Tuesday, March 28, 2017

உணவே மருந்து...பழைய சோறு...

🍚 *பழைய சோத்துல இவ்வளவு            விஷயமுள்ளது*🍚

*உணவே மருந்து மருந்தே உணவு.*

திரைப்படங்களில் கிராமத்து சீனில் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் சென்று கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான்.

இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.

👉ஆனால், முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த *பழைய சாதத்தில்* தான் வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ✅ ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் *உணவுப் பாதையையே ஆரோக்கியமாக* வைத்திருக்கிறதாம்!

👉கூடவே இரண்டு சிறிய 🌰 வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது !

👉 *பழைய சாதத்தின் நன்மைகள் சில*

1. ⛅ காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் *சுறுசுறுப்பாகவும்* இருக்கிறது.

2. 🌚 இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. ☀மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு *குடல்புண், வயிற்று வலி* போன்றவற்றையும் *குணப்படுத்தும்.*

4.☝அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் *உடலை சீராக* இயங்கச்செ ய்கிறது.

5.☝இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால், *இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும், உடல் எடையும் குறையும்.*

6.✅மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான 💪 சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. 👉 *அலர்ஜி, அரிப்பு* போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. 👉 *அல்சர்* உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. 👉 எல்லாவற்றிற்கும் மேலாக *நோய் எதிர்ப்பு சக்தி* அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. 👉 ஆரோக்கியமாக அதே சமயம்  *இளமையாகவும் இருக்கலாம்.*

📚படித்ததில் பிடித்ததை பகிர்கிறேன் 📲👍

2 comments:

அபயாஅருணா said...

என் தந்தை கூட பழைய சாதம் மிகவும் விரும்பி ச் சாப்பிடுவார் ; 93 வயது வரை வாழ்ந்தார் சர்க்கரை பி பி இவை இல்லாமல்

இராய செல்லப்பா said...

நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே. ஆனால், இருவருமே பணிக்கு செல்லும் இந்நாளில் யாரும் அடுத்த நாளைக்கு மீந்துவிடும் அளவுக்கு சமைப்பதில்லை என்பதே சரி. பெரும்பாலும் இரவு உணவை வேளையில் தான் சாப்பிடுவார்கள். மேலும் இரவில் அரிசிச்சோறு சாப்பிடுவதை பலர் தவிர்க்கின்றனர். எனவே மிஞ்சுவதில்லை.
இராய செல்லப்பா நியூஜெர்சி