Tuesday, November 17, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..



நேற்றைய
பொழுதில்
மொட்டாகி...

இன்றைய
பொழுதில்
மலராகி...

நாளைய
பொழுதில்
சருகாகி
போவது...

புற
அழகு.

ஆனால்...

கருணை
ததும்பும்
கண்கள்...

உண்மை
மட்டும்
பேசும்
நாக்கு...

கெட்டதை
கேட்காத
செவி...

புன்னகை
சிந்தும்
முகம்...

பெரியோரை
கண்டால்
குனியும்
தலை...

அள்ளி 
தரும்
கைகள்...

நல்லவரை
நாடி 
செல்லும்
கால்கள்.

துக்கத்தில்
சோராத
குணம்...

ஒழுக்கத்தில்
மாறாத
மனம்...

இவைதான்
காலம்
கடந்தும்
அழியாத
அழகு.

அண்ணல்
காந்தி
அன்னை
தெரசா
அறிஞர்
கலாம்
இவர்கள்
எல்லாம்...

புற
அழகை விட
அக
அழகால்...

தம்
எண்ணங்களால்
செயல்களால்
அன்பால்...

உலக
மக்கள்
மனங்களை
வென்றார்கள்.

வரலாறு
கூறும்
உண்மை 
இது.

வாங்க...

புற
அழகை 
தாண்டி
அக 
அழகால்
உலகை
வெல்ல...

நாமும்
முயற்சிகள்
செய்வோம்.

அன்பான
உலகம்
அமைக்க
தொடங்கவும்
செய்வோம்.

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

பகிர்வு


No comments: