Tuesday, June 09, 2020

புதிய பார்வை.. புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

ஒரு
சீடன் 
குருவிடம்...

தன் மனம்
அடிக்கடி அலை
பாய்வதாகவும்
அதை அடக்க 
முடியவில்லை
என்றும்...

அதற்காக
தவம் செய்ய 
முடிவு செய்து
இருப்பதாகவும்...

தன்னை 
ஆசிர்வதிக்கவும்
வேண்டினான்.

குருவும் 
அவனை
ஆசிர்வதித்து 
அனுப்பி வைத்தார்.

ஒரு காட்டு
பகுதியில்
தவம் செய்ய 
தொடங்கினான்
சீடன்.

அப்போது
மலர்களின் 
வாசனை
அவன் 
மூக்கை
துளைத்தது.

அதனூடே 
ஒரு பெண் 
நடந்து 
சென்றாள்.

அவன் தவம்
கலைந்தது.

அடுத்த 
நாள்...

வாசனையை
முகர கூடாது 
என்று மூக்கை மூடிக்கொண்டான்.

தவம்
தொடர்ந்தது.

அதே நேரம்
ஜல் ஜல் என
கொலுசு சத்தம்
கேட்டது.

நேற்று
தவத்தை
கலைத்த
அதே பெண்
நடந்து 
சென்றாள்.

தவம் 
கலைந்தது.

அடுத்த 
நாள்....

மூக்கையும்
காதையும்
மூடி கொண்டான்.

தவம்
தொடர்ந்தது...

அதே நேரத்தில்
அதே பெண்
வண்ணமயமான
ஆடை அணிந்து
நடந்து சென்றாள்.

அதை பார்த்த
அவன் தவம்
கலைந்தது.

அடுத்த நாள்
மூக்கை
காதை
கண்ணை
மூடி கொண்டு
தவத்தில்
ஈடுபட்டான்.

இருப்பினும்
அந்த பெண்
வரும் நேரம்
பார்த்து...

அவன்
மனம்....

இன்னும் 
சற்று நேரத்தில் 
அந்த பெண் 
வருவாள் 
என்று 
கூறியதாம்.

மனதை அடக்க
நினைத்தால்
அது அலையும்.

அறிய 
நினைத்தால்
அது அடங்கும்.

இது 
மகரிஷியின்
வாக்கு.

உன்னை 
அறிந்தால் 
நீ உன்னை 
அறிந்தால்
உலகத்தில் 
போராடலாம்...

உயர்ந்தாலும் 
தாழ்ந்தாலும்
தலை
வணங்காமல் 
நீ வாழலாம்.

இது
நல் கருத்தை 
கூறும்
பாடல் வரிகள்

வாங்க...

மகரிஷியின்
வாக்கின்
படியும்...

கவியரசரின்
வார்த்தைகளின்
படியும்...

நம் 
மனதை
நாம் அடக்க 
நினைக்காமல்...

நம்
மனதை
நாம் அறிய 
முற்படுவோம்.

அற்புத 
வாழ்வில்
மலரவும்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

💫💫💫💫💫💫💫💫💫

No comments: