Saturday, January 25, 2020

புதிய பார்வை....புதிய கோணம்....

"மனசு போல வாழ்க்கை"
"நீ என்ன நினைக்கிறாயோ
அதுவேஉன்கிட்டவந்துசேரும்"
"நல்லது நினைச்சா நல்லது நடக்கும், கெட்டது நினைச்சா
கெட்டதுதான் நடக்கும்"...

பள்ளி ஆசிரியர்கள் முதல்
ஆன்மிக பெரியவர்கள் வரை
நமக்கு சொல்லிகொடுத்த
பாடங்கள் இவை...

இக்கருத்துக்கள் குறித்து 
ஸ்டான்போர்ட் பல்கலை கழகத்தின் பேராசிரியர் டாக்டர். கரோல் ட்வெக் என்பவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து 'Mindset: The New Psychology of Success' என்னும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

"எல்லாம் என் தலைவிதி,
இதை யாரால் மாற்ற முடியும்?" என்று தனக்குதானே
சொல்லிக்கொள்ளும் மனோநிலையில் இருக்கும் நபர்கள் 'நிலையான
மனநிலையில் உள்ள மனிதர்கள்'என்றும்...

'விதி கால் பங்கு,
மதி முக்கால் பங்கு'
"என்னோட உழைப்பும், முயற்சியும் சரியாய்
அமைத்தால்
வெற்றி நிச்சயம்"
என்னும் மன நிலையில் உள்ள மனிதர்களை 'வளர்ச்சி மனநிலையில் உள்ள மனிதர்கள்' என்றும்...

மனிதர்களை
இருவகையாக பிரிக்கிறார்...

"தொழில் செய்யலாம் என்று நினைத்தேன். கிரகம் சரியில்லை, கட்டம் சரியில்லை, இரண்டு வருடம் கழித்து ஆரம்பித்தால் ஓஹோவென்று வருவீர்கள்"
என்று கூறியதை நம்பி...

எல்லா தகுதிகள், திறமைகள், வளங்கள் இருந்தும்  வாழ்க்கையில் தோற்றவர்கள் பலர்...

"இன்னும் இரண்டு பந்துகள் இருந்திருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருப்பேன்" என்றும்...

"இன்னும் கொஞ்சம் உயரமா, நல்ல கலரா, பொறந்திருந்தா என் லெவல் வேற" என்றும்...

"பணக்கார வீட்ல பொறந்திருந்தா என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும்" என்றும்...

புலம்பிபுலம்பியே, காலம் தள்ளுபவர்கள் பலர்.

இவர்கள் எல்லாம்
'நிலையான மனநிலை கொண்ட மனிதர்களே'...

ஆனால்
இதற்கு மாறாக...

'வளர்ச்சி மனநிலையில் உள்ளோர்'...

அறிவு, ஆற்றல், திறமை ஆகியவை பிறப்பில் மட்டும் வருவதல்ல, நாம் எந்த அளவிற்கு சிந்திக்கிறோமோ,
வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கிறோமோ,அந்த
அளவிற்கு வெற்றிகளை குவிக்க முடியும்' என்று அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.

அதன்படியே
செயல்படுகிறார்கள்.

இறுதியில்
ஜெயிக்கிறார்கள்...

இந்த
இரண்டு மனநிலைகளை
புரிந்து கொண்டாலே...

நாம் யார்?
நம்மால் என்ன
செய்ய முடியும்?
நாம் வெற்றி அடைய
எப்படி நம்மை மாற்றி
கொள்ளவேண்டும்?என்பது நமக்கு தெரியவரும்...

'எண்ணம் போல் வாழ்வு'
'உள்ளத்தனையது உயர்வு'
'நம் வாழ்க்கை நம் கையில்'
இவையெல்லாம்
உண்மையே.

நம் எண்ணங்கள்,
நம் செயல்கள்,
சிறப்பானவையாக
அமைத்து...

நம்மால் எதுவும் முடியும்
என்னும் நம்பிக்கையுடன்
நாம் செயல்படும் சூழ்நிலையில்...

நம்  வெற்றிகளுக்கு
வானமே எல்லையாக அமையும் என்பதில் ஐயமில்லை...

- சிவகுமார் பழனியப்பன் -

புதிய
நம்பிக்கைகளுடன்...

அன்புடன்
காலை
வணக்கம்.

No comments: