Wednesday, June 10, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பாதை 🍁🍁

அரசர் ஒருநாள்
தம் மந்திரியுடன்
ஊர் மிகவும்
சுத்தமின்றி
சுகாதாரமின்றி
இருப்பதாகவும்...

இதனால் மக்கள் 
பாதிக்கபடுவார்கள்
என்றும்...

மக்களுக்கு
எத்தனை முறை
சொன்னாலும்
கேட்பதேயில்லை
என்று கூறி
வருத்தப்பட்டார்.

மறுநாள் காலை
இது தொடர்பாக
பேச மந்திரியை
அழைத்தார்.

மந்திரி 
நகர்வலம்
சென்றதாக 
தெரிவிக்கப்பட்டது.

மன்னரும்
நகர்வலம் 
கிளம்பினார்.

ஒரு 
தெருவில்
மந்திரி 
குப்பைகளை
ஒன்றாக சேர்த்து
தீ வைத்து எரித்து
கொண்டிருந்தார்.

இதை பார்த்த
அந்த ஊர் 
தலைவர்
பதட்டத்துடன்
தானும் 
மந்திரியுடன்
சேர்ந்து... 

தெருவை
சுத்தம் செய்ய
தொடங்கினார்.

இதை கண்ட
ஊர் மக்களும்
அவர்களுடன்
இணைந்து
சுத்தம் செய்ய
தொடங்கினர்.

சற்று நேரத்தில்
ஊரே சுத்தமாகி
போனது.

இதை கண்ட
மன்னர் மகிழ்ச்சி
அடைந்து...

மந்திரியையும்
அந்த ஊர் 
தலைவரையும்
மக்களையும்
மனதார 
பாராட்டினார்.

மந்திரி
நினைத்திருந்தால்
ஒரு ஆணையை
போட்டு விட்டு...

அதன்படி
ஊர் தலைவர்
நடக்கும்படி
உத்தரவு
இட்டிருக்கலாம்.

ஊர் 
தலைவரும்
அதேபோல்
பணியாளர்களை
சுத்தம் செய்ய
பணித்து
இருக்கலாம்.

ஆனால் 
இவைகளை 
எல்லாம் கடந்து...

மந்திரியே
களத்தில் இறங்கி
முன்னுதாரணமாக
சுத்தம் செய்ய
தொடங்கியதால்
மக்கள் மனம்
மாற்றம் பெற்றது

இதனால்
ஊரே சுத்தமாய்
மாறிப்போனது.

எந்த ஒரு
நடைமுறையும்
வெற்றி பெற
வேண்டுமெனில்...

பேசிக்கொண்டே
இருந்தால்
போதாது.

செயலில்
இறங்கி
செய்து காட்ட 
வேண்டும்.

இந்த கதை
கூறும்
செய்தியும்
அதுவே.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

💫💫💫💫💫💫💫💫