Saturday, July 11, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

💕💕💕💕💕💕💕💕

கும்மிடி
பூண்டியில்
தனியார் 
பள்ளியில்...

ஒன்றாம் 
வகுப்பு
மாணவி
*ஐஸ்வர்யா*

தன்னுடைய
பிறந்த நாள்
கொண்டாட...

தான் சேர்த்து
வைத்திருந்த
300 ரூபாய்
பணத்தை...

இந்த
கொரோனா
காலத்தில்...

தூய்மை
பணியாளர்களுக்கு
தந்தை மூலமாக
உணவு வழங்க
உதவியாய்
இருந்திருக்கிறார்.

கோவை மாவட்டம்
கவுண்டன் புதூர் 
கிராமத்தை
சேர்ந்த 
22 வயதான
*கவிப்ரியா*

தாய் 
இல்லை.
தந்தை கூலி
தொழிலாளி.

சோப்பு 
நிறுவனத்தில்
வேலை செய்து
வரும் இவர்...

தம்முடைய
கொலுசை 
1000 
ரூபாய்க்கு 
விற்று...

கொரோனா
பாதித்த 
மக்களுக்கு...

கபசுர குடிநீர் 
வழங்கி 
இருக்கிறார்.

திருச்சி மாவட்டம்
வெங்கடாஜலபுரம்
பஞ்சாயத்து 
தலைவர்
*பழனிசாமி*

இவர்
தம் ஊரில்...

ஒரு ரூபாய்க்கு
ஒரு இட்லி
என்னும்
திட்டத்தை
தொடங்கி...

இந்த
கொரோனா
காலத்தில்...

ஏழை 
மக்களுக்கு
பசியாற்றி 
வருகிறார்.

சேலம் மாவட்டம்
இனாம் வேடு 
காத்தாம் பட்டி 
ஊராட்சி 
ஒன்றிய
பள்ளியில் 
பணிபுரியும் 
ஆசிரியை 
*ரேவதி*

தன் வகுப்பில்
பயிலும் 34 
மாணவர்களின்
பெற்றோர்...

கொரோனா 
காலத்தில் 
வேலை
இழந்ததினால்...

தன் 
சொந்த செலவில் 
34 மாணவர்
குடும்பத்திற்கும்...

தலா 
1000 ரூபாய்
மதிப்பிற்கு மளிகை
பொருட்கள் வாங்கி
கொடுத்து உதவி
செய்திருக்கிறார்.

*இசக்கிராஜ்*
இவர் ஒரு 
காவலர்.

இவரிடம் ஒரு 
சிறுவன் வந்து
கொரோனா 
வந்தா மூணு 
வேலையும் சோறு 
போடுவாங்களா?
என கேட்டுள்ளான்.

இவர்
போடுவார்கள் 
என்று கூறியதை 
தொடர்ந்து...

தானும் தன் 
பெற்றோர்களும்
சாப்பிட்டு மூணு
நாளாச்சு...

தங்கள் 
மூவரையும்
ஆஸ்பத்திரியில்
சேர்க்குமாறு
கெஞ்சி கேட்டு
இருக்கிறான்.

இதை கேட்டு
வேதனை பட்ட
காவலர்...

தன் சொந்த
பணத்தில்
2000 கிலோ 
அரிசி
500 கிலோ 
காய்கறி
மற்றும் 
மளிகை
பொருட்களை
வாங்கி...

அந்த பகுதி
ஏழை மக்களுக்கு
வழங்கி... 

பசியை 
போக்கி
இருக்கிறார்.

ஈரோடு 
மாவட்டத்தை
சேர்ந்த...

ஊராட்சி 
ஒன்றிய 
பள்ளியில்
பணிபுரியும்...

*லீலாவதி*
மற்றும்
*உமா தேவி* 
என்னும் இரு 
ஆசிரியைகள்...

தம் பள்ளியில்
படிக்கும் 32 
மாணவர்களின்
குடும்பத்திற்கு...

தலா 
1000 ரூபாய் 
வழங்கி...

அவர்களின்
வாட்டத்தை
சற்று
போக்கி
இருக்கிறார்கள்.

சென்னையில்
*பாலாஜி*
என்னும்
புரோகிதர்...

கொரோனா 
காலத்தில்
முக கவசம் 
அணியாமல் 
சென்ற 
மக்களை
பார்த்து...

வருந்தி
கண்கலங்கி
இருக்கிறார்.

மறுநாளில் 
இருந்து
தெருவில் 
நின்று...

வாகனங்களில்
போவோருக்கும்
நடந்து 
செல்வோருக்கும்...

இலவசமாக 
முக கவசம் 
விநியோகம்
செய்து வருகிறார்.

நாமக்கல்
மாவட்டத்தை 
சேர்ந்த
விவசாயி 
*மதிவர்மன்*

தன் நிலத்தில் 
விளைந்த
ஒரு டன் சிறு 
வெங்காயத்தை...

நாமக்கல் நகர
மக்களுக்கு 
இலவசமாக
வழங்கி உள்ளார்.

மனிதர்களின்
மனங்களில்
ஈரம்...

இன்னமும்
இருந்து
கொண்டுதான்
இருக்கிறது.

இக்கட்டான
நேரங்களில்
அது
வெளிப்படவும்
செய்கிறது.

 _*கொடுப்பவன்*_
 _*பெறுகிறான்*_
  
 _*கெடுப்பவன்*_
 _*அழிகிறான்*_

இது 
*பட்டினத்தாரின்*
பொன்
வாசகங்கள்.

 _*இட்டுப்பார்*_
 _*உண்டவர்கள்*_
 _*இன்புற்று*_
 _*இருக்கையிலே*_

 _*தொட்டுப்பார்*_
 _*உன்இதயத்தை*_
 _*தோன்றும்*_ 
 _*அதில் இன்பம்*_

இது
*பாரதி தாசனின்*
வார்த்தைகள்.

வாங்க...

பட்டினத்தாரின்
வாசகங்கள்
படியும்...

பாரதிதாசனின்
வார்த்தைகளின்
படியும்...

பாதிக்க பட்ட
மக்களுக்கு...

உணவோ
உடையோ
பொருளோ
பணமோ...

எதையாவது
கொடுத்து
உதவலாம்.

கொடுப்பதில்
உள்ள 
மகிழ்ச்சியை
உணர
தொடங்கலாம்.

_*மனம் இருந்தால்*_
_*மார்க்கம் உண்டு*_

அன்புடன்
காலை
வணக்கம்.


நன்றி
முனை.சுந்தரமூர்த்தி

1 comment:

Kpmsowkthali said...

நீங்கள் சேகரித்தவைகள் அனைத்தும் எங்கள் பார்வைக்கு "தானமாக்கியதால்"நாளை எங்களில் பலர் உங்களின் இப்பட்டியலைப்போல் வேரெங்கினும் எங்களின் பெயரும் இடபெற காரணமாகிவிட்டீர்கள்.!
நன்றிகள் ஆயிரம்.!