும் 
காலம் வரும்.

அப்போது 
என்னை வந்து 
பார்.

உனக்கு 
எல்லாம் புரியும்
என சொல்லி 
அனுப்பினார்.

நாட்கள் 
நகர்ந்தன...

பணம் சேர்ந்த 
கையோடு 
பல்வேறு 
நிலைகளில்,

வாழ்வு சென்றதில்
அவன் மனதில்
மகிழ்ச்சி குறைய
தொடங்கியது.

இப்போது 
துறவியை தேடி 
சென்று...

'மன அமைதி' 
பெறும் வழியை 
கேட்டான் அந்த 
விறகு வெட்டி.

துறவி கூறினார்
உள்ளே போ.

விறகு வெட்டி 
குழம்பினான்.

உள்ளே உள்ளே 
போனதால் தான்
பணக்காரன்
ஆனேன்.

இன்னமும் நான்
உள்ளே போக 
மாட்டேன் 
என்றான்.

துறவி 
அவனை பார்த்து 
நகைத்து விட்டு...

வா 
இந்த மரத்தடியில் 
உட்கார்.

எல்லாவற்றையும் 
மறந்து மனதளவில்
துறந்து உன் மனதில்
உள்ளே போ. 

மன அமைதி 
உனக்கு கிட்டும்
என்று கூறினார்
துறவி.

அவர் 
கூறியபடியே
எல்லாவற்றையும்
மறந்து மரத்தின் 
கீழ் அமர்ந்தான் 
விறகு வெட்டி.

மனதின் 
உள்ளே 
உள்ளே 
சென்றான்.

பல 
சிந்தனைகள் 
புறப்பட்டன.

அவன் 
ஞானம் பெற 
தொடங்கினான்.

தன்னை
அறிந்தவன்
ஞானி ஆகிறான்.

தன்னையே
வென்றவன்
மகான் ஆகிறான்.

இது 
வார்த்தைகள்
மட்டுமல்ல...

வாழ்வியல்
நெறிகளும்
கூட...

வாங்க..

மன நிம்மதி
மற்றும்
மன அமைதி
பெற...

நம்மை நாம் 
அறிய
தொடங்கலாம்.

நம்மை நாம்
வெல்ல
முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
காலை
வணக்கம்.

💫💫💫💫💫💫💫💫

Tuesday, June 02, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு
பொன்மாலை
பொழுது...

பூங்காவில்
சிறுவன் ஒருவன்
பள்ளியில் இருந்து
வந்து ஒரு பெஞ்சில்
அமர்ந்தான்.

தன் பையில் 
இருந்து
ஒரு பாக்ஸை 
எடுத்து...

அதில் இருந்த 
உணவை உண்ண 
தொடங்கினான்.

யதேச்சையாக
எதிர் பெஞ்ச்சை
பார்த்தான்.

அங்கு ஒரு
வயதான பாட்டி
புன்னகையுடன்
இவனை
பார்த்தபடி
அமர்ந்திருந்தார்.

இதை கண்ணுற்ற
சிறுவன் தானும்
புன்னகைத்த படி
அந்த பாட்டியை
உணவருந்த 
அழைத்தான்.

பாட்டியும் 
சிறுவன் அமர்ந்த 
பெஞ்சில் அமர்ந்து 
அவன் கொடுத்த 
உணவை உண்டார்.

சற்று நேரத்தில்
இருவரும் 
புன்னைகைத்தபடி
அவரவர் வீட்டிற்கு
திரும்பினர்.

சிறுவனின் தாய்
என்ன இன்று 
நீ மிகவும் 
மகிழ்ச்சியாய்
இருக்கிறாய்?
என்று கேட்டார்.

அம்மா 
இன்று மாலை 
பூங்காவில் ஒரு 
கடவுளை 
கண்டேன்...
 
அவர் 
மிக அழகாக 
புன்னகைத்தார்...

அந்த அன்பு முகத்தை 
என்னால் மறக்க 
இயலவில்லை
என்று கூறினான்.

அதே நேரம்
பாட்டி வீட்டில்...

பாட்டியின் மகள்
இன்று நீங்கள் 
மிகவும்
மகிழ்ச்சியாக 
இருக்கிறீர்கள்
என்ன காரணம்?
என்று கேட்டாள்.

பாட்டி...

இன்று மாலை
நான் ஒரு 
கடவுளின்
குழந்தையை 
கண்டேன்.

அவன் அழகாக 
இருந்தான்.

பாசமாக 
என்னிடம் 
பழகினான்.

எனக்கு 
உணவு வழங்கி 
உண்ணவும் 
கூறினான். 

அவனின் 
பிரகாசமான 
புன்னகையை 
மறக்க 
முடியவில்லை 
என்று கூறினார்.

அறிமுகம் 
இல்லாத
மனிதர்கள் கூட...

அவர்களின் 
புன்னகையில்...

அவர்கள் 
வழங்கும்
சிறு ஆறுதல் 
வார்த்தைகளில்...

அவர்கள் 
செய்யும்
சிறு சிறு 
செயல்களில்...

நாம் கடவுளை
காண முடியும்.

பாசமுள்ள 
பார்வையிலே
கடவுள் 
வாழ்கிறான்...

அவன் 
கருணை கொண்ட
நெஞ்சினிலே
கோவில் 
கொள்கிறான்...

என்னும் வரிகள்
உண்மைதானே.

வாங்க...

அன்பு 
உலகில்
சஞ்சரிப்போம்.

அற்புத 
சமூகத்தை
படைக்கவும் 
செய்வோம்.



💫💫💫💫💫💫💫💫

Monday, June 01, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பூமி🍁🍁

கேரள
ராஜ்பவனில்
ஒரு அரசு
நிகழ்ச்சி.

தலைமை
விருந்தினர்
இந்திய
குடியரசு
தலைவர்
கலாம்
அவர்கள்.

அப்போதைய
நடைமுறை...

குடியரசு
தலைவர்
அவருக்கு
பிடித்த இரு
நபர்களை...

தம்முடைய அரசு
விருந்தினர்களாக
கலந்து கொள்ள
செய்யலாம்.

கலாமும் 
இருவரை
கூட்டி சென்றார்.

ஒருவர்
சாலையில்
செருப்பு
தைக்கும்
தொழிலாளி...

மற்றொருவர்
சிறிய அளவில்
ஓட்டல் நடத்தி
கொண்டிருந்தவர்.

விழா 
நடத்தியவர்கள்
இதைக்கண்டு
நெகிழ்ந்தனர்.

அதில்
பங்குபெற்ற
அந்த ஏழை
விருந்தினர்கள்
மகிழ்ந்தனர்.

தன்னுடன் 
பழகிய
நபர்களை...

அவர்கள்
எந்த நிலையில்
இருந்தாலும்...

மதிப்பு
கொடுத்து
மகிழ வைத்து
பார்ப்பவர்
*மாமனிதர்*
என்பதை...

நிரூபித்து
காட்டியவர்
*கலாம்*

வாங்க...

அவர் 
வழியில்
நாமும்...

ஏழையின்
சிரிப்பில்
இறைவனை
காண...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.



🍂🍃🍂🍃🍂🍃🍂