Monday, July 13, 2020

புதிய பார்வை... புதிய கோணம்....

🍁  புதிய பார்வை  🍁

நிசப்தமான
குளத்தில்
ஒரு கல்லை
எறிந்தால்
உருவாகும்
வட்ட வட்ட
அதிர்வலைகள்
போல...

தெரிந்தோ
தெரியாமலோ
நம்முடைய
எண்ணங்களும்
செயல்களும்
சொற்களும்...

நம்மை
சுற்றியுள்ள
மனிதர்களின்
மனதில்...

அதிர்வுகளை
ஏற்படுத்த
கூடியவையாக
அமைகின்றன.

அது 
நல்லவையாக
அமையும் போது...

அவர்கள்
மனதில்
தாக்கத்தை
ஏற்படுத்தி...

அவர்களும்
நல்லவர்களாக
மாறும் சூழ்நிலை
ஏற்படும்.

சிறு துளி
பெரு வெள்ளம்
என்பதை போல...

ஒரு 
அகல் விளக்கு
பல்வேறு தீபங்கள் 
எரிய...

காரணமாய்
இருத்தல்
போல...

நம்முடைய
சொற்களும்
செயல்களும்...

இந்த
உலகத்தையே
மாற்ற போகும்
வல்லமை
கொண்டதாக
இருக்கட்டும்.

நாடும் வீடும்
வளம் பெற
தொடங்கட்டும்.

வாங்க...

முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

1 comment:

சுசிமணாளன் said...

சிறப்பான தகவல்....