Tuesday, June 16, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

குரு 
ஒருவரிடம் 
செல்வந்தர்...

என் 
மனம் 
மிகவும் 
குழப்பத்தில் 
இருக்கிறது...

என் 
பணியாட்கள்
கூட எனக்கு 
உண்மையாக 
இல்லை...

மனைவி, 
பிள்ளைகள் 
உள்பட உலகமே 
சுயநல கூட்டமாக 
உள்ளது...

யாருமே 
சரியில்லை 
என்றார்.

புன்னகைத்த 
குரு கதை 
ஒன்றை 
சொன்னார்.

ஓர் 
ஊரில் 
ஆயிரம் 
கண்ணாடிகள் 
இருக்கிற அறை 
ஒன்று இருந்தது. 

அதற்குள் 
சென்று 
ஒரு சிறுமி 
விளையாடினாள். 

தன்னை
சுற்றி ஆயிரம் 
குழந்தைகளின் 
மலர்ந்த முகத்தை 
கண்டு மகிழ்ந்தாள். 

அவள் 
கை 
தட்டியவுடன், 
ஆயிரம் 
பிம்பங்களும் 
கை தட்டின. 

உலகிலேயே 
மகிழ்ச்சியான
இடம் இதுதான்...

என்று 
எண்ணி,
அடிக்கடி அங்கே 
சென்று விளையாடி
மகிழ்ந்தாள்.

அதே 
இடத்துக்கு 
ஒருநாள் 
மனநிலை 
சரியில்லாத 
ஒருவன் வந்தான். 

தன்னை 
சுற்றி 
ஆயிரம் 
கோபமான 
மனிதர்களை 
கண்டான். 

அச்சம் கொண்ட 
அவன், அந்த 
மனிதர்களை 
அடிக்க கை 
ஓங்கியவுடன்...

ஆயிரம் 
பிம்பங்களும் 
அவனை அடிக்க 
கை ஓங்கின. 

உலகிலேயே 
மோசமான இடம் 
இதுதான்...

எனக் கூறி, 
அவன் அங்கிருந்து 
வெளியேறினான்.

"இந்த 
 சமூகம் தான் 
 ஆயிரம் 
 கண்ணாடிகள் 
 இருக்கிற அறை. 

 நாம் 
 எதை வெளி
 படுத்துகிறமோ 
 அதையே 
 சமூகம் 
 பிரதிபலிக்கிறது.

 உன் மனதை
 குழந்தையை 
 போல் நீ
 வைத்திரு.

 உலகம் உனக்கு 
 சொர்க்கமாகும்"

என்றார் 
குரு.

குருவின்
கூற்றுப்படி...

நம் 
வாழ்வின்
சொர்கமும்
நரகமும்
நம் கையில்.

எண்ணங்கள்
சீரானால்
வாழ்க்கையே
சிறப்பாகும்.

நல்லதை
வெளி
படுத்துவோம்.

நல்லதே
நடக்கும்.

வாய்ப்புகள்
நம் வசம்.

வளமாக
வாழ்ந்து
பார்க்க...

முயற்சிகள்
செய்யலாம்
வாங்க...

அன்புடன்
காலை
வணக்கம்.


1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மிகவும் தன் முனைப்பான கவிதை வாழ்த்துக்கள்