Thursday, November 19, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...

தூக்கத்தை 
தூக்கி
எறி
கடலில் 
முகம் 
கழுவு
ஞாயிறு
வெப்பத்தில் 
சோம்பல் 
முறி..

ஆற்றில் 
மீன்களை
தேடு
அங்கு
பஞ்சமெனில்
கடலில் 
தேடு 
அங்கேயும் 
மீன்கள்
இல்லையா 
விண்ணுக்கு
வலை
வீசு
அங்கு
விண்மீன்கள்
ஏராளமாய்
உனக்கு
காத்திருக்கும்....

விண்மீனுக்கு 
வலை 
வீசும்
வரைதான் 
வானம்
 தூரம் ...

உன்னை 
மறந்து 
கடந்து
சென்ற
நேற்றய
பொழுதை
மறந்து
விடு .....
உனக்காக 
காத்திருக்கும் 
நாளைய
பொழுதை
நோக்கி
நடை
போடு.....

புதைந்திருக்கும் 
விதையை
மிதித்து
சென்றவர்கள்
வளர்ந்த 
பின்பு 
மரத்திற்கு 
மரியாதை 
செலுத்து
வருவார்கள்..

உன்
விடாமுயற்சி 
உன் 
நம்பிக்கை 
உன் 
திறமை 
மூன்றையும் 
முடித்துவிட்டு 
பார் 
வெற்றி 
உன்
காலடியில்...

######
அன்புடன்
இனிய 
காலை
வணக்கம்
₹₹₹₹₹₹₹₹

No comments: