Friday, August 14, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

🇮🇳  புதிய பார்வை  புதிய கோணம்  🇮🇳

ஒரு 
பத்திரிக்கையாளர் 
கூட்டம்.

" இந்தியா 
  விடுதலை
  பெறுமா ??? "

ஒரு
நிருபரின் 
கேள்வி இது.

" சூரியன் 
  கிழக்கில் 
  உதிப்பது 
  எவ்வளவு 
  உண்மையோ...
 
  அவ்வாறே 
  இந்தியா 
  விடுதலை 
  பெறும்

  ஆனால்...
 
  பெற்ற 
  விடுதலையை 
  பேணிக்காக்க 
  ஆட்கள் எங்கே ? "

சாது 
வாஸ்வானி 
பதில் இது.

இந்தியா
விடுதலை
பெற்று
73 ஆண்டுகள்
சென்றபின்...

இந்த
கேள்வியை
நாம்...

மறு
ஆராய்ச்சி
செய்து பார்க்க
வேண்டி உள்ளது.

பசியும்
பட்டினியும்
தலைவிரித்து
ஆடும் போக்கு
நின்ற பாடில்லை.

வறுமை
கோட்டின் கீழே 
உள்ளவர்கள்...

வாழ்வு 
நிலையில்
மேம்பட்டதாக
தெரிய வில்லை.

கீழ் 
தட்டில்
நிற்கும் மக்கள்...

மகிழ்ச்சியில்
இருப்பதாய்
புரியவேயில்லை.

நம் 
நாடு 
மேலும்
வளம் பெற...

மக்கள்
நலம் பெற...

அனைத்து நிலை
மனிதர்களும்
மகிழ்ச்சியுடன் 
வாழ...

இப்போதைய
தேவை...

நம்முடைய 
மனங்களை 
கையாளும் 
தன்மையில்
மாற்றம்.

மீண்டும் ஒரு
மன புரட்சி.

கல்விக்கு 
சாலை உண்டு

நூலுக்கு 
ஆலை உண்டு

நாட்டுக்கு 
தேவை எல்லாம்

நாம் 
தேடலாம்.

தோளுக்கு 
வீரம் உண்டு

தோற்காத 
நியாயம் உண்டு

நீதிக்கு 
நெஞ்சம் உண்டு

நாம் 
வாழலாம்.

சிரிக்கும் 
ஏழை முகம் 
பார்க்கலாம்.

சிந்தும் 
கண்ணீர்தனை 
மாற்றலாம்.

வாருங்கள் 
தோழர்களே

ஒன்றாய் 
சேருங்கள் 
தோழர்களே

என்னும்
மன
நிலையில்...

நாம் 
அனைவரும்
மாறுவோம்
எனில்...

அகில
உலகத்திற்கும்
தலைமை
தாங்கும்...

அற்புத 
தன்மை...

நம்மை
வந்தடையும்.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

நம்
நாட்டை
முன்னேற்ற
தொடங்கலாம்.

இனிய
சுதந்திர தின
நல் வாழ்த்துகள்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்...

இனிய சுதந்திர வாழ்த்துகள்...