Thursday, June 18, 2020

புதிய பார்வை ...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

எடுத்த 
முயற்சிகள்
எல்லாமே 
தோற்றதாகவும்...

வெற்றி என்பதே
எட்டா கனியாக
இருப்பதாகவும்...

விரக்தியில்
இருந்து விடுபட
வழி ஒன்றை
கூறுமாறும்...

ஞானியிடம்
வேண்டினார்
ஒருவர்.

உன்னை முன்னேற
விடாமல் ஒருவன்
தடுத்து கொண்டு
இருக்கிறான்.

அவனை 
நான் பார்த்து 
கொள்கிறேன்.

நீ
நாளை வா
என்று சொல்லி
அனுப்பினார் ஞானி.

மறுநாள்
அம்மனிதர்
வந்து ஞானியை
சந்தித்தார்.

ஞானி...

உன்னை முன்னேற
விடாமல் தடுத்த
அவனை...

அந்த
பெட்டியில்
வைத்திருக்கிறேன்.
விருப்பம் இருப்பின்
போய் பார் 
என்றார்.

அது ஒரு
சவப்பெட்டி.

உள்ளே 
திறந்து
பார்த்தவர்
அதிர்ந்து போனார்.

காரணம்
பெட்டியின் உள்ளே
யாருமில்லை.

மாறாக
முகம் பார்க்கும்
கண்ணாடி ஒன்று 
அங்கு வைக்க
பட்டிருந்தது.

அதில் 
அவர் முகம்
தெரிந்தது.

கோபத்தின்
உச்சிக்கு சென்ற
அம்மனிதர்...

நீங்கள்
இவ்வாறு
செய்யலாமா???
என ஆவேசமாக
கேட்டார்.

ஞானி...

சவபெட்டியில்
தெரிவது உன்
முகமல்ல...

உனக்குள் நீ 
வகுத்து கொண்ட
தேவை இல்லாத...

எல்லைகள்.
கோடுகள்.
தடைகள்.

அவைகளை
குழி தோண்டி
புதைத்து விடு.

உனக்குள் 
இருக்கும்
அற்புத 
ஆற்றல்களை
உணர்ந்து...

அதை உன்னால் 
சாதித்து காட்ட 
முடியும் என்று
நம்பிக்கை 
கொண்டு...

புதிய 
மனிதனாய்
புறப்பட்டு வா.

இனிமேல் 
நீ தொட்டது
அனைத்தும்
துலங்கும்.

வெற்றி மேல்
வெற்றி வந்து
உன்னை 
அடையும் "

என்று
வாழ்த்தி
அனுப்பினார்.

"நீ 
 யாராக
 மாறவேண்டும்
 என்று 
 நினைக்கிறாயோ

 அவராகவே
 மாறும் சக்தி
 உனக்குள் உண்டு"

இது
விவேகானந்தரின்
வாக்கு.

வாங்க...

நேற்றைய
மனிதனை
இழந்து...

இன்று
புதிதாய்
பிறந்து...

நாளைய
வரலாற்றில்
இடம் பிடிக்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


No comments: