Wednesday, August 12, 2020

புதிய பார்வை புதிய கோணம்.



மன்னர் 
ஒருவர் இருந்தார்.

தம் 
நாட்டில்‌
மிக சிறந்த 
ஒருவரை 
தேர்ந்தெடுத்து...

அவரை 
கௌரவிக்க 
விரும்பினார்.

மந்திரிகளை 
அழைத்து 
அதற்கான
தெரிவினை
செய்து தருமாறு 
வேண்டினார்.

அவர் 
ஆணைப்படி 
மந்திரிகள் 
பத்து நபர்களை 
தெரிவு செய்தனர். 

வறுமையில் 
பிறந்தாலும்
அறிவாற்றலின்
துணை கொண்டு
அறிஞர் ஆனவர்.

வாணிபத்தில் 
சிறந்து கூடவே 
அற செயல்கள் 
செய்து வருபவர்.

படைப்புகளில்
மக்களால் பெரிதும்
ரசிக்கப்படும்
கவிஞர்.

மக்கள் 
விரும்பும் 
மருத்துவர்.

சிறந்த 
கட்டிடக் 
கலைஞர்.

இப்படி 
பத்து நபர்களை 
தெரிவு செய்து
அவர்களை...

மன்னரிடம் 
அழைத்து
சென்றனர் 
மந்திரிகள்.

இவர்களில் யாரை 
தேர்ந்தெடுப்பது 
என்பதில்...

குழப்பம் 
அடைந்தார் 
மன்னர்.

எல்லோரும் 
அவரவர் 
துறையில் 
சிறந்து 
விளங்கினர்.

என்ன 
செய்வதென்று 
மன்னருக்கு 
புரியவில்லை.

அப்போது 
ஒரு வயதான 
பெரியவரை 
காவலர்கள்
கைத்தாங்கலாக 
அழைத்து 
வந்தனர்.

சாதாரண 
உடையில் 
இருந்தாலும்...
 
அவரது 
கண்கள் ஒளி 
வீசுவதாகவும்...

முகத்தில் 
அன்பு 
மலர்ந்தும் 
இருந்தது. 

" இவர் யார் ? "

என்று 
மன்னர் கேட்டார்.
 
" மேற்கூறிய 
  பத்து சாதனை
  புரிந்தவர்களின் 
  ஆசிரியர் இவர் "

என்று  கூறினர்
காவலர்கள்.

இதை கேட்ட 
மன்னர் மிகுந்த 
மகிழ்ச்சி அடைந்து...

தன் 
ஆசனத்திலிருந்து 
எழுந்து வந்து...

அந்த 
ஆசிரியரை 
கைகூப்பி 
வணங்கினார்.

மேலும்...
 
" சாதனை புரிந்த
  இந்த பத்து 
  பேரும்...

  சிறந்த 
  மனிதர்கள்தான்
  சந்தேகமில்லை.

  இருப்பினும்...

  இவர்களை 
  உருவாக்கிய 
  ஆசிரியரரான
  இவரே... 

  மிக 
  சிறப்பு 
  வாய்ந்தவர்.

  இவரே
  இந்த நாட்டில் 
  மிக சிறந்த 
  மனிதர் "

என்று நாட்டு 
மக்களுக்கு 
அறிவிப்பு
செய்தார்.
 
மேலும்...

பண முடிப்பும்
பரிசுகளும்
வழங்கி...

அவரை 
மனமுவந்து
கௌரவித்தார்.

சாதனை புரிந்த
பத்து பெரும்...

மன்னரின் 
தீர்ப்பை
மனமுவந்து 
ஏற்றதுடன்...

ஆசிரியரின் 
காலில் விழுந்து 
வணங்கி...

அவரிடம்
ஆசிகளையும்
பெற்றனர்.

வாங்க.

அகிலத்தை
மாற்ற கூடிய
அற்புத சக்தி
படைத்தவர்கள்
ஆசிரியர்கள்
மட்டுமே.

அவர்களை
மதிப்பதில்
பெருமை
கொள்வோம்.

அவர்களை
துதிப்பதில்
மகிழ்ச்சி
அடைவோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி
முனை. சுந்தரமூர்த்தி