Sunday, August 30, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..



குருவிடம்
ஒருவர்...

'  தன்னை 
  எல்லோரும் 
  திட்டிக் கொண்டே
  இருக்கிறார்கள்
  புறம் கூறிகொண்டு
  இருக்கிறார்கள்
  அதனால் என்
  வளர்ச்சி பாழாகிறது
  மன அமைதியும்
  கெடுகிறது '

என்று
புலம்பி தள்ளினார்.

' வாழ்வில்
  வளர்ச்சி 
  பெறவும்
  மன அமைதி 
  கொள்ளவும்
  என்ன வழி ??? '

என்று 
கேட்டார்.

'  நீ 
  கழுதையா ?
  எருமையா ?
  குதிரையா ?

  என்பதை 
  பொருத்து...
 
  உன் 
  வளர்ச்சியும்
  மன அமைதியும்
  இருக்கும் '

என்று 
குரு  கூறினார்.

' ஒன்றும் 
  புரியவில்லை '

என்றார் 
இவர்.

' கழுதையை 
  ஒரு தட்டு 
  தட்டினால்...

  பின்னால் 
  எட்டி உதைக்கும். 

  எருமையை 
  ஒரு தட்டு 
  தட்டினால்...

  கொஞ்சமும்
  கண்டு கொள்ளாது.

  குதிரையை 
  ஒரு தட்டு 
  தட்டினால்...

  வேகமாக 
  ஓட தொடங்கும்.

  அதேபோல...

  நம்மை
  யாராவது
  திட்டினால்...

  சரிக்கு சமமாக 
  சண்டைக்கு போவது
  கழுதையை போல.

  இவர்களுக்கு 
  வளர்ச்சி என்பதே 
  இருக்காது.

  வீழ்ச்சி 
  என்பதாகத்தான் 
  இருக்கும்.

  நம்மை 
  யாராவது 
  திட்டினால்...

  கண்டு
  கொள்ளாமல்
  இருப்பது
  எருமையை
  போல...

  இவர்களுக்கு 
  வாழ்க்கை 
  வெறுமையாக 
  இருக்கும்.

  வளர்ச்சி 
  ஆமை வேகத்தில்
  இருக்கும்.

  நம்மை
  யாராவது
  திட்டினால்..

  அதை 
  வளர்ச்சிக்கான
  வாய்ப்பாக 
  மாற்றிக்கொண்டு...

  எதையும்
  பொருட்படுத்தாமல்...

  குதிரையை போல 
  ஓடிக்கொண்டே 
  இருந்தால்...

  இவர்களின்
  வாழ்வில் 
  விரைவான 
  வளர்ச்சியும்...

  வளமான 
  வாழ்க்கையும்...

  மன 
  அமைதியும்
  கிடைக்கும் '

என்று 
கூறினார் குரு. 

' உன்னை
  பற்றி யாரு 

  அட
  என்ன 
  சொன்னால் 
  என்ன

  இந்த 
  காதில் வாங்கி 

  அதை அந்த 
  காதில் தள்ளு '

வரிகளின் படி
வாழ்ந்தோம் 
எனில்...

வெற்றியும்
மகிழ்ச்சியும்
நமது காலடியில்
விழத்தொடங்கும்.

வாங்க...

முயற்சிகள்
செய்யலாம்.

முன்னேற
தொடங்கலாம்.

அன்புடன் 
இனிய
காலை 
வணக்கம்.

நன்றி
முனைவர்.சுந்தரமூர்த்தி