Tuesday, April 29, 2014

துருப்பிடித்த நேயம்..!


சடுதியில் விலகிச்செல்லும்
பைத்தியக்காரனின் அருகாமையென
இழந்துகொண்டிருக்கிறோம் நமக்கான இயல்புகளை..!

நின்று நிதானமாய் எதையும் ரசித்திட
அவசியமோ அவகாசமோ ஏதுமிருப்பதில்லை..!

பக்கத்து இருக்கைக் குழந்தையின் அழுகையில்
முகஞ்சுளிப்பதில் தோற்றுப்போகிறது
ஆதி மனிதனின் ஆசுவாசங்கள்...!

வண்ணத்துப்பூச்சியை மீண்டும் புழுவாக்கும் முயற்சியில்
லயித்துக்கிடக்குமித் துருப்பிடித்த நேயத்தில்
துர்நாற்றமடிக்கிறது தேங்கிக்கிடக்கும் ரத்தக்கறைகள்..!

காயங்களைக் குத்திக்கிழிக்கும் கோணிகளைக்கொண்டு
வேறேதும் செய்வதற்கில்லை நாம்..!

வாழ்விற்கான சாத்தியங்களில் தொலைந்துபோகிறது

வாழ்வதற்கான முகாந்திரங்கள்..!!
 
நன்றி 
அன்பன் 
சிவா...
 

No comments: