Saturday, February 29, 2020

புதிய பார்வை.. புதிய கோணம்...

போடி நாயக்கனுர் பகுதியில் ஒரு பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பேருந்தில் மக்கள்,
அளவுக்கு அதிகமாக
கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

இரண்டு பேர், அந்த பேருந்துகளில் இருந்த நெரிசலை பார்த்து, ஏற முடியாமல் தவித்து கொண்டிருந்தனர்.

அப்போது,
அந்த வழியாக சென்ற
ஒரு லாரியை மடக்கி,
தம்மை அதில் ஏற்றி
கொள்ளுமாறு கேட்டனர்.

லாரி டிரைவர், அவர்களை ஏற்ற முடியாது என்று கூறினார்.

அவர்கள் இருவரும் "தம்மை
ஏற்றி செல்லவில்லை எனில்
அந்த கூட்டமே நடைபெறாது,
எனவே அருள் கூர்ந்து தம்மை ஏற்றி செல்லுமாறு"  வேண்டினர்.

இதைக்கேட்ட டிரைவர்
"நீங்கள் செல்லவில்லை என்றால் கூட்டம் நடைபெறாமல் போய்விடுமா?
நீங்கள் என்ன பெரிய அண்ணாதுரையா ?? "
என்று வினவினார்.

அதற்கு,
இருவரில் ஒருவர்
"ஆமாம் அய்யா...
நான்தான் அண்ணாதுரை"
என்று பதில் அளித்தார்.

இதைக்கேட்ட லாரி டிரைவர் மன்னிப்பு கேட்டதுடன், தன் லாரியில் அவர்களை ஏற்றி சென்றது வரலாறு.

அறிஞர்களும்
சான்றோர்களும்
எளிமையை என்றும்
கடைபிடித்தனர் என்பதற்கு இது ஒரு சான்று.

வாங்க..
நாமும்
எளிமையான
வாழ்க்கை
வாழ்ந்து
மற்றவர்கள்
மனதில்
இடம்
பிடிப்போமா?...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

No comments: