Monday, June 15, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🍁🍁புதிய பார்வை🍁🍁

இளைஞன்
ஒருவன்
பெரியவருடன்
பேசும் போது...

'கடவுள் எனக்கு
 எந்த உதவியும்
 செய்ததில்லை'...

என்று
கூறினான்.

அதற்கு
பெரியவர்...

"இறைவனை
 உணர்ந்து
 கொள்ளும்
 தன்மை...

 உனக்கு
 இன்னும்
 வாய்க்கவில்லை"

என்று
இளைஞனிடம்
கூறினார்.

சில நாட்கள்
சென்றன.

இளைஞன்
நண்பனை
பார்க்க ஒரு
கிராமத்திற்கு
சென்றான்.

அந்த ஊர் 
ஒரு காட்டை 
தாண்டி
செல்வதாய்
இருந்தது.

இளைஞனுக்கு
அது புதிய வழி.

நேரமோ
மாலை மங்கும்
வேளையாய்
இருந்தது.

காட்டில்
ஒரு இடத்தில்
பல வழிகள்
பிரிந்தன.

எதில் செல்வது
என்று குழப்பம்
மேலிட்டது.

இருள் வேறு
தொடங்க
ஆரம்பித்தது.

புது வித
சப்தங்கள் கேட்க 
இவனுக்கு
மெலிதாய் பயம்
பிடிக்க 
தொடங்கியது.

அந்த நேரம் ஒரு
விறகு வெட்டி
அந்த வழியாய்
வந்தார்.

இளைஞன்
அவருடன்
அந்த ஊருக்கு
செல்லும்
வழியை 
கேட்டான்.

அவர்
தான் அந்த
ஊருக்குத்தான்
செல்வதாகவும்
தன்னை
தொடரும்படியும்
கூறினார்.

சில 
நிமிடங்களில்
இருவரும்
அந்த ஊருக்கு
போய் சேர்ந்தனர்.

அன்று 
மாலையே 
இளைஞன்
பெரியவரை
பார்த்தான்.

பேச்சினூடே
நடந்த 
நிகழ்ச்சிகளை
அவரிடம்
கூறினான்.

பெரியவர்
இளைஞனிடம்...

"நீ காட்டில் 
 செல்லும் வழி 
 தெரியாமல்
 தவித்த அந்த
 நேரத்தில்...

 விறகு வெட்டி
 வந்த காரணம்
 என்ன ??? "

என்று
வினவினார்.

இளைஞனுக்கு
பதில் சொல்ல
தெரிய வில்லை.

"கடவுள் 
 உனக்கு
 உதவியதே 
 இல்லை
 என்று 
 கூறினாயே

 அன்று 
 அந்த 
 நேரத்தில் 
 வந்தது
 இறைவனே.

 ஒன்று 
 நினைவில்
 வைத்துக்கொள்.

 இறைவன் 
 எந்த
 நேரத்திலும் 
 நேராக
 வர மாட்டார்.

 நீ தவித்ததை 
 போலவே
 மக்கள் தவிக்கும்
 நேரங்களில்...

 விறகு வெட்டி
 வந்து உனக்கு
 உதவியதை 
 போல...

 யாராவது 
 ஒரு மனிதர் 
 வடிவத்தில்
 வந்து நம்மை
 காப்பாற்றுவார்.

 இது தான் 
 இறைவனை
 உணரும்    
 தருணங்கள் "

என்று 
கூறினார்.

'நமக்கு 
 உதவும்
 யாருமே...

 மனித
 வடிவில் 
 உலவும்
 கடவுளர்களே'

என்பது
உண்மைதானே.

வாங்க...

மனிதர்களை
மதிப்போம்.

மனசார
அவர்களை
துதிப்போம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.


No comments: