Sunday, January 03, 2021

புதிய பார்வை...புதிய கோணம்...



_*மக்களுடன்*_
_*பழகுவது*_ 
_*ஒரு கலை*_

இந்த 
கலையில் 
சிறந்து 
விளங்குபவர்கள்

அவர் தம் 
வாழ்க்கையில் 
கொடி கட்டி 
பறக்கிறார்கள்.

வாழ்க்கை 
என்றால் உறவு 
என்று அர்த்தமாம்.

உள்ளங்கள் 
தோறும் 
உறவுகளை 
வளர்ப்பவர்கள்
வாழ்க்கையில்
 
வெற்றி 
மலர்கள் 
எப்போதும் 
பூத்து குலுங்கும்.

எல்லோரிடமும் 
பேசுவது 
அவசியமற்றது 
என்றாலும்

அவசியமானவர்
உடன்  
பழகுவதும்

அவர்களுடைய 
அன்பையும் 
பாசத்தையும் 
பசுமை மாறாமல் 
புதுப்பித்து 
கொள்வதும்

வளர்ந்து 
வருபவர்களுக்கு 
மிகவும் அவசியம்.

வாழ்க்கை 
என்பது 
இல்லங்களோடு 
நின்று 
விடுவதில்லை.

நல்ல 
உள்ளங்களோடு 
தொடர்கின்ற 
பயணமே அது.

எல்லோரின் 
உள்ளங்களிலும் 
உண்மையான 
அன்பை 
தூவினால்

நம்
முகத்தில் 
மட்டுமல்ல

எல்லோர்
அகத்திலும்
புன்னகை 
பூக்கள் மலரும். 

ஆம்.

  புன்னகை 
  என்பது 
  இறைவனின் 
  கையொப்பம் 

என்கிறார் 
ஒரு மகான்.

- முனைவர்
  கவிதாசன் -

_*சிறு*_ 
_*புன்னகை*_ 
_*ஒருவரின்*_ 
_*முகவரி*_

_*அதில்*_
_*கரைந்திடும்*_ 
_*பிறர் மனம்*_
_*அபகரி*_

முயற்சிகள்
செய்யலாம்
வாங்க.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

நன்றி....
முனை.சுந்தரமூர்த்தி

No comments: