Monday, November 24, 2014

பாடசாலை | Padasalai.Net: ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம்.

பாடசாலை | Padasalai.Net: ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம்.:               பள்ளி ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்த வேண்டும்,' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்திய...

பாடசாலை | Padasalai.Net: மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள...

பாடசாலை | Padasalai.Net: மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள...:             குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, டிவி தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படி...

Saturday, November 22, 2014

வேலன்:-புகைப்பபடங்களை சுலபமாக டிசைன் செய்திட

 

போட்டோஷாப் துணையில்லாமல் புகைப்படங்களில மாற்றங்கள் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. படங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப எபெக்ட்டுகள் கொண்டுவருவதற்கும் புகைப்படங்களை சுழற்றுவதற்கும்,வேண்டிய அளவிற்கு கொண்டுவருவதற்கும் பிரைட்நஸ்.கான்ட்ராஸ்ட் கொண்டுவருவதற்கும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.15 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இனஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நமக்கு தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்யவும்.
undefined
 இதில் இடதுபுறம் 16 எபெக்ட்டுகள் கொடுத்துள்ளார்கள்.தேவையானதை கிளிக் செய்தால் புகைப்படததில் அந்த மாறுதல் உடனே நடக்கும்.
undefined
இதில் இரண்டு பாப்அப் மெனு கொடுத்துள்ளார்கள்.புகைப்படததில் சர்கிள் லைட்.டார்க்.உட்பட 4 க்கு மாறுதல்கள் கொடுத்துள்ளார்கள் தேவைப்பட்டால் புகைப்படத்தி ல்அந்த மாறுதலை நாம் கொண்டுவரலாம்.கீழே உள்ளள விண்டோவில் பாருங்கள்.
 அதனைப்போல புகைப்படங்களுக்கு ப்ரேம் டிசைன்கள் 7 கொடுத்துள்ளார்கள் தேவைப்பட்டால் அதில்ஒன்றினை தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 புகைப்படங்களை கிராப் செய்தல்,திருப்புதல்.இடதுவலது புறமாக மாற்றுதல்.பிரைட்னஸ் கான்ட்ராஸ்ட் கொண்டுவரலாம்.புகைப்படத்தினை வேண்டிய சைஸ் கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 ப்ரேம் டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே
இது முற்றிலும் இலவசமே...பயன்படுத்திப்பர்ருங்கள்கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்

வேலன்:-1 முதல் 10ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கான கணக்கு கைடு

கடந்த வாரத்தில ஒரு நாள் எனது மகன் கணக்கில் ஒரு சந்தேகம் கேட்டான். அந்த கணக்கிற்கு மாதிரியும் கொடுக்கவில்லை.கணக்கும் புரியவில்லை.கூகுள் ஆண்டவரை வேண்டினேன். அருமையான இணையதளம் கிடைத்தது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு பாடதிட்டத்திற்கான கணக்கு கையேடு கொடுததுள்ளார்கள். அதில் கணக்கு சம்பந்தமான பார்முலாக்கள்,வீடியோக்கள்.,பயிற்சி கணக்கிற்கான விடைகளை  விரிவான வழிமுறைகளில் கொடுத்துள்ளார்கள். இவ்வளவு நாள் இந்த இணையதளத்தினை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என வருத்தம எனக்குள் ஏற்பட்டது. உங்களது குழந்தைகள் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிப்பவர்களாக இருந்தால் இநத இணைய தளத்தினை அவர்களுக்கு புக்மார்க்காக மாற்றிக்கொடுங்கள். இந்த முகவரி தளம காண இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் வரும விண்டோவில் வலதுபுறம  உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். அதில் Math.Math Videos.Basic Math.Algebra.Algebra Practical.Set Theory.Sequence &Series.Graph paper.Metric System.Mensuration.Sai Preparation.Geomentry.WorkSheet.Trignomentry.Analysis.உட்பட கணிதத்தின் வகைகளை கெர்டுத்துஇருக்கின்றார்கள்.

 இடது புறம ஒன்றாம் வகுப்பபிலிருந்து பத்தாம வகுப்பு வரை பாடத்திட்டங்களுக்கான கணக்குகள் சப்ஜேக்ட் வாரியாக கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.உங்கள் குழந்தை எந்த வகுப்பு படிக்கின்றார்களோ அந்த வகுப்பினை கிளிக் செய்யவும்.
 நீங்கள் தேர்ந்தெடுத்து வரும வகுப்பில் உள்ள பாடதிட்டங்கள் பாடவாரியாக கொடுத்துள்ளார்ள். 
அடிப்படைகணக்குகளுக்கான வீடியோவினையு ம்இணைத்துள்ளார்கள்.நமக்கு எந்த கணக்கிற்கான வீடியோ தேவையோ அதனை தேர்வு செய்து எளிதில் புரிந்துகொள்ளலாம்.
பயிற்சி கணக்குகளும அதற்கான விரிவான விடைகளும கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவீில் பாருங்கள்.
பயிற்சி கணக்குகளுக்கான இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்..
படிக்கு ம்மாணவர்கள் யாராவது இருந்தால் இந்த முகவரிதளம் அவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டுகின்றேன். கருத்துக்கள் கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.      
 
                                                                         
 

Wednesday, November 19, 2014

இறைவனுக்கு நன்றி சொல்வோம் (நீதிக்கதை)



ஒரு ஊரில் காகமொன்று இருந்தது.அது கருப்பு நிறத்தில் இருப்பதை வெறுத்தது.

ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்தது.

அப்போது நீரில் இரு அன்னப்பறவைகள் நீந்திக் கொண்டிருந்தன.

அவற்றைப் பார்த்த காகம்' அந்த அன்னப்பறவைகளைப் போல நான் வெள்ளையாக இல்லையே' என வருந்தியது.
அந்தப் பறவைகளைப்போல நாமும் தண்ணீரில் நீந்தினால் தன் சிறகுகளில் இருக்கும் கரிய நிறம் போய் வெண்மை நிறம் வந்துவிடலாம் என எண்ணியது.

உடனே....அன்று முழுதும் அது தண்ணீரில் நீந்தியது.தன் இறகுகளை தேய்த்து ..தேய்த்து பார்த்தது.அதனால் சில இறகுகளையும் இழந்தது.

அதைப் பார்த்த அன்னப் பறவைகளில் ஒன்று காகத்திடம் ' இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு உருவம்,நிறம் பெற்றவை.அதை மாற்ற நினைத்தால் நடக்காது' என அறிவுரை கூறியது.மேலும்,' கடவுள்...எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும்.' என்றது.

ஒருவன் கருப்பா,சிவப்பா என்பதில் இல்லை உயர்வு தாழ்வு.அவர்கள் செய்யும் செயல்களில் தான் இருக்கிறது என்பதை உணரவேண்டும்.


Sunday, November 16, 2014

புளூடூத் மூலம் மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்ற. .

.
மொபைலில் இருக்கும் தகவல்களை அவ்வப்போது கணினிக்கு மாற்ற வேண்டியிருக்கும், ஒவ்வொரு மு றையும் டேட்டா கேபிள்களை

வைத்திருக்க முடியாது. இருந்தும் தகவல்களை மாற்ற ப்ளூடூத் வசதியை பயன்படுத் தலாம்.  ப்ளூடூத் மூலம் இருகருவிக ளுக்கு தகவல்களை பகிர்ந்து கொள் வது எளிமையாக முடிகிற து. ஆனால் ப்ளூடூத் கருவியை கணினியுடன் இ ணைப்பது கடினமாக உள்ளதா, அப்ப இதை படிங்க…
 .
ஆன்
 .
முதலில் உங்க மொபைல் ப்ளூடூத் தை ஆன் செய்யுங்கள், பின் அந்த டிவைஸ் கண்டுபிடிக்கும்படி (டிஸ்க வரபிள் ஆப்ஷனில்) உள்ளதா என்று பாருங்கள்.
 .
கணினி
 .
இப்ப உங்க கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் மெனு சென்று கன்ட் ரோல் பேனலை க்ளிக் பன்னு ங்க, அங்கு டிவைச ஸ் மற் றும் ப்ரின்டர்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
 .
ஆட் டிவைஸ்
 .
இப்போ ஆட் டிவைஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். இது ஹார்டுவேர் மற்றும் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு கீழ் இருக்கும்.
 .
தேடல்
 .
ஆட் டிவைஸ் பட்டனை க்ளிக் செய்தவுட ன் தானாக ப்ளூடூத் டிவைஸை தேட ஆரம்பிக்கும்.
 .
ணினி
 .
இப்போ உங்க கணினியை மொ பைல் கருவியுடன் இணைக்கலா ம். உங்க ப்ளூடூத் பெயர் மெனுவி ல் தெரிந்ததும் Next என்ற பட்ட னை அழுத்தவும். இது கணினியுடன் ப்ளூசூத் இணை வதை உறுதி படுத்தும்.
 .
ம‌லர் விழி

இன்டர்நெட் WWW இது என்னவென்று தெரியுமா?....



இன்டர்நெட் இல்லை என்றால் பூமியே சுத்தாது என்று சொல்லும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்று விட்டது.இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எதற்கெடுத்தாலும் இன்டர்நெட் தான், அதுவும் சமூக வலைத்தளங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.

நான் பயன்படுத்தும் உலகளாவிய வலை அதாவது World Wide Web(WWW) இணைக்கப்பட்ட நாள் இன்று.

                                          
பிரிட்டிஷ் கணினி விஞ்ஞானியும், முன்னாள் செர்ன்(CERN) ஊழியருமான டிம் பெர்னர்ஸ் லீ மற்றும் பெல்ஜிய கணனி விஞ்ஞானி ராபர்ட் கயில்லியவ் இவர்கள் தான் இணையத்தை கண்டுபிடித்தவர்களாக கருதப்படுகிறது.

1989ம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ் லீ உலகளாவிய வலைக்கு முதல் கட்ட திட்ட அமைப்பை எழுதினார். இது முதலில் செர்ன்(CERN) தகவல் பறிமாற்றத்திற்காக மட்டுமே எழுதப்பட்டது.

ஆனால் இது உலகளவில் சென்றடைய வேண்டும் என்பதை உணர்ந்த பெர்னர்ஸ், 1990ல் ராபர்ட் உடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட உலகளாவிய வலையமைப்பை உருவாக்கினார்.

இணையம்(Internet) மற்றும் உலகளாவிய வலை(WWW) ஆகிய சொற்கள் பேச்சு வழக்கில் பெரிதும் வேறுபாடின்றி அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும், இணையமும் உலகளாவிய வலையும் ஒன்றல்ல.

இணையம் என்பது உலகளாவிய தரவுத் தகவல்தொடர்பு முறைமையாகும். வலை என்பது இணையத்தின் வழியாகத் தொடர்புகொள்ளும் சேவைகளில் ஒன்றாகும்.

இது மிகை இணைப்புகள் மற்றும் URLகள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற வளங்களின் தொகுப்பாகும். சுருக்கமாக, வலை என்பது இணையத்தில் இயங்கும் ஒரு பயன்பாடு என்றே சொல்லலாம்.

 
நன்றி  அன்பை  தேடி .......

 


 

Saturday, November 08, 2014

இட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்

  

 தினமும் இட்லி தோசைதானா என்று நாம் சலித்துக் கொள்வதுண்டு. இட்லி தோசையின் அருமை வட இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ   பயணம் செய்யும்போதுதான் தெரியும்.

இரண்டு ஆண்டுகளுக்கு சன் டிவி சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் அருமையான நிகழ்ச்சி ஒன்று ஒளி பரப்பானது. சினிமா நடிகர் நடிகைகளில் கெக்கேபிக்கே பேட்டிகளும், அழுவாச்சி காவியங்களும் பார்த்து பார்த்து சலிப்படைந்த கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக அமைந்தது இந்த நிகழ்ச்சி. ஏன் இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படுவதில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.அதைப் பற்றி பதிவு கூட எழுதி இருந்தேன். பதிவர் சந்திப்பிற்கு மதுரை சென்றிருந்தபோது சாலையோர இட்லிக்கடைகளை பார்த்ததும் இந்தநிகழ்ச்சி  மீண்டும் நினைவுக்கு  வந்து விட்டது.
     இட்லி தோசைகள் தயாரிப்பு விதம் விதமாக   காட்சியாக தெரிய பின்னணியில் சன் டிவி செய்தி வாசிக்கும்   சண்முகத்தின் வசீகரக் குரலில் இட்லி தோசையை வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஏற்ற இறக்கத்துடன் சொன்னதைக் கேட்டதும் இட்லி தோசையை கண்டுபிடித்த நம் முன்னோரின் சுவை அறிவை  பாராட்டாமல் இருக்க முடியவில்லை . இட்லி தோசை பிடிக்கிறதோ இல்லையோ இந்தப் பதிவு  நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இட்லியும்  தோசையும் 
   இட்லி என்பது மௌனம். தோசை என்பது சப்தமும் பேச்சும். இட்லி ஒவ்வொரு விள்ளலிலும் மௌனத்தை வெளிப்படுத்தும்.தோசை ஒவ்வொரு துண்டிலும் மொறுமொறுப்பான சத்தத்தில் பேசும். உறவு என்பது முதலில் மௌனத்தில் தொடங்கி பேச்சில் வளர்வது. பிரிவு என்பது பேச்சில் தொடங்கி மௌனத்தில் முடிவது. உறவு என்பது இட்லியில் தொடங்கி தோசையில் வளர்வது.பிரிவு என்பது தோசையில் தொடங்கி இட்லியில் முடியும் என்பதால்  யாரும் தோசையில் தொடங்கு வதில்லை. உணவு விஷயத்தில் உணர்வுகள் சரியாகவே இயங்கு கின்றன. இட்லியில் தொடங்கித்தான் தோசையில் வளர்கின்றன.உணவு விஷயத்தில் சரியாகச் செயல்படும் உணர்வுகள் உறவு விஷயத்தில் மாறிச் செயல்படும்போது உறவுகள் உடைகின்றன.

   இட்லிக்கு பின் தோசை என்பது இயற்கையின் தொடர் நிகழ்வு. இட்லிகள் பூக்கள். தோசைகள் என்பவை கல்லில் பழுப்பவை. அதிக நேரம் இருவர் மெளனமாக இருக்கும்போது  சிறிது புளிப்பு ஏற்படும். அப்போது சுவையான உரையாடலில்  ஈடுபடுவது சுவையோ சுவை. முதல் நாள் மாவில் இட்லி உற்பத்தியாகும் அது மௌனம்.மறுநாள் சிறிது புளித்தவுடன் தோசைகளை படைப்பதுண்டு.அது பேச்சைப் போன்றது.

   மௌனத்தில் இருந்தே பேச்சு பிறக்கவேண்டும். இட்லியும் தோசையும் இதையே மௌனமாகவும் மொறுமொறுப்பாகவும்  வெளிப் படுத்துகின்றன. மௌனம்  என்பது இட்லியின் வடிவமாக இருப்பதால் இரண்டு நிலைகளை இட்லிகள் எடுக்கத் தேவை இல்லை. அவை ஒரே நிலையில் உருவாகின்றன. இட்லிகள் பிரண்டு படுப்பதில்லை, தோசை என்பது பேச்சின் வடிவமாக இருப்பதால் அது வாயின்  தன்மையை பெற வேண்டி இருக்கிறது.தோசைக் கரண்டிதான் நாவு. சுவையூறும் உமிழ் நீர் போன்றது எண்ணை. நாவு இரண்டு பக்கமும் பேசும். கரண்டி நாவுகள் தோசையை இரண்டு பக்கமும் திருப்பிப் போடும். மௌனத்திடம் நாவுக்கு என்ன வேலை?

   இட்லிக்கும் தோசைக்கும் தொடர்பிருந்தாலும் இட்லிக்கும் தோசைக் கரண்டிக்கும் தொடர்பில்லை. மௌனத்தின் ருசி உமிழ் நீருக்கு அப்பாற்பட்டது என்பதால்  இட்லியின் உருவாக்கத்தில் எண்ணைக்கு பெரிய இடமில்லை. இட்லி குழந்தை; தோசை வளர்ச்சி; தாயின் மடியிலிருந்து  பிரண்டு விழும் குழந்தையைபோல துணியிலிருந்து இட்லி விழுவது அழகின் அடுக்கு .தோசைகள் வளர்பவை. ஹோட்டல்களில் தோசை, கல்லில் ஊற்றப்பட்டு பின்எழுதப்பட்டு பின் சுடப்பட்டு பின் சுருட்டப்பட்டு பின்னும் கட்டுக்குள் அடங்காமல் படைக்கப் படுகின்றன. 

   இட்லிகள் பிறந்த வீட்டின் பெருமையும் புகுந்த வீட்டின் தன்மையும் கொண்ட பெண் போன்றவை. பிறந்த வீட்டின் பெருமை  என்பது வெண்மை நிறம். இட்லியின் வளரச்சியில் இட மாற்றம் உண்டு என்றாலும் நிற மாற்றம் கிடையாது. புகுந்த வீடு என்பது குழிவு ஆனால் இட்லிகளில் குழிவுகள் தெரியாது.அதையும் மேடாக்கிக் காட்டும் மேன்மை பொருந்தியவை இட்லிகள். தோசைகளில் தோசைக்கல்லின் வடிவம் முழுமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஹோட்டல்களில் சதுரக்கல்லில் வட்ட தோசைகளும் முக்கோணமாக மடிக்கப் பட்ட தோசைகளும் பிறக்கின்றன. வீட்டில்கூட பிற  வடிவத்தை தோசைகள் ஏற்றுக் கொள்வதில்லை. இருந்தாலும் இட்லிக்கு தோசை மீது ஆழ்ந்த பிரியம் உண்டு. ஒன்றில் ஊற்றப்பட்டு அதன் வடிவத்தை ஏற்பதை வார்க்கப்படுதல் என்பார்கள்.உண்மையில் இட்லிகள்தான் வார்க்கப் படுகின்றன என்றாலும் அந்தப் பெயரை தோசைக்கு கொடுப்பதில்தான் இட்லிக்கு சந்தோஷம். 

  குழந்தைகள் இளமைப் பருவத்தை அடைந்தவுடன் பழைய அடையாளங்கள் மறைந்து புதியவை பிறக்கும். புதிய உறவுகள் கூடும். தோசைகள் அப்படிப்பட்டவை. தோசைகள் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்; புதியவைகளை சேர்த்துக் கொள்ளும். ரவா தோசை, மசாலா  தோசை, பொடி தோசை வெங்காய ஊத்தப்பம் என பலப்பல வகைகள்; குட்டித் தோசை கல் தோசை என்ற பல வடிவங்கள். அதிலும் இந்த மசாலா தோசைகள் மிகவும் சுவாரசியமானவை. உருளைக் கிழங்குகள் மண்ணுக்குள் விளைபவை. சட்னி தரும் தேங்காய்கள் விண்ணில் தொங்குபவை. மண்ணுக்குள் விளைந்த உருளைக் கிழங்கை வயிற்றுக்குள் வைத்த மசாலா தோசைக்கு விண்ணில் விளைந்த தேங்காய்ச் சட்னி ஏகப் பொருத்தம். 
  குழந்தைகளை தொட்டுப் பார்க்கத் தூண்டுவது எல்லோருக்கும் இயற்கைதானே. இட்லிகளை தொட்டுப் பார்ப்பார்கள்.சமைத்தவரின் விரலைப் பதிவு செய்யும் பழக்கம் சில இட்லிகளுக்கு உண்டு. ஆசை ஆசையாக பார்த்து செய்யப்பட வேண்டியது தோசை. இட்லிகள் பூப்பதை  யாரும் பார்க்க முடியாது. இட்லி மௌனத்தின் ரகசியம். 

   குழந்தைகளில் குட்டிக் குழந்தைகள் இருப்பது மாதிரி. இட்லிகளில் குட்டி இட்லிகள் உண்டு குழந்தைகளுக்கு குளிப்பது பிடிக்கும்தானே? குட்டி இட்லிகளை சாம்பாரில் குளிக்க வைக்க வேண்டும். பாத் டப்பைப் போல இந்தத் தட்டும் குளிப்பதற்கு ஏற்றார்போல குழிவாக இருக்கும். குட்டி இட்லிகளை கைகளால் தொடக் கூடாது. ஸ்பூனால் எடுத்துப் போடவேண்டும். 

  இட்லிக்கும் தோசைக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. ஒன்று பழைய தமிழ்ச் சொல்லையும் மற்றொன்று பழைய கலாசாரத்தையும் நினைவூட்டுகிறது. 'இடு' என்பது இடுதலை குறிக்கிறது. இட்டு மூடி விடுபவை இட்லிகள். கல்லில்தான் ஆதி மனிதர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். இன்றைக்கு இரும்பிலும் மற்ற உலோகத்திலும் வந்தாலும் அதற்குப் அவற்றிற்குப் பெயரென்னவோ தோசைக் கல்தான். இடு என்பது துன்பத்தையும் குறிக்கும். இடுக்கண் வரும்போது சிரிக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். பள்ளங்களில் இடப் படும் மாவு இட்லியாகச் சிரிக்கிறது;பக்குவமடைகிறது. ஒரே மாவுதான் இட்லியாகவும் சிரிக்கிறது; தோசையாகவும் இருக்கிறது; மௌனமாகவும் இருக்கிறது; பேச்சாகவும் இருக்கிறது;. இரண்டுமே தேவைப் படுகிறது வாழ்க்கைக்கு.

 இட்லி தோசை சொன்ன தத்துவங்கள் ரசிக்கும்படி இருந்ததா?
 
நன்றி திரு  முரளி .....

படங்களின் வண்ணங்களை மாற்ற

எந்த ஒரு தளத்தை பயன்படுத்த வேண்டுமானாலும் அதற்கு புதியதாக பயனர் கணக்கு ஒன்று உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கும் பயனர் கணக்குகளுக்கு படங்களை அமைக்க வேண்டும். அதே போன்று சோஷியல் தளங்களான முகநூல், டுவிட்டர், கூகுள்+ போன்ற தளங்களிலும் அடிக்கடி படங்களை பகிர்ந்து கொள்வோம்.

 சாதரணமாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக அதனை மெறுகேற்றம் செய்து வண்ணமயமாக பகிர்ந்து கொண்டால் அழகாக இருக்கும். படங்களை வண்ணமயக்காக ஒரு இலவச மென்பொருள் வழிவகை செய்கிறது.


மென்பொருளை தரவிறக்க சுட்டி


                                         

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் படத்தினை ஒப்பன் செய்து பின் Randomize எனும் பொதியை கிளிக் செய்யவும். அடுத்தடுத்து கிளிக் செய்தால் படத்தின் வண்ணம் தொடர்ந்து மாற்றமடையும். 


பின் படத்தினை .jpg, .gif, .pcx, .png, .bmp, .tif, .tga போன்ற பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும். படத்தினை திருப்பிகொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.
 
                                                                                                  
நன்றி   அன்பைத்தேடி