Wednesday, December 28, 2022

புத்தகம் நமது உயிர் தோழன்...

பிள்ளைகளுக்கு புத்தகத்தை ஃப்ரெண்டாக்க...

‘பாடப் புத்தகங்களைப் படிக்க வைக்கவே பெரும்பாடாக இருக்கு. இதுல கதை புத்தகத்தை எப்படி படிக்க வைக்கிறது?’ என்ற கேள்வியைக் கேட்காத பெற்றோர்களே அதிகம். அவர்களில் நீங்களும் இருக்கலாம்.

பிள்ளைகள் பாடப் புத்தகம் தவித்த புத்தகங்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு முதலில் வாழ்த்துகள். ஏனெனில், பல பெற்றோர்கள் மற்ற புத்தகங்களால் எந்தப் பயனும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

உங்களையும் அப்படிக் கேள்விக் கேட்டு குழப்பக்கூடும். யாரேனும் அவ்வாறு கேட்டால், “ஊருக்கு 100 பொறியாளர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், மற்ற பொறியாளர்களை விடவும் க்ரியேட்டிவாகச் சிந்திப்பவர்களுக்கும் அதைச் செயல்படுத்துபவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கிறது. இதுவே வருங்காலத்தில் எல்லாத் துறைக்குமே. பாடப்புத்தகங்கள் மொழியையும் தகவல்களையும் கற்றுத்தருகின்றன. குழந்தைகளிடம் இயல்பாகவே இருக்கும் க்ரியேட்டிவ் திறனை, மேலும் செழுமையாக வளர்த்தெடுக்கவே மற்ற புத்தகங்களைப் படிக்க சொல்கிறோம்” என்று அவர்களிடம் தெளிவாகச் சொல்லுங்கள்.

சரி, எப்போது பார்த்தாலும் டிவி பார்த்துகொண்டே இருப்பவர்களின் கவனத்தை எப்படித் திருப்பலாம்? பிள்ளைகள் டிவி பார்க்கட்டும். ஆனால், நீங்கள் அவர்கள் பார்க்கும் இடத்தில் உட்கார்ந்து புத்தகம் படியுங்கள். அதுவும் பிள்ளைகளுக்கு ஏற்ற புத்தகங்களாகப் படியுங்கள். இதை, ஒரு வாரம் தொடர்ந்து செய்யுங்கள். ஒரு கட்டத்தில் பிள்ளைகள் உங்கள் பக்கம் திரும்ப, நீங்கள் புத்தகம் பக்கம் திருப்பி விடுங்கள்.

ஒரு வாரம் கழித்தும் உங்கள் பக்கம் திரும்ப வில்லை என்றால்... கவலையே வேண்டாம். அதுக்கும் ஒரு வழி இருக்கிறது. நீங்கள் படிக்கும் புத்தகத்தில் ஓவியங்கள் இருக்கும். பெரும்பாலும் கறுப்பு - வெள்ளையில்தான் இருக்கும். புதிதாக க்ரையான்ஸ் வாங்கி வந்து, அந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுங்கள். நிச்சயம் உடனே பிள்ளைகள் ஒட்டிக்கொள்வார்கள். இரண்டு நாட்கள் இப்படியே செல்லட்டும். அடுத்த நாள், இந்த ஓவியத்துக்கு வண்ணம் தீட்ட கதைக்குள் அல்லது பாடலுக்குள் இருக்கும் க்ளூ உதவும் என்று சொல்லுங்கள். வரையும் ஆர்வத்தோடு கண்டிப்பாகக் கதையைப் படிப்பார்கள்.

பிள்ளைகள் வரைந்த ஓவியங்களை மொபைலில் போட்டோ எடுத்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பச் சொல்லுங்கள். அதைப் பார்த்து கிடைக்கும் பாராட்டுகளை உங்கள் பிள்ளைகளிடம் தெரிவியுங்கள். அது இன்னும் படிக்க வைக்கவும், வரைய வைக்கவும் உதவும்.

புத்தகம் படிக்க என்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்குங்கள். பிள்ளைக்கு ஒரு புத்தகத்தைக் கொடுக்கும் முன், அதை நீங்கள் படித்துவிடுங்கள். அதில் உள்ள கேரக்டர் போல தோசை ஊற்றிக்கொடுங்கள் அல்லது பிரட்டை அந்த உருவத்திற்கு நறுக்கிக்கொடுங்கள். ’என்ன இது புதுசாக இருக்கிறதே’ என்று பிள்ளை கேட்டால், அந்தப் புத்தகம் பற்றியும் கதையில் கொஞ்சமும் சொல்லுங்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கான எந்த சர்ப்பரைஸ் கொடுப்பதாக இருந்தாலும், நிச்சயம் அதோடு ஒரு புத்தகம் கொடுங்கள். தவறியும்கூட புத்தகத்தை மட்டுமே சர்ப்பரைஸாகக் கொடுக்காதீர்கள். ஏனெனில், பிள்ளைகள் ரொம்ப ரொம்ப விரும்பும் / ஆசைப்படும் விஷயங்களே சர்ப்பரைஸாக இருக்கட்டும். இந்தப் பழக்கம் தொடரும் பட்சத்தில் ஒரு கட்டத்தில் சர்ப்பரைஸ் பொருளோடு என்ன புத்தகம் என்று பார்க்க ஆரம்பிப்பார்கள். பிடித்த புத்தகம் எனில், படிக்கவும் செய்வார்கள். உங்கள் பிள்ளை யாருக்கேனும் சர்ப்பரைஸ் கொடுக்க உங்களோடு சேர்ந்து திட்டமிட்டால், அதில் புத்தகத்தையும் இணைத்து விடுங்கள்.

பிள்ளையின் வயதும், அவள் கையாளும் மொழியளவையும் வைத்து புத்தகங்களைத் தேர்வு செய்யுங்கள். முடிந்தால், பிள்ளையையும் புத்தகம் வாங்க அழைத்துச் செல்லுங்கள். இந்தப் பழக்கம் நீடிக்கும்பட்சத்தில் குறிப்பிட்ட பணம் கொத்து பிள்ளைக்குப் பிடித்த புத்தகத்தை தானே தேர்வு செய்ய வைக்கலாம்.

உங்கள் வீட்டுக்கு புதிய பொருள் வாங்குகிறீர்கள் எனில், அதற்கு பிள்ளை படித்த கதையில் வரும் ஒரு கேரக்டரின் பெயரைச் சூட்டலாம். உதாரணத்திற்கு, பிள்ளைக்காக அழகான குட்டி சேர் வாங்குகிறீர்கள் எனில், அதற்கு ’குட்டி இளவரன்’ எனப் பெயர் வைக்கலாம். (சிறுவர்கள் படிக்க வேண்டிய நல்ல புத்தகம் குட்டி இளவரசன்). புதிய பெயர் வைக்கும் ஆவலில் புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தொடர்வார்கள்.

படித்த புத்தகம் பற்றி பிள்ளையின் கருத்துகளை பேப்பரில் எழுத வைக்கலாம். பேச வைத்து வீடியோவாக்கி யூ டியூப் சேனல் தொடங்கி அதில் பதிவிட்டு வரலாம். புத்தகங்கள் படிக்கச் சொல்லும் பெற்றோர் இரண்டு விஷயங்களை எப்போதும் கடைபிடியுங்கள். முதலாவது, உங்கள் பிள்ளைக்குப் பிடிக்கவே பிடிக்காத புத்தகத்தைத் திணிக்காதீர்கள். மற்ற புத்தகங்களை வாசிக்க வாசிக்க பிள்ளையாகவே அந்தப் புத்தகத்தைத் தேடி வரும். இரண்டாவது, படித்த புத்தகங்கள் பற்றி கேள்விகளாகக் கேட்காமல் உரையாடுங்கள். இப்படி இந்தக் கதை முடிந்தது சரியே இல்லை. வேறு மாதிரி முடிந்திருக்க வேண்டும்... என்பதுபோல உரையாடுங்கள். ஒருபோதும் பாடப்புத்தகம் படித்த பிறகு கேள்வி எனும் தொனியை உருவாக்கி விட வேண்டாம். அப்படியான எண்ணம் வந்துவிட்டால், கதையின் சுவாரஸ்யத்திலிருந்து மனம் விலகி மனப்பாடம் என்பதாக மாறிவிடும். நாம் கதை / பாடல் புத்தகங்களைத் தருவதே ’ஒரு புத்தகத்தை மகிழ்ச்சியோடு படிக்கும் பழக்கம்’ உருவாக்குவதற்கே. அது கெட்டுவிடலாம். கவனம்.

- விஷ்ணுபுரம் சரவணன்

thanks: arumbu magazine
நன்றி
படித்ததில் பிடித்தது
பகிர்வு பதிவு

Tuesday, October 25, 2022

கணிதம் கற்கண்டு...1

Std.6
Subject.  Maths
Term. 2
Unit.1
எண்கள்.பாகம்.1 காணொளி
மாணவர்கள் மற்றும் ஆசிரிய நண்பர்கள் இதனை பயன்படுத்தி மறக்காமல் Subscribe செய்ய அன்போடு வேண்டுபவன்....

உங்கள் கனவு ஆசிரியர்
சேலம் ஆ.சிவா...

வீடியோவைக் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..
https://youtu.be/jmQUoHV8AC0

Wednesday, October 12, 2022

உன் வாழ்க்கை ..உன் கையில்..

ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், "மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார்....

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், இது பழையது என்பதால் 5 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர், என்றான்.

தந்தை பழைய பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்...

அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம் இதற்கு 5000 டாலர்கள் டாலர்கள் தர முடியும் என்கின்றனர் என்றான்.

தந்தை இதனை Museum கொண்டு சென்று விலையை கேட்டுப்பார் என்றார்...
அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்கள் என்கின்றனர் என்றான்...

தந்தை மகனை பார்த்து, மகனே! சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்...

" உன்னுடைய மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்...."
" உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே... "
இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்...

நமக்கு மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட செலவழிக்காதீர்கள்....


படித்ததில் பிடித்தது
நன்றி
பகிர்வு பதிவு


Friday, October 07, 2022

வாழ்க்கை வாழ்வதற்கு...

*இறுதி விசில்*

நான் ஒரு பள்ளி மைதானத்தில் உள்ளூர் கால்பந்து போட்டியைப் பார்த்து கொண்டிருந்தேன்.


நான் அருகில் அமர்ந்திருந்த ஒரு பையனிடம் உங்கள் அணியின் ஸ்கோர் என்ன? என கேட்டேன்.

அந்த பையன் புன்னகையுடன், நாங்கள் 0 எதிரணி 3 என்றான்.


நீ சோர்வடைய வேண்டாம் தம்பி என்று நான் சொன்னேன்.

சிறுவன் குழப்பமான பார்வையுடன்,
என்னை, என் 
மன உறுதியை சந்தேகிப்பவன் போல ஒரு ஆழமான பார்வை பார்த்து விட்டு,

*நடுவர் இறுதி விசில் அடிக்காத போது, நான் ஏன் மனம் தளர வேண்டும் அங்கிள் ?* என தீர்க்கமான  கேள்வி ஒன்றை கேட்டான். 

*எங்கள் அணி மற்றும்  பயிற்சியாளர் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது.*

 *நாங்கள் நிச்சயமாக வெல்வோம் என உறுதியாக சொல்லிவிட்டு ஆட்டதை கவனித்தான்*.

உண்மையாகவே, போட்டி 5 - 4 என சிறுவன் அணிக்கு சாதகமாக முடிந்தது.

வெற்றியை அறிவித்ததும்,
அவன் என்னை நோக்கி உற்சாகமாக கை அசைத்தான்.

பின் ஒரு அழகான புன்னகையுடன் விடைபெற்றான்.

 நான் ஆச்சரியப்பட்டேன், அவனுடைய நம்பிக்கையை நினைத்து வாய் அடைத்துப் போனேன். 

 அவனது நம்பிக்கை அவ்வளவு அழகான, ஆழமான நம்பிக்கை. என்னை யோசிக்க வைத்தது.

அன்று இரவு வீடு திரும்பியதும், அவன் என்னை கேட்ட கேள்வி எனக்குள் வந்து கொண்டே இருந்தது.

*நடுவர் இறுதி விசில் அடிக்காத போது நான் ஏன் மனம் தளர வேண்டும்*?
என்ற அவன் கேள்வி என்னை உறங்க விடவிலை.


வாழ்க்கை ஒரு விளையாட்டு போன்றது....

வாழ்ந்து கொண்டு இருக்கும் போது,  நாம் ஏன் பல சமயம் சோர்வடைகிறோம்?.

நமக்கான  இறுதி விசில் ஒலிக்காதபோது நாம் ஏன் சோர்வடைய வேண்டும்?.

*உண்மை என்னவென்றால், நம்மில் பலர் இறுதி விசிலை தாங்களாகவே ஊதிக்கொள்கிறோம்.*
*ஆட்டம் முடியும் முன், மைதானத்தை விட்டு வெளியேறுகிறோம்.*

ஆனால், வாழ்க்கை நம்மிடம் இருக்கும் வரை, எதுவும் சாத்தியம் இல்லாமல் இல்லை., 

நம்மிடம் இருக்கும் காலம் பாதியாகவோ, முக்கால் வாசியாகவோ முழுதாகவோ இருக்கலாம்.... அது முக்கியம் அல்ல.... 

*ஆனால், காலம் முடியும் முன்,நாமே விசில் அடிக்க கூடாது..*

*நம் ஆட்டதின் நடுவர் கடவுள்..*

*அவர் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள்.....*

*எனவே, இன்னும், நடுவர் இறுதி விசிலை அடிக்கவில்லை என்பதைஉணர்ந்து, வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் உற்சாகமான விளையாட்டை போல ரசிப்போம்...*

படித்ததில் பிடித்தது.
நன்றி...!

பகிர்வு பதிவு

Tuesday, October 04, 2022

வீரம்...சிறுகதை

ஒரு அரசர் தன் மகனுக்கு போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார்.

ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார்.

அங்கு அவரது மகன் மிக ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் திணவெடுத்து இருக்கின்றன.

அங்கிருக்கும் தூண்கள், பலகைகள் என்று அனைத்தையும் அவன் கைகள் பதம் பார்த்திருந்தன. அவனது உடலெங்கும் தழும்புகளால் நிறைந்திருந்தன. மிகுந்த திருப்தியுற்ற அரசர் பயிற்சியாளரிடம் சென்று நன்றி கூறி தனது மகனை அழைத்து செல்லலாமா என்று கேட்டார்.

அவன் இன்னும் தயாராகவில்லை இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். அரசரும் குழப்பத்துடன் சரி என்று சொல்லி சென்றுவிட்டார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சென்றார். அப்போது அவரது மகன், மாமிச மலை போல் இருந்த, அந்த பயிற்சி பாசறையிலேயே ‘மிகச்சிறந்த’ வீரனுடன் மோதிக்கொண்டிருந்தான்.

மாமிச மலை’ தான் வெல்வான் என்றிருந்த கணத்தில், சட்டென்று அவனை புரட்டிப் போட்டு வீழ்த்தி, சீற்றத்துடன் கர்ஜனை செய்தான் மகன். முகமெல்லாம் பூரிப்புடன் பயிற்சியாளரை பார்த்து, “இப்போது அவனை அழைத்து செல்லலாமா” என்றார்.

இல்லை அவன் இன்னும் தயாராகவில்லை, இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். தயக்கத்துடன் விடைபெற்ற அரசர் குழப்பத்துடன் நாடு சேர்ந்தார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பயிற்சி பாசறைக்கு வந்தார். அப்போது அவரது மகன் சண்டை நடக்கும் இடத்தில இருந்து விலகி நண்பர்களுடன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான்.

அரசர் பயிற்சியாளரை சந்தித்த முதல் நிமிடத்திலேயே “இப்போது அவன் தயாராய் இருக்கிறான், நீங்கள் அழைத்து செல்லலாம்” என்றார்.

அவன் ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவன் தயாரில்லை என்று சொன்ன நீங்கள், அவன் அமைதியாய் அமர்ந்திருக்கும் போது மட்டும் அழைத்து செல்ல சொல்கிறீர்களே ஏன்” என்று என்றார்.

அரைகுறையின் உச்சம் தான் ஆக்ரோஷம். வீரத்தின் உச்சம் என்றும் அமைதி தான்” என்றார் பயிற்சியாளர்.

புரியவில்லை” என்றார் அரசர்.

எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ, எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான். எப்பொழுது ஒருவனுக்கு மற்றவர் மேல் அன்பு வருகிறதோ, எப்பொழுது ஒருவன் முழு திறமையையும் அடைகிறானோ அப்பொழுது அவன் அமைதியில் ஐக்கியமாவான்.

அது தான் ஒரு தலைவனுக்குரிய தகுதி. உங்கள் மகன் நாடாளும் தகுதி பெற்று விட்டான் அவனை அழைத்து செல்லுங்கள்” என்றார்.

மனதை கவர்ந்தது.
நன்றி!
பகிர்வு பதிவு

Friday, August 19, 2022

கணிதம் புதிய மதிப்பீடு முறை அறிவோமா..?

*மாணவர்களை மதிப்பீடு செய்யும் புதிய முறை ரிபஸ்  ( Rebus) படப்புதிர்கள்...உங்கள் பார்வைக்கு...காணொளியை கண்டு மகிழ்ந்து மறக்காமல் Subscribe செய்யவும்.*

*இவண்
என்றும் கல்விப்பணியில்
கனவு ஆசிரியர்
சேலம்.ஆ.சிவா*

Video வை காண கீழே உள்ள லிங்கை தொடவும்.

https://youtu.be/Ie43WbAlBE8

Friday, August 12, 2022

கற்றலின் இனிமை...



🍂துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான். 

🍂அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என 
 நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.

🍂அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, "இது என்ன உனது இடது கையில் கயிறு?" என்று கேட்டான்....

🍂"தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’" என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே....

🍂அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. "இந்தக் குச்சி எதற்கு?" எனக் கேட்டான் அரசன். "வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள். இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது" என்றான்.

🍂அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். "இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?" எனக் கேட்டான் அரசன்.

🍂"வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!" என்று பதில் சொன்னான்.

🍂அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து "அவர்கள் என்ன செய்கிறார்கள்?" என்று கேட்டான் அரசன்.

🍂"நூற்பு வேலை செய்துகொண்டிருக்கும்போது வாய் சும்மாதானே இருக் கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!"  என்றான்.

🍂"அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்? உள்ளே வரலாம்தானே" எனக் கேட்டான் அரசன்.

🍂அதற்கு நெசவாளி சொன்னான்: "அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்" என்றான்.

🍂ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.

🍂நெசவாளி சொன்னான்... 
"இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்".

🍂ஒருவன் விரும்பினால் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்க வும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.

🍂நமது சோம்பேறித் தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல் தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்.

நன்றி ..! பகிர்வு பதிவு...

Friday, July 15, 2022

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்...

_*முடிவுகள் மாறிக்கொண்டே இருக்கும்....*_ 


யாழினி என்பவர் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார். 

இளஞ்செழியன் என்பவர் அதே தூரத்தை கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டார்.

இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் யாழினி என்றுதான் வரும்.

எனினும் இப்பொழுது யாழினி என்பவர் நன்கு பண்படுத்தப்பட்ட சாலையில் அந்த தூரத்தைக் கடந்தார் என்றும் 
இளஞ்செழியன் என்பவர் கரடுமுரடான பாதையில் அதைக் கடந்தார் என்றும் 
நான் சொன்னால் இப்பொழுது உங்களுடைய பதில் மாறும் அல்லவா?...

ஆம் நிச்சயமாக இப்பொழுது இளஞ்செழியன் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்!...

மறுபடி இப்பொழுது யாழினிக்கு 50 வயது என்றும் இளஞ்செழியனுக்கு 25 வயது என்றும் கூடுதல் தகவலை நான் கொடுக்கும் பொழுது........

உங்களுடைய பதில் மறுபடி மாறும் அல்லவா?..

ஆமாம் இப்போது யாழினி தான் வேகமானவர் என்று சொல்லுவோம்.

மேலும் இளஞ்செழியன் என்பவருடைய எடை 140 கிலோ என்றும் யாழினியின் எடை 65 கிலோ தான் என்று நான் சொல்லும்போது மீண்டும் இந்த பதில் மாறும். 

இப்பொழுது இளஞ்செழியன் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்! 

இதேபோல இளஞ்செழியன் பற்றியும் யாழினி பற்றியும் நம்முடைய இந்த முடிவானது அவர்களைப் பற்றிய அதிகத் தகவல்கள், கூடுதல் தரவுகள் கிடைக்கக் கிடைக்க மாறிக்கொண்டே இருக்கும். 

▪இதுதான் வாழ்க்கையிலும்.  நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக வேகமாக நம்முடைய அபிப்பிராயங்களை உருவாக்குகிறோம். 

அவர்களோடும், அவர்களின் செயல்பாடுகளோடும் நம்மை ஒப்பிடத் தொடங்குகின்றோம். இதனால் நாம் நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்கின்றோம்.  

▪வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாகும். 

▪ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வேறுபட்டதாகும். 

▪ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் அறிவும் பொருளும் வேறாக இருக்கலாம். 

▪ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறாக இருக்கலாம்.

▪அதற்கான தீர்வுகள் கூட வேறாக இருக்கலாம்!..

எனவே வாழ்க்கை என்பது வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும். அதை தேவையில்லாமல் மற்றவர்களோடு ஒப்பிட்டு வீணாக்கிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் தான் உயர்ந்தவர்கள்!...
நீங்கள் தான் சிறந்தவர்கள்!!...

உங்களுடைய முழு சக்தியையும் ஆற்றலையும் பிரயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள். 

உங்களுடைய சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுத்து முன்னேறுங்கள்!! 

*எப்போதும் ஆரோக்கியமாக இருங்கள்!..* *அமைதியாக இருங்கள்!..*
*திருப்தி அடைந்தவராக இருங்கள்!!!..*
*புன்னகையைப் படர விடுங்கள்!..*
*மனம்விட்டு சிரிக்கப் பழகுங்கள்!!..* 

*சமுதாயத்திற்கும், இந்த மண்ணிற்கும் ஏதாவது சேவை புரிந்து கொண்டே இருங்கள்!!!..*

 நன்றி...!
பகிர்வு பதிவு...

Wednesday, June 22, 2022

அதிக மதிப்பெண் பெற வழிகள்..

*அதிக மதிப்பெண் எடுப்பது சுலபம்*. 
கீழ் கண்டவைகளை செயல்படுத்தினால்! 

*மாணிக்க மாணவர்களின் அனுபவங்கள்* 

1) ஆசிரியர் பாடம் நடத்தும் போது (முழுமையாக) 'கவனித்தாலே போதும்' 
கணிசமாக மதிப்பெண் எடுக்கலாம். 
2) புரிந்து படித்தால்...... 
3)பிறர்க்கு சொல்லிக் கொடுத்தால்..... 
4)அதிகாலையில் எழுந்து படித்து வந்தால்..... 
5)போட்டி போட்டு படித்தால்... 
6)தமது அம்மா அப்பாவிற்கு 
நல்வாழ்வளிக்க என்ற லட்சியம் இருந்தால்.... 
7) படித்ததை எழுதிப் பார்த்தால்.
8) குழுவாக விவாதித்து படித்தால்.... 
9)அமைதியான சூழலில் படித்தால். 
10)விளையாட்டு, யோகா, உடற்பயிற்சிக்குப் பிறகு படித்தால்..,. 
11)படித்ததை 
எழுதிப்பார்த்தால்.... 
12) பெரிய ஒரு பாராவை ' பல சிறிய பகுதிகளாக பிரித்து'
வரிசைப்படுத்தி படித்தால். 
13) கவனத்தை ஒருமுகப்படுத்தி
 ' குறிக்கோலுடன் ' படித்தால். 
14) கையெழுத்து அழகாய் இருக்க பயிற்சி செய்தால்.... 
15) பொது அறிவு புத்தகங்களை படித்தால்..... 
16)பள்ளிக்கு நேரத்திற்கு செல்வதும், விடுமுறை எடுக்காமல் செல்வதும் 
வழக்கப்படுத்தினால்.... 
17) சந்தேகங்களை தயக்கமின்றி கேட்டுத் தெளிவடைவதை  பழக்கமாக்கிக்கொண்டால்.... 
18)கால அட்டவணை போட்டு அதன்படி படித்துவந்தால்.... 
19) உதாரணங்கள், கதைகளுடன் ஒப்பிட்டு
நினைவு வைத்துக்கொண்டால்....

Thursday, June 09, 2022

கணிதம். இனிக்கும்....

மீன் விற்பவரிடம் 120 பெரிய இறால் மீன்களும் 180 நெத்தலி மீன்களும் 150 கணவாய் மீன்களும் இருந்தது. அவரிடமிருந்த எல்லா மீன்களையும் வாங்கிய ஒருவர் அந்த மீன்களை ஒவ்வொரு பைகளிலும் மூன்று வகை மீன்களும் சம எண்ணிக்கையில் இருக்குமாறு மீன்கள் பிரித்து சிறு பைகளில் போட்டுத் தரும்படி கேட்கிறார். மீன் விற்பவரிடம் சிறிய பைகள் இல்லாததால் பக்கத்து கடையில் இருந்து வாங்கி வருமாறு சொல்கிறார். எத்தனை பைகள் தேவைப்படும் என்ற கேள்விக்கு மீன் விற்பனை செய்தவரால் பதில் சொல்லத் தெரியவில்லை. ஒவ்வொரு பையிலும் எத்தனை மீன்கள் போடவேண்டும் என்பதும் அவருக்கு தெரியவில்லை.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மீன் விற்பவரின் ஆறாவது படிக்கும் மகன் தன் தந்தைக்கு உதவி செய்ய முயற்சி செய்தான். அருகிலிருந்த ஒரு தாளை எடுத்து 120, 180, 150 என மூன்று மீன்களின் எண்ணிக்கையையும் எழுதினான். படத்தில் காட்டியது போல அவற்றின் மிப்பெரு பொது வகுத்தியை (மீபொவ) கண்டு பிடித்தான். 120, 180,150 ஆகிய எண்களின் மீபொவ 30 என கண்டுபிடித்தான் (படம் பார்க்க). மீன் வாங்க வந்தவரிடம் 30 பைகளை வாங்கி வரச் சொல்கிறான்.

தந்தையிடம் ஒரு பையில் 4 இறால் மீன்கள், 6 நெத்தலி மீன்கள், 5 கணவாய் மீன்கள் வைத்து 30 பைகளில் போட்டால் ஒவ்வொரு பையிலும் சமமான அளவு மீன்கள்  இருக்கும் என்று கூறுகிறான். தந்தை தனது மகனின் அறிவைப் பார்த்து ஆச்சரியமடைகிறார்.

Greatest Common Divisor (GCD) என்று நாம் படித்த மிப்பெரு பொது வகுத்தியின் வாழ்க்கை கணக்கு இது.  LCM , GCD போன்ற கணக்குகளை வாழ்க்கையில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. படிக்கும் போது இரண்டு அல்லது மூன்று எண்களை கொடுத்து அதற்கான GCD அல்லது LCM கண்டுபிடி என்ற கேள்வியோடு முடிந்துவிடுகிறது. இப்படி படிக்கும் கணக்குகளை வாழ்க்கையில் பயன்படுத்த முடியால் இருக்கும் போது தான் கணிதம் கசக்கிறது.

தேசிய பாடத்திட்டத்தில் இந்த இடத்தில் தான் வேறுபடுகிறோம். 
தமிழ்நாடு பாடத்திட்டத்திலும் தேசிய பாடத்திட்டத்திலும் GCD என்ற பாடம் இருக்கிறது. 
State board கேள்வித்தாளில் 48 மற்றும் 32 க்கும் மான மிபொவ கண்டுபிடி என கேள்வி இருக்கும். அதே கேள்வி தேசிய பாடதிட்டத்தில் கேள்வியாக கேட்கும் போது 
ஒரு நிகழ்ச்சியில் 48 பெரியவர்களும் 32 சிறியவர்களும் கலந்து கொண்டனர். இவர்களை அங்கு போடப்பட்டிருந்த மேஜையில் உட்காரவைக்க வேண்டும். ஒவ்வொரு மேஜையிலும் சம எண்ணிக்கையிலான பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் அமர வைக்க எத்தனை மேஜை தேவைப்படும்?

இரண்டு கேள்விகளின் விடை 16 தான். இரண்டு கேள்விகளின் தீர்வுக்கான படிநிலையும் ஒன்று தான். முதல் முறையில் கேட்ட கேள்விக்கு பதில் தெரிந்தவனுக்கு இரண்டாவது முறையில் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் சிரமப்படுகிறான். ஏன்?. புரிந்து படிக்காததால் தான்.

தனக்கு  புரிந்த concept ஐ வாழ்க்கை கணக்குகளில் பயன்படுத்த தெரிந்திருக்கிறதா என்பதையே இன்றைய போட்டித் தேர்வுகளில் கேள்விகளாக கேட்கப்படுகிறது. அதில் ஜெயிப்பவர்களுக்கே இன்றைய அவசர உலகில் வெற்றி கிடைக்கிறது.

நம் பாடங்கள் அனைத்துக்கும் பயன்பாடு இருக்கிறது. வாழ்க்கையில் பயன்படுத்துகிற சூழல் இருக்கும். நாம் அதை படிப்பதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான சூழலே இங்கு இருக்கிறது. கணக்குப் பாடம் ஆரம்பிக்கும் போது அந்த கணக்கின் பயன்பாடு தெரிந்துவிட்டு கணக்கைப் படிப்பது அந்த கணக்கின் மேலுள்ள ஆர்வத்தை அதிகரிக்க உதவும்.

எல்லா கணக்குகளுடனும் அதன் பயன்பாடு பற்றி ஒவ்வொரு பாடத்தின்  கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கு நாம் குறைவான முக்கியத்துவமே கொடுக்கிறோம். 
கணக்கு நடத்தும் ஆசிரியர் எல்லா கணக்குகளுக்கும் சம்மந்தப்பட்ட வாழ்க்கை கணக்குகளை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அறிவியல் பாடத்தில் செய்முறை செய்வது போல கணக்குப் பாடத்திலும் ஒவ்வொரு கணக்கு concept க்கு முன்னரும் இந்த செய்முறை செயல்பாடுகளை மாணவர்களை செய்யச் சொல்ல வேண்டும். பின்பு அது சம்மந்தமான கணக்குகளை நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் 
கணக்கு வேப்பங்காயாக கசக்காது. நெல்லிக்காய் மாதிரி சாப்பிட்ட பின்னரும் இனிக்கும்.

Wednesday, June 01, 2022

அன்பெனும் நீர்....

 புதிய பார்வை   கோணம்..

ஒரு
வரலாற்று
நிகழ்வு ::

அசோகர்
காலத்தில் 
அவருடைய
தலைநகரான
பாடலிபுத்திரத்தில்
ஒரு சிறைச்சாலை
இருந்தது

அதன் பெயர்
'அசோகர் நரகம்'

அந்த 
சிறைச்சாலையில்
உள்ளே சென்றவர்
யாரும் உயிருடன்
வெளியே 
வந்ததில்லை

புத்த துறவி
ஒருவர் செய்யாத 
குற்றத்திற்காக
உள்ளே அடைக்க
பட்டார்

அங்கே 
மிக கொடூர
தண்டனைகள் 
அவருக்கு 
விதிக்க பட்டன

ஆனால் எந்த 
தண்டனையும்
அவருக்கு 
எந்த
பாதிப்பையும்
ஏற்படுத்தவில்லை

சிறை 
அதிகாரிகள்
ஆச்சரியப்பட்டு
அவரை 
கொதிக்கும்
கலனில் 
போட்டனர்

அவர் சர்வ 
சாதாரணமாக
எழுந்து 
வெளியில்
வந்தார்

இதை 
பார்த்த 
அதிகாரிகள்
பயந்து போய்
அசோகரிடம்
முறையிட்டனர்

அசோகர் 
வந்தார்

அவரை கண்டு 
அதிசயப்பட்டு
அமைதியாக 
வெளியே 
செல்ல
எத்தனித்தார்

மூத்த 
சிறை
அதிகாரி 
அசோகரிடம்

  புத்த 
  துறவியை 
  என்ன செய்வது ?

என்றதுடன்...

  உள்ளே 
  வந்தவர்கள் 
  வெளியே 
  செல்ல 
  கூடாது

  அரசர்
  உள்பட

என்று 
கூறினார்

இதை கேட்டு 
ஆத்திரப்பட்ட 
அசோகர்

புத்த
துறவியை
விடுதலை
செய்ததோடு

தன்னை
வெளியே விட
மறுத்த 

அந்த மூத்த 
அதிகாரியை 
தூக்கி
கொதிக்கும் 
கலனில் போட 
உத்தரவு 
பிறப்பித்தார்

அடுத்த
சில நொடிகளில்

தவறு 
செய்யாத 
துறவிக்கு 
தண்டனை 
தந்ததை 
எண்ணி 
எண்ணி 
மனம் 
நொந்தார்

எதிர்த்து
பேசிய
மூத்த சிறை
அதிகாரியை
கொதிக்கும்
கலனில் 
போட 
உத்தரவு
பிறப்பிக்க
பட்டதற்கு
மனம்
வெந்தார்

சிறைக்கு
வெளியே 
வந்த 
அசோகர் 

அடுத்த சில
நாட்களில் 
அந்த சிறை
சாலையையே 
இடித்து 
தரைமட்டமாக்க 
உத்தரவு 
பிறப்பித்தார்

இடிந்தது 
சிறைச்சாலை 
மட்டுமல்ல

அவரின் 
செருக்கு 
வெறுப்பு
ஆணவம் 
அதிகாரம் 
அத்தனையும் 
தான்

அன்றில்
இருந்து
அசோகர் 
மனதளவில்
மாறிபோனார்

அதன்  
தொடர்ச்சியாக
நடைபெற்ற
கலிங்க போர்
அவரை 
முற்றிலுமாக
புரட்டி போட்டது

  வன்முறையை
  வேருடன் அழிக்க
  ஒரே வழி

  'அ ன் பு '

என்பதை 
நிரூபிக்க,
புத்த மதத்தை
தழுவினார்

இது 
கதையல்ல
நிஜம்

  வாங்க ::

  நெருப்பை
  நெருப்பால்
  அணைக்க
  முடியாது

  அது
  நீரினால் தான்
  அணையும்

  வெறுப்பை
  வெறுப்பால்
  அழிக்க 
  முடியாது

  அது
  அன்பினால் 
  தான் அழியும்

  உலகில்
  மென்மையானது
  அன்பு

  உலகில்
  வலிமையானது
  அன்பு

  ஆதலினால்
  அன்பு 
  செய்வோம்

  அகிலத்தை
  வெல்வோம்

புதிய
நம்பிக்கை
கீற்றுக்களுடன்

 நன்றி..
முனைவர்.சுந்நரமூர்த்தி

பகிர்வு பதிவு

Tuesday, May 24, 2022

அன்றும்...இன்றும்...

*அன்று* 
வீடு நிறைய குழந்தைகள் 
*இன்று* 
வீட்டுக்கொரு குழந்தை 
*அன்று* 
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
*இன்று* 
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்
*அன்று* 
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி 
*இன்று*
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி 
*அன்று*
படித்தால் வேலை
*இன்று* 
படிப்பதே வேலை
*அன்று* 
வீடு நிறைய உறவுகள்
*இன்று* 
உறவுகள் அற்ற வீடுகள்.
*அன்று*  
உணவே மருந்து
*இன்று*
மருந்தே உணவு
*அன்று*
முதுமையிலும் துள்ளல்
*இன்று*
இளமையிலேயே அல்லல்
*அன்று* 
உதவிக்கு தொழில் நுட்பம்
*இன்று*
தொழில் நுட்பமே உதவி
*அன்று* 
யோக வாழ்க்கை
*இன்று*
எந்திர வாழ்க்கை 
*அன்று*
தியாகம் நாட்டை காப்பாற்றியது
*இன்று*
துரோகம் நாட்டை கூறுபோடுகிறது
*அன்று* 
படங்களில் பாடல் கருத்தானது. 
*இன்று*
கருத்தே இல்லாத பாடலானது
*அன்று*  
ஓடினோம் வயிற்றை நிறைக்க 
*இன்று* 
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க
*அன்று*
பெரியோர்கள் பாதையில்
*இன்று* 
இளைஞர்கள் போதையில் 
*அன்று*  
ஒரே புரட்சி 
*இன்று* 
ஒரே வறட்சி
*அன்று* 
வளச்சிப்பாதையில் இளைஞர்கள்.
*இன்று*
போதையின் பிடியில் இளைஞர்கள்.
*அன்று* 
ஊரே கூட கோலாகல விழா
*இன்று*
ஊருக்கே போக முடியாத மூடுவிழா 
*அன்று*
கைவீசி நடந்தோம்
*இன்று*
கைப்பேசியுடன் நடக்கிறோம்
*அன்று* 
ஜனநாயகம்
*இன்று*
பணநாயகம்
*அன்று* 
விளைச்சல் நிலம்
*இன்று*
விலை போன நிலம்

*அன்று* 
கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
*இன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.
*அன்று* 
நிறைந்தது மகிழ்ச்சி
*இன்று*
மகிழ்வை தேடும் நிகழ்ச்சி
 
*அன்று*
வாழ்ந்தது  வாழ்க்கை
*இன்று*
ஏதோ வாழ்கிறோம் வாழ்க்கை..

நன்றி
பகிர்வு பதிவு...

Thursday, May 19, 2022

மகிழ்ச்சியின் சாவி.....

*கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள்*

*வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்*

*இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்*.

*1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைக்க பழகுங்கள்.*

*அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல் சொல்லும் முதல் பாடம்.*

*2) காலையில் எழுந்தவுடன் குளித்து இறைவனைத் வணங்குங்கள்.*

*உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது பாடம்.*

*3) முடிந்தால், சமயலறையில் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின், கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும் மூன்றாவது பாடம்*.

*4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும். இல்லையென்றால்அலம்பும் இடத்தில் வைக்கவும். இது நமக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள உதவும். இது நமக்கான  நான்காவது பாடம்.*

*5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள். அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் வர வேண்டும்.*

*6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் , குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும். இது ஆறாவது பாடம்.*

*7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா? என்று. குழந்தைகளை கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் .*

*8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பண மிச்சம், கஞ்சத்தனம் என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால், நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம். இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.*

*9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி. அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள். மின்சார கட்டணம் கண்டிப்பாக* *குறையும். குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும் ஒன்பதாவது பாடம்.***************** *Who Will Cry When You Die?"ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.*

*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*
*“நீ பிறந்த போது, அழுதாய்...*
*உலகம் சிரித்தது..*.
*நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*

*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.

*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங் களுக்காக அதிக நேரம் செலவழிக் காதீர்கள்.*

*3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகள் குறித்து சிந்தியுங்கள்.*

*4. அதிகாலையில் எழப்பழகுங்கள்*. 
*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*

*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*
*அது நல்ல ஆரோக்கியத் தையும், நண்பர்களையும் பெற்று தரும்.*

*6. நிறைய நல்ல புத்தகங்களை படியுங்கள்.* 
*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*

*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வும் இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*

*8. உங்கள் குழந்தைகளை, உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக் கூடிய சிறந்த பரிசு, அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*

*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.

*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*

*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*

*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த பல சிந்தனைகளும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*

*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களை கொண்டவனே பணக்காரன்*.

*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*

*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.

*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காகத்தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*

*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*

*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*

*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையான வர்களே!*
*"ஆணவம் ஆயுளைக் குறைக்கும்...*"

*மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,*
*ஆனந்தமாக வாழுங்கள்* *நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.....!!!!வாழ்க வளமுடன்*!

படித்ததில் பிடித்தது
பகிர்வு பதிவு
நன்றி..!

Friday, May 06, 2022

உறவை காப்போம்.....

*உறவின் இழை*
 
ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. 

சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள். 

ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்... 

*மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம்  தரும்படி கேள்* என்றாள்.

மகன் அந்த நெக்லஸை எடுத்துக் கொண்டு, அவனது மாமாவின் கடையை அடைந்தான்.    அவனது மாமா அந்த நெக்லஸை முற்றிலுமாகப் பார்த்தார். 

அவனிடம் கூறினார்... *என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு! அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும்* என்று..

பின் குடும்ப செலவுக்காக அவர் அவனிடம்  கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். 

மேலும் *நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை கற்றுக்கொள்* என்றார்.

எனவே, அடுத்த நாள் முதல், அந்தப் பையனும் தினமும் கடைக்குப் போகத் தொடங்கினான். அங்கே கற்றுக் கொள்ளத் தொடங்கினான். 

*எப்படி வைரம் மற்றும் கற்களை பரிசோதிக்க வேண்டும்?* என்பதையும் தெரிந்து கொண்டான்.

விரைவிலேயே, அவன் ஒரு சிறந்த அறிவாளியாக என்று  மாறினான். 

வைரத்தைப் பற்றி பகுத்தாய்வு செய்து கூறுவதில் ஒரு வல்லுநராக மாறினான்.  

நெடுந்தொலைவில் இருந்தும்  கூட, மக்கள், இவனிடம் வைரத்தைப்  பரிசோதிப்பதற்காக வந்தார்கள்.

ஒரு நாள் அவனது மாமா கூறினார்... *மருமகனே, அந்த நெக்லஸை உன் அம்மாவிடம் இருந்து இப்போது வாங்கி வா! அவளிடம் கூறு... அதாவது மார்க்கெட் நிலைமை இப்போது நன்றாக இருக்கிறது. உனக்கு நல்லதொரு விலை கிடைக்கும்.*  
 
அவன் அம்மாவிடம்  இருந்து நெக்லஸை பெற்றவுடன், அந்த வாலிபன்,  *அவனாகவே அதனைப் பரிசோதித்தான்.* 

*அது ஒரு போலி* என்பதைக் கண்டு பிடித்தான்.  

*அவனுடைய மாமா, ஒரு சிறந்த வல்லுநராக இருந்தும், இதை ஏன் நம்மிடம்  தெரிவிக்கவில்லை?* என்று அவன் ஆச்சரியம் அடையத் தொடங்கினான். 

நெக்லஸை வீட்டில் விட்டு, விட்டு அவன் கடைக்குத் திரும்பினான்.

மாமா கேட்டார், *நெக்லஸை கொண்டு வரவில்லையா?* 

அவன் கூறினான், *மாமா இது போலியானது. ஆனால், இதை என்னிடமிருந்து நீங்கள் ஏன் மறைத்தீர்கள்?*

பிறகு அவன் மாமா கூறினார்... *நீ முதன் முதலில் நெக்லஸை என்னிடம் கொண்டு வந்த போது, "அது போலியானது" என்று நான் உன்னிடம் கூறியிருந்தால்,  நான் வேண்டுமென்றே  இதைக் கூறுவதாக நீ நினைத்துக் கொள்ளக் கூடும்.  ஏனென்றால், அப்போது நீ ஒரு  கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாய்.*

*இன்று நீ, நீயாகவே இதைப் பற்றிய அறிவை பெற்றிருப்பதால், இந்த நெக்லஸ், "உண்மையிலேயே போலியானது" என்பதை நீ உறுதியாக அறிந்திருப்பாய்.* 

*அந்த நேரத்தில்,  "உண்மையைக்" கூறியாக வேண்டும் என்பதை விட... "உறவு இழையை அறுந்து விடாமல்  காப்பது "மேலானது" மற்றும் "முக்கியமானதாக" எனக்கு தோன்றியது.*

*நண்பர்களே! "எந்த வித பட்டறிவும்" இல்லாமல், நாம் இந்த உலகில் "பார்ப்பது," "நினைப்பது," "தெரிந்து கொள்வது" எல்லாமே "தவறு" என்று கூறுகின்றோம்.*

*"தவறான புரிதல்களால்" நம்முடைய உறவு  முறைக்கு, பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது.*

*பிறகு "முறிவுக்கு" இட்டுச் செல்கிறது.*

*நம்முடைய வாழ்க்கையும் தனியாக நின்று "வீழ்ச்சியும்" அடைகின்றது.*

*நம் "உறவின் இழைகளை" அறுந்து  விடாதவாறு பாதுகாத்து வாழ்வோம்...

நன்றி..
பகிர்வு பதிவு...

Sunday, April 10, 2022

அப்பா பாசம் பொய்யாகலாமா...?

அப்பா பாசம்பொய்க்கலாமா..?*

அன்புப் பிள்ளையே !

கைப்பேசிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு

காது கொடுத்து கேள்

" அப்பா நான் படிக்கணும்பா
கைப்பேசி வேணும்பா 

 வெல கம்மியில
வாங்கித் தாப்பா "

இப்படி நீ கேட்டப்போ
நெஞ்சுருகிப் போனேன்

சக்திக்கும் மீறி
கடன வாங்கி

தரமான கைப்பேசியை

உன் கையில கொடுத்துப்புட்டு 

"படிக்குது என் புள்ளன்னு"

நம்பித்தானே நான் கிடந்தேன்

"வரவுக்கு மீறிய செலவு
வேண்டாம்" னு 

அம்மா தடுத்த  போது...

" புள்ளப் படிப்புக்கு இது முக்கியமாக்கும்

உனக்கு ஒரு எழவும் தெரியாது " ன்னு

முரட்டு பிடவாதமா

வாங்கித் தந்த கைப்பேசி அது

கவனிச்சு பாத்தியா நீ...

கறிச்சோறு குறைஞ்சு போச்சு

மூனு வேள சாப்பாடு

இரண்டு வேளையா
மாறிப் போச்சு....

 சக்தி இல்லா
உடம்பினால

சம்பாதினையும்
பாதியாச்சி !

மானம் காத்த
துணியெல்லாம்

நஞ்சும் கூட போயாச்சு

உன் கவனமோ 
கைப்பேசியில் நிலையாச்சு

நான் படுற 
பாடெல்லாம்

நீ பட வேணாம் னு

இராப்பகலா உழைக்கிறேனே

தூக்கமின்றி கிடக்கிறேனே

சம்பந்தமே இல்லாதது போல
கைப்பேசியில் வாழறியே !

என்னப் படிக்கிறேன்னு

எதேச்சையா பார்த்தப்போ

படிப்புக்குச் சம்பந்தமில்லா

விளையாட்டில் நீ மூழ்கி

எட்டிப்பார்ப்பது *அப்பா* ங்கிறதையும் மறந்து

ஆனந்தக் களிப்பில்

ஆடித் திளைக்கிறியே !

அன்றொரு நாள் வாத்தியார்

"கொஞ்ச நாளா
உம் புள்ள  போற போக்கு சரியில்லை"ன்னு

குறையா 
சொன்னப்போ
ஏத்துக்காத எம் மனசு

கண்ணெதிரே கண்ட பின்பு

கலங்கித்தான் தவிக்கிறதே !

உனக்காக நான் சுமந்த
வலிகளெல்லாம்

எட்டிப் பார்த்து எட்டிப் பார்த்து

ஏளனமாய்ச் 
சிரிக்கிறதே

"உன்னைக் கெடுத்தது
நான்தான்" என

அம்மா ஏசுகிறாளே !

கொஞ்சம் யோசி என் உசுரே !

கைப்பேசி இல்லாதப்போ

கலகலப்பா இருந்த வீடு

இப்படி வெளவெளத்து கிடக்கிறதே !

இனி ஒரு முடிவெடு

உனக்கான சிகரத்தை

உனக்கான விலாசத்தை

உலகினில் பதிக்க

எந்திரக் கருவியை

மந்திரக் கருவியாக மாற்று

இனியும் இதனுள் மூழ்காதே

அறிவியல் சாதனம்

ஆற்றலை வளர்க்கும்

மூலமாக மாறட்டும்

"எம் புள்ள
ஜெயிக்கும்"

என்ற  நம்பிக்கை மட்டும்

எப்போதும்
பொய்த்துப் போகாது இருக்கட்டும்

 பாசத்துடன் அப்பா

நன்றி!
பகிர்வு பதிவு...

Friday, April 08, 2022

தமிழ் வாழ்க...

“ஐயா வணக்கம்."

"அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்; அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன், கிடைத்ததா?"

"அப்படியா எப்பொழுது அனுப்பினீர்கள்?"

"நேற்றுதான் ஐயா *புலனம் (WhatsApp)* மூலம் அனுப்பினேன். இன்று காலை *பற்றியம் (Messenger)* மூலமும் பகிர்ந்தேன்."

"நான் புலனம் பயன்படுத்துவதை நிறுத்தி பலகாலம் ஆகிவிட்டது. இப்போது *தொலைவரி (Telegram)* தான் பயன்படுத்துகிறேன். இருப்பினும் நான் நேரில் வந்து பங்கேற்பது சிரமம். *இயங்கலை (Online)* மூலம் பங்கேற்கலாமா ?" 

"சரி ஐயா. *காயலை (Skype)* மூலம் பேசுங்கள். நாங்கள் *ஒளிவீச்சி (Projector)* மூலம் பங்கேற் பாளர்களுக்குக் காண்பிக்கிறோம்."

"மிக்க நன்றி. வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். அதனால்தான் இந்த ஏற்பாடு. இல்லையெனில் *தடங்காட்டி (GPS)* உதவியுடன் நேரிலேயே வந்திருப்பேன்.   "

"பரவாயில்லை ஐயா. அழைப்பிதழை இன்னொரு முறை தொலைவரிக்கு அனுப்புகிறேன். தாங்கள் அதை உங்கள் *படவரி (Instagram)* மூலமும், *கீச்சகம் (Twitter)* மூலமும் பகிர்ந்தால், நன்றாக இருக்கும் ஐயா. நிகழ்ச்சிக்கும் ஒரு விளம்பரம் கிடைக்கும்."

"நிச்சயம் செய்கிறேன். அங்கே அரங்கில் *அருகலை (WiFi)* வசதி இருக்கிறதா?" 

"இல்லை ஐயா. எனது இன்னொரு *திறன்பேசி (Smart Phone)* மூலம் *பகிரலை (Hotspot)* உருவாக்கி, அதில் இணைப்பு ஏற்படுத்தி உங்கள் பேச்சை நேரலையில் பகிர்வோம் ஐயா. உங்கள் இல்லத்தில் *ஆலலை (Broadband)* இணைப்பு இருக்கிறதுதானே ஐயா?" 

"இருக்கிறது. ஆகவே சிரமம் இல்லை."

"உங்கள் பேச்சை அரங்கில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் காணும் விதமாக, *வலையொளி (Youtube)* மூலமும், *முகநூல் (Facebook)* மூலமும் நேரலை செய்கிறோம் ஐயா. மட்டுமல்லாமல், இதனை *வன்தட்டில் (Hard Disk)* கில் சேமித்து, பிறருக்கு பகிர்வோம். அவர்கள் பின்பு *முடக்கலை (Offline)* யிலும் கண்டு களிக்கலாம்."

"மிக்க நன்றி

*⭕ WeChat          -        அளாவி* 
*⭕Bluetooth       -        ஊடலை* 
*⭕ Thumbdrive   -       விரலி* 
*⭕ cctv                 -       மறைகாணி* 
*⭕ OCR              -         எழுத்துணரி* 
*⭕ LED              -         ஒளிர்விமுனை*  
*⭕ 3D                  -        முத்திரட்சி* 
*⭕ 2D                 -         இருதிரட்சி* 
*⭕ Printer          -        அச்சுப்பொறி* 
*⭕ Scanner         -        வருடி* 
*⭕ Simcard          -       செறிவட்டை* 
*⭕ Charger          -        மின்னூக்கி* 
*⭕ Digital             -         எண்மின்* 
*⭕ Cyber            -          மின்வெளி* 
*⭕ Router           -         திசைவி* 
*⭕ Selfie             -         தம் படம் - சுயஉரு - சுயப்பு*
*⭕ Thumbnail              சிறுபடம்* 
*⭕ Meme           -         போன்மி* 
*⭕ Print Screen -          திரைப் பிடிப்பு* 
*⭕ Inkjet             -           மைவீச்சு* 
*⭕ Laser            -          சீரொளி*

தமிழ் வாழ்க...🙏🙏

Monday, February 28, 2022

ஒழுக்கம் வாழ்வின் ஏற்றம்....



*●அப்பா கடைசி வரை தனி மனிதன்தான்.●●*

📌 *மகனுக்கு வீட்டில்* *இருக்கவே*
*பிடிக்கவில்லை....!*

📌 *பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,..!*

📌 *ஆளில்லாத ரூமில்* *டி.வி. ஓடுகிறது பார்,* *அதை அணை,...!*

📌 *பேனாவை*

📌 *ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்....!*

📌 *இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை....!*

📌 *நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது...."!*

📌 *இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது... !*


📌 *வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும்...."*

📌 *அப்பாவின் நச்சரிப்பு குறையும், என்று எண்ணிக் கொண்டான்...!*

📌 *நேர்காணலுக்கு கிளம்பினான்......!*

📌 *கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா....!*

📌 *நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்....!*

📌 *கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது....!*

📌 *அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்....!*

📌 *நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன....!*

📌 *தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை* *அணைப்பதற்க்காக*
*குழாயை அப்படியே* *போட்டுவிட்டுப் போயிருந்தான்....!*

📌 *தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது... !*

📌 *குழாயை கையில்*
*எடுத்தவன் செடியின்* *அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்....!*

📌 *வரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள்...!*

📌 *மெதுவாக மாடிப்படியில் ஏறினான்.....!*

📌 *நேற்று இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது...!*

📌 *விளக்கை அணைக்காமல் செல்கிறாயே...?”*

📌 *என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்....!*

📌 *மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்....!*

📌 *கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே*
*திகைப்பு. “நமக்கு இங்கு வேலை*
*கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது....!*

📌 *பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.....!*

📌 *அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.....!*

📌 *அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன....!*

📌 *”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது...?”*

📌 *என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்....!*

📌 *இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்....!*

📌 *இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை....!*

📌 *கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான்... !*

📌 *சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே...!*

📌 *“நீங்கள் எப்போது வேலைக்கு*
*சேருகிறீர்கள்?” என்று கேட்டார்......!*

📌 *“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா,* *இல்லை வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன்....!*

📌 *”என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார், நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை....!*

📌 *கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம்.....!*

📌 *அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம்....!*

📌 *இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை....!*

📌 *நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள்....!*

📌 *அதனால் நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்....!*

📌 *அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும்....!*

📌 *அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது....!*

📌 *அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது....!*

📌 *வேலைக்கு* *செல்லும் இடத்திற்கு*
*அப்பாவையும்* *அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான் மகன்....!*

📌  *அப்பா நமக்காக* *எது செய்தாலும்*
*சொன்னாலும் ஒரு* *சிறந்த எதிர்காலத்திறாக மட்டுமே இருக்கும் !!!*

📌 *உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலையாவ தில்லை,*
*வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன....!*

📌 *நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால்,* *தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால்,*
*கட்டுப்படுத்துவதால் தான்,...!*

📌 *நாம் காலரை தூக்கிக்கொண்டு கண்ணாடி முன் நின்று, அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே....!*

📌 *தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்...."*

*" ஆனால் தந்தை அப்படி அல்ல "*

*தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமர வைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்....!*

📌 *ஒரு சொல் கவிதை அம்மா !*

📌 *அதே ஒரு சொல் சரித்திரம் அப்பா !!*

📌 *தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்து விடலாம்...!*

📌 *தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லி தான் கண்டுபிடிக்க முடியும்...!*

📌 *நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும்,* *இருபது வயதில் வில்லனாகவும்,* *தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக பாதுக்காவலராக தெரிகிறார்...!*

📌 *தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தை கடத்தி விடுவாள்....!*

*அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தனி மனிதன் தான்...!*


📌 *எனவே தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை*.
               
நன்றி..
பகிர்வு பதிவு....

Monday, February 14, 2022

ஆசிரியர்களின் 10 கட்டளைகள்...

*ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? - 10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் லயோலா கல்லூரி மாணவர் குரல் -நன்றி :  "இந்து" நாளிதழ் பதிப்பு!!*
*உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை.*
 இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப்பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவினைப் பெறுகிறான்.
*1. கதிரவனைப் போல்...*
காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல் பள்ளிக்குச் செல்லுங்கள். காலைப் பனித்துளியைப் போல் புத்துணர்வுடன் செல்லுங்கள். மழையைச் சுமந்து வரும் மேகத்தைப் போல் பாடத்தை நன்கு தயார் செய்துகொண்டு வகுப்புக்குள் நுழையுங்கள். அழகிய சோலையில் நுழைவது போல் வகுப்பினுள் நுழையும்போது மகிழ்ச்சியுடன் நுழையுங்கள்.
*2. புன்னகை அவசியம், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொள்ள வேண்டாம்...!*
உங்கள் கோபத்தினால் அழகிய மலர் வாடிவிடுவது போன்று மாணவர்களின் முகமும் வாடிவிடும். வகுப்பில் பாடத்தைத் தொடங்கும் முன் மாணவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்யுங்கள். உங்கள் முகத்தில் தவழும் புன்னகையால், மாணவர்களிடம் புன்முறுவல் பூக்கச் செய்யுங்கள்.
*3. நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்...*
பாடத்தில் உள்ள கவிதையை கவிஞனைப் போல் வாசியுங்கள். கட்டபொம்மனைப் பற்றிப் பாடம் நடத்தப் போகின்றீர்கள் என்றால் கட்டபொம்மனைப் போல் மாணவர்களிடத்தில் பேசிக் காட்டுங்கள். நாடக வடிவில் உள்ள பாடங்களை நடத்தினால் நாடகக் கலைஞனாகி விடுங்கள். இதுபோன்ற செயல்கள், மாணவர்கள் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கு உதவும்.
*4. பாடம் வேண்டாம்...*
 ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டே இருந்தால் போதாது. ஆகவே வாரத்தில் ஒரு பாடவேளையில் பாடத்தை நடத்தாமல் மாணவர்களிடத்தில் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர முயலலாம். உதாரணத்துக்குப் படம் வரைவது, கட்டுரை எழுதுவது, நாடகம் நடிப்பது, மேடைப் பேச்ச, விளையாடுதல், நடனம் ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது, பாடுவது போன்றவை மூலம் பல திறமையான மாணவர்களை இந்த உலகிற்கு நீங்கள் வழங்கலாம்.
*5. கேள்வி கேளுங்கள்...!*
 பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் அதிகமாகக் கேள்வி கேளுங்கள். மாணவர்கள் கேள்வி கேட்கவும் வாய்ப்புத் தாருங்கள். மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் கேள்விகளைக் கேளுங்கள். வகுப்பில் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பதில் சொல்லும் பழக்கத்தைத் தவிர்க்கப் பாருங்கள்.
*6 . கடைசி அய்ந்து நிமிடங்கள்...!* 
புதிதாக நடத்தும் பாடத்துக்கும் மற்றும் முந்தைய பாடத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிக் கூற, பாடவேளையின் கடைசி அய்ந்து நிமிடங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பாடம் நடத்தினால், அன்று வகுப்புக்கு வந்த மாணவர்கள் உங்கள் பாடத்தைக் கேட்டு இன்புற வேண்டும். அன்று வகுப்புக்கு வருகை தராத மாணவர்கள் அடுத்த நாள் உங்கள் பேச்சைக் கேட்க ஓடி வர வேண்டும் என்பதை நிலைநாட்டுங்கள்.
*7. நூலகத்தைப் பயன்படுத்துங்கள்...*
 மாணவர்கள் நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துப் படித்து, பயன்பெறக் கூடிய வகையில் நல்ல நூல்களின் பெயர்கள், நூலாசிரியர்களின் பெயர்கள், நூல்களின் சிறப்பு ஆகியன பற்றிச் சொல்லுங்கள். உண்ணுதல், உறங்குதல் போலவே நல்ல நூல்களை வாசிப்பதும் ஒருவரின் எதிர்கால வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க அவசியம் என்பதை மாணவர்களுக்குக் கற்பியுங்கள்.
*8. பாடப்புத்தகத்தை தாண்டி...!*
வாழ்க்கை மிகப் பெரியது. இந்தப் பெரிய உலகத்தை சிறிய புத்தகங்களுக்குள் அடக்கிவிடாமல் மாணவர்களுக்கு விசாலமான பார்வையைப் பார்க்கக் கற்றுக் கொடுங்கள். பாடநூல்கள் தகவல்களைக் கற்க உதவுகின்றன. இவை ஞானத்தை வளர்த்திட உதவுவதில்லை. எனவே பாடநூலுக்குள் மட்டும் மாணவர்களை கட்டிப் போட்டுவிடாதீர்கள். பாடநூலுக்கும் அப்பாலும் கடல் போல் அறிவு விரிந்து பரந்து கிடக்கிறது என்ற உண்மையை மாணவர்களுக்கு உணர்த்திடுங்கள்.
*9. உங்கள் பிள்ளை அவர்கள்...!*
 மாணவர்களிடம் ஒரு தாயைப் போல, ஒரு தந்தையைப் போல் நடந்துகொள்ளுங்கள். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களிடம் அன்னையின் அன்பையும், தந்தையின் கண்டிப்பையும், நண்பனின் நட்பையும் கொடுங்கள். மாணவர்களின் முழுப் பெயரைச் சொல்லி அழையுங்கள். உங்கள் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் முகத்தையும் பெயரையும் நன்றாக நினைவில் வைத்திருங்கள்.
*10. நம்பிக்கையைக் கொடுங்கள்...!*
 உன்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவாய், நம்பிக்கையுடன் இரு, வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளராக வருவாய், நல்ல நிலையை அடைவாய் போன்ற நேர்மறையான வார்த்தைகளுக்கு மாணவர் மத்தியில் மிகப்பெரிய சக்தி உண்டு. இந்த வார்த்தைகளை அடிக்கடி மாணவர்களிடத்தில் கூறிக்கொண்டே இருங்கள். மறந்து போய்க்கூட முடியாது, நடக்காது போன்ற எதிர்மறையான சொற்களை மாணவர்களிடத்தில் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.
 **நல்லாசிரியராய்.. அன்பாசிரியராய்த் திகழுங்கள். 
நன்றி :  "இந்து" நாளிதழ் பதிப்பு!!*

Thursday, February 10, 2022

பெற்றோர்களே...! ஒரு நிமிடம்.... பகுதி.2

இது எதற்காக என்று தவறாக எண்ண வேண்டாம் நண்பர்களே. 

இனி வரும் காலங்களில் அப்பா அம்மாவைப் பற்றி நினைத்துக் கொள்ள வேண்டும். கோவில் கட்டித் தர வேண்டாம். சிறு குடிசை போட்டு உடல் மறைக்க போர்வை போர்த்தி ஒரு வாய் கஞ்சி மட்டுமே கொடுத்தால் போதும். 

கண்டிப்பாக வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள் நீங்கள். காரில் ஏசி வீட்டில் விருந்து சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்தார் இந்த மனிதர் அப்பா என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இதே நிலை தான் விரைவில் வந்து விடும். 

அதனால் கனிந்த இதயங்கள் உலகத்தில் கொண்டு வந்து விடுங்கள். இளைய சமுதாயம் அனைத்து மகன் மகளுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

உன் புகைப்படம் பார்தேன்
புகைந்து போனேன் ஐயா.

யார் பெற்ற மகனோ நீ
எத்தனைப் பிள்ளைக்கு தந்தையோ நீ,

ஏனிந்த நிலை உனக்கு.
கைவிடப்பட்ட கவலைதானுனக்கு.

தெருவெல்லாம் வீடாகி நீ கிடக்க
வீடெல்லாம் காராகி மகன் குதிக்க
அனாதையாகி நீ அழ,

ஆடை கூட தர மறுத்த உன் பிள்ளைகளின் முற்றத்தில் மல்லிகை கூட மணக்கப் போவதில்லை ஐயா,

மகனைத் தான் விடுங்கள் 
மனமில்லா மனிதனவன் 
நாளைகளில் அவனுக்கும் 
அதே நிலை தான். 
காலத்தின் வலை ரொம்ப ரொம்ப ரௌத்திரமானது ஐயா.

மகளுக்கென்ன மகாராணி என நினைப்போ,

மாபாவியவள். 

யௌவனமும் அவர் பணமும்
பகட்டும் மாடி மனையும்
ஊரும் பேரும்
உல்லாசமும் நகையும் நடிப்பும் தான் அவளை உருமாற்றியிருக்கிறது உன் முன்னாலே.

மருமகனுக்கென்ன மன்மதனெனும் மமதையோ
பாவமவனும்.

காலம் கேட்கும் போது பதில் வராது

வயதேறி வாய் தழுதழுத்து 
தேகம் சுருண்டு உடல் பாகங்கள் மாற்றும் காலம் வரும் போது 
அவர்கள் உன்னை உணரும் போது 
நீ மண்ணாகி இருக்கலாம் ஐயா.

உன் புகைப்படம் பார்த்தேன்
புகைந்து போனேன் ஐயா.

நன்றி...!
பகிர்வு பதிவு ( மனதை பாதித்த பதிவு

Wednesday, February 09, 2022

பெற்றோர்களே...ஒரு நிமிடம்...1

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - 

கழுகுகள் நமக்குக் கற்றுத் தரும் பாடம்!!!

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.

குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல.

எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது.

தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பு வரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.
அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது.

அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.

அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.

அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது.

அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.
குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது.

குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது.

மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.
இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது.

அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.
கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் .
அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது.

பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது...

ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான்.

கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை.

கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.
தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப் பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை
அந்தத் தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக் கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.
ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை.

ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.

அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.

இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது மிகவும் அவசியமே.
தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லை தான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே...
அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான்.
அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.

சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம்.
ஆனால் ...
கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல.
வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல.
அது சாத்தியமும் அல்ல.
கஷ்டம் காணாத மனிதர்கள் சாதித்ததாக வரலாறும் இல்லை.

அன்பு நன்பர்களே

கஷ்டம் அனுபவிக்காத பிள்ளைகள் தந்தைக்கு பின் நிர்க்கதியில் நிற்பதை நாம் நம் வாழ்வில் அன்றாடம் கண்டு கொண்டே இருக்கிறோம்.
நம்ம பிள்ளைகளுக்கு நாம் நல்லது செய்யணும்னா?!

நீந்தக் கற்றுக் கொடுப்போம்...
நீந்துவது அவர்கள் கடமை...


நன்றி 
பகிர்வு பதிவு

Thursday, February 03, 2022

பாக பிரிவினை....ஒரு பார்வை

பாகபிரிவினை, உயில், தான பத்திரம், வாரிசு சான்றிதழ், என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.👇👇👇👇👇

பாகப்பிரிவினை என்றால் என்ன?
👇👇👇👇👇👇👇👇👇
👉👉"தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை"

👉👉அதாவது, குடும்பச் சொத்து உடன்படிக்கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும்.

👉👉பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப்படாதபட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப்பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப்பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம். பாக பிரிவினை பதிந்திருந்தால் பின்னால் பிரச்சினை ஏற்படாது.

தான பத்திரம்..!👇👇👇

👉👉சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்துகொள்ளும்போது இந்த முறையைக் கையாளலாம்.

👉👉ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூலம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது. அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம். 

👉👉தானம் கொடுப்பதை, தானம் வாங்குபவர் ஏற்று கொண்டு, அந்த இடத்தின் சுவாதீனத்தை, உடனடியாக அடைய வேண்டும்.

👉👉அந்த இடத்தின் மீதான வருவாய் ஆவணங்கள், பிற ஆவணங்களை உடனடியாக தானம் வாங்குபவர் தனது பெயருக்கு மாற்ற வேண்டும். தானம் ரத்து செய்ய இயலாத ஒன்று.

உயில்..!👇👇👇

👉👉இது விருப்ப ஆவணம்; சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரும் முறைதான் உயில் எனப்படும்.

👉👉ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல்லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக தனது சுயநினைவோடு எழுதித் தருவது.

👉👉ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.
தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாய மில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியும்.

👉👉அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து சேர்ந்துவிடும்.
மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது.

👉👉மேலும், மைனர் மீது உயில் எழுதப்படுமாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

வாரிசுச் சான்றிதழ்..!👇👇👇

வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்திலோ வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம்.

👉👉ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும்.

👉👉ஒருவர் இரு திருமணம் செய்திருந்தால், அவரது இரு மனைவி குழந்தைகள், முதல் மனைவி ஆகியோர் வாரிசுகள் ஆவர்.

👉👉பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும்.

👉👉ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது.

👉👉நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரியவரும்போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.

👉👉முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்”

👉👉பொதுவாக, சொத்து பாகப்பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும்.


நன்றி
பகிர்வு பதிவு

Thursday, January 27, 2022

நான் வாழை அல்ல...! சவுக்கு....

நகைச்சுவை நடிகர் நாகேஷ்

அவர்களின், 

தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...

வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..

வானொலி: 

நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்:

நான் கவலையே படமாட்டேன் சார்.

ஒரு கட்டடம் கட்டும் போது, 

சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, 

குறுக்குப் பலகைகள் போட்டு, 

அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, 

கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு, 

அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, 

கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து,

கிரஹப் பிரவேசத்தன்று

கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,

அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால், 

எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, 

வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.

இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? 

அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். 

ஆடுமாடுகள் மேயும். 

குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். 

பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. 

அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்குமரம்....

*Always think positive

Thursday, January 13, 2022

குழந்தைகளை அழிக்கும் கொரோனா...

*ஆரம்ப கல்வியின் அடிவயிற்றில் கை வைத்த கொரோனா…..*

*ஒரு தலைமுறையையே அழித்துக் கொண்டு இருக்கிறது இந்த கொரோனா லாக்டவுன் என்ற வார்த்தை.*

*அனைத்தும் திறந்துவிடப் பட்டுள்ளது, அறிவை வளர்க்கும் கல்விக் கூடங்களை தவிர.* 

*கொரோனாவை விட கொடிய விளைவுகளை சந்திக்க காத்திருக்கும் பெற்றோர்கள்.*

சமூக வலைத் தளங்களில் மாணவர்கள் என்ற பெயரிலும், குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை என்ற பெயரிலும், பெற்றோர்களிடம் பயத்தை காட்டி அவர்களின் குழந்தைகளை பற்றியான எதிர்காலத்தை மிகப்பெரிய கேள்விக் குறியாக்கும் சிலரின் செயல்கள் வேதனை யளிக்கிறது. 

*ஏற்கனவே 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒன்றாம் வகுப்பு அறிவை கூட பெறாமல் இருக்கிறான்.*

*1 ஆம்  வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பெரும்பாலான குழந்தைகள் பொறுமை இல்லாமல், பெற்றோர்களை மதிக்காமல் அவர்களையே மிரட்டி, மரியாதை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல், ஒழுக்கம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல், வயதுக்கு மீறிய செயல்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

*குழந்தைகள் திசைமாறி தவறான வழியில் செல்வதற்குத்தான் இந்த லாக்டவுன் மிக பெரிய பங்கு வகிக்கும்.*

*அவர்களை திசைமாற்றி விட்டுவிட்டோம் என்பதை மட்டும் ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் கொள்ளுங்கள்.* 

*நம்முடைய குழந்தை களுக்கு உடலளவு மட்டுமே நாம் பாதுகாப்பு தருகிறோம். கல்வி அறிவில் பெரும்பாலான குழந்தைகள் கோமா நிலைக்கே சென்றுவிட்டார்கள் என்பது எதார்த்தமான உண்மை.*
  
முறையான கல்வி மறுக்கப்படும் போது மனதளவில் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி,  அவர்களின் செயல்கள் அனைத்தும் தவறான வழியில் செல்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 

நீங்கள் எவ்வளவு சம்பாதித்தும் அதனால் ஒரு பலனும் இருக்கப் போவதில்லை.
 
*உங்கள் குழந்தைகள் தவறான பாதையை தேர்ந்தெடுக்க மட்டுமே இந்த  லாக்டவுன் உதவும்.*

*மாணவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்காக 
1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. 

*அதன் விளைவு மீண்டும் மொபைல் போனில் கூட்டம் கூட்டமாக மாணவர்கள் எல்லா பகுதிகளிலும் மூழ்கி கிடக்கிறார்கள்.*

மீண்டும் ஆன்லைனில் பிரீபையர்
(free fire game) கேம் உங்கள் குழந்தைகள் விளையாட நீங்களே வழிவகுத்து கொடுப்பீர்கள்.

மீண்டும் 
youtube இல் தேவையற்ற வீடியோ பதிவுகளை பார்ப்பதற்கு நாமே வழிவகுத்துக் கொடுக்கப் போகிறோம். 

*மொபைல் போன்ஐ கொடுக்க வில்லை என்றால் அவர்கள் மிரட்டு கிறார்கள், கோபப் படுகிறார்கள் என்று சில பெற்றோரின் பதில்கள் வேறு.* 

பெரும்பாலான நேரங்களில் மொபைல் போனிலேயே மூழ்கி கிடக்கிறார்கள் என்று உண்மையாகவே கவலைப்படும் பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை

உங்கள் குழந்தைகளை நீங்களே மிக பெரிய அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 *அந்ததந்த வயதில் கற்றுக்கொள்ளவேண்டிய அனைத்தும் இப்போதே கற்றுக் கொள்கிறார்கள்.*

இந்த மொபைல் போன்ஐ தவறாக பயன்படுத்தும் போது எழுந்து வரமுடியாத அளவு சாக்கடைக்குள் விழுகிறார்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.  

பள்ளிகள் பாதுகாப்பான சூழ்நிலையையே ஏற்படுத்தி தருகிறது.

தினமும் இரண்டு முறை temperature செக் செய்கின்றனர்,

பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க சொல்லி ஆசிரியர்கள் அறிவுறுத்து கின்றனர். 

இதெல்லாம் வீட்டில் சாத்தியமா என்பதை நன்றாக சிந்தியுங்கள்.  
கிராமப் புறங்களில் உள்ள பெற்றோர்கள் வேலைக்கு சென்றவுடன், அவர்களுடைய பிள்ளைகளும் வெளியில் கூட்டமாக விளையாட செல்கின்றனர்.

ஏரிகளிலும் குளங்களிலும் கூட்டமாக மீன் பிடிக்க செல்கின்றனர்.

அங்கே சில விபத்துகளும் நடக்கிறது.

வீட்டிற்கு அருகிலுள்ள கிணறுகளுக்கும், குளம், குட்டைகளுக்கும், ஆறுகளுக்கும் சென்று விபரீதம் புரியாமல் விளையாடி சிலர் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

வேலைக்கு சென்ற பெற்றோர்களும் வேலையில் 
முழு கவனம் செலுத்த முடியாமல் குழந்தைகளை பற்றிய பயத்திலேயே இருக்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டிருந்த நாட்களில் மாணவ மாணவிகளின் இறப்பு விகிதம் எப்படி நடந்தது என புள்ளி விபரங்களை எடுத்துப் பாருங்கள் கொரோனா இறப்பை விட பல  மடங்கு அதிகமாக இருக்கும்.

கிணற்றிலும், குளம் குட்டைகளிலும் விழுந்து இறந்தவர்களே அதிகமாக இருப்பார்கள்.

அதற்கு அடுத்தபடியாக வாகன விபத்தில், பருவம் அறியா இளம் வயதிலேயே காதலில் சிக்கி ஓடிப்போய் முடிவெடுக்கத் தெரியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களே அதிகமாக இருப்பார்கள்.

அதற்கு அடுத்து ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி தன்னிலை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களே இருப்பார்கள்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டதால் வயதுக்கு மீறிய சேர்க்கையினால் ஒழுக்கம் கெட்டு பெற்றோரை மதிக்காமல் பல்வேறு குற்ற செயல்கள் செய்வதற்கு நாமே வழிவகுத்து கொடுக்கிறோம்.

கடந்த இரண்டு வருடங்களில் கொரோனாவால் இறந்த குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை விகிதத்தையும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டதால் பல்வேறு தேவையற்ற செயல்களால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை விகிதத்தையும் கணக்கிட்டு ஒப்பிட்டு பாருங்கள்.

நிச்சயமாக பல மடங்கு அதிகமாக இருக்கும்.

சமூக ஊடகங்கள் அனைத்தும் ஏதேதோ காரணங்களுக்கு சர்வே எடுக்கிறீர்கள்.

இந்த விசயங்களுக்கு ஒரு சர்வே எடுத்துப் பாருங்களேன்.

உங்களுக்கு என்ன பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டு இருப்பதால் இனி நிறைய லைக்ஸ் வரும், நிறைய Subscriber கள்  வருவார்கள்  
சில ஊடகங்கள் வெளியிடும் சமுதாயத்தை சீரழிக்கும் வீடியோக்களை பார்ப்பதற்க்கு நிறைய பார்வையாளர்கள் வருவார்கள்.

இனி முழுநேரமும் மொபைல் போனிலேயே மூழ்கி கிடப்பார்கள்.

எப்படி பெற்றோர்களை ஏமாற்றுவது என கற்றுக் கொள்வார்கள்.

*கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை மொபைல் டேட்டா ரீசார்ஜ் செய்ய ஏதேதோ பொய்யான காரணம் சொல்லி பிடுங்குவார்கள்.*

முடிவில் கொரோனாவிற்காக போடப்பட்ட லாக்டவுன் இன்றைய தலைமுறை மாணவர்களின் எதிர்காலத்தை மொத்தமாக சீரழிக்கும் லாக்டவுன் ஆக  நிச்சயமாக மாறும்.

*லாக்டவுன் போடப்பட்டதால் மனதளவில் சீரழிக்கும் தேவையற்ற அனைத்தையும் பொது வெளியில் கற்றுக் கொண்டு, லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கும் போது சமுதாயத்தை சீரழிக்கும் மொத்த விசயத்தையும் பல்வேறு இடங்களில் வரும் அத்தனை பேரும் ஒன்றாக ஒரே வகுப்பறையில் அமர்ந்து பேசும் போது என்னவாகும் என்று சற்று சிந்தித்து பாருங்கள்.*

இதனால் ஏற்படும் விளைவு களுக்காக மீண்டும் லாக்டவுன் போட வேண்டிய சூழ்நிலை கூட நிச்சயம் ஏற்படலாம்.

சமூக ஊடகங்களை நடத்துபவர்கள் மற்றும் அதில் வேலைபார்ப்பவர்களிடம் வேண்டி கேட்டுக் கொள்வது.....

உங்களின் குழந்தைகளும், உங்கள் உறவினர்களின் குழந்தைகளும், 

உங்கள் நண்பர்களின் குழந்தைகளும் 

இதில் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

உள்ளதை உண்மையாக சொல்லுங்கள்.

பெற்றோர்களை ஒருவித பயத்துடனே வைத்து இருக்கிறீர்கள்.

பள்ளி கல்லூரிகளை மூடுவதற்கான செய்தியையே முதன்மை செய்தியாக வெளியிடு கிறீர்கள்.
 
*மற்ற துறைகளுக்கும் கொரோனாவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதைப்போல் செய்தி வெளியிடுகிறீர்கள்.*

*இந்த தலைமுறை யிடம் உலகத்தை, சமுதாயத்தை தெளிவாக எதிர் கொள்வதற்கான அத்தனை கல்வி முறைகளும் இழுத்து மூடப்பட்டுள்ளது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்….*
         
*அன்பையும், மனிதாபிமானத்தையும்*
*விழிப்புணர்வையும், மரியாதை யையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் கல்விக் கூடங்கள் அனைத்தும்.*
*உயிர்தன்மையோடு இருக்க வேண்டும்.*

ஆனால் கொரோனா என்னும் வார்த்தையால்
உயிரற்று கிடக்கிறது அத்தனையும் இன்று..!

*அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்று நம் பாட்டன் அன்றே அறிவுறுத்தி இருக்கிறான்.*

*சற்றே சிந்திப்போம்*

நமது விலை மதிக்க முடியாத சொத்து நம் பிள்ளைகளே என்பதை உணர்வோம். 

வீடுகளில் உள்ள மூத்த குடிமக்கள், தமது பேரன் பேத்திகளின் நலனுக்காக, நடுத்தர வயதினர் தமது சந்ததியின் நலனுக்காக சிந்தித்து அனுசரித்து நடப்போம். 

வழி நடத்தும் ஆசான்கள் மீது வலை போடப் பட்டுள்ளது. ஆசிரியர்கள் என்ற தோட்டக் காரர்களின் மேற்பார்வை இன்றி, நம் சொந்தப் பயிர்கள் வீணாகிக் கொண்டுள்ளன. 

கவனம்.

சமூக அக்கறையுடன்....

நன்றி..

பகிர் பதிவு