Wednesday, February 12, 2020

புதிய பார்வை...புதிய கோணம்....

"மனசே சரியில்லை"
பெரும்பாலோர்
அடிக்கடி கூறும்
வார்த்தைகள் இவை.

நம் மனதை,
அதன்போக்கில்
விட்டு வைத்தால்...

அதுவே
சுறாவளியாய்
மாறி...

நம்மை
துன்பக்கடலில்
மூழ்கடித்துவிடும்.

அதே
நேரத்தில்...

நம் மனதை
நாம் சரியாக
ஆட்சி செய்தால்...

நம் வாழ்க்கை
சிறப்பானதாக
அமைய தொடங்கும்.

" Keep your face
To the sunshine...
And you can not
See the shadow "

இது
ஹெலன் கெல்லரின்
வார்த்தைகள்.

"பேயாயுழலுஞ்
சிறுமனமே
பேணாயென்சொல்
இன்றுமுதல்"

இது
பாரதியின் வாக்கு.

மனதில்
அழுக்குகளை
படியவைத்து,
முகத்திற்கு
அழகு சேர்த்து
என்ன பயன்???

பூக்களும் பழங்களும்
எப்படி நறுமணம்
வீசுகின்றதோ...

அதன் பயனாக அவை,
இறைவனுக்கு
படைக்கப்படுகிறது.

மாறாக...

காய்ந்த சருகுகளும்,
அழுகிய பழங்களும்
படைப்பதற்கு
நிராகரிக்கப்படுகின்றன.

அதை
போலத்தான்...

மனதை
இருளடிக்க செய்து,
அதன் போக்கில் வாழ்க்கையை செலுத்தினால்...

நம் மனம்
துன்பக்கடலில்
சிக்கிய தோனி
போலாகிவிடும்...

ஆனால்...

நல்லதையே
சிந்திக்கும்
பண்புகளோடு,
நம் மனம்
இருப்பின்...

நல்மணம் வீசும் பூந்தோட்டமாக,
நம் வாழ்க்கை
மலரும்...

வாய்ப்புகளும்,
வாழ்க்கையும்
நம் வசமே...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

No comments: