Friday, August 07, 2020

புதிய பார்வை ...புதிய கோணம்.....

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

" நட்பு 
  என்பது, 
  சூரியன் போல...

  எல்லா நாளும் 
  பூரணமாய் 
  இருக்கும்.

  நட்பு 
  என்பது
  கடலலை போல...

  என்றும் 
  ஓயாமல் 
  தொடர்ந்து வரும்.

  நட்பு 
  என்பது, 
  அக்கினி போல...

  எல்லா 
  மாசுகளையும் 
  அழித்து விடும்.

  நட்பு 
  என்பது 
  தண்ணீர் போல...

  எதில் 
  ஊற்றினாலும் 
  ஒரே மட்டமாய் 
  இருக்கும்.

  நட்பு 
  என்பது
  நிலம் போல...

  எல்லாவற்றையும் 
  பொறுமையாய் 
  தாங்கி 
  கொள்ளும்.

  நட்பு 
  என்பது, 
  காற்றை போல...

  எல்லா 
  இடத்திலும் 
  நிறைந்து இருக்கும் "

வைர முத்து 
அவர்களின்
வார்த்தைகள்
இவை.

வாங்க...

ஆண்டிற்கு
ஒரு நாள்
மட்டும்...

நண்பர்கள்
நாள் 
எதற்கு ???

உண்மையான
நட்பிற்கு
ஒவ்வொரு
நாளுமே...

நண்பர்கள்
நாள் தான்
நமக்கு.

நட்பை
கொண்டாட
தொடங்குவோம்.
 
நட்பின்
ஆனந்த
அலையில் 
மூழ்கி...

முத்துக்கள்
எடுக்க
மகிழ்ச்சியில்
திளைக்க...

முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி முனை.சுந்தரமூர்த்தி..