Wednesday, April 02, 2014

இரவில் நன்றாகத் தூங்க...!

இரவில் நன்றாகத் தூங்க...!



ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது.

பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.

இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்.

பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.



சமையலில் ஏலக்காய் சேர்ப்போம்...!


சாதாரண வாசனைப் பொருள் என்று நாம் நினைக்கும் ஏலக்காயின் மருத்துவப் பயன்கள் மிக அதிகம்.

1.5 கிராம் ஏலக்காய் வீதம் ஒரு நாளைக்கு இரண்டு முறை என 12 வாரங்களுக்கு ஏலக்காயை எந்த விதத்திலாவது உணவில் சேருங்கள்.

உயர் ரத்த அழுத்தம் சராசரிக்கு வந்துவிடும் என்கிறது 2009&ம் ஆண்டு வெளியான இந்தியன் ஜர்னல் ஆஃப் பயோகெமிஸ்ட்ரி அண்ட் பயோஃபிசிக்ஸ். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கொடுக்கப்படும் மாத்திரை எப்படி செயல்படுகிறதோ, அந்தச் செயலை ஏலக்காய் செய்கிறது.

No comments: