Thursday, April 04, 2019

புதிய பார்வை...

மன்னிப்பு
அளித்தலும்
மன்னிப்பு
கேட்பதும்
மிக பெரிய
மானிட பண்பு...

கலைந்த
உறவுகளை
ஒன்று
சேர்க்க,
திறந்த
மனதுடன்
மன்னிப்பு
கேட்க
தயங்க
கூடாது...

அதேபோல
நம்மிடம்
மன்னிப்பு
கேட்பவர்களுக்கும்,
திறந்த
மனதுடன்
மன்னிப்பு
வழங்கவும்
தயங்க கூடாது...

இந்த
இரு காரியங்கள்
செய்ய,
காலம்
தாழ்த்துவதும்
கூடாது...

உண்மையில்
இது
கடினமான
வேலைதான்...

ஆனால்
நாம்
உண்மையாக
இருந்தால்,
யாரிடமும்
மன்னிப்பு
கேட்க,
வெட்கமோ
தயக்கமோ
கொள்ள
வேண்டிய
அவசியம்
இல்லை...

மன்னிப்பு
கேட்கும் போது
நம் உடலில்
ஒரு ரசாயன
மாற்றம்
ஏற்பட்டு
ஆக்கபூர்வமான
சகிப்பு தன்மை
அதிகமாகிறது...

அதே போல
மன்னிப்பு
முழு
மனதுடன்
வழங்கும்
வேலையில்,
நம் மனம்
அமைதி
அடைவதுடன்,
ஆற்றலும்
அதிகரிக்கிறது,
என
அறிவியல்
ஆய்வுகள்
தெரிவிக்கின்றன...

புயல் காற்று
மிக பலமாக
வீசும் போதும்
கூட,
சில செடிகளும்
சில மரங்களும்
வளைந்து
கொடுப்பதின்
காரணத்தால்,
வீழாமல்
நிலைத்து
நிற்கின்றன,
என்பது
இயற்கை
நமக்கு
வழங்கும்
பாடம்...

அன்புடன்
மாலை
வணக்கம்.

No comments: