Thursday, July 09, 2020

புதிய பார்வை,...புதிய கோணம்....

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

ஒரு 
கோவிலின்
வெளியே
இரண்டு
பிச்சைகாரர்கள்...

ஒரு 
பிச்சைக்காரன்
கடவுளின்
பெயரை
சொல்லியும்...

இன்னொரு
பிச்சைக்காரன்
மன்னரின்
பெயரை
சொல்லியும்...

பிச்சை எடுத்து
கொண்டிருந்தனர்.

மாறுவேடத்தில்
இருந்த மன்னர் 
இந்த இரண்டு
பிச்சைக்காரர்களின்
செயல்களை
கண்காணித்து
கொண்டிருந்தார்.

தன் பெயரை
சொல்லி பிச்சை
எடுத்து கொண்டு
இருந்த அந்த
பிச்சைக்காரன்
மேல்... 

மன்னருக்கு
கரிசனம்
ஏற்பட்டது.

இரண்டு நாள்
கழித்து அரசவை
விழாக்கோலம்
கொண்டிருந்தது.

அந்த 
விழாவில்
ஏழைகளுக்கு
பல்வேறு 
உதவிகளை
செய்து
கொண்டிருந்தார்
மன்னர்.

அப்போது
அந்த வரிசையில்
இரண்டு நாளுக்கு
முன் பார்த்த அந்த
இரண்டு 
பிச்சைகாரர்கள்
நின்று 
கொண்டிருந்ததை
மன்னர் பார்த்தார்.

கடவுளின்
பெயரை சொல்லி
பிச்சை கேட்டு
கொண்டிருந்த
முதல் 
பிச்சைகாரனுக்கு...

புது 
துணிமணிகள்
கொஞ்சம் 
நாணயம்
கொடுத்து 
அனுப்பினார்.

தன் பெயரை
சொல்லி 
பிச்சை கேட்டு 
கொண்டிருந்த
அந்த இரண்டாவது
பிச்சைகாரனுக்கு...

புது துணிமணிகள்
கொஞ்சம் நாணயம்
இவைகளுடன்
சேர்த்து...

ஒரு
பரங்கிக்காயை
கொடுத்து 
அனுப்பினார்.

இந்நிகழ்வுகள்
நடந்து ஒரு வாரம்
சென்றது.

மன்னர் 
கோவிலுக்கு
சென்றார்.

அங்கே
இரண்டாவது
பிச்சைக்காரர்
மட்டும் அமர்ந்து...

மன்னர் பெயரை
சொல்லி பிச்சை
எடுத்து
கொண்டிருந்தான்.

மன்னர்
அவனருகில்
சென்று...

விழா நாளன்று
உனக்கு புது
துணிமணிகளுடன்
நாணயங்கள் 
மற்றும்...

பரங்கிக்காயை
கொடுத்து
அனுப்பினேனே
அதை என்ன
செய்தாய்???

என்று 
வினவினார்.

அதற்கு
பிச்சைக்காரன்
தாங்கள் 
கொடுத்த
நாணயங்களை
செலவு செய்து
விட்டேன்.

பரங்கிக்காயை
5 வெள்ளி 
நாணயத்திற்கு
விற்று அதையும்
செலவு செய்து
விட்டேன் 
என்றான்.

இவன் 
பதிலில்
கோபமுற்ற
மன்னர்...

அடேய் முட்டாள்
பரங்கிக்காயின்
உள்ளே தங்க
வைர நகைகளை
போட்டு உனக்கு
கொடுத்தேனே.

அவைகளின்
மதிப்பு 
அறியாமல்
5 வெள்ளிக்கு
விற்று விட்டாயே.

உன் 
தலைஎழுத்து
கடைசி வரை
இப்படியே 
இருக்க
வேண்டியதுதான்...

என 
திட்டி விட்டு 
சென்றார்.

வழியில் முதல்
பிச்சைக்காரன்
அலங்கார 
உடைகளுடன்
மன்னருக்கு
எதிரில் வந்து...

மன்னருக்கு
வணக்கம்
செலுத்தினான்.

மன்னர்
ஆச்சரியப்பட்டு
நீ எவ்வாறு
பணக்காரனாக
மாறினாய்???
என்று கேட்டார்.

இறைவன்
பெயரை 
சொல்லி
பிச்சை எடுத்து
வந்த எனக்கு...

இறைவனே
ஒரு வழியை
காட்டினான்
என்றார்.

குழப்பம் 
அடைந்த
மன்னர் சற்று
விளக்கமாக
கூறுமாறு 
வேண்டினார்.

மன்னரே...

தாங்கள் 
விழாவில்
கொடுத்த 
பணத்திற்கு 
ஏழைகளுக்கு
அன்னதானம்
செய்யும்
நோக்கத்தில்...

எதிரில் வந்த 
ஒருவனிடம்
பரங்கிக்காயை
5 வெள்ளிக்கு
வாங்கினேன்.

வீட்டிற்கு சென்று
அதை அரியும் 
போது...

அதனுள்ளே 
தங்க வைர 
நகைகள் 
இருந்தது.

அவைகளை 
விற்று வந்த 
பணத்தில்

ஏழைகளுக்கு
அன்னதானம்
செய்து...

மீதமுள்ள
பணத்தில் ஒரு
சிறிய வீடும்
கொஞ்சம் நிலமும்
வாங்கி...
 
விவசாயம்
செய்ய 
தொடங்கினேன்.

இவை
எல்லாவற்றிற்கும்
காரணம்...

தினமும்
இறைவன்
பெயரை சொல்லி
பிச்சை கேட்டதே
என்றும்...

தன்னை 
ஆசிர்வாதம்
செய்யும் படியும்
மன்னரை 
வேண்டினான்.

அந்த
தருணத்தில்
மன்னர்...

தம் பெயரை விட
இறைவன் 
பெயருக்குதான் 
மகிமை என்பதை
உணர்ந்தார்.

வாங்க...

இறைவன்
பெயரை
என்றும்
சொன்னால்
எதுவும் 
நடக்கும்...

அவர் 
இதயத்தோடு 
கலந்து விட்டால்
எல்லாம் 
கிடைக்கும்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..

No comments: