Tuesday, February 18, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

உயர்ந்த
மனிதர்களின்
ஒப்பற்ற சாரம்
'நேர்மையே'.

'உண்மை'
எனப்படுவது
வேறு...

'நேர்மை'
எனப்படுவது
வேறு...

'உண்மை'
பேசுவது
முதல் படி.

'உண்மை'யை
கடை பிடிப்பது
இரண்டாம் படி.

'உண்மை'யாய்
நடப்பது
மூன்றாம் படி.

'உண்மை'யாகவே
இருப்பது
நான்காம் படி.

இவை
எல்லாவற்றையும்
தாண்டி...

'நேர்மை'யாய்
வாழ்வது
'உண்மை'யின்
உச்ச படி.

நல்ல
பண்பு,
உயர்ந்த
எண்ணம்,
மேன்மைமிகு
நடத்தை,
மாசில்லா
ஒழுக்கம்,
தூய்மையான
குணம்...

இவைகள்
'நேர்மை'யின்
வடிவங்கள்.

'நேர்மை'
ஒரு மனிதனின்...

உள்ளத்தை
தூய்மை
படுத்துகிறது.

வாக்கினிலும்
செயலிலும்
இனிமை
சேர்க்கின்றது.

பதட்டத்தையும்
கோபத்தையும்
குறைக்கிறது.

மன
அமைதியையும்,
ஞானத்தையும்
தருகின்றது.

குறைகளற்ற,
பரிபூரணமான
மகிழ்ச்சியை,
எந்நாளும்
அளிக்கின்றது.

இதன்
காரணமாக...

'நேர்மை'
ஒருவரை...

குன்றில்மேல்
இட்ட விளக்காய்,
'ஒளிர'
வைக்கின்றது.

ஒரு மரம்
தன்
'இலைகளை'
காட்டிலும்...

தன்
'கனிகளால்'
மதிப்புறுவதை
போல...

ஒரு
மனிதன்...

தன்
படிப்பில்,
பதவியில்,
செல்வத்தில்
காட்டிலும்...

தன்
'நேர்மை'யில்
மிளிர்கிறான்
என்பதே
உண்மை...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

No comments: