Tuesday, September 29, 2020

புதிய பார்வை...புதிய கோணம்..

ஒரு இலையும் மண்ணாங்கட்டியும் 
ஒன்றை ஒன்று 
தீவிரமாக காதலித்தன எத்தனை பெரிய 
துயரம் ஆபத்து 
வந்தாலும் ஒருவரை 
ஒருவர் பிரிய 
கூடாது என்றும் ஒருவருக்கொருவர் துணையாக 
இருக்க வேண்டும் 
என்றும் அவை 
தீர்மானித்துக் கொண்டன இந்நிலையில் ஒருநாள் பெரும் சூறைக்காற்று 
வீசியது காற்றில் 
இலை அடித்து 
செல்லாமல் இருக்க 
வேண்டும் என்பதற்காக 
அதன் மீது 
மண்ணாங்கட்டி ஏறி 
அமர்ந்து காப்பாற்றியது...

அதேபோல் இன்னொரு 
நாள் மழை 
பெய்ய தொடங்கியது தண்ணீரில் தனது அன்புக்குரிய மண்ணாங்கட்டி கரைந்து போய் 
விடக்கூடாது என்று 
நினைத்த இலை 
அதன் மீது 
குடை போல 
இருந்தது காப்பாற்றியது...

ஆமாங்க 
இதுதான்
வாழ்வின்
அர்த்தம்..
நாமும்
இதை
பின்பற்ற
முயற்சி
செய்வோமே...!

&&&&&&&
அன்புடன்
இனிய
காலை 
வணக்கம்
&&&&&&&&&

No comments: