Thursday, January 30, 2020

புதிய பார்வை..புதிய கோணம்....

மாலி நாட்டை சார்ந்த
22 வயதான
மொஹமத் கசாமா
என்னும் இளைஞன்
வேலை தேடி பிரான்ஸ்
நாட்டிற்கு
வந்தான்...

அவன் வீதியில்
நடந்து கொண்டு
சென்றபோது
ஒரு அடுக்குமாடி
குடியிருப்பில்
நான்காவது மாடி
பால்கனியில்
4 வயது குழந்தை
வெளிப்புற
ஜன்னலை பிடித்து
தொங்கி கொண்டிருந்தது...

உயிருக்கு போராடி
கொண்டிருந்த
அவனை பார்த்து,
கூச்சல் போட்டு கொண்டும்,
செல்போனில் படம்பிடித்து
கொண்டும், அதிர்ச்சியில்
மக்கள் இருந்தனர்...

இதை கண்ட இளைஞன்
மொஹம்மத் கசாமா
தன் உயிரை
துச்சமாக எண்ணி,
ஸ்பைடர்மேன் போல,
கிடுகிடுவென
முதல் மாடியில் இருந்து,
நான்காவது பால்கனிக்கு
ஏறிச்சென்று, குழந்தையை
பத்திரமாக மீட்டான்...

அவனது வீரதீர செயலை
பாராட்டி நாட்டின்அதிபர்
மொஹமத் கசாமாவிற்கு
நாட்டின் நிரந்தர
குடியுரிமையை வழங்கி,
தீயணைப்பு துறையில்
உயர்பதவி அளித்தும்
அவனை கௌரவித்தார்...

சமீபகாலத்தில்,
ஊடகத்தில்,
மிகவும் 'வைரல்' ஆன
நிகழ்வு இது...

இந்த நூற்றாண்டின்
ஆகச்சிறந்த சொல்...

'செயல்'...
ஆம்
நாமும்
செயலை
முன்னெடுப்போம்
அமைதியாக
சாதிக்க
முயல்வோமா?...

அன்புடன்
இனிய
மாலை
வணக்கம்.

No comments: