Sunday, October 18, 2020

புதிய பார்வை..புதிய கோணம்..

சிலர் மொட்டை 
மாடியில் மல்லாந்து 
படுத்தபடி ஆகாயக் 
கோட்டை கட்டி கொண்டிருப்பார்கள் 
நகரின் மையப்பகுதியில் மூன்று அடுக்கு 
மாளிகையில் வசிப்பது போலவும் எடுபிடிகள் 
இருப்பது போலவும் 
பல லட்சம் ரூபாய் 
காரில் பயணம் 
செய்வது போலவும் 
கனவுகள் ...

ஆகாயக் கோட்டைகள் உருவாக்கினால் அது பாட்டுக்கு மேலும் 
மேலும் எழுப்பிக் 
கொண்டே இருக்கும் 
கனவுக்கு கால்கள் 
இல்லை அதனால்
அது ஓடிகிட்டே
இருக்கும் ...

கனவு காண்பது
தவறா ...கண்டிப்பாக 
இல்லை அது 
ப்ளூ பிரிண்ட் 
மாதிரி காகிதத்தில்
வரை படித்திருந்தால் 
தானே கட்டடங்கள் உருவாகின்றன... அதனால்
கனவு காண்பது
என்றும் குற்றமான 
காரியம் அல்ல 
கனவோடு உழைப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ஆகாயக் கோட்டை 
அசல் கோட்டையாக மாறிவிடும் ...

வாங்க
நாமும் 
நமது 
கனவை 
நினைவாக்க 
தினம்
உழைக்க
தொடங்குவோம்
வாழ்வில்
வெற்றியை
சுவைப்போம்
&&&&&&&&
 அன்புடன்
இனிய
காலை
வணக்கம்..
&&&&&&&&&

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உழைப்பு என்று சிறப்பு...