Thursday, August 13, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

💕💕💕💕💕💕💕💕

20 
நொடிகள் 
வாழும் 
பூச்சிகளிலில்
இருந்து...

200 
ஆண்டுகள் 
வாழும் 
ஆமை வரை...

எல்லா
உயிர்களுக்கும்
ஒரு சிறப்பு 
உண்டு.

மலருக்கு 
தேன் 
வைத்தான். 

வண்டுக்கு 
உணரும் 
சக்தியை 
வைத்தான்.

குருவிக்கு 
சிறகு
வைத்தான். 

மீனுக்கு 
நீச்சல் 
வைத்தான்.
 
தேளுக்கு 
கொடுக்கு 
வைத்தான். 

நண்டுக்கு 
கிடுக்கி 
வைத்தான்.

இப்படி எல்லா
உயிர்களுக்கும்
ஒரு சிறப்பு...
 
ஆண்டவன் 
கொடுத்துதான்
இருக்கிறார்.

ஆனால்...

இவை 
எவற்றுக்கும் 
மனமோ
சிந்தனையோ
கிடையாது. 

தனக்கு 
இது எதுவும் 
கிடையாது 
என்பது கூட...

அதற்கு 
தெரியாது.

இருப்பினும் 
அவை...

அதன் 
சிறப்புகளை 
கொடுத்துக் 
கொண்டேதான் 
இருக்கின்றன.

அதே
போலத்தான்...

மனிதர்களுக்கும் 
பொதுவான 
ஒரு சிறப்பை...

இறைவன் 
கொடுத்து
இருக்கிறான்.

அதன் பெயர் 
' _*அன்பு*_ '

அன்பு 
என்பது...

நாம் 
வெளிப்படுத்தும் 
போதுதான்...

நமக்குள் 
அன்பு இருக்கிறது 
என்பதே நமக்கே 
தெரிகிறது. 

இந்த 
அன்பை 
வெளிப்படுத்த... 

எந்தவிதமான 
கலைகளும் 
தேவையில்லை.

கல்வியும் 
தேவையில்லை. 

ஆற்றலும் 
தேவையில்லை.

உண்மையில்...

இதற்கு
எந்த வித
செலவும்
இல்லை.

கருணையாக
காண்பதும்...

வாயார 
வாழ்த்துவதும்... 

மனமார 
புன்னகை 
செய்வதும்...

அன்பின்
வெளிப்பாடே.

- இசைக்கவி 
  ரமணன் -

' பார் முழுதும் 
  மனித குல
  அன்புதனை 
  விதைத்து...

  பாமரர்கள் 
  நெஞ்சத்தில்
  பண்புகளை
  வளர்த்து...

  போர் முறையை 
  கொண்டவர்க்கு
  நேர்முறையை 
  விதைத்து...

  சீர் வளர 
  தினமும் 
  வேகமதை 
  வளர்த்து...

  பெற்ற 
  திருநாட்டினிலே
  பற்றுதனை 
  விதைக்கணும்.

  பற்றுதனை 
  விதைத்துவிட்டு
  நல்ல 
  ஒற்றுமையை 
  வளர்க்கணும் '

உடுமலை
நாராயண
கவியின்
வார்த்தைகளை
நிஜ படுத்த...

முயற்சிகள்
செய்வோம்
வாங்க.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..

நன்றி
மீள்பதிவு..

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

அன்பே அனைத்தும்...