Thursday, March 02, 2017

தொடு திரை என்ற மாயக்கண்ணாடி..

"தொடு திரை  தொழில்நுட்பம்"

இந்த கட்டுரையை படித்து கொண்டிருபவர்களில் 99 சதம் பேர் டச் ஸ்க்ரீன் எனப்படும் தொடுதிரை தொழில் நுட்பத்தை பயன்படுத்துபவராக தான் இருப்பார்கள்.

அந்த தொழில் நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்பதை சுருக்கமாக இன்று பார்க்கலாம்.

இந்த டச் ஸ்க்ரீன் ஒரு நவீன தொழில் நுட்பம் என நீங்கள் நம்பினாலும் அது 1960 இலேயே E. A ஜான்சன் என்பவரால் கண்டுபிடிக்க பட்டு விட்டது .
இன்னொரு ஆச்சர்யம் முதலில் கண்டுபிடிக்க பட்டதே capasitive டைப் டச் ஸ்க்ரீன் தான் .இதை ஏன் ஆச்சர்யம் என்கிறேன் என்றால் இதற்கு பின்னால் கண்டுபிடிக்க பட்ட resistive டைப்பை விட இன்று நாம் அட்வான்ஸ் ஆக நினைப்பது கேபாஸிடன்ஸ் டைப்பை தான்.(தீ பெட்டிக்கு முன்னாடியே லைட்டர் கண்டுபிடிக்க பட்டுவிட்டதை போல)

பிற்காலத்தில் 1971 இல் டாக்டர் சாம் என்பவரால் இது வளர்ச்சி அடைந்தது ஒரு மைல் கல்லாக அமைந்தது. அப்போது இது ஒரு டச் சென்சார் என்ற அளவில் தான் இருந்தது அப்போது அதன் பெயர் ஈலோக்ராப்..
பிறகு 1974 ஈலாக்ராபிக் என்ற கம்பெனி உடன் இனைந்து முதல் முதலில் ஒரு ஒழுங்கான ஒளி ஊடுருவ கூடிய பரப்பை கொண்ட டச் ஸ்க்ரீனை உண்டாக்கினார்.
1977 இல் அந்த கம்பனி அதை மேலும் வளர்த்து இன்று வரை பயன்பாட்டில் உள்ள ரெசிஸ்டிவ் டச் கான உரிமம் பெற்று கொண்டது.
சரி இனி அது வேலை செய்யும் விதம் பற்றி பாப்போம் ..

இதில் முன்பே சொன்னது போல இரண்டு வகை உண்டு... ஒன்று ரெசிஸ்டிவ் இன்னொன்று கெபாசிடிவ்..
இதில் ரெசிஸ்டிவ் என்பதில் கவனித்து பார்த்தால் இரண்டு அடுக்கு தாள் ஒன்றை ஒன்று தொடாத வண்ணம் அமைக்கப்பட்டிருப்பது தெரியும்.
இதில் மேல் அடுக்கு வளையும் தன்மை கொண்ட பாலிதீன் பொருளாலும் கீழ் பகுதி கண்ணடியாலும் செய்ய பட்டிருக்கும் இரண்டுமே இண்டியம் டின் ஆக்சைட் பூச்சு பூச பட்டிருக்கும் இந்த பூச்சு மின்சாரத்தை கடத்த கூடியது..
இப்போது நாம் மேல் அடுக்கில் அழுத்தம் கொடுத்து தொடும் போது தொட பட்ட புள்ளியில் மின் சுற்று பூர்த்தி அடைகிறது எனவே அந்த தகவல் தலைமை பிராசசருக்கு கடத்த பட்டு அது தொட பட்ட இடம் உணர்ந்து அதற்கான வேலை நடக்கிறது.

பத்துக்கு பத்து வரிசையில் 100 மாணவர்களை உட்கார வைத்து விட்டு குறிப்பிட்ட மாணவன் பெயர் சொன்னால் அவன் கையை உயர்த்துவதை வைத்து அவன் இருப்பிடத்தை தெரிந்து கொள்வதை போல என்று வைத்து கொள்ளுங்கள்.

இந்த வகையில் இரண்டு நன்மைகள்..

1) விலை குறைவு..
2)நீங்கள் விரல் தான் என்று இல்லை எதை கொண்டு தொட்டாலும் வேலை செய்யும் ..
இதில் தீமைகள் இரண்டு...

1) கெபாஸிடன்ஸ் வகை அளவு இதன் வாழ் நாள் இருப்பதில்லை

2) கெப்பாசிடன்ஸ் அளவு இது துல்லியம் அல்ல..

அடுத்து capacitance type touch ஐ பாப்போம்.

இதில் திரையில் எப்போதும் மிக சிறிய அளவில் மின்சாரம் பாய்ந்தது கொண்டு இருக்கும் நாம் தொடும் பொது தொட்ட இடத்தில மின்வீழ்ச்சி உண்டாகி தொட்ட இடம் கவனிக்க படுகிறது.

அந்த 10 கு 10 மாணவர் வரிசையில் இப்போது எல்லோருமே கையை தூக்கி கொண்டே இருக்க நீங்கள் அழைக்கும் மாணவன் மட்டும் கையை தாழ்த்துவது மூலம் அவன் இருப்பிடம் கவனிக்க படுவதாக நினைத்து கொள்ளுங்கள்...

இதன் நன்மை .. இது துள்ளியமானது.
தீமை.. மின்சாரத்தை கடத்தவல்ல விரல் அல்லது அது போன்ற பொருட்களால் மட்டும் தான் வேலை செய்யும்.

 உண்மையில் டச் டெக்நாலஜி வெறும் இரண்டு வகை மட்டும் அல்ல..
Infrared touch technology
Surface acoustic wave technology
Optical touch technology..
இப்படி பல வகை படும் மேலும் மேலே நான் சொன்ன ரெசிஸ்டிவ் மற்றும் கேபாஸிடிவ் இரண்டுமே பாசிடிவ் மற்றும் நெகடிவ் என்ற இரண்டு உள் பிரிவுகள் கொண்டது.. என்றாலும்
நாம் அன்றாடம் தொட்டு தடவும் தொழில் நுட்பத்தை சுருக்கமாக விளக்கி இருக்கிறேன்

ஒரு கொசுறு செய்தி நம்ம ஊரில் அந்த காலத்தில் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவும் அந்த செயல் இருக்கிறதே அது மூலையில் சில நரம்புகளை தூண்டி நன்றாக சிந்திக்க உதவுமாம் ..
இப்போது சமீபத்திய ஆய்வில் நிபுணர்கள் இந்த தலை முறை பிள்ளைகள் விரலை உரசி கொண்டு இருப்பதால் மூளை அதிகம் சிந்திக்க முடிவதாக கண்டு பிடித்து உள்ளனர்.
இனி அம்மா 'என்னடா எப்ப பார்த்தாலும் செல்லும் கையுமா இருக்க' என திட்டினால் ... "போம்மா நான் மூளையை வளர்த்துகிட்டு இருக்கன் "என சொல்லலாம்.

No comments: