Tuesday, January 28, 2020

புதிய பார்வை..புதிய கோணம்...

ஒரு மாணவர் தன்னுடைய பலத்தை காண, ஆதரவாய் இருக்கும் ஆசிரியர்களை
தன் வாழ்நாள் முழுக்க
மறக்க மாட்டார்கள்...

தான் எண்ணுவதை விட இன்றைய மாணவ சமுதாயம் பிரம்மாண்டமாய் உள்ளதை இன்றைய ஆசிரியர்கள் மறுக்க முடியாது...

எந்திரங்களை கையாளுவதற்கு ஒருவித பொறுப்பு தேவை என்றால்...

மாணவர்களையும்,
அவர்கள் உணர்வுகளையும்
கையாளுவதற்கு...

வேறுவிதமான பொறுப்பு தேவையாய் இருக்கிறது...

பரந்த அறிவை விட,
விரிந்த இதயம்
இதற்கு தேவை...

தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு
நடப்பதை போல...

தங்களிடம் பயிலும் மாணவர்களை புரிந்து கொள்ளும் பக்குவமும், பொறுமையும் ஆசிரியர்களுக்கு அவசியமாகிறது...

விளைநிலம்
பண்படுத்தப்பட்டு
விதைக்கிற பருவம் வரை
காத்திருக்கும்
விவசாயி போல...

மாணவர்களின்
பிஞ்சு மனங்களில்
நம்பிக்கையை,
நல்லுணர்வை,
நல் எண்ணங்களை
விதைக்க...

உரிய தருணங்களை
ஆசிரியர்
எதிர்நோக்க வேண்டும்...

அன்பில் கலந்த
ஆசிரியர்-மாணவர் உறவு
காலம் கடந்தும்
உறுதியாய் நிற்கும்...

பண்பாடும் கலாச்சாரமும் 'பாடத்திட்டத்தில்' இல்லாமல் இருக்கலாம்...

ஆனால்...

ஆசிரியரின்
'பாசத்திட்டத்தில்' இவை இடம்பெறின்...

ஒப்பற்ற
மானுட சமுதாயம்
மலர்ந்தே தீரும்...

- முத்தையா -

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: