Friday, December 25, 2015

எது நிம்மதி? எங்கே சந்தோஷம்?

எது நிம்மதி? எங்கே சந்தோஷம்?

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒருவர், 'சுவாமி! என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை!' என்றார்.புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொல்லத் தொடங்கினார்.

"ஒரு ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.இந்த சமூகம் தான் அந்த ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு.உலகம் உனக்கு சொர்க்கமாகும்!

Thursday, December 17, 2015

நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? ஆசிரியப் பணியாளரா..?


நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா..? ஆசிரியப் பணியாளரா..?

குழந்தைகள் உங்கள் மீது எத்தகைய அணுகுமுறையோடு இருக்கிறார்கள் என்பதே கற்றலுக்கான முக்கிய பாதையை வகுக்கிறது. அவர்கள் உங்கள் மீது கொண்டிருப்பது நம்பிக்கையா..? அச்ச உணர்வா..? என்பதை வைத்து கற்றல் வேறுபடும். - ஆப்ரகாம் மாஸ்லோ, உளவியல் அறிஞர்
      நீங்கள் குருவா? ஆசிரியரா...? என வினவிக் கொண்டபோது
நமக்கு கிடைத்த விடை என்னவாக இருந்தது...? இன்னும் கொஞ்சம் தூர் வாரினால் அந்த அறிவுக்கேணி உங்கள் உண்மை முகத்தை தோண்டி எடுத்துக் கொடுத்துவிடும். கடந்த நம் அத்தியாயத்தை வாசித்து என்னிடம் கருத்து பரிமாறிய புதுவை ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான ஒன்றை குறிப்பிட்டார்.
அவர் கூற்றுப்படி ஆசிரியர்கள் இரண்டு வகை. ஒருவர் ஆசிரியராகவே வாழ்பவர். மற்றவர் ஆசிரியர் வேலைக்குப் போய் வருபவர். இக்கூற்றை நான் பரிசீலித்தபோது வியப்பான முடிவுகளை அடைய முடிந்தது. ஆசிரியராகவே வாழ்பவர்தான் முன் உதாரண ஆசிரியர். இவர் மாணவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்பவர். காலத்திற்கேற்ற மாறுதல்களை மனமுவந்து ஏற்பவர். இலட்சியத்தால் எழுச்சி காண்பவர்.

இவரது இலக்கு கல்வி மற்றும் கதறல் செயல்பாடு மட்டுமே அல்ல. மாணவர்களின் வாழ்வை மேம்படுத்துதல், அவர்களது சிந்தனைத்திறனை மேம்படுத்துதல். பாடப்புத்தகம் என்பது ஒருவகை வழிகாட்டி மட்டுமே. இவரைப் பொருத்தவரை கல்வி வகுப்பறையில் மட்டுமே நடப்பது அல்ல. குழந்தைகள் காலை கண் விழித்தெழுதல் முதல் இரவு உறங்கப்போகும் அந்த நிமிடம் வரை, பார்ப்பது, கேட்பது, அனுபவிப்பது எல்லாமே கல்வியில் அடக்கம். எந்த வயது மாணாக்கரை இவரிடம் ஒப்படைத்தாலும் முகம் கோணாது செயல்படுவார். தனது வாழ்வை, தனது ஆசிரியப் பணியிலிருந்து பிரித்துணர முடியாதவர் இவர். மாணவர் நலனை முன்வைத்து இயங்குபவர்.

ஆசிரியர் வேலைக்கு, கடனே என போய்வரும் ஒருவரை பரிசீலிப்போம். முதலில் அத்தகைய ஒருவருக்கு அப்பணி நிரந்தரமானதல்ல. அடுத்த படி நிலைகளை வாழ்வில் சாதித்து முன்னேற ஒரு தற்காலிக ஏற்பாடு இப்பணி. பெரும்பாலும் ஆசிரிய பணியாளரின் இலட்சியம், மாணவர் சார்ந்ததாக இருப்பது கிடையாது. ஏதோ ஒரு உபதொழிலை (Side Business) இவர் செய்கிறார். தனது வருமானத்தை குறிவைத்து திட்டமிட்டு  காய் நகர்த்துகிறார். இவருக்கு தன் வேலையில் கால அளவு முக்கியம். ஒரு மணி நேரம்கூட கூடுதலாக மாணவர்களுக்கு செலவு செய்ய மாட்டார். மாலை வகுப்பு நடத்தவோ, கல்வி உபசெயல்பாட்டுப் பணிகள் செய்யவோ இவருக்கு விருப்பமிருப்பதில்லை. ஆனால் ஊதியம் என வரும்போது எந்த சமரசமும் இவரிடம் செல்லாது. 

நாள்முழுவதும் இவரது கைபேசியில் அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். தனது பணி, பள்ளியின் முதல் மணியின்போது தொடங்கி மாலை கடைசி மணி அடித்தால் முடிந்தது என கருதுபவர்; அதிலும்  ஓய்வான பிரீயட்களில் வாய்ப்பு கிடைத்தால் எஸ்கேப் ஆகிவிடுவது இவரது வேலை இயல்புகளில் ஒன்று. தேர்வு விழுக்காடு என்பது அதிகாரிகளால் தன்மீது திணிக்கப்பட்ட சுமை என்று கருதி எரிந்து போகிறவர். அதற்காக மாணவர்களை சபித்துத் தள்ளுபவர். இவரைப் பொருத்தவரை கல்வி பள்ளியில் மட்டுமே நடக்கிறது. பாடப்புத்தகமே வேதம். இத்தகையவரிial, Helvetica, sans-serif; fontுமா? டியூஷன் சென்டர் நடத்துவது! தனது சொந்த நலனை முன்வைத்து இயங்குபவர் இவர்.

* ஒரு மாணவர் பள்ளிக்கு இரண்டு மூன்று நாட்கள் வரமுடியவில்லை என்றால் ஆசிரியராக வாழ்பவர், மாணவர் வீட்டிற்கேகூட சென்று, என்ன ஆயிற்று என அறிந்துகொள்ள தயங்கமாட்டார்.

* ஆனால் ஆசிரியப் பணியாளர் அப்படியல்ல. பள்ளிக்கு வந்தால் நடத்துவார். வராதவர்களுக்கு அவர் பொறுப்பல்ல. பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்தால், தான் பணி செய்ய தயார் என வீரவசனம் பேசுவார்.

* ஆசிரியராக வாழ்பவர் தனது வகுப்பில் உள்ள அனைவரைப் பற்றியும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பார். மாணவர்களின் பெற்றோர்களோடும்  இணக்கமான உறவை பேணுவார். அக்கறை என்பதே அவரது அணுகுமுறை.

* ஆசிரியப் பணியாளர் தனது உபதொழில் (Side-Business) சார்ந்து, ஓரிருவரை (பெற்றோர்) பயன்படுத்த அறிந்து பின்தொடர்வார். ‘அதிகாரம்’ என்பதே இவரது அணுகுமுறை. ‘வருமானம்’ என்பதே அவரது இலக்கு.

* ஆசிரியராக வாழ்பவர், பள்ளி நேரம் கடந்தும் மாணவர்கள் என்ன மாதிரி தன் பொழுதை போக்குகிறார்கள் என அறிந்து வைத்திருப்பார். ஒவ்வொரு மாணவரிடமும் அவரது அன்றாட அணுகுமுறை மாறுபடும்.

* ஆசிரியப் பணியாளர் பாடப்பொருள் சார்ந்தவர். அதை முடிப்பதும் அது சார்ந்த ‘வேலை-முடித்தல்’ பற்றியே சிந்திப்பவர்.

* ஆசிரியராக வாழ்பவர், மாணவர்களின் நிலை சார்ந்து  ஒரு பாடத்தை பலமுறை பலவிதமாக எத்தனை முறை கேட்டாலும் எத்தனைபேர் கேட்டாலும் திரும்ப விவரிக்க தயங்க மாட்டார். அதை தனது பேறாக, பெருமையாக கருதுவார்.

* ஆசிரியப் பணியாளர் பாடத்தை ஒருமுறை நடத்தவே சம்பளம் என பகிரங்கமாக சொல்வார். மறுமுறை அதை நடத்த வேண்டி வந்தால் அதை மிகப் பெரிய பாரமாக கருதி குமைந்துகொண்டே இருப்பார். ‘வேண்டுமானால் வீட்டுக்கு வா... டியூஷனில் கவனி... அதற்கும் பீஸ் கொடு...’ என்பதே அவரது அணுகுமுறை.

* ஆசிரியராக வாழ்பவர் அடுத்த தலைமுறை தன்னை கண்காணிக்கிறது என்ற புரிதலுடனே எதையும் செய்பவர். தனது அன்றாட பழக்க வழக்கங்களைக்கூட குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்கிற தெளிவோடு தன் வாழ்வை சுய கட்டுப்பாடு எனும் தூய்மை நெறியில் செலுத்துபவர்.

* ஆசிரியப் பணியாளர், பணி நேரத்தில்கூட சுய கட்டுப்பாட்டை இழப்பதை நாம் பார்க்கலாம். மாலையில், இரவில் அவர் எங்கும் செல்வார், எதையும் செய்வார். பள்ளியில் வீட்டு வேலை வாங்குவது, கைபேசியில் படம் பார்ப்பது, போதை பாக்கு, புகைத்தல்.. இவற்றோடு மதுக்கடை மகராசனாகவும் இருப்பதை பார்க்கலாம். அதுபற்றி அவருக்கு எந்த கூச்சமும் கிடையாது.

* ஆசிரியராக வாழ்பவர் சபலங்களுக்கு இடம் தரமாட்டார். மாணவர் மற்றும் மாணவியரை அவர்கள் +2 படிக்கும் வயதினராக இருந்தாலும் குழந்தைகளாக அணுகத் தெரிந்தவர். இவரது வகுப்பறையை, ‘உலகிலேயே பாதுகாப்பான இடம்’ என்று மாணவர்கள் கருதுவார்கள். 

* ஆசிரியப் பணியாளர் தனது அதிகாரத்தின் மீதே கவனமாக இருப்பதால் விதி மீறல்களை கட்டுப்படுத்துவதில்லை. விதிகளை சரிவர அறிவதும் இல்லை. பால்ய வன்முறையிலிருந்து பாலியல் வன்முறை வரை சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப எதையும் செய்வார்கள். வகுப்பையே தனது மிரட்டலில் வைத்திருக்க இவர்கள் வெட்கப்படுவதே இல்லை. பொறுப்பற்ற இவர்கள் சபலங்களுக்கு பலியாகி இழைக்கும் வக்கிர குற்றங்களால் முழு ஆசிரியர் சமுதாயத்திற்கும் தலைகுனிவே ஏற்படுகிறது.

* ஆசிரியராகவே வாழ்பவர், மாணவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என கருதுவார். மாணவர்கள் அளவுக்கு இறங்கிச்சென்று அன்பு, தோழமை, நட்பு என உறவை விரிவடையச் செய்வார். வாசிப்பை, கற்றலின் இனிமையை விதைப்பவர்.

* ஆசிரியப் பணியாளர், மாணவர்கள் தன்னைக் கண்டாலே நடுங்க வேண்டும் என கருதுவார். கற்றலைச் சித்திரவதையாக்கி விடுவார். 

* ஆசிரியராக வாழ்பவர், குழந்தைகள் நலப் போராளியாக இருப்பதை நாம் காணலாம். குழந்தைகளுக்கு  எதிராக நிகழ்த்தப்படும் எத்தகைய அநீதியையும், சமூக ரீதியிலும் சட்ட ரீதியிலும் தடுத்திட முழு மூச்சாக இறங்குபவர். குழந்தை திருமணங்கள், நரபலி, குழந்தையை வேலைக்கு அமர்த்துதல்் என இவரது கண்களில் இருந்து எதுவும் தப்பாது. தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத்தையும் இதுமாதிரி வேலைகளில் ஈடுபடச் செய்வார். 

* ஆசிரியப் பணியாளர், ‘நமக்கேன் வம்பு’ என எதையும் கண்டுகொள்ள மாட்டார். வாய்ப்புக் கிடைத்தால் அச்செயல்களில் தானும் இறங்குவார். ‘இவர் செய்யலையா... அவர் செய்யலையா’ என வறட்டு வாதம் பேசுதல்... இதன் குற்றச்சாட்டிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு தான் சார்ந்திருக்கும் ஆசிரியர் சங்கத் தலைவருக்கு நெருக்கடியும் தர தயங்க மாட்டார்.

* ஆசிரியராகவே வாழ்பவர்... குழந்தைகளுக்கு தான் எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதன் மீது கவனம் கொள்வார். 

* ஆசிரியப் பணியாளர், தனக்கு எப்படி எல்லாம் இருந்தால் பிடிக்கும் என்று குழந்தைகளை மிரட்டி வைப்பார். இதில் வன்முறை இல்லா வகுப்பறை யாருடையது...?

நீங்கள் யார்? ஆசிரியராகவே வாழ்பவரா...? ஆசிரியப் பணியாளரா

Thursday, September 24, 2015

சமூக வலைதளங்களில் பிரபலமானதால் வருமானத்தை இழந்துவிட்டேன்

: டைப்ரைட்டர் உடைக்கப்பட்ட முதியவர் வருத்தம்

COMMENT (3)   ·   PRINT   ·   T+  
புதிய டைப்ரைட்டருடன் முதியவர் கிருஷ்ணகுமார்
புதிய டைப்ரைட்டருடன் முதியவர் கிருஷ்ணகுமார்
உத்தரப்பிரதேசத்தில் முதியவர் ஒருவரின் டைப்ரைட்டரை காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் உடைத்த சம்பவம் சமூக இணையதளங்களில் வேகமாக பரவி, பெரும் பிரபலமடைந்தது. அந்த காவல் துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அந்த முதியவருக்கு புதிய டைப்ரைட்டர் வழங்கிய மாவட்ட நிர்வாகம், ரூ.1 லட்சம் இழப்பீடு அளிப்பதாகவும் உறுதி அளித்தது.
இந்நிலையில், இந்த சம்பவத்தால் பிரபலமடைந்ததால் தனது வருமானத்தை இழந்து விட்டதாக அந்த முதியவர் கிருஷ்ண குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
“அஞ்சலகம் முன்பு தட்டச்சு செய்து கொடுத்ததால் கொஞ்சம் வருவாய் கிடைத்து வந்தது. என் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவியதால் நான் தேவையற்ற வகையில் பிரபலமாகியுள்ளேன்.
என்னைச் சுற்றி ஏராளமானவர்கள் சேர்ந்து விடுவதால் என்னால் வேலை செய்ய முடியவில்லை. கடந்த இரு நாட்களாக ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை. நான் சம்பாதிக்கவில்லை என்றால், என் குடும்பத்துக்கு எப்படி சோறு போடுவது. நான் வேலை செய்யவே வந்திருக்கிறேன்; ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க அல்ல.
உதவி செய்வதாகக் கூறி பலர் என்னிடம் வங்கிக் கணக்கு கேட்டனர். ஆனால், இதுவரை ஒரு ரூபாய்கூட கிடைக்கவில்லை. அடையாளம் தெரியாதவர்கள் தொலைபேசி மூலம் மிரட்டுகின்றனர்” என கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.


நன்றி தமிழ் இந்து நாளிதழ்

சமூக அக்கறையுடன்  அன்புடன்  சிவா....

மனதைப் பூரணமாக்கி முழுவதும் அடக்குவது கல்வி

 - விவேகானந்தர்

First Published : 08 August 2015 01:08 PM IST
கல்வி என்பது என்ன, அது புத்தகப் படிப்பா, இல்லை. பலவகைப்பட்ட அறிவைத் தேடிக் கொள்வதா, அதுவும் இல்லை. சங்கல்பத்தின் போக்கையும், வெளிப்பாட்டையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பயனளிக்குமாறு செய்கின்ற பயிற்சியே கல்வி.
கல்வி என்பது ஏராளமான உண்மைகளை மனதில் நிறைப்பதல்ல. மனதைப் பூரணமாக்கி முழுவதுமாக அதை அடக்குவதே கல்வியின் நோக்கம்.
என்னைப் பொருத்தவரையில் கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பதல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால், ஒருபோதும் தகவல்களைச் சேகரிக்க மாட்டேன். முதலில் மன ஒருமைப்பாட்டையும் பற்றின்மையையும் வளர்த்துக்கொண்டு, பின் அந்தப் பரிபூரணமான கருவியால் நான் விரும்பும்போது தகவல்களைச் சேகரித்துக் கொள்வேன். குழந்தையை வளர்க்கும்போது இந்த இரண்டு ஆற்றல்களையும் அவர்களிடம் வளர்க்க வேண்டும்.
வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பதல்ல கல்வி. வாழ்க்கையை வளப்படுத்துகின்ற, மனிதனை உருவாக்குகின்ற, குணத்தை மேம்படுத்துகின்ற, கருத்துகளை ஜீரணம் செய்யத்தக்க கல்வியே நாம் வேண்டுவது.
நீங்கள் ஐந்தே ஐந்து கருத்துகளை நன்கு கிரகித்து, அவை உங்கள் வாழ்க்கையாக, நடத்தையாகப் பரிணமித்து நிற்கச் செய்ய முடியுமானால், ஒரு புத்தகச் சாலை முழுவதையும் மனப்பாடம் செய்தவனைவிட நீங்கள் அதிகமான கல்வி பெற்றவர். செய்திகளைச் சேகரிப்பதுதான் கல்வி என்றால், நூல் நிலையங்கள் அல்லவா மாபெரும் மகான்கள்; கலைக் களஞ்சியங்கள் அல்லவா ரிஷிகள்!
சிறந்த குணத்தை உருவாக்குகின்ற, மன வலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற, ஒருவனைச் சொந்தக் கால்களில் நிற்கச் செய்கிற கல்வியே தேவை.
சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்துக்குத் தயார் செய்யாத கல்வி, ஒழுக்க வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத கல்வி, சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்காத கல்வி, அதைக் கல்வி என்று சொல்ல முடியுமா? ஒருவனைத் தன் சொந்தக் கால்களில் நிற்கும்படி செய்வதே உண்மையான கல்வி.
தொழிற்கல்வி வேண்டும். தொழில்வளம் பெருகுவதற்கான எல்லாவற்றையும் செய்ய வேண்டும். மக்கள் வேலை தேடி அலைவதை விட்டுவிட்டு கைத்தொழிலில் ஈடுபட்டு நாலு காசு சம்பாதிக்கத் தகுதி உடையவர்களாக வேண்டும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயற்சிக்காதீர்கள், முடிந்தால் அதைவிடச் சிறந்த ஒன்றை அவனுக்குக் கொடுங்கள். முடிந்தால் ஒருவன் எங்கு நிற்கிறானோ, அங்கிருந்து அவனை முன்னுக்குத் தள்ளுங்கள். அதைச் செய்யுங்கள். மாறாக, அவனிடம் இருப்பதையும் கெடுக்காதீர்கள்.
ஒரு நொடியில் தம்மை ஆயிரம் பேராக மாற்றிக்கொள்ள யாரால் முடியுமோ, அவர்தான் உண்மையான ஆசிரியர். யாரால் மாணவனின் நிலைக்கு உடனே இறங்கி வர முடியுமோ, தன் மனதை மாணவனின் மனதுக்கு மாற்ற முடியுமோ, யாரால் மாணவனின் கண்களால் பார்க்கவும் அவனது காதுகளால் கேட்கவும் அவனது மனதின் மூலம் புரிந்து கொள்ளவும் முடியுமோ அவர்தான் உண்மையான ஆசிரியர். இத்தகைய ஆசிரியரால்தான் கற்றுத் தர முடியும், மற்ற யாராலும் முடியாது.
உங்கள் பல்கலைக்கழகங்களைப் பாருங்கள். ஐம்பது ஆண்டுகளாக இருந்து அவை என்ன செய்துவிட்டன? சுய ஆக்கம் (ர்ழ்ண்ஞ்ண்ய்ஹப்ண்ற்ஹ்) உடைய ஒருவனைக்கூட அவை படைக்கவில்லை. அவை வெறும் தேர்வு நடத்தும் குழு, அவ்வளவுதான்.
உண்மையான கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல; அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது

நன்றி தின மணி
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலம் கருதி ஆ.சிவ....

ஆசிரியப் பணி சுமையா? சுவையா?


First Published : 18 September 2015 01:03 AM IST
கல்வியே சிறந்த செல்வம் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அது கொடுக்கக் கொடுக்கக் குறைவுபடாதது; நெருப்பாலும், நீராலும் அழியாதது; திருடரால் களவாடப்பட முடியாதது. "கல்வியா? செல்வமா? வீரமா?' என்ற கேள்விகளில் முதலில் நிற்பது கல்வியே.
 இந்தக் கல்வி நெடுங்காலமாக மக்களுக்கு மறுக்கப்பட்டே வந்தது. ஆட்சியாளர்களும், ஆதிக்க வெறியர்களும் அனைவருக்கும் கல்வியளிக்க விரும்பவில்லை. கல்வியினால் மக்கள் விழிப்புணர்வு பெற்றால் அது தங்களுக்கே ஆபத்தாகும் என்ற அச்சமே அதற்குக் காரணம்.
 
இந்த நிலைமையிலிருந்து விடுபட்டுக் கல்வியைப் பெற அனைவருக்கும் உரிமை உண்டு என்ற நிலைமை வர இவ்வளவு காலமாகிவிட்டது. அறியாமை இருளை ஓட்டுகிற கல்வி வெளிச்சத்தை அனைவரும் பெற வேண்டியதன் அவசியத்தைக் காலம் உணர்த்தியது. எண்ணும், எழுத்தும் இரண்டு கண்களாகும் என்று ஆத்திசூடி, திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்கள் அறிவுறுத்தின. 
 இந்தக் கல்வியைப் போதிக்க ஆசிரியர் பணி அவசியமானது. அதனால்தான், "மாதா, பிதா, குரு, தெய்வம்' என்று ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டு வருகிறது. அக்காலத்து "குருகுல வாசம்' அப்படி வந்ததுதான். ஆங்கிலேயரின் வருகையால் கல்விச் சாலைகளின் புதிய அமைப்பு முறை உருவானது.
 நன்னூல் என்னும் இலக்கண நூல் ஆசிரியர்கள், மாணவர்களின் இலக்கணத்தை வகுத்துரைக்கிறது. உயர்குடிப் பிறப்பும், அருளும், இறைவழிபாடும், மேன்மையும், பல நூல்களைக் கற்ற தேர்ச்சியும், மாணவர் விரும்பும்படி கற்பிக்கும் சொல்வன்மையும், பூமி, மலை, தராசு, மலர் போன்ற பிற உயர்ந்த குணங்களும் பொருந்தியிருக்கப் பெற்றவரே நூல்களைக் கற்பிக்கும் ஆசிரியராவார் என்று கூறுகிறது.
 கல்வியே மனிதனை மனிதனாக மாற்றுகிறது என்பதால் அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள் ஆகிறார்கள். "எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்' என்பதும் இதனால்தான். அவர்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது. அப்படி இல்லாதபோது, அதுவே ஒரு சமுதாயத்தின் சீரழிவுக்கு ஆரம்பமாகிறது.
 சமுதாய முன்னேற்றத்துக்கும், கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்கள் நலனுக்கும் ஆசிரியர்களே கடமைப்பட்டிருக்கிறார்கள். மற்ற தொழில்கள் ஊதியத்துக்காகவே செய்யப்படுகின்றன. 
 ஆசிரியப் பணி தொழில் மட்டுமல்ல, தொண்டாகவும் பார்க்கப்படுகிறது. அதனால்தான், சிறு சிறு தவறுகள் நிகழ்ந்தாலும் பெரிதாகப் பேசப்படுகிறது. வெள்ளைத் துணியில் சிறு கறை ஏற்பட்டாலும் பெரிதாகத் தெரியும் அல்லவா!
 சின்னஞ்சிறு தவறுகள்கூட ஏற்படாமல் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறது. ஒருசிலர் செய்கிற தவறுகளால் ஆசிரியர் சமுதாயமே வெட்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஆசிரியர்களுக்கு மரியாதை குறையும்போது கல்வியின் மரியாதையும் குறைந்து போகிறது.
 "கல்விச் சாலை ஒன்று திறப்பவன், சிறைச் சாலை ஒன்றை மூடுகிறான்' என்றார் அறிஞர் விக்டர் ஹியூகோ. குற்றங்களையும், குறைகளையும் போக்குகிற கல்வியைப் போதிப்பவர் குற்றவாளிகளாக இருக்கலாமா? அழுக்குகளைப் போக்கும் தண்ணீரே அழுக்காக இருந்தால் அதில் நீராடி என்ன பயன்?
 "ஆசிரியப் பணியே அறப் பணி, அதற்கே உன்னை அர்ப்பணி' என்று வாழ்ந்தவர்கள் அக்காலத்து ஆசிரியர்கள் என்றும், இக்காலத்தில் ஆசிரியர்கள் ஊதியத்துக்காக மட்டும் போராடுகிறார்களேதவிர, கல்வியைப் பற்றியோ, மாணவர்கள் பற்றியோ கவலைப்படுவது இல்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி ஆசிரியர்களும், ஆசிரியர் இயக்கங்களும் பரிசீலனை செய்வது காலத்தின் கட்டாயமாகும்.
 காலம் மாறுகிறபோது எல்லாமே மாறுகிறது; கல்வியும் மாற வேண்டாமா? கல்வியை மாற்றியமைக்க வேண்டிய கடமை கல்வியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. அரசும், கல்வித் துறையும் அவர்களுக்கு ஆவன செய்து ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும். சுதந்திரத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட கல்விக் குழுக்களின் அறிக்கைகள் பரிசீலிக்கப்படவே இல்லை.
 அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆம் பிரிவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், இந்தியச் சட்டங்கள் அனைவருக்கும் சமப் பாதுகாப்பு அளிக்கும் என்றும் குறிப்பிடுகிறது. 
 அத்துடன் அதே அரசமைப்புச் சட்டம், 1960-ஆம் ஆண்டுக்குள் 14 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வியை வழங்கும் என்றும் உறுதி செய்தது. ஆனால், 1960-க்குப் பின்னரும் அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பது எட்ட முடியாத இலக்காகவே இருக்கிறது.
 இந்நிலையில்தான், "குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009' - 2010 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் 25 விழுக்காடு இடங்களை நலிந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்; பள்ளியில் சேர்க்கைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது; பெற்றோரையோ, குழந்தைகளையோ நுழைவுத் தேர்வுக்கோ, நேர்காணலுக்கோ உள்படுத்தக் கூடாது.
 எந்தக் குழந்தையையும் உடல்ரீதியான தண்டனைக்கோ, மன உளைச்சலுக்கோ ஆளாக்கக் கூடாது; அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை ஏற்படுத்தி, அதில் நான்கில் மூன்று பங்கு இடங்களில் பெற்றோர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை அந்தச் சட்டத்தில் உள்ளன.
 இவை இன்னும் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, இந்தச் சட்டத்தையாவது ஒழுங்காக நடைமுறைப்படுத்தி அதன் பலன்கள் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மறுபடியும், மறுபடியும் எழுப்பப்படுகிறது.
 கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும் தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இங்குள்ளவர்கள் போதாதென்று வட மாநிலத்தவர்களும் இங்கே வந்து குவிகிறார்கள். இப்போது நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படும் "குழந்தைத் தொழில் (தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986', குழந்தைத் தொழிலை ஒழிக்கத் தவறிவிட்டது.
 குழந்தை உழைப்பு என்பது ஒரு மிகப் பெரிய குழந்தை உரிமை மீறலாகும். இதனால், குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்படுவதோடு அவர்களின் குழந்தைப் பருவத்தையும், நல வாழ்வையும் அழிக்கிறது. அவர்கள் பாகுபடுத்தப்படவும், ஒதுக்கிவைக்கப்படவும் வழிவகுக்கிறது.
 வறுமையின் காரணமாக மட்டுமே குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவது இல்லை. மாறாக, அவர்களது உழைப்பைச் சுரண்டும் நோக்கத்தோடு அதிக லாபம் அடையவே அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
 எனவே, இச்சட்டம் திரும்பப் பெறப்பட்டு, 18 வயதுக்குள்பட்ட அனைவரும் ஆபத்தான, ஆபத்து இல்லாத என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து விதமான தொழில்களிலும் பணிபுரிவதைத் தடை செய்யும் வகையில் குழந்தைத் தொழில் ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
 "ஒரு அரசின் கடமை அனைவருக்கும் கல்வி அளிப்பதாகவே இருக்க வேண்டும்' என்றே பல காலமாகக் கல்வியாளர்களும், சட்ட வல்லுநர்களும், சிந்தனையாளர்களும் கூறி வருகின்றனர். ஆனால், இதனை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்வதே இல்லை.
 "சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்று சொல்கிறபோது கல்வியின் முன் அனைவரும் சமமாக இருக்க வேண்டாமா? "சமச்சீர் கல்வி வேண்டும்' என்பதற்காகப் போராட்டங்கள் நடத்தி, நீதிமன்றப் படிகள் ஏறி, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே வேண்டா வெறுப்பாக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்பிறகும் இப்போது அரசுப் பள்ளிகள் என்றும், தனியார் பள்ளிகள் என்றும் பிளவுபட்டுக் கிடக்கின்றன.
 அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் கொண்டு போய் சேர்க்கிறார்கள் என்ற ஆதங்கம் பொதுமக்களிடம் இருக்கிறது. இந்நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க எப்படி முன்வருவார்கள்?
 அண்மையில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் இதுபற்றி அறிவுறுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை உறுதிபடுத்துமாறு அரசுத் தலைமைச் செயலரிடம் 2015 ஆகஸ்ட் 18-இல் கேட்டுக் கொண்டுள்ளது.
 அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை அவர்கள் சேர்த்து படிக்க வைத்தால், அந்தப் பள்ளிகள் நன்றாக இயங்குவதை உறுதிப்படுத்த முடியும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இது நாடெங்கும் பேசப்படும் பேச்சாக இருக்கிறது.
 மத்திய கல்வி ஆலோசனை வாரியம் கடந்த 19.8.2015-இல் அனைத்து மாநிலக் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. இதில் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களைக் "கட்டாயத் தேர்ச்சி' தரும் நடைமுறையை ரத்து செய்வது பற்றி பரிசீலித்து வருவதாகவும், இதற்கு 19 மாநிலங்கள் ஆதரவளித்துள்ளதாகவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
 இவ்வாறு கல்வி பற்றிய பரிந்துரைகளையெல்லாம் நிறைவேற்ற 
வேண்டிய பெருஞ்சுமை ஆசிரியர்களின் தோள்களிலேயே வைக்கப்படுகின்றன. கல்வியையும், மாணவர்களையும் நேசிக்கிற ஆசிரியர்களுக்கு இவை சுமையல்ல, சுவையேயாகும்.
 கல்வி என்பது ஒரு மனிதனை உருவாக்குவதாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய கல்வி அவ்வாறு இல்லாமல் போனதற்குக் காரணம் அது வணிகமாகிப் போனதுதான். அதிலிருந்து அதனை மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் கல்விக்கும் மரியாதை, அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மரியாதை ஏற்படும்.

நன்றி தின மணி 
நன்றி உதயை மு. வீரையன்
ஆசிரியர் நலம் கருதி ஆ.சிவ.....

Monday, August 24, 2015

பிள்ளை வளர்க்கலாம் வாங்க

பிள்ளை வளர்க்கலாம் வாங்க
Updated: August 24, 2015 16:58 IST | என்.ராஜேஸ்வரி
  

தென்னை வளர்க்கலாம் வாங்க என்பது போல் ஒலிக்கிறது தலைப்பு. தரையில் தண்ணீர் ஊற்றினால் தலையில் இளநீர் சுமக்கும் தென்னை போன்று பிள்ளை வளர்ப்பு எளிதல்ல குழந்தை வளர்ப்பு எனப் புலம்புகிறோம் நாம். ஆனால் வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், ` குழந்தையை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்` என்கிறார்.

செடியாக இருக்கும்பொழுது, கிளையை வெட்டி விட்டால் செடி `போன்சாய்` ரகமாக மாறும். மரமான பின் சீர்படுத்தினாலும், சீர்படுத்தாவிட்டாலும் மரம் அழகுதான். ’படுத்தறான் பையன’் என்றால் உங்களை சீர்படுத்தச் சொல்லுகிறான் என்று அர்த்தம். அதற்காக அவர்களின் செயல்களை வெட்டி கொண்டே இருந்தால், முழுதாய் சீராய் வளர்வது எப்படி?

முதலில் பிள்ளை சொன்ன பேச்சைக் கேட்க வேண்டுமானால், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் தாய் எப்போதும் தூய்மையாகவும், சிரித்த முகத்துடனும் இருக்க வேண்டும். அதாவது இருபத்திநாலு மணி நேரமும்.

உடைத்துச் சொல்ல வேண்டுமென்றால், தாய் குளிக்காமல் சமைத்தால், பிள்ளை குளிக்காமல்தானே சாப்பிடும். தாய் இப்படி இருந்து கொண்டு, பிள்ளை குளித்து முழுகி சீருடை அணிந்து, கடவுளை வணங்கி, சாப்பிட கை நனைக்கும்பொழுது, தாயைப் பார்க்கும் அம்மா முகம் பார்த்து பால் குடித்த ஞாபகத்தில். அன்று புன்னகை பூத்து சுத்தமாக இருந்த அம்மாவின் முகம் இன்று சமையலறை போராட்டத்தினால், வாடி வதங்கி எண்ணெய் கரை படிந்து, மிரட்டும் விழிகளுடன் காண்பது பழகிவிட்டாலும் தினம் தினம் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் பிள்ளைக்கு ஏற்படுத்திவிடுகிறது. இந்த சொல்லத் தெரியாத வேதனையை விழுங்குவதா? அல்லது அந்தச் சோற்றை விழுங்குவதா? பரிதவித்துப் போகிறது பிள்ளையின் அம்மா பாசம்.

உங்கள் கவலைகளை யாரும் தூக்கிக் கொண்டு போய்விடமாட்டார்கள். அது உங்களின் நீங்காத சொத்துதான். ஒன்று போனால் ஒன்று வந்து ஒட்டிக் கொள்வது சகஜம்தான். பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் வரையிலாவது நடியுங்கள். உங்களுக்கு கவலையே இல்லாதது போல் முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

பிள்ளை வளர்ப்பதில் அவர்கள் அன்னையின் சொல்லைக் கேட்ட வேண்டுமானால், வாழ்வின் முடிவு வரை தொடர வேண்டிய முக மலர்ச்சி எப்போதும் முகத்தில் குடி கொண்டு இருந்துதான் ஆக வேண்டும். நீங்கள் அழகாய் இருந்து பாருங்கள், பிள்ளைகளின் ஆனந்தச் சிரிப்பை காணலாம். அமிர்தவல்லி அம்மா சொல்வார்கள் "தாய் இறக்கும் தருவாயிலும், இறந்த பின்னும் கூட அழகாய் தோற்றமளிக்க வேண்டும் பிள்ளைக்காக. ஏனெனில் தாயின் கடைசி முக முழி கூட பிள்ளைக்கு மனதில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். அழகாய் இருப்போம், பிள்ளைகளின் ஆனந்த வாழ்வுக்காக."

இதுவே பிள்ளைகளுக்கு தாய் தரும் மிகப் பெரிய சொத்து.

இப்போது பிள்ளை வளர்ப்புக்கு வந்து விடலாம். தெலுங்கு மொழி தோழி அவள். தன் ஒரு வயது மகளைப் பார்த்து, `கூவக்கா` என்பாள். அப்படி என்றால் கத்தாதே என்று அர்த்தம். உடனே அந்தப் பெண் குழந்தை கத்தும். இதனை பார்த்து குடும்பமே கை கொட்டிச் சிரிக்கும். குழந்தைதானே என்று. சொன்னால் நம்ப மாட்டீர்கள் முப்பது வயதான அந்த பெண் இன்றும் எது சொன்னாலும் கேட்பதில்லை. தனக்காகவும் தெரியவில்லை. சிறு வயது நிகழ்ச்சிதான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ தொடர்பு இருப்பது போலவே தோன்றுகிறது. தோற்ற மாயையாக இருக்கலாம்.

தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். தந்தை போல் என்று எந்தப் பழமொழியும் இருப்பதாகத் தெரியவில்லை. பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது போல தாய் இருந்தாலே போதும். தானே பிள்ளை, தங்கக் கம்பி ஆகிவிடுவான். பின்னர் அதுவே தங்கக் குடமாக மாறிவிடும். இதுபோதாது சொல்லிக் கொடுத்துதான் வளர்க்க வேண்டும் என்று தாய் விரும்பினால், முதலில் 'டிவி'யை அணைத்து விடுங்கள்.

நீங்கள் முதலில் சொல் பேச்சு கேட்கிறீர்களாக என்பதை 'டெஸ்ட்' செய்யத்தான் இந்த சும்மா ஆணை. 'டிவி' போடலாம் தப்பில்லை. தற்போது உங்களிடம் இருப்பது ஆறு மாதக் குழந்தை என்று வைத்துக் கொள்ளுங்கள். மடியில் இருந்த குழந்தை பாலுக்கு அழுகிறது.

நீங்களோ பிரபல 'சிங்கர்' நிகழ்ச்சியில் ஒன்றி இருக்கிறீர்கள். குழந்தைக்கு அப்படி ஒன்றும் கொலைப் பசி இல்லை என்பது தாய்க்குத் தெரியும். அப்போது குழந்தையிடம் சொல்லுங்கள், "இந்த நிகழ்ச்சி முடியும் வரை பொறுத்திரு, இன்னும் ஐந்து நிமிடம்தான் இருக்கு" என்று சிரித்தபடி.

அதிசயம் என்னவென்றால் வயிற்றுக்குள் இருந்தே தாய் குரலைக் கேட்டுக் கொண்டிருந்த குழந்தைக்கு, தாயின் இந்த ஆணை புரியும். அமைதியாக இருக்கும் குழந்தை. நிகழ்ச்சி முடிந்த அடுத்த கணம் வீறிட்டு கத்தி தன் இருப்பை அறிவிக்கும். சொல் பேச்சு கேட்கவும், தன் உரிமை கோரவும் கற்றுக் கொண்டுவிட்டான் பிள்ளை. இதனைப் போல் இயல்பாகச் செய்ய வேண்டும். வலிந்து செய்தால் பலனற்றுப் போகும்.

பழங்காலத்தில் சொல்வார்கள் பெரியவர்களை எதிர்த்துப் பேசாதே என்று. பெரியவர்களை எதிர்த்துப் பேசுதல் என்ன இது கெட்ட பழக்கம் என்று கூட அதட்டிச் சொல்வார்கள். ஆனால் இக்காலத்தில் பிள்ளைகளை எதிர்த்துப் பேசாதீர்கள் என்பதுதான் சரி. ஆமாம், அது என்ன கெட்டப் பழக்கம் பிள்ளைகளை எதிர்த்துப் பேசுவது? இயல்பாக எடுத்துச் சொல்லுங்கள் அவர்கள் நம் பிள்ளைகள். ஒரு நாள் இல்லாவிட்டால், வேறொரு நாள் புரிந்து கொள்வார்கள்.

ஊதுகின்ற சங்கை மென்மையாகவும், இனிமையாகவும் ஊதிவிட்டால் போதும். ஒருபோதும் பிறர் முன்னிலையில் அவர்களை குறை கூறாதீர்கள். எதிர்காற்றில் எச்சில் உமிழ்ந்த கதை ஆகிவிடும். உங்களைப் போலவே உங்கள் பிள்ளை இருந்தால் அது 'போர்'. விதவிதமான ஆடைகள் போல, ஒவ்வொருவரும் விதவிதமாக இருத்தலே இயல்பு. உங்களைப் போல் இயல்பாகவே பிள்ளைகள் இருந்துவிட்டால் பரவாயில்லை. வேறு விதமான விருப்பங்கள் கொண்டிருந்தால் நல்லது. என்னைப் போல் ஆக்குகிறேன் என்றோ, உங்கள் ஆசையை அவர்கள் மேல் திணிக்கிறீர்கள் என்றாலோ என்ன தெரியுமா? அவர்களை வளைத்து, முறுக்கி, இழுக்கிறீர்கள் என்று அர்த்தம். பின்னர் 'சிக்கல் விழுந்து' சிக்கலாகிவிடும்.

நல்ல படிப்பைத் தவிர உலகில் நன்கு வாழ இரண்டு குணங்கள் மட்டுமே முக்கியம். ஒன்று சிக்கனம். இரண்டு உண்மை கூறுதல். முதலில் சிக்கனம் கற்றுத் தரலாம். ரொம்ப செலவு வைக்கிறார்கள் என்பதே பிள்ளைகள் குறித்த முதல் புகாராக இருக்கிறது. சின்ன விஷயமாகவே இதைக் கற்றுக் கொடுத்து விடலாம். வீட்டில் உள்ள வேண்டாத இடத்தில் எரியும் விளக்குகளையும், மின் விசிறியையும் 'சுவிட்ச் ஆஃப்' செய்தால், ஒரு தடவைக்கு ஒரு பாயின்ட் என்ற கணக்கில் நூறு பாயிண்ட் எடுத்தால் ஒரு பரிசு என்று பிள்ளையிடம் அறிவியுங்கள். பரிசுத் தொகை குறைந்தபட்சம் நூறு ரூபாயாக இருக்க வேண்டும். தினந்தோறும் எத்தனை 'பாயின்டு'கள் என்று குறிக்க வேண்டும். இதனால் அடுத்த மாதம் மின்சார பில் வரும்போது பதினைந்து ரூபாயாவது குறைந்து இருக்கும். இதனை மறவாமல் பிள்ளைக்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.

இது போல் தொடர்ந்து பழக்கிய பிறகு, மாதாந்திர காய்கறி மற்றும் பழச் செலவை செய்யச் சொல்லி, அம்மாதத்திற்கான மொத்தப் பணத்தையும் ஒரு டைரியில் வைத்து, அன்றன்றைக்கு ஆன செலவை எழுதச் சொல்லவேண்டும். இதனால் அவர்கள் மூன்று விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். ஒன்று, சரியான மீத சில்லறை பெறுதல். இரண்டு, பருவ பண்டங்கள் வாங்கினால் விலை குறைவு என்ற சமூகப் பொருளாதாரம். மூன்று, கூச்சம் விலகித் தன்னம்பிக்கை பெறுதல். பிள்ளைகள் அறியாமல் இவை அனைத்தும் உங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

இவற்றைச் சரியாகக் கற்றுத் தந்துவிட்டீர்கள் என்றால் பிள்ளைக்கு 'ஊதாரி' என்ற அவப்பெயர் ஒருபோதும் ஏற்படாது.

அடுத்தது உண்மை பேசுதல். இதற்கு உங்களைத்தான் முன்னுதாரணமாக கொள்கிறார்கள் பிள்ளைகள். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். இதைப் போலத்தான் உங்களது உண்மை பேசும் குணம், பிள்ளையிடம் பரிமளிக்கும்.

பிள்ளைகளுக்கான வாழ்க்கையை நல்ல பண்புகளைக் கொண்டு 'ரிசர்வ்' பண்ணுங்க, பயணம் சுகமாக இருக்கும்.

நன்றி தமிழ் இந்து நாளிதழ்.