Friday, May 09, 2014

மௌனத்தின் மறுமொழி




நுரையீரல் முழுதும்
நிறைத்துக்கொண்ட
அவன் வாசம்
துணைநின்ற
தனிமையின் உச்சத்தில்
அவன் அருகின்றி
பிரக்ஞை
அற்றுப்போன
தருணங்கள்
மரணிக்கக்
காத்திருக்கின்றன!!!
அம்மரணத்தின்
மறுமுனையில்
ஜனனிக்கக் காத்திருக்கும்
கனவுகளுக்காக நான்!!!
இயல்பிற்கப்பாற்பட்ட
மொழியின் மௌனம்
சாத்தியமான
வேளைகளில்
விழிநீரின்
ஒற்றைப் பரிமான
வரைகோடுகள்
அவன் திசைநோக்கியே
இடமாற்றம் பெறுகின்றன!!

No comments: