Friday, March 06, 2020

புதிய பார்வை...புதிய கோணம்...

மனிதன்
என்பவன்
தினந்தோறும்
மரித்து
போகக்கூடாது.

அவன்
கணம்தோறும்
புதிது புதிதாய்
வாழவேண்டும்.

போனதை
எண்ணி
புலம்புபவன்
இருபது
வயதானாலும்
முதியவனே.

போனது
போகட்டும்,
ஆனது
ஆகட்டும்,
என...

எந்த நேரத்திலும்
ஆர்வத்துடன்
இருப்பவன்,
எண்பதானாலும்
இளைஞனே.

எவரிடத்திலும்,
எந்த வயதிலும்,
எல்லோருக்குள்ளும்...

ஒரு
குழந்தை
உறங்கி
கொண்டிருக்கும்.

'உள்ளே உள்ள
குழந்தைக்கு
வயதாகி விடாமல்
பார்த்து
கொண்டவர்கள்...

என்றும்
ஆனந்தமாக
வாழ்கிறார்கள்...

மாபெரும்
சாதனையாளராக
மலர்கிறார்கள்'.

வாங்க
நாமும்
குழந்தையாய்
இருந்து
வாழ்வை
ஆனந்தமாய்
வாழ்வோம்..

அன்புடன்
இனிய
காலை
வணக்கம்.

No comments: