Saturday, April 19, 2014

சோறா? சப்பாத்தியா ?

 

 





ஒருநாள் தொடர்வண்டியில் ஒரு தமிழரும் சர்தார்ஜி ஒருவரும் பயணம் செய்தார்கள். தமிழர் பார்க்க கொஞ்சம் நோஞ்சானாக இருந்தார். ஒல்லியான உடல்வாகு. சர்தார்ஜி வாட்டசாட்டமாக இருந்தார். அவருக்கு தமிழரைக்கண்டதும் அவரை வெறுப்பேற்ற வேண்டுமென்ற ஆவல் மேலோங்கியது.

சர்தார்ஜி;- “தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள்?
தமிழர்;- “சாதம் “
சர்தார்ஜி:- “அதான் இப்படி இருக்கிறீர்கள், சப்பாத்தி சாப்பிட்டுப்பாருங்கள் என்னைமாதிரி வலுவாக இருப்பீர்கள் “
தமிழர் :- “சரிங்க
தமிழர் அவரது பெட்டியை கடினப்பட்டு தூக்கி வைக்கிறார். சர்தார்ஜி அதனை மிக எளிதாக நகர்த்தி வைத்துவிட்டு அதுக்குத்தான் சப்பாத்தி சாப்பிடுங்கள் என்றேன் என்று கூறி தன் கையை மடக்கி புஜபலத்தை காண்பித்து நக்கலாக சிரித்தான். இப்படியாக பலமுறை தமிழரை  சோறு சாப்பிடுபவன் என்று மட்டம் தட்டி பேசிக்கொண்டிருந்தார். தமிழருக்கு எரிச்சலாக இருந்தது.
தமிழர் ஆபத்து நேரங்களில் உடனடியாக தொடர்வண்டியை நிறுத்தும் ‘அவசரச்சங்கிலி அருகே சென்று அதனை இழுப்பதுபோல் பாசாங்கு செய்தார். இதனை கவனித்த சர்தார்ஜி அதனை வேகமாக இழுத்து ‘அதுக்குத்தான் சப்பாத்தி சாப்பிடனும் அப்படினுச்சொன்னேன் என்றார்.
தொடர்வண்டி நின்று விட்டது. அனைத்து அதிகாரிகளும் வந்து சங்கிலியை யார் இழுத்தது இழுக்கப்பட்டதற்காண காரணம் கேட்க....அனைவரும் சர்த்தார்ஜி தான் இழுத்தார் எனச்சொல்ல....
சர்தார்ஜி முழித்துக்கொண்டிருக்க அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழர் மெதுவாக சர்தார்ஜியிடம் சொன்னார் “இதுக்குத்தான் சோறு சாப்பிடணும் அப்படினு சொல்றது என கூறிவிட்டு வேகமாக சென்று விட்டார்

No comments: