Wednesday, November 18, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..



அடர்ந்த
ஒரு காடு.

ஒரு ஜோடி
காதல் கிளிகள்
அங்கும் இங்கும்
பறந்து மகிழ்ந்து
வாழ்ந்து கொண்டு
இருந்தன.

ஒரு
கெட்ட நாளில்
கெட்ட நேரத்தில்

ஒரு
ஜோசியக்காரன்
கூட்டில் தனியாக
இருந்த பெண் 
கிளியை அபகரித்து
கொண்டு சென்று
விட்டான்.

மேலும் அந்த 
பெண்கிளியின்
சிறகுகளை
ஒவ்வொன்றாக...

வலிக்க வலிக்க
பிய்த்து அதனை
பறக்க விடாமல்
செய்து விட்டான்.

கொஞ்ச நாள்
சென்றது.

சிறகுகள்
மீண்டும்
முளைக்க
ஆரம்பித்தது.

பெண் கிளி
பறக்க முயற்சி
செய்தது.

இதை பார்த்த
ஜோசியக்காரன்
மீண்டும் சிறகுகளை
பிய்த்து எறிந்தான்.

சிறகுகள்
முளைப்பதும்
பெண் கிளி
பறக்க முயற்சி
செய்வதும்
ஜோசியக்காரன்
இறகுகளை
பிய்ப்பதும்
தொடர்கதை
ஆனது.

ஒரு 
கட்டத்தில்
பெண் கிளி
இனி தன்னால்
பறக்கவே முடியாது
என நினைக்க
தொடங்கிவிட்டது.

இந்த
நேரத்தில்
அந்த பக்கமாக
வந்த ஆண் கிளி 
இதனை கண்டு
பெண் கிளியை
காப்பாற்றி கூட்டி
செல்ல திட்டமிட்டது.

ஜோசியக்காரன்
இல்லாத நேரம் 
பார்த்து அங்கு 
வந்த ஆண் கிளி...

' பறந்து வா
  நாம் தப்பித்து
  செல்லலாம் "

என்று
கூறியது.

" என்னால்
  பறக்க 
  முடியாது...

  நான்
  எத்தனையோ
  முறை முயற்சி
  செய்து தோற்று
  விட்டேன்...

  நான் 
  இறக்க
  தயாராகி 
  விட்டேன்...

  என்னை
  இங்கேயே
  விட்டு விடு "...

என்று 
கூறியது.

இதனை கேட்ட
ஆண் கிளி...

" முட்டாள்
  கிளியே...

  உனக்கு
  சிறகுகள்
  நன்றாக
  வளர்ந்துள்ளது...

  உன்னால்
  பறக்க முடியும்...

  எத்தனை முறை 
  நீ தப்பிக்க 
  முயற்சி செய்தாய்
  என்பது முக்கியம்
  இல்லை...

  இப்போது
  முயற்சி செய்...

  உன்னால்
  பறக்க முடியும்...

  உடன் நான்
  இருக்கிறேன்
  பறந்து வா "...

என 
உற்சாக
வார்த்தைகளை
கூறியது.

இதனை கேட்ட 
பெண் கிளி...

தன்
சிறகுகளை
அசைத்து பார்த்தது.

சிறகடிக்க 
முயற்சி செய்தது.

இறுதியில்
பறந்து சென்றது.

இக்கதை
கூறும் கருத்து
என்ன ???

' எத்தனை முறை
  தோற்றாலும்
  உன் முயற்சியை
  கை விடாதே '

என்பதே
அது.

ஆயிரம் 
முறை
தோற்று...

இறுதியில்
கண்டுபிடிக்க
பட்டது தான்
மின்சார பல்பு.

பலமுறை
இறக்கை கட்டி
பறந்து விழுந்து
அடிபட்டு...
 
இறுதியில்
கண்டுபிடிக்க
பட்டதுதான்
விமானம்.

ஒவ்வொரு
வெற்றிக்கும்
பின்னாக...

ஓராயிரம்
வலிகள்
வேதனைகள்
தோல்விகள்
மறைந்து தான்
இருக்கின்றன.

' முயற்சி
  உடையோன்
  இகழ்ச்சி
  அடையான் '

வாங்க...

நமக்கும்
ஓராயிரம்
கனவுகள்
உண்டு.

முயற்சிகள்
செய்வோம்.

வெற்றி
பெறுவோம்.

' நம்மால்
 முடியாதது
 வேறு யாரால்
 முடியும் ??? '

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

பகிர்வு


1 comment: