Friday, June 26, 2020

புதிய பார்வை...புதிய கோணம்,..

🍁🍁புதிய பார்வை🍁🍁

1976
பாலிவுட் 
உலகத்தின்
திருப்பு முனை.

ஷோலே
திரைப்படம்
சக்கைப்போடு
போட்ட படம்.

இதில்
இரண்டு
கதாநாயகர்கள்.

ஒருவர்
ஏற்கெனவே
புகழ் பெற்ற
தர்மேந்திரா.

மற்றொருருவர்...

அப்போது தான்
துறையில் 
நுழைந்து
பிரகாசிக்க
தொடங்கிய
அமிதாப் பச்சன்.

ஏறக்குறைய
45 ஆண்டுகள்
ஆகின்றன.

இருவரில்
ஒருவர் மட்டுமே
இன்றளவும்
ஜொலித்து
கொண்டிருக்கிறார்..

என்பது 
வயதை
தாண்டியும்
இன்னமும்
மக்கள் மனதில்
வாழ்ந்து கொண்டு
இருக்கிறார்.

அவர்
அமிதாப்.

காரணம்
என்ன???

அவர் 
ஒவ்வொரு
நாளும் தன்னை
Re - invent செய்து
கொண்டே 
இருப்பது
தான்.

இடையில்
கூலி படத்தில்
விபத்து 
ஏற்பட்டு
படுத்த 
படுக்கையில்
இருந்த போதும்...

ஒட்டு மொத்த
மக்களின்
பிரார்த்தனை
மற்றும்
தன்னுடைய  விடா 
நம்பிக்கையாலும்
மீண்டு வந்தவர்
அவர்.

தன்னுடைய
A B C L 
நிறுவனம்
நட்டத்தில் 
சென்றது...

அரசியலில்
முக்கியத்துவம்
கிடைக்காதது...

என
தொடர் 
தோல்விகள்
கிடைத்தும் கூட...

மனம்
தளராமல் 
தன்னுடைய 
இமேஜ் ஐ
விட்டு கொடுத்து...

தொலை காட்சி
தொடர்களில்
நடிப்பது...

திரையில்
சிறப்பான
பாத்திரங்களை
தேர்ந்தெடுத்து
நடிப்பது என...

அவர்
தன்னை
புதுப்பித்து 
கொண்டே
இருந்ததின்
விளைவு...

இன்றளவும்
மக்கள் 
மனதில்
மணந்து
கொண்டு
இருக்கிறார்.

வாங்க...

முயற்சிகள்
செய்யாதவன்
முடங்கி
கிடக்கிறான்.

தொடர்ந்து
முயல்பவன்
சாதித்து 
கொண்டு
இருக்கிறான்

என்னும்
வரிகளுக்கு
ஏற்ப...

நம்முடைய
சிந்தனைகளை
நாமும்
புதுமை
படுத்துவோம்.

புதிய உயரம் 
தினம் தொட
நடையை 
போடுவோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


No comments: