Tuesday, August 04, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...

🍁  புதிய பார்வை  🍁

மன்னர் 
ஒருவர் இருந்தார்.

ஒருநாள் இரவு 
தூக்கத்தில் ஒரு 
கனவு கண்டார்.

தனது 
அனைத்து 
பற்களும் 
விழுந்து 
விட்டதாக 
'அது' இருந்தது.

திடுக்கிட்டு 
விழித்த மன்னர் 
பயந்து போனார்.

மறுநாள்
ஆஸ்தான
ஜோதிடரை 
அழைத்து...

தான் கண்ட 
கனவினை 
விவரித்து...

" கனவின்
  விளைவாக 
  என்ன நடக்கும் ? "

என்று 
கேட்டார்.

ஓலை 
சுவடிகளை 
ஆராய்ந்த ஜோதிடர்... 

" உங்களுக்கு 
  முன்னரே 
  உங்கள் 
  சொந்தங்கள் 
  இறந்து
  விடுவார்கள் " 

என்று 
கூறினார்.

இதைக்கேட்டு 
வெகுண்ட 
மன்னர்...

ஜோதிடரை 
சிறையில்
அடைத்தார்.

மன 
சஞ்சலம் 
தீராத மன்னர்... 

வேறொரு 
புகழ்வாய்ந்த 
ஜோதிடரை 
வரவழைத்து...

தான் கண்ட 
கனவினை கூறி...

" இதன் 
  விளைவுகள் 
  என்னவாக
  இருக்கும் ? "

என்று 
வினவினார்.

அந்த
ஜோதிடர்... 

" மன்னா !
  
  உங்களுக்கு 
  நீண்ட ஆயுள் 
  உண்டு.

  உங்கள் 
  உறவினர்கள் 
  மறைந்த 
  பின்னரும்...

  நீங்கள் 
  உயிர்  
  வாழ்வீர்கள் "

என்று 
கூறினார்.

மன்னர் மகிழ்ந்து 
அவருக்கு பரிசுகள் 
கொடுத்து அனுப்பி 
வைத்தார்.

இரண்டு  
ஜோதிடர்களும்
கூறிய கருத்து 
ஒன்றுதான்.

ஆனால் 
சொல்லப்பட்ட 
விதம்தான் வேறு.

வாங்க...

எதிர்மறையான 
கருத்துக்களையும் 
நேர்மறையாக...

கேட்பவர் மனம்
வருந்தாதவாறு...

கூறும் 
விதங்களை 
அறிந்து 
கொள்வோம்.

' அந்த 
  அற்புத
  முறைகளை '

நம் வாழ்வில்
செயல் படுத்த...

முயற்சிகள்
செய்வோம்.

அன்புடன் 
இனிய
காலை
வணக்கம்