Friday, April 04, 2014

குட்டிப் பட்டாசு.

 

மத்தாப்பூச் சிரிப்பில்
சக்கரமாய்ச் சுற்றுகிறது உள்ளம்.


சாட்டையாய்ச் சுழலும் ஜடையில்
சரம் சரமாய்ப் பூத்து வெடிக்கிறது முல்லைச்சரம்.


பொட்டு வெடியா, புஸ்வாணமா,
பாம்பு மாத்திரையா , பென்சில் வெடியா
பொறிந்து பொறிந்து போகிறது காலம்.


ஓளிதீட்டும் வெளிச்சத்தில் ஓவியமாய்
பல்காட்டிச்சிரிக்கும் உன்னைப்பார்த்து
அதிர்வேட்டைப் போல அதிரும் மனம்.


அன்புடன் 
சிவா ....

No comments: