Sunday, May 11, 2014

புன்னகை ஒன்றே போதுமே !




பொன்னும்  வேண்டாம்
பொருளும்  வேண்டாம்
அன்பு   நிறைந்த
வாய்  நிறைந்த
மனம்  நிறைந்த
புன்னகை  ஒன்றே போதும் -
அன்னையவள்  குதூகலிக்க !


பாராட்டுப்  பத்திரம்  வேண்டாம்
பகட்டான  பட்டும்  வேண்டாம்
பளபளக்கும்  பொன்னும்  வேண்டாம்
பசிக்காக  நாமழுத  போது
தன்  உதிரம்  அதையே
பாலாக்கி  கொடுத்தவள் மீது
பாசம்  கொண்டாலே  போதும் !


கரம் பற்றி  நடை  பயிற்றுவித்தவள்
நாம்  துவண்டு  விழுந்தபோது
கை கொடுத்து தூக்கி  விட்டு
நம்பிக்கையை  காலமெலாம்
துணையாக்கித்  தந்தவள்
கரங்களை  ஆசையுடன்
பற்றியிருந்தாலே  போதும் !


அன்னையர்தம்  ஆசியில்
ஆசையெலாம்  நிறைவேறும்
அன்னை  காட்டிய  அன்பினை
கற்றுத்  தந்த  பாசம் தனை
பிற  உயிர்கள் மீதும் காட்டினால்
அகிலமே  அழகாகும் ! - அன்பிலே
ஆனந்தமே  நிலையாகும் !


அன்னையர்   தின    நல்வாழ்த்துகள் !

நன்றி 
சிவா...

No comments: